உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, July 30, 2011

நேரடி ஒளிபரப்பில் ரமலான் தொடர் சொற்பொழிவு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இன்ஷா அல்லாஹ், இன்று முதல் (31.07.2011) புனித ரமலான் முழுவதும் துபை நேரம் இரவு 10 மணி முதல் 10.45 வரை நடைபெறும் தொடர் சொற்பொழிவு நமது வலைப்பூவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.


துபை தவ்ஹீத் இல்லத்தில் நடைபெற இருக்கின்ற புனித ரமலான் மாத தொடர் சொற்பொழிவில் இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள மார்க்க அறிஞர், அமீரகம் வாழ் ஏகத்துவ சகோதரர்கள் அறிந்த புத்தளம்.
முஹமது நாஸர் அவர்கள் உரைநிகழ்த்தவுள்ளார்கள்.

பாருங்கள், பரப்புங்கள், பயனடைவோம் மறுமைக்கு!

அழைப்புப் பணியின் அவசியம் - Part 1


بِشْمِ اللّهِ الرّحْمَنِ الرَّحِيْم

மனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே! எனவே, தவறு செய்யும் இயல்புடைய மனிதனுக்கு நன்மையை ஏவுவதும், தீமை குறித்து எச்சரிக்கை செய்வதும் அவசியமாகும்.
நாலுபேர் எடுத்துச் சொன்னால் தனது நடத்தைகளையும், செயற்பாடுகளையும் மாற்றிக் கொள்ளும், அல்லது அதுகுறித்து நடுநிலையோடு சிந்திக்கும் மனோ நிலையுடனேயே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். இதைச் செய்யுங்கள்அல்லதுஅதைச் செய்யாதீர்கள்என பலரால் அல்லது பலவிடுத்தம் வேண்டப்பட்டால் அதற்கு இணங்கி நடக்க, தீயவன்கூட முற்படலாம். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது பழமொழியாகும். மனிதனது இந்த மனோ இயல்பைப் பயன்படுத்தி அவனிடம் எழுச்சி பெறும் தீய உணர்வுகளை அழிக்கவும், அடக்கவும் மங்கி மறைந்து செல்லும் நல்லனவற்றை துலக்கி மெருகூட்டவும் அழைப்புப்பணி அவசியமாகின்றது.
மனிதர்களிலேயே சிலர் இருக்கின்றனர். அவர்கள் மற்றவர்கள் மனதில் தீய சிந்தனைகளை விதைப்பதையே வினையாகக் கொண்டவர்கள். அத்தகையவர்கள் உலோபித்தனம் செய்வார்கள்; (மற்ற) மனிதர்களை உலோபித்தனம் செய்யும்படியும் தூண்டுவார்கள். அல்லாஹ் தன் பேரருளிலிருந்து தங்களுக்குக் கொடுத்ததை (பிறருக்குக் கொடுக்காமல்) மறைத்தும் கொள்வார்கள் அத்தகைய காபிர்களுக்கு இழிவுதரும் வேதைனையை நாம் சித்தப்படுத்தியுள்ளோம் (4:37)  (பார்க்க 57:24) என்று கூறுகிறான்.
அல்லாஹ்வின் பாதையைவிட்டும் மக்களைத் தடுக்கின்றான்” (4:167, 9:9, 47: 32)
இம்மறை வசனங்கள் தீமையை ஏவி நன்மையைத் தடுக்கும் சில மனிதர்களும் மக்கள் மத்தியில் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.
இவ்வாறே முனாபிக்கான ஆண்களும் பெண்களும் நன்மையைத் தடுப்பதிலும், தீமையை ஏவுவதிலும் ஒருவர் மற்றவருக்குத் துணையாக இருப்பதாகஅல்குர்ஆன் கூறுகின்றது. (9:67)
தீமையை ஏவி நன்மையத் தடுக்கும் இச்சூழலில் தஃவாவின் அவசியம் அத்தியவசியமாகின்றது.
மக்கள் நன்மைகளை விட்டும் வெகுவேகமாக வெருண்டோடிக் கொண்டிருக்கின்றனர். தீமைகளில் கிடைக்கும் அற்பசுகம், உலகாதாயம் என்பவற்றால் கவரப்பட்டு விளக்கை நோக்கிச் செல்லும் விட்டில்களாக தீமைகளை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.
இதேவேளை ஷைய்த்தானின் தோழர்கள் நரகத்தின் வாயில்களில் நின்று கொண்டு அதன்பால் மக்களை அழைக்கும் பிரச்சாரத்தை மூலை முடுக்கெல்லாம் முடுக்கிவிட்டுள்ளனர்.
