உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, November 24, 2014

அதிரை பேரூராட்சி நிர்வாகத்திற்கு TIYA முஹம்மது மாலிக்கின் கனிவான வேண்டுகோள் !

அதிரை தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட மேலத்தெருவில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பயன் படுத்திவரும் பெண்கள் குளத்தில் பல ஆண்டுகளாக திறந்த வெளியில் பெண்கள் மலம் கழித்து வருவதை தடுக்கும் நோக்கில், அதிராம்பட்டினம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எங்கள் மஹல்லாவின் முன்னாள் தலைவருமான மர்ஹூம் ஹாஜி M.M.S. அப்துல் வஹாப் ( சாச்சா ) அவர்களின் முயற்சியால் திறந்த வெளியில் மலம் கழிப்பதை முழுமையாக தவிர்க்கும் பொருட்டில் நபார்டு திட்டத்தின் கீழ் கடந்த 2008-2009 ஆம் ஆண்டிற்கான நிதியில் ரூபாய் 6 லட்சம் ஒதுக்கீட்டில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் நவீன வசதியில் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது

கட்டி முடித்து பிறகு அதன் அருகில், இப்பகுதியில் வாழும் இளைஞர்களின் பெரும் முயற்சியால் ( TIYA ) அமைப்போடு சேர்ந்து வெளிநாடுகளிலிருந்து விடுப்பில் தாயகம் வரும் மேலத்தெரு மஹல்லா வாசிகளிடம் நிதி வசூல் செய்து அந்த ஏரியா முழுவதையும் தூய்மைப்படுத்தி சுத்தி முள்வேலி அமைத்து பெண்களும் சிறார்களும் பயன்படுத்தும் வகையில் சுமார் 5 லட்சம் ரூபாய் செலவில் ஒரு பூங்கா அமைத்து கொடுக்கப்பட்டது.

சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர சம்மந்தப்பட்ட தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் ஆகியோரிடம் பல முறை எடுத்துச்சொல்லியும் இந்த விசயத்தில் யாரும் அக்கரை கொள்வதாக தெரியவில்லை. பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் பாழடைந்து உடைந்து நொருங்கிய நிலையில் தற்போது காணப்படுகிறது. இதற்காக போடப்பட்ட போர்வெல் நீர் மூழ்கி மோட்டாரையும் சமூக விரோதிகள் திருடி சென்றுவிட்டனர்.

கழிப்பிட வசதிகள் இல்லாத ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் இப்போதும் இப்பகுதியில் வாழ்கின்றனர். எனவே சம்மந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் பழுதடைந்து காணப்படும் இந்த கழிப்பிட வசதியை மறு சீரமைத்து விரைந்து திறப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களின் சார்பாக சமூக ஆர்வலர் என்ற முறையில் இதை நான் உங்களின் பார்வைக்கு தருகிறேன்.

தவறினால் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள், தமிழக முதல்வரின் (CM) செல் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு புகார் அளிக்கப்படும் என்பதை நினைவூட்டுகிறேன்.

என்றும் அன்புடன் அதிரை அல்மாஸ் என்கிற
K.M.N.முகமது மாலிக்
அபுதாபி ( 0097150-7914780 )
Kmmalik2009@gmail.com

Thanks to:
http://www.adirainews.net/2014/11/tiya.html?utm_source=dlvr.it&utm_medium=twitter


சுகாதார வளாகத்தின் அப்போதைய புகைப்படங்கள் 
 
சுகாதார வளாகத்தின் தற்போதைய நிலை

No comments:

Post a Comment