வட்டி ஹராம் என்பது இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படையாகும். இந்த வட்டியின் பக்கம் வாருங்கள் என தொலைக்காட்சி, வானொலி போன்ற தொலைத் தொடர்பு சாதனங்கள் அழைப்புவிடுக்கின்றன. பத்திரிகையில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள், இனிப்பான திட்டங்கள் அன்றாடம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு தீமைக்காக தஃவா நடக்கின்றது. இஸ்லாமிய இரத்தங்கள் பலவும் வட்டியால் வார்த்தெடுக்கப்பட்டுள்ளன.
சூதாட்டம் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட ஷைய்த்தானின் செயல்களில் ஒன்றாகும். அதிஷ்டலாபச் சீட்டு லொத்தர்கள் என்ற பெயரில் நிமிடத்துக்கு நிமிடம் வானொலி தொலைக்காட்சிகளில் இதற்காக தஃவத் நடக்கிறது. பத்திரிகைகளில் பரபரப்பான விளம்பரங்கள், வீதிகள் தோறும் ஒலிபெருக்கி வைத்து இதற்காக தஃவா செய்யப்படுகிறது. இந்த ஷைய்த்தானிய அழைப்பு வீட்டுக் கதவுகளைக்கூட தட்டத் தவறவில்லை. இலங்கையில் அதிகமாக இந்தச் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களாக எமது சமூகத்தினர் காணப்படுகின்றனர்.
மது, பாவங்களின் தலைவாயிலாகும். இந்த மது பானத்திற்கான அழைப்பும் பரவலாக நடைபெறுகின்றது. இதற்காக பத்திரிகைகளில் அரைப்பக்க முழுப்பக்க கலர் விளம்பரங்கள் என்ற பெயரில் தஃவா நடைபெறுகின்றது. இவ்வாறே புகைத்தலின் பக்கம் அழைப்பதற்கும் நவீன பிரச்சார யுக்திகள் கையாளப்படுகின்றன.
ஆபாசத்தையும், வன்முறையையும், கவர்ச்சியையும் சதையையும் மட்டுமே மூலதனமாகக் கொண்ட இன்றைய சினிமாக்கள் சமூகத்தை சீரழித்து வருகின்றன. பத்திரிகை, தொலைத் தொடர்பு சாதனங்கள், பாதையோர சுவர்கள் அனைத்திலும் இன்றைய இளம் தலை முறையினரை இந்த இழிவின் பக்கம் இழுத்தெடுப்பதற்கான கவர்ச்சியான ஆபாசமான அழைப்பு(தஃவா) நடந்து கொண்டிருக்கின்றது.
வீண் கேளிக்கைகள், ஆடல் பாடல், இசைக் கச்சேரிகள், ஆண் பெண் கலப்பு நிகழ்ச்சிகள் என்பவற்றின் மூலம் எல்லா வகையான தீமைகளின் பக்கமும் மக்களைக் கவர்ந்திழுக்க கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவளிக்கப்படுகின்றன, இதற்காக சகல விதத்திலும் தொடர் பூடகங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவ்வளவு பரவலாக தீமைக்கு ஆதரவான குரல் பலத்து ஒலிக்கும் போது நன்மையின் பால் அழைக்கும் குரல் மட்டும் பலமிழந்து போய் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தீமையின் பக்கம் மக்கள் இழுபட்டுச் செல்லும் வேகத்தையும், அதற்காக செய்யப்படும் முயற்சிகளையும் பார்க்கும் போது நன்மையின்பால் அழைத்து தீமைக்கு எதிராகக் குரல் கொடுப்பது எவ்வளவு அவசியமானது என்பதை விளங்கமுடிகின்றது.
தவறைத் தடுக்காதிருக்கலாமா?  மேலே குறிப்பிடப்பட்டது போன்று தீமைகள் புயலாய் வீசும் போது உண்மையான இறைவிசுவாசி தானுண்டு தன்பாடுண்டு என்று இருக்கமுடியுமா? அவனது உடன்பிறப்புக்கள், உற்றார் உறவினர்கள், ஊரார், மற்றார்கள் அனைவரும் அழிவின் பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கும் போது இவன் வெறுமனே பள்ளியில் முடங்கிக் கிடக்கலாமா? ஒரு நாளும் இருக்கமுடியாது. இதனைப் பின்வரும் சம்பவங்கள் எமக்கு உணர்த்துகின்றன.
சுலைமான்(அலை) அவர்கள் தன் பட்டாளத்துடன் போகும் போது ஒரு எறும்பு தனது மற்ற எறும்புக் கூட்டங்களைப் பார்த்து எறும்புகளே! நீஙகள் உங்கள் புதருக்குள் புகுந்து கொள்ளுங்கள்; சுலைமானும் அவருடைய படையினரும் தாம் அறியாமலேயே உங்களைத் திண்ணமாக மிதித்து விட வேண்டாம்எனக்கூறியது. (பார்க்க 27: 17-18)
இந்த சம்பவம் மூலம் ஓர் எறும்பு தனது மற்றைய எறும்புகள் அழிந்துவிடக் கூடாது என்பதில் காட்டியிருக்கும் அக்கறையை உணரமுடிகின்றது. ஓர் எறும்பே சமூக உணர்வுடன் நடந்திருக்கும் போது எமது சகோதரர்கள் அறியாமையால், ஷிர்க்கிலும் பித்அத்துக்களிலும் ஹராம்களிலும் மூழ்கியிருக்கும் போது மது, போதை, சினிமா, புகைத்தல், வட்டி, சூது என தம்மைத்தாமே அழித்துக் கொள்ளும் காரியங்களில் ஈடுபடும் போது நாம் அவற்றைத் தடுக்காது இருக்கலாமா? அப்படி இருந்தால் இந்த எறும்பைவிட கீழான நிலைக்கல்லவா சென்றுவிடுவோம்.
இதே அத்தியாயம் மற்றுமொரு நிகழ்ச்சியைக் கூறுகின்றது. சுலைமான்(அலை)அவர்கள் தனது படையைப் பார்வையிட்டுக் கொண்டு வருகின்றார்கள். அங்கே ஹுத்ஹுத்என்ற பறவையைக் காணவில்லை. இந்தப் பறவை தாமதித்து வந்து அதற்குரிய காரணத்தைக் கூறாவிட்டால் அதை அறுத்துவிடுவேன்; அல்லது கடுமையாகத் தண்டிப்பேன் என்று போபத்தோடு கூறுகிறார்கள். அப்போது அந்தப் பறவை வந்து சுலைமான் நபியிடம் பின்வருமாறு கூறுகின்றது.
நீங்கள் அறியாத ஒரு செய்தியை நான் அறிந்து வந்துள்ளேன். ஸபாவில் இருந்து உறுதியான ஒரு செய்தியை உங்களிடம் கொண்டுவந்துள்ளேன். அவர்களை ஒரு பெண் ஆட்சி செய்கிறாள். அந்த நாட்டில் சகல வளங்களும் காணப்படுகின்றன. மகத்தானதொரு சிம்மாசனமும் அவளுக்குண்டு. அவளும் அவளது சமூகமும் அல்லாஹ்வை வணங்காது சூரியனை வணங்குகின்றனர். ஷெய்த்தான் அவர்களது செயல்களை அவர்களுக்கு அழகாக்கி அவர்களை நேர்வழியைவிட்டு தடுத்துவிட்டான். அவர்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்க வேண்டாமா? என்று கூறியது. (பார்க்க 27: 20-26)
இந்தச் செய்தியைக் கேட்ட பின் அந்தப் பெண்ணுக்கு சுலைமான் நபி தஃவா செய்து, அவள் இஸ்லாத்தில் இணைந்ததை அல்குர்ஆன் தொடந்து கூறுகின்றது.
ஒரு நாட்டு மக்கள் சூரியனை வணங்குவதைக் கண்டு ஒரு பறவை கவலை கொண்டுள்ளது. எமது சகோதரர்களில் பலர் அறியாமல் கப்று வழிபாட்டிலும் ஷிர்க்கான சடங்குளிலும் மூழ்கியுளளனர். இவற்றால் தாம் செய்கின்ற நல்லமல்களை அழித்து கொள்வதுடன், தம்மைத்தாமே நரகிற்குத் தயார்படுத்திக் கொண்டுமிருக்கின்றனர்.
இதனைக் கண்டு எமக்கு சிறிதளவாவது கவலை வரவில்லையென்றால் நாம் இந்தப் பறவையை விடக் கீழானவர்களாகவல்லவா இருப்போம். சாதாரணமாக ஒருவன் தனது அரசியல் தலைவன் அவமதிக்கப்படுவதை தாங்கிக்கொள்வதில்லை. தனது தலைவர் போட்ட கடையடைப்பை யாராவது மீறினால் இவன் சீறுகிறான், தாக்குகிறான் சாதாரண தலைவனையே இப்படி ஒருவன் வெறி கொண்டு மதிக்கும் போது ஷிர்க் செய்வதன் மூலம் அல்லாஹவுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. அல்லாஹ்வின் கட்டளைகள் பகிரங்கமாக மீறப்படுகின்றன. அப்போது அவன் சீறாமல் சிணுங்காமல் சின்னதொரு எதிர்ப்பையும் காட்டாது குறைந்தபட்சம் முகச் சுளிப்பையாவது காட்டாது கல்லுப்போல் நிற்கிறானெனில் இவனது இறை விசுவாசத்திற்கு அது ஒரு களங்கமாகிறது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...

By Aduthurai S.Hameed
 

Wednesday, July 27, 2011

துபையில் ரமலான் தொடர் சொற்பொழிவு

அதிரை முஸ்லீம் சமுதாயமே ! வேண்டாம் இயக்கப் பிறைகள் !!

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அதிரை முஸ்லீம் சமுதாயமே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...



   وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا
وَلَهُ عَذَابٌ مُّهِينٌ
4:14. எவன் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.

இன்னும் சில தினங்களில் நாம் புனித ரமலான் மாதத்தை அடைய இருக்கின்றோம். புனித ரமலானையும் பெருநாளையும் கொண்டு நன்மையடைய வேண்டிய மக்களை குழப்பும் இயக்கங்கள் பெருகிவிட்ட நிலையில், அவர்கள் குறித்து எச்சரித்து நபிவழி எது என தெளிவுபடுத்தவே இச்சிறிய ஆக்கம்.

இயக்கப் பிறைகள்

4:27   وَاللَّهُ يُرِيدُ أَن يَتُوبَ عَلَيْكُمْ وَيُرِيدُ الَّذِينَ يَتَّبِعُونَ الشَّهَوَاتِ أَن تَمِيلُوا مَيْلًا عَظِيمًا
4:27. மேலும் அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான்; ஆனால் தங்கள் (கீழ்தரமான) இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள்.

இன்று புதர்போல் மண்டிவரும் இயக்கங்கள் என்பது முஸ்லீம்களின் அத்தாரிட்டிகள் அல்ல மேலும் அவர்கள் இந்திய அரசியமைப்பு சட்டப்படி செயல்படுகின்ற அறக்கட்டளை அல்லது சங்கமாகும். இயக்கங்கள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் வழிகாட்டலாமே ஒழிய பொதுமக்களை கட்டாயப்படுத்தும் அதிகாரம் பெற்றவர்கள் அல்ல. இவர்களுக்கு கட்டுப்பட வேண்டிய எந்த அவசியமும் முஸ்லீம்களுக்கு இல்லை.

இருந்தாலும், இன்றைக்கு இயக்கங்கள் பிறை குறித்து தங்களுக்கென தனித்தனி ஃபார்முலாக்களை வைத்துள்ளன. அதாவது கணக்குப் போடுவது, கணிப்பது, வடநாட்டை பார்ப்பது, தென்னாட்டை பார்ப்பது, தமிழ்நாட்டுப் பிறை, சவூதி பிறை, சர்வதேச பிறை, உள்ளூர் பிறை, அடுத்த இயக்கம் பிறை பார்த்து / கேட்டு அறிவித்த நாளில் கொண்டாடுவதில்லை என ஏட்டிக்குப் போட்டியாய் மார்க்கத்தில் விளையாடுவது என ஒவ்வொருவரும்   தங்களுக்கென வசதிக்குத்தக்கவாறு ஒரு வழிமுறையை வகுத்துக் கொண்டு ஷியாக்களைப் போல் தனித்து செயல்படுகின்றனர். 

பெருநாள் நோன்பும் 3 மாயப் பிறைகளும்

அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் எனக்கு நான்கு விஷயங்களைக் கூறினார்கள்.
1. இரண்டு நாள்கள் பயணம் செய்யும் பெண்மணி கணவனோ மணம் முடிக்கத்தகாத ஆண் உறவினரோ துணையாக இல்லாமல் பயணம் செய்யக்கூடாது.
2. நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாள்களும் நோன்பு நோற்கக்கூடாது.
3. ஸுப்ஹுத் தொழுதததிலிருந்து சூரியன் உதிக்கும் வரையும் அஸர் தொழுததிலிருந்து சூரியன் மறையும் வரையும் தொழக்கூடாது.
4. மஸ்ஜிதுல் ஹராம் மஸ்ஜிதுன்னபவி மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர் பார்த்து) பயணம் மேற்கொள்ளக் கூடாது! நூல் : புகாரி - 1197.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நோன்புப் பெருநாள் தினத்திலும் ஹஜ்ஜுப் பெருநாளன்றும் நோன்பு நோற்பதும் முலாமஸா முனாபதா என்ற இரண்டு வியாபார முறைகளும் தடை செய்யப்பட்டுள்ளன. நூல் : புகாரி - 1993.

நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் கலந்துகொண்ட அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளைச் செவியுற்றேன். அவை என்னைக் கவர்ந்தன.
அவை: 'ஒரு பெண் தன் கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத நெருஙகிய உறவினர் ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர (மற்ற நிலைகளில்) இரண்டு நாட்கள் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது! நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப்பெருநாள் (ஈதுல் ஃபித்ர்இ ஈதுல் அள்ஹா) ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது! சுப்ஹுக்குப் பிறகு சூரியன் உதிக்கும் வரையும் அஸ்ருக்குப் பிறகு சூரியன் மறையும் வரையும் தொழக் கூடாது! (அதிக நன்மையைப் பெற நாடி) மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா) பைத்துல் முகத்தஸ் (ஜெருசலேம்) எனது இந்த (மஸ்துதுந் நபவீ) பள்ளி வாசல் ஆகிய மூன்று பள்ளி வாசல்களைத் தவிர வேறெதை நோக்கியும் பயணம் மேற்கொள்ளக் கூடாது!'நூல் : புகாரி - 1995.

என மேற்படி நபிமொழிகள் பெருநாள் தினத்தன்று நோன்பு நோற்கக்கூடாது என எச்சரித்துள்ளதை நமக்கெல்லாம் பாடம் நடத்தியவர்களே வசதியாக மறந்து விட்டு ஊரெல்லாம் முதல் நாள் பெருநாள் கொண்டாட, இயேசு உயிர்தெழுந்த கதைபோல் மூன்றாம் பிறை நாளில் இயக்கத்தின் பெருநாளை ஊருக்கு ஊர் சில விடலைகளை ஏவி இஸ்லாமிய பெருநாளாக திரிக்க முனைந்த கேலிக்கூத்துக்களை கண்டோம்.

மிகச்சமீபமாக, குறிப்பாக தமிழகத்தில் இயக்கங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பிறைகளும் பெருகிவிட்டன. அதாவது பிற மதத்தினர் கடவுள்களையும், ஜாதிகளையும் கணக்கற்று  வைத்திருப்பது போல் நாங்கள் பிறையையும் பெருநாட்களையும் அதிகம் வைத்துள்ளோம் என இஸ்லாத்தின் பெயரிலேயே அரங்கேற்ற முயலும் ஆணவம்.

அதிரை பிறை

அல்ஹம்துலில்லாஹ், நமதூரைப் பொறுத்தவரை இரண்டுபடாத மக்களாகவே நோன்பு நோற்று பெருநாள் கொண்டாடி வருகிறோம். (சென்ற வருடம் மட்டும் விரலுக்குள் அடங்கும் சில இயக்கவாதிகளை தவிர).

இதுவரை நம்மை மக்கா பிறையோ, மாலேகவ்ன் பிறையோ, மண்ணடி  பிறையோ அல்லது அரசு காஜிக்களின் பிறையோ அதிரையை கட்டுப்படுத்தியதில்லை. மாறாக, நமதூரைப் பொறுத்தவரையில் தொன்றுதொட்டு நாம் பிறை பார்த்தும், அக்கம் பக்க ஊரில் காண்பதையும், (International) இலங்கை பிறையையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமுண்டு. நமதூர் மார்க்க அறிஞர்கள் அறிவிப்பார்கள் ஏற்றுக்கொண்டு செயல்பட்டுவந்துள்ளோம். சென்ற வருடத்திற்கு முன் வரை சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் சொன்னது என்று எந்த இயக்கவாதிகளும் நிராகரித்த சரித்திரமுமில்லை. பலவேளைகளில் சுபுஹூ தொழுகைக்கு வந்து பெருநாள் அறிவிப்புடன் திரும்பிய நெகிழ்ச்சியான நாட்களுமுண்டு.

மார்க்கப் பிறை

1) பிறையைக் கண்டே நோன்பு நோர்க்கவும் விடவும் செய்யுங்கள். மேகம் (பிறையை) மறைத்துவிட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

பிறை பார்த்து நோன்பு..
நீங்கள் பிறை பார்த்தால் நோன்பு வையுங்கள் அடுத்த பிறையைப் பார்த்தால் நோன்பை விட்டு விடுங்கள் மேகம் (பிறையை) உங்களுக்கு மறைத்து விடுமானால் (ரமளானையும் ஷாஃபானையும்) முப்பது நாட்களாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர் இப்னு உமர் (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ, தாரகுத்னீ, இப்னுஹிப்பான், இப்னுகுஸைமா, ஹாகீம்.

தகவலறிந்து நோன்பு..
மக்கள் எல்லாம் பிறை பார்க்க முயன்றார்கள் நான் நபி (ஸல்) அவர்களிடம் 'நான் பிறையைப் பார்த்தேன்' என்று கூறினேன் நபி (ஸல்) அவர்கள் தானும் நோன்பு நோற்றுதுடன் மக்களையும் நோன்பு நோற்கக் கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர் இப்னு உமர் (ரலி) நூல்கள்- அபூதாவூத், தாரமி, இப்னுஹிப்பான், ஹாகீம், பைஹகீ, தாரகுத்னீ.

அன்றும் அப்படித்தான்
ரமளானின் கடைசி நாள் பற்றி மக்கள் முடிவெடுக்கக் குழம்பினார்கள் (பிறை தென்படாததால் நோன்பும் நோற்றனர்) இரண்டு கிராம வாசிகள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று இரவு நாங்கள் பிறைப் பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள் உடனே நபி (ஸல்) அவர்கள் மக்களை நோன்பை விட்டு விடுமாறு கட்டளையிட்டார்கள் பெருநாள் தொழுகைக்காக மறுநாள் தொழுமிடம் வருமாறு கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர் ரிப்யீ இப்னு கிராஷ் நூல்கள் - அபூதாவூத், அஹ்மத்.

ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியாக எதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற உரிமையை நபியவர்கள் மக்களிடம் கொடுத்துள்ளார்கள். இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.
'நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ

மேற்காணும் ஹதீஸ்களின் அடிப்படையில் எந்தப் பிறையை நமதூர் அறிஞர்கள் அறிவிக்கின்றார்களோ அதனையே ஏற்று நமது நோன்பையும் பெருநாட்களையும் வழமைபோல் அமைத்து கொள்வோமாக!

சென்னையில் இருந்து கொண்டு அதிரைக்கு நோன்பையும் பெருநாளையும் சிலர் நிர்ணயிக்கும் மடமையை மாய்ப்போம், நமதூருக்கு இனி எப்போதும் வேண்டாம் இயக்கப் பிறைகள்.

4:26   يُرِيدُ اللَّهُ لِيُبَيِّنَ لَكُمْ وَيَهْدِيَكُمْ سُنَنَ الَّذِينَ مِن قَبْلِكُمْ وَيَتُوبَ عَلَيْكُمْ ۗ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
4:26. அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும் உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும் உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே விரும்புகிறான். இன்னும் அல்லாஹ் நன்கு அறிந்தோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

எண்ணமும் எழுத்தும்
அஷ்ஹது வாப்பா

Wednesday, July 20, 2011

ரமளான் தொடர்பான கட்டுரைகள், புத்தகங்கள், வீடியோ/ஆடியோ மற்றும் மின்புத்தகம்

http://www.islamkalvi.com/portal/?p=5432

 

ரமளான் தொடர்பான கட்டுரைகள், புத்தகங்கள், வீடியோ/ஆடியோ மற்றும் மின்புத்தகம்



Thanks to www.islamkalvi.com

Sunday, July 17, 2011

உலகெங்கும் வாழும் அதிரை சகோதரர்களே!

47:33   يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ
47:33. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு கீழ்ப்படியுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள்.

உலகெங்கும் வாழும் அதிரை சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சமீபகாலங்களில் நமதூரின் பிரதான வலைத்தளங்களின் மூலமாக நீங்கள் அதிகம் கேள்வியுறும் அதிரை இஸ்லாமிக் மிஷனின் [AIM] நிஜங்களை உங்களுக்கு சுருக்கமாக இதன்வழி மறுஅறிமுகம் செய்ய விரும்புகிறோம்.

துவக்கம்
2000 ஆம் ஆண்டு அமீரகத்தில் வாழ்ந்த அதிரை சகோதரர்கள் ஒன்றுகூடி நமதூரின் நலனுக்காக, குர்ஆன் ஹதீஸ் ஒளியில் தங்களுடைய வாழ்வுதனையும் அமைத்து, அதனையே ஊருக்கும் உபதேசித்திட ஒருங்கிணைத்த அமைப்பே AIM. இதனால் விளைந்த முதல் நன்மை நமதூரின் தெரு வேற்றுமைகள் உள்ளத்தால் இணைந்த சகோதரர்களின் வெளிப்புற செயல்களினால் வெறுண்டோடின.

முதன்முதலாக ஃபித்ராவை அமீரகத்தில் கூட்டாக வசூலித்து அதிரை முழுவதும் ஏழைகளை தேடிச்சென்று விநியோகம் செய்யும் அறிய பணியை அதிரைக்கு அறிமுகப்படுத்தியதே AIM தான்.

கடந்த மூன்றாண்டுகளாக, இயக்கம் வளர்க்க போட்டோ எடுக்காமல், பயனாளிகளை கேவலப்படுத்தாமல், நாங்கள் இத்தனை பேருக்கு வழங்கினோம் என மார்தட்டிக் கொள்ளாமலும், வீடு தேடிச்சென்றும் இஸ்லாம் கூறும் அழகிய முறையில் விநியோகித்தும் வருகிறோம்.

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَآمَنُوا بِمَا نُزِّلَ عَلَىٰ مُحَمَّدٍ وَهُوَ الْحَقُّ مِن رَّبِّهِمْ ۙ كَفَّرَ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَأَصْلَحَ بَالَهُمْ
47:2. ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான்.

தத்து இயக்கங்கள்
அமீரகத்தின் துபை மாநகரில் AIM ஆரம்பிக்கப்பட்டாலும் அதிரையில் அதன் எண்ணங்களை செயல்படுத்திட ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிரையில் செயல்படும் மாநிலம் தழுவிய இயக்கங்களின் அதிரை கிளைகளை ஆதரிக்க வேண்டிய சூழல்கள் ஏற்பட்டன, இதன்வழி இவ்வியக்க தேவைகளின் புரவலராகவும் மாறியது AIM. இவ்வியக்கங்கள் தங்களின் பெயரில் செய்த பெரும்பாலான மக்கள் பணிகள் மற்றும் ஏகத்துவப் பணிகளின் பின்னும் அதிரை இஸ்லாமிக் மிஷன் மட்டுமே இருந்தது என அடித்துச் சொல்ல முடியும்.

இன்னும் தெளிவாக சொல்வதென்றால், ஒரு இயக்கம் சீண்டுவாரில்லாத நிலையில் இருந்தபோது AIM களமிறங்கி அவர்களுக்கு அதிரையில் கிளையை நிறுவி இன்றைய பள்ளி வரை கிடைத்திட செய்தது. அது அன்றைக்கு அழகிய செயலாக தெரிந்ததன் விளைவு.

கேடுகள்
அதிரை இஸ்லாமிக் மிஷன் தன்னுடைய செயலில் தூய்மையானதாக இருந்தாலும் தமிழகத்தில் ஏற்பட்ட பல்வேறு இயக்கப் பிளவுகள் அதிரை இஸ்லாமிக் மிஷனையும் வெகுவாக பாதித்தது, தெரு வேற்றுமைகளை களைந்து ஒன்றுபட்ட சகோதரர்களை இயக்கங்கள் மீண்டும் கூறுபோட்டு சென்றன. புரவலர்களாய் போனவர்கள் இயக்கங்களின் ஆதரவாளர்களாய் மாறியதால் ஏற்பட்ட மிகப்பெரிய கேடு இது.

இன்றைய AIM
பல்வேறு இயக்கப் புயல்களையும் தாண்டி இன்றும் தன் சக்திக்குட்பட்ட பணிகளை கடந்த மூன்றாண்டுகளாக தானே நேரடியாக களத்தில் நின்று செய்து வருகிறது, இனி எந்த ஒரு இயக்கத்திடமும் அதிரை இஸ்லாமிக் மிஷனை அடகு வைப்பதில்லை என்ற முடிவுடன்.

நாம் இயக்கங்களின் தூணாக இருந்தநிலை மாறி இன்று பல்வேறு இயக்கங்களும், சங்கங்களும், தனிநபர்களும் நம்முடைய நற்பணிகளுக்கு தங்களுடைய நல்லாதரவை வழங்கி வருகின்றனர்.

1.             தஃவா பிரச்சாரங்கள்
2.             கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம்
3.             ஃபித்ரா விநியோகம்
4.             கல்விப் பணிகள்

என நம்முடைய பணிகள் இன்றும் தொடர்கின்றன, அல்ஹம்துலில்லாஹ்.

Adirai Educational Mission [AEM] என அழைக்கப்படுகின்ற அதிரை கல்விச்சேவையகத்திலும் AIM ஓர் முக்கிய அங்கம்.

ALM பள்ளிக்கூடத்தில் நடைபெற்றுவரும் அதிரை ஜூம்ஆவை நடத்தும் கூட்டுக்குழுவிலும் ஓர் அங்கம்.

இதேபோன்று எந்த இயக்கத்துடனும் சேர்ந்து தஃவாவையும் நற்செயல்களையும் இணைந்து செய்யவும் சகோதரத்துவத்துடனும் நடந்து கொள்ளவும் தயார் ஆனால் அதிரை இஸ்லாமிக் மிஷனின் நட்புறவு இனி அடகு நிலைக்குச் செல்லாது இன்ஷா அல்லாஹ்.

2011ல் AIM இதுவரை
அதிரை இஸ்லாமிக் மிஷன் 2011 நடத்திய பிரதான செயல்பாடுகளை தங்களுடைய கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
1.             பள்ளியிருந்தும், கல்லூரியிருந்தும், பலருக்கு வாய்ப்பிருந்தும் கல்வியில் பின்தங்கியுள்ள அதிரை மாணவர்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கடந்த ஜனவரி 14 15 ஆகிய தேதிகளில் கல்விச்சேவகர்கள் CMN சலீம், பேராசிரியர் இளையான்குடி ஆபிதீன் தமிழ்மாமணி பஷீர் ஆகியோரை கொண்டும், சகோதர வலைத்தளமான அதிரை நிருபர் மற்றும் அதிரை இஸ்லாமிய கல்வி அறக்கட்டளையினருடன் இணைந்தும் மாபெரும் இருநாள் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்தப்பட்டது.
2.             இயக்க வேறுபாடுகளால் சிதறுண்டு போயுள்ள தஃவா களத்தை சீரமைக்குமுகமாக, கடந்த பிப்.18ந்தேதி ஏகத்துவ அழைப்பாளர் சகோதரர் கோவை அய்யூப் அவர்களை கொண்டு மறுமை குறித்து அச்சமூட்டி எச்சரிக்கும் பொது நிகழ்ச்சியொன்றும் நமதூர் மக்களின் மிகுந்த வரவேற்புக்கிடையே நடத்தப்பட்டது.(குறிப்பு: இந்நிகழ்வின் இலவச சீடிக்கு 0552829759 என்ற எண்ணில் தொடர்பு கொள்க! தேரா, துபை)
3.             சுமார் 8 ஆண்டுகளாக நடைபெற்றாலும் கடந்த மூன்றாண்டுகளாக AIMன் தனித்தன்மையுடன் நடத்தப்பட்டு வரும் கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம்கள் இந்த வருடம் மே 1 முதல் 20 வரை சீருடனும் பல்வேறு சிறப்பம்சங்களுடனும் நடத்தப்பட்டது, இறுதியாக பரிசளிப்பு நிகழ்ச்சியும் தஃவா நோக்குடன் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது இதில் மவ்லவி அன்சாரி ஃபிர்தவ்ஸி மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டு பயனுரையாற்றினார்கள்.

குறிக்கோள்கள்
ஓன்றாய் இருந்து பல்வேறு இயக்கங்களாய் போன தலைவர்களுடனும் தொண்டர்களுடனும் பழகும் வாய்ப்பை அதிரை இஸ்லாமிக் மிஷனின் இன்றைய நிர்வாகிகளுக்கு அல்லாஹ் வழங்கியுள்ளது பெரும் அருட்கொடையே. இந்த அறிமுகத்தின் வழியாக இன்ஷா அல்லாஹ் மீண்டும் முடிந்தவரை ஏகத்துவவாதிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வர பாடுபட்டு வருகிறது AIM.

நம்முடைய முயற்சிகளை ஜாக் மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் பரிசீலிக்க இணங்கியுள்ளனர். இன்ஷா அல்லாஹ் விரைவில் பிற இயக்கத்தினர்களையும் தொடர்பு கொள்வோம்.

 'நீங்கள் விசுவாசங் கொள்ளும்வரை சுவனம் செல்லமாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் நேசிக்கும்வரை விசுவாங்கொண்டவர்களாக ஆக மாட்டீர்கள் ஒரு செயலை நீங்கள் செய்வீர்களானால் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்வீர்கள். அச்செயலை உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா? (அதுவே) உங்களுக்கு மத்தியில் ஸலாமைப்1 பரப்புங்கள்' என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லீம் 42)

என்ற நபிமொழிக்கேற்ப, இன்ஷா அல்லாஹ் வரும் கல்வியாண்டின் முடிவில் நடைபெற இருக்கின்ற கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு விழாவை ஒரு மாநாடாக நடத்தி, பல்வேறு இயக்கங்களின் சமுதாயத் தலைவர்களை சமுதாய பொதுப்பிரச்சனைகளின் ஒற்றுமை என்ற பொருளிலும், ஏகத்துவ அழைப்பாளர்களை குர்ஆன் ஹதீஸூடன் ஒன்றுபடுவோம் என்ற பொருளிலும் ஒரே மேடையில் ஏற்றும் திட்டமும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் பல்வேறு காரணங்களால் அதிரை இஸ்லாமிக் மிஷனிலிருந்து பிரிந்து சென்றவர்களும் மீண்டும் ஒன்றிணைந்து தங்களுடைய தூய பணிகளை தொடர வேண்டும் எனவும் மனதார வேண்டுகிறோம், மனம் விட்டுப்பேசவும் தயார். புதிய சகோதரர்களையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

பல்வேறு இயக்கங்களில் நீங்கள் இன்னும் தொடர்ந்தாலும் அதிரை இஸ்லாமிக் மிஷன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் மட்டும் நீங்கள் AIM உறுப்பினராக, தான் சார்ந்துள்ள இயக்கத்திணிப்பை AIMக்குள் வலியுறுத்தாதவராக தாராளமாக கலந்து கொள்ளலாம்.

எதிர்கால திட்டங்கள்
மறைந்து வரும் மக்தப்களை (சிறார்கள் குர்ஆன் மற்றும் அரபி எழுத, ஓத கற்பிக்கும் ஆரம்பப்பாட சாலைகள்) மீண்டும் அனைத்து தெருக்களிலும் ஏற்படுத்துவது. இன்றைய பள்ளிக்கூட நேரங்களே மக்தப்களின் முதன்மையான வில்லன்கள் இதற்குத் நிரந்தர தீர்வுகாண முயல்வது.

முழுநேர பள்ளிக்கூடம் துவங்குவது, இதில் பயிலும் மாணவர்கள் 12ம் வகுப்பு முடித்து வெளியேறும் போது ஓர் இஸ்லாமிய அறிஞராகவும் பரிணமிக்க வேண்டும்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான தனித்தனி மதரஸாக்களை நிறுவி முழு நேர கல்வி போதிப்பது மற்றும் குடும்பப் பெண்களும் பணியிலுள்ள ஆண்களும் பயனுரும் வகையில் பகுதி நேரக்கல்வியை ஏற்படுத்துவது.

இனி தஃவா களமே பிரதானம் என்று அதிரை இஸ்லாமிக் மிஷன் முடிவு செய்துவிட்ட நிலையில் அதற்கேற்ற இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம் ஒன்றை ஏற்படுத்துவது.

இன்னும் காலத்திற்கேற்ற பல நல்லறங்கள்.

இவையனைத்தையும் நிஜமாக்கிட அல்லாஹ்வின் உதவியும் கருணையும் நமக்கெல்லாம் அவசியம். அல்லாஹ்விற்காக AIM உடன் கரம் கோர்த்திட வாரீர், நல்லாதரவு தாரீர் என அனைத்து அதிரை சகோதரர்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

4:36   وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا ۖ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ۗ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ مُخْتَالًا فَخُورًا
4:36. மேலும் அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும் தாய் தந்தையர்க்கும்இ நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும் அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும் (பிரயாணம் தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும் வழிப்போக்கர்களுக்கும் உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.

முஃமினானவருக்கு அவர் செய்த நல்லவை(அமல்)களுக்கு பகரத்தை இவ்வுலகில்(மட்டும்) கொடுத்துவிட்டு மறுமையில் கொடுக்காமல் நிச்சயமாக அல்லாஹ் அநீதி  இழைக்க மாட்டான்.
(நூல்: முஸ்லீம் 60)

அற்புதமான மேற்காணும் குர்ஆன் வசனத்தையும், நபிமொழியையும் எங்களுக்கும் உங்களுக்கும் நினைவுபடுத்தியவர்களாக நிறைவு செய்கின்றோம், வஸ்ஸலாம்.

குறிப்பு : இங்கே காணப்படும் 'நாங்கள் செய்தோம்' என்ற சுட்டல்கள் பெருமையின் வெளிப்பாடுகள் அல்ல, மாறாக அவை நம்மையறியா சகோதரர்களின் கவனத்திற்காக மட்டுமே.

இவண்
அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM)