உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, July 29, 2014

இயக்க வெறி தவிர்த்து இயக்கங்கள் கொள்கை தெளிவு பெற வேண்டும்

இயக்க வெறி தவிர்த்து இயக்கங்கள் கொள்கை தெளிவு பெற வேண்டும்

குறிப்பு:
இது இலங்கையின் சூழலை முன்வைத்து எழுதப்பட்டிருந்தாலும் இந்திய முஸ்லீம்களாகிய நமக்கும் இதில் படிப்பினை இருக்கிறது என்பதால் இங்கே நன்றியுடன் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எமது நாட்டில் தீவிரவாத இனவாதக் குழுவொன்று சில வருடங்களாகவே இனவாத விஷ விதையை நாட்டில் வளர்த்து வருகின்றது. இக்குழுவினால் சிறுபான்மை சமுதாயங்களுக்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான எண்ண அலைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களது மத, பொருளாதார, சமூக நிலவரங்கள் பேரினவாத சஞ்சிகைகளில் இலக்குகளாக மாறியுள்ளன. முஸ்லிம்களது பள்ளிவாசல்களையும் வர்த்தக நிலையங்களை யும் இதனால்தான் குறிவைக்கின்றனர்.

அண்மைக் காலமாக பேரினச் சூறாவளி அளுத்கம, பதுளைப் பகுதியில் மையம் கொண்டு பாரிய அளவில் உயிர், பொருள், சேதங்களை விளைவித்து விருகின்றன. நாடு பூராக இஸ்லாமிய எதிர்ப்புணர்வை வளர்த்து விட்டால் எங்கு பிரச்சினை ஏற்பட்டாலும் அது நாடுபூராகவும் பற்றி எரிவதற்கு ஏதுவாய் அமைந்துவிடும்.

இந்த நிலை நீடித்துக் கொண்டிருந்தும் இதுவரை நாட்டின் அமைதியையும் நிம்மதியையும் சீர்குலைத்து இனங்களுக்கு மத்தியில் உள்ள ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் என்பவற்றைச் சிதைத்து வரும் இனவாத சக்திகளின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப் படவும் இல்லை. அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவும் இல்லை. இது பெரிய மன உளைச்சலையும் கவலை யையும் ஏற்படுத்தி வருகின்றது.

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பட்டியல்படுத்த முடியாத அளவுக்கு மத நிந்தனைகளும் அச்சுறுத்தல்களும் ஏற்பட்டும் கூட முஸ்லிம் சமூகத்தால் இது தொடர்பில் ஆக்கபூர்வமான எந்த முன்னெடுப்புக்களும் முன்னெடுக்கப்படவில்லை. முஸ்லிம் சமூகத்தில் அரசியல், ஆன்மீகத் தலைமை களின் ஒற்றுமையின்மை, தூரநோக்கின்மை, பொது விடயத்தில் உடன்பட்ட நிலையின்மை போன்ற இன்னோரன்ன சமூகக் குறைபாடு களையே இது எடுத்துக்காட்டுகின்றது.

முஸ்லிம் சமூகத்தில் உள்ள சில அறிவீனர்கள் தமக்கு எதிரான இஸ்லாமிய இயக்கங்களை காட்டிக் கொடுப்பதற்காக இந்தப் பேரினவாத பூதத்தை உசுப்பேத்திவிட்டனர். அதுதான் இந்த இனவாத சக்திகளின் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளுக்கு உந்து சக்தியாகத் திகழ்கின்றது.

அப்போது அவர்கள் பாரம்பரிய முஸ்லிம்களுக்கும் எமக்கும் எந்த முரண்பாடும் இல்லையென்று கூறினார்கள். ஆனால், அவர்கள் ஏற்படுத்திய இனவாத சிந்தனையால் அனைத்து முஸ்லிம்களும் அவமானத்தைச் சந்தித்தனர். 

குளியாப்பிட்டியவில் பன்றியின் உருவத்தில் அல்லாஹ் என எழுதி கொடும்பாவி எரித்தது, குர்ஆனைக் கொச்சைப்படுத்திய தெல்லாம் எல்லா முஸ்லிம்களுக்கும் எதிரானதுதானே! இதை வைத்தாவது முட்டாள்தனமான முஸ்லிம்கள் படிப்பினை பெற்றிருக்க வேண்டும். ஆனால், முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் வேரூன்றிப் போயுள்ள இயக்க வெறியும், இயக்க எதிர்ப்புணர்வும் இன்னும் தணிந்ததாக இல்லை. 

ஒரு இயக்கம் மாநாடு நடாத்துகின்றது. அந்த மாநாடு நல்ல முறையில் நடந்துவிடக் கூடாது என்று மற்றொரு இயக்கம் எண்ணுகின்றது. மாநாடு சம்பந்தமான அவதூறுகளைப் பரப்புகின்றது. அத்துடன் நிற்காது அந்த மாநாடு பேரினவாதிகளுக்கு எதிராக ஏசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடு என்றொரு பொய்யை அந்தப் பகுதியில் உள்ள பெரும்பான்மை மதத் தலைமைக்கும், அரசியல் தலைமைக்கும் போட்டுக் கொடுக்கின்றது.

உண்மையில், அவர்களுக்கு ஏசுவதற்காக மாநாடு போட்டால் கூட இப்படிச் சொன்னால் உண்மை சொன்னார்கள் என்றாவது திருப்திப்படலாம். ஆனால், இது பொய் என்பது சொன்னவர்களுக்கும் தெரியும். எப்படியாவது மாநாட்டுக்கு இடைஞ்சல் கொடுத்து அந்த நெருக்கடி அச்சம் காரணமாக மாநாட்டை நிறுத்திவிட்டால் அல்லது மாநாட்டை வெற்றிகரமாகச் செய்யவிடாமல் தடுத்து விட்டால் எமது இயக்கத்திற்குப் பெரிய சேவை செய்துவிட்டேன். எதிர் இயக்கத்தை இயங்கவிடாமல் தடுத்துவிட்டேன் என்ற அற்பத்தனமான சிந்தனை இன்றைய இயக்க வாதிகள் சிலரின் மனதில் இடம்பிடித்துள்ளது.

இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எந்தப் பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை எனது இயக்க நலன்தான் முக்கியம் என்ற மனநிலை இருக்குமாக இருந்தால் இயக்கம் என்பது ஹலாலாக இருக்காது. 

இஸ்லாத்தின் நலனுக்காக உருவாக்கப் பட்டவைதான் இந்த இயக்கங்கள். இயக்கங்களால் இஸ்லாத்திற்குப் பாதிப்பு என்றால் அந்த இடத்தில் இயக்கம் கலைக்கப்பட்டு இஸ்லாம் மட்டுமே பற்றிப் பிடிக்கப்பட வேண்டும். ஆனால், இயக்க வெறி இஸ்லாத்தை விட தனது இயக்க நலனே முக்கியம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊரில் இந்த இயக்கம் வளர்ந்துவிட்டால் எமது இயக்கத்திற்கு இடம் இல்லாமல் போய்விடும். எனவே, எந்த வழியிலாவது இந்த இயக்கத்தின் செயற்பாட்டை முடக்க வேண்டும் என்ற சுயநலமும், அறியாமையும், இயக்க வெறியும் கலந்த எண்ணம் இன்று சிலரிடம் ஏற்பட்டுள்ளது.

மாற்றுமதத்தவர்களுடன் நட்புறவு கொண்டாலும் மாற்று அமைப்புடன் நட்பினை வைத்துக் கொள்ள சிலர் தயாராக இல்லை. ஒவ்வொரு இயக்கங்களும் தனித்தனி மதங்களாக மாறி வருகின்றது. இந்த நிலை நீடித்தால் இயக்கம் என்பது ஹலாலாக இருக்குமா?

நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டு வரும் நெருக்கடிகள் கூட இயக்கங்களுக்கு மத்தியில் நெருக்கத்தையும் இணக்கத்தையும் ஏற்படுத்த வில்லை என்றால் வேறு எப்போது நாம் ஒன்றிணையப் போகின்றோம்? இது குறித்துக் கட்டாயம் நாம் சிந்திக்க வேண்டும்.

இயக்கங்களுக்கு மத்தியில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை விட ஒவ்வொரு இயக்கமும் தனது இயக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், அடுத்த அமைப்பை கூட்டி விடவும் செய்த சதி வேலைகளும், சூழ்ச்சிகளும்தான் இயக்கங்களுக்கு மத்தியில் பாரிய இடைவெளியையும், இன முறிவையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலை இனியும் தொடரக் கூடாது! ஒவ்வொரு இயக்கமும் தனது பணியைத் தொடரும் அதே வேளை அடுத்தவர்களின் பணிக்கு இடைஞ்சல் தரலாகாது. முடிந்தால் அடுத்தவர்களின் நல்ல பணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் நிலை ஏற்பட வேண்டும். அடுத்த இயக்கத்தின் மூலம் இஸ்லாத்தை நிலைநாட்ட முடியுமாக இருந்தால் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் தயங்கக் கூடாது! யார் செய்தாலும் நன்மைக்கும் தஃவாவுக்கும் உதவுதல், யார் செய்தாலும் தீமைக்கும் வரம்பு மீறலுக்கும் ஒத்துழைக்கக் கூடாது என்ற ஒருநிலைத் தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் இஸ்லாத்தை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கங்களில் மூலமே இஸ்லாம் அழிவுகளைச் சந்திக்கலாம்.

ஒவ்வொரு இயக்கத்திலும் இயக்க வெறிகொண்டவர்களும் தீவிரவாத சிந்தனைப் போக்குடையவர்களும் இருக்கலாம். அதனை அந்தந்த இயக்கங்களே இனம் கண்டு களையெடுக்க முனைய வேண்டும்.

இன்று இயக்கங்களையும், அதன் தலைமைகளையும், அதன் அடிப்படைகளையும் அந்தந்த இயக்கங்களைச் சேர்ந்த தீவிரவாத சிந்தனைப் போக்குக் கொண்ட மார்க்க அறிவற்றவர்களே வழிநடாத்துகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது ஆபத்தான அறிகுறியாகும். இது களையப்பட வேண்டும்.

இந்த வகையில் குர்ஆன், ஸுன்னா பேசும் தவ்ஹீத் அமைப்புக்களின் அங்கத்தவர்களிடம் காணப்படும் குறைகளை தவ்ஹீத் அமைப்புக்களின் தலைமைகளும், தப்லீக், ஜமாஅதே இஸ்லாமி போன்ற அமைப்புக்களின் அங்கத்தவர்களிடையே காணப்படும். இது போன்ற குறைகளை அவ்வந்த அமைப்புக்கள் இனம் கண்டு களைய முன்வர வேண்டும். ஒருவர் குறையை அடுத்தவர் களைய முற்படும் போது அது பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம்.
நாம் ரமழான் மாதத்தில் இருக்கின்றோம். குறிப்பாக ரமழான் மாத்தில்தான் அதிகமான இயக்க மோதல்கள் இடம்பெறுவதுண்டு. அந்த மோதல்களுக்கான வாயில்களை இயக்கங்களாக அடைக்கவில்லை என்றால் எம்மை நாமே அழித்துக் கொள்வதாகவே அது அமையும்.

எனவே, இலங்கை முஸ்லிம்கள் இயக்கங்கள் தொடர்பில் ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கின்றோம். இயக்க வெறி அவசியம் களையப்பட வேண்டும். இயக்கங்களுக் கிடையேயான நல்லுறவுகளுக்கான வழிகள் குறித்து எல்லா அமைப்புக்களும் அவசியம் சிந்திப்பதுடன் சில முன்னெடுப்புக்களையும் செய்தாக வேண்டும்.

Thanks to News Source:  http://www.islamkalvi.com/?p=82617

Posted by: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 

Monday, July 28, 2014

அதிரையில் நடைபெற்ற நபிவழி திடல் தொழுகை

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கருணையால் இந்த வருடமும் ஈத் கமிட்டியினரால் நபி வழி திடல்  தொழுகை மேலத்தெரு சாணாவயலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டு ஏக இறைவனாம் அல்லாஹ்வை வணங்கி மகிழ்ந்தனர்.


பெருநாள் குத்பா உரையில் சகோதரர் ஜமீல் காக்கா அவர்கள் 'தலைவர்களின் பொறுப்புகள்' என்ற தலைப்பில் மக்களை அவர்கள் எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்றும் தலைவர்களை பிறர் எவ்வாறு, எந்த எல்லைக்குள் நின்று பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும், கண்மூடித்தனமாக தலைவர்களை பின்பற்றுவதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்தும், இன்றைய சர்வதேச பிரச்சனையான ஃபலஸ்தீனர்களின் துயரம் குறித்தும் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.



இறுதியாக பொதுமக்கள் அனைவரும் தங்களுக்குள் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறியவர்களாக இனிதே கலைந்து சென்றனர்.

தகவல்
நிஜாம்

போட்டோ
நஜி (எ) நஜிமுதீன்

Sunday, July 27, 2014

'கொள்கையற்றவர்கள் யார்?' அதிரை TNTJ மீது இறங்கியது அடுத்த இடி! நேரடி விவாதத்திற்கு அழைத்து ADT செயலர் நேரில் சென்று கடிதம் கொடுத்தார்!!

  அதிரை ததஜவினர் நடத்தும் வலைத்தளத்திற்குள் (சமீபத்திய கோர்ட் தீர்ப்பின் படி) மூன்றாம் பாலினம்?! ஒன்று ஒழிந்து கொண்டு நாலாந்தர நடையில் அவதூறுகளை மல்லாக்கப்படுத்துக் கொண்டு காரி உமிழ்ந்து வருவதையும், நாம் உண்டு நமது மார்க்கப் பணிகள் உண்டு என சென்று கொண்டிருந்த அதிரை தாரூத் தவ்ஹீதை தொடர்ந்து வீண் வம்புக்கிழுத்து வருவதையும், இப்படிப்பட்ட இழிசெயல்களால் பொதுமக்கள் மத்தியில் வாங்கிக்கட்டிக் கொண்டு வருவதையும் அனைவரும் அறிந்துள்ளோம்.

அவர்களின் பல்வேறு சவடால்களையும் கண்டு கொள்ளாமல் இருக்கவே ஆத்திரம் உச்சிக்கேற தானாக வந்து வசமாக சிக்கினர் தாங்களே விரித்த வலையினுள். அவர்களின் சவடால்களுக்கு பதில் சொல்லும் விதமாக செயலார் ஜமீல் காக்கா அவர்கள் மக்கள் மத்தியிலேயே விதண்டாவாத பேர்வழிகளையே விவாதத்திற்கு அழைத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தும் நேரில் வரத் துப்பில்லாத அந்த புடவை மீண்டும் தன் போக்கிரித்தனத்தை தொடர்ந்தது.

ஜமீல் காக்கா அவர்களின் முந்தைய பகிரங்க அழைப்பு வீடியோவை காண இந்த லிங்கை அழுத்தவும்


இப்படியே விட்டு வைத்தால் இன்னும் கண்மூடி அவர்களை நம்பிக் கொண்டுள்ள அப்பாவிகளுக்கு உண்மை தெரியாமலேயே போய்விடும் என்பதாலும் இந்த ஹதீஸ் மறுப்பு தலைவனின் பக்தர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி நேர்வழியான குர்ஆன் ஹதீஸின் பக்கம் அழைக்க வேண்டியுள்ளதாலும் மேலும் மக்கள் மத்தியில் பகிரங்க விவாதத்திற்கு அழைத்து 10 தினங்களுக்கு மேல் சென்றுவிட்டதாலும் மீண்டும் அவர்களின் மடத்திற்கே சென்று கடிதம் கொடுக்கப்பட்டு அதன் கிளைத் தலைவரிடமிருந்து ஓப்புகையும் பெறப்பட்டுள்ளது.


கடிதத்தின் மீது சுட்டி பெரிதாக்கி படிக்கவும்


இதற்கிடையே சகோதரர் மீடியா மேஜிக் நிஜாமுதீன் அவர்களை வம்புக்கிழுத்து அவர் தன் சார்பாக தனியானதொரு நேரடி விவாத சவால் கடிதத்தை அவர்களின் மடத்திற்கே நேரில் சென்று வழங்கிவிட்டு வர அதற்கே பதிலின்றி விழிபிதுங்கி போய் கிடப்பது தனி விஷயம்.

சகோதரர் மீடியா மேஜிக் நிஜாமுதீனின் நேரடி அழைப்பை காண இந்த லிங்கை அழுத்தவும்.


அதிரைஅமீன்

அதிரை சாணாவயலில் நடைபெறும் நோன்பு பெருநாள் திடல் தொழுகைக்கான அறிவிப்பு




அதிரை ஈத் கமிட்டி சார்பாக நமதூர் மேலத்தெருவை அடுத்த சாணாவயல் மைதானத்தில் கடந்த ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டும் நபிவழியில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெறவுள்ளது.


நேரம்: நாளை பிறை தென்பட்டால் செவ்வாய்கிழமை காலை 7:30 மணியளவிலும், பிறை தென்படவில்லை என்றால் புதன்கிழமை காலை 7:30 மணியளவிலும் நடைபெறும்.

இடம்: சாணாவயல், மேலத்தெரு, அதிராம்பட்டினம்.

நபிவழியில் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற அணிதிரண்டு வாருங்கள்.

அன்புடன் அழைக்கிறது...
அதிரை ஈத் கமிட்டி

மேலும் விபரங்களுக்கு:
அகமது ஹாஜா- 9003127748
மாஜித்-9443308222


Thanks to adirai pirai

Thursday, July 24, 2014

பொறுக்கிகள் யார்? அதிரை TNTJ பூச்சாண்டிகளை நோக்கிப் பாய்ந்த மீடியா மேஜிக் நிஜாமுதீனின் ஏவுகணை! ததஜ மடத்திற்கே நேரில் சென்று கடிதம் கொடுத்து விவாத சவால்!!

இன்று 24/07/2014 இரவு அதிரை TNTJ மர்கசுக்கு நிஜாமுதீன் மற்றும் பர்ஹான் ஆகியோர் மட்டும் சென்று அதிரை TNTJ கிளை தலைவர் பீர் முகம்மதிடம் அன்வர் அலி, சிக்கந்தர், பக...்கீர் மொய்தீன், சுலைமான் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் ஒரு விவாத அழைப்பு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது..!!!
 
அல்லாஹுவையே சாட்சியாக்கி 24/07/2014 அஸ்ஸலாமு அலைக்கும். (மீடியா மேஜிக்) நிஜாமுதீன் ஆகிய நான், அதிரை TNTJ யினராகிய உங்களுக்கு கடந்த 2004 ஆண்டு முதல் மறைந்த நாசர் காக்கா அவர்கள் மூலமும், சகோதரர் ஹைதர் அலி, சகோதரர் தமீம் ( அன்னாவியார் ) மற்றும் கடற்கரைதெரு இளைஞர் அமைப்பு சார்பாகவும், அதே (குலாஉ) கடிதத்தை, கடற்கரைத் தெரு சகோதரர்கள் சேனாமூனா - அன்வர் அலி மூலமும் பல கால கட்டங்களில் பல கடிதங்கள் அனுப்பியுள்ளேன். இந்த அனைத்து கடிதங்களும் நேரடியாக உங்களுக்கு அனுப்பப்பட்டன. வாசக அமைப்புகூட “நீங்கள் இப்படி பட்டவர்கள்” என நேரடியாக உங்களைத் தான் எழுதி இருப்பேன். TNTJ யினர் அப்படி பட்டவர்கள் என மூன்றாம் நபரிடம் சொல்லுவதுபோல் கோழைத்தனமான வார்த்தை பிரயோகங்கள் இருக்காது.
 
சில மாதங்களுக்கு முன்பு அந்த கடிதங்கள் சம்பந்தமாக TNTJ அப்துல் ரஹ்மான் என்னிடம் விவாதித்த போது, அப்படி எந்த கடிதமும் என்னிடமிருந்து வந்தது கிடையாது என்றார். மேலும் அதிரை TNTJ என்னிடம் விவாதம் செய்ய தயாராக இருப்பதாகவும் சொன்னார். (இந்த அப்துல் ரஹ்மானிடம் கடிதத்தின் நகலில் ஒன்றை மலேசியாவில் நானே நேரிடையாக கொடுத்துள்ளேன்.) அப்போதே இவரின் நம்பக தன்மையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இருந்தும் TNTJ முன்னாள் நகர செயலாளர் சகோதரர் ஹைதர் அலி அவர்களிடம் TNTJ க்கு நான் தந்த கடிதங்கள் என்ன ஆயிற்று? என கேட்டேன், TNTJ Office ல் file ல் உள்ளதே என்றார். இப்படி ஒரு கடிதம் கூட கிடையாது என அப்துல் ரஹ்மான் சொல்லுகிறாரே என கேட்டபோது, அப்துல் ரஹ்மானும், தமீம் ( 36 காதர் சுல்தான் காக்காவின் மருமகன் ) இந்த கடிதங்களுக்கு நாங்கள் பதில் கொடுக்கிறோம் என கூறிக்கொண்டு பல நாட்கள் ஆராய்ந்தனரே ! இவர் எப்படி கடிதம் இல்லை என சொல்லக்கூடும்? என்று திருப்பிக் கேட்டார். அப்துல் ரஹ்மானின் நம்பகத்தன்மையில் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. விவாதம் குறித்து ஹைதரிடம் கேட்டபோது, "உங்களுக்கு எந்த பதிலும் கொடுக்கக்கூடாது என முன்பே மசூராவில் முடிவு எடுக்கப்பட்டது எனவே உங்களுக்கு பதில் தரமாட்டோம்" என்றார். "விவாதம் சார்பாக நான் மீண்டும் கடிதம் தருகிறேன்" என்றேன். "நீங்கள் மீண்டும் தந்தாலும் பதில் வராது" என்றார். இருந்தும் இந்த நோன்புக்கு முன்பு அப்துல் ரஹ்மான் ஊர் வந்தபோது நானே அவரிடம் விவாதம் பற்றி அனுகினேன். அலுவலகத்தில் கலந்து கொண்டு சொல்லுவதாக சொன்னார். 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் அனுகினேன். அப்போது, "உங்களை அவர்கள் அலட்சிய படுத்துகிறார்கள் உங்களிடம் விவாதம் செய்ய அவர்கள் தயாராக இல்லை வேண்டுமானால் நாம் இருவரும் விவாதம் செய்வோம்" என்றார் ( இதே அப்துல் ரஹ்மான் தான் Whats app ல் விவாதித்துக்கொண்டு இருந்தபோது "உங்களிடம் நான் விவாதம் செய்யமுடியாது அதிரை TNTJ தயாராக உள்ளது அங்கு செல்லுங்கள்" என்று whats app group ல் இருந்து வெளியேறினார். ) இருந்தும் நான் மீண்டும் அதிரை கிளைக்கு கடிதம் தருகிறேன் என்றபோது, முடியாது மீண்டும் கடிதம் வேண்டாம் என்றார். அனைத்தும் மொபைலில் பேசியதுதான் அவர் மறுக்கமாட்டார் என நம்புகிறேன். அன்றிலிருந்தே அதிரை TNTJ சார்பாக இவர் எது சொன்னாலும் நான் பொருட்படுத்துவது கிடையாது. அதனால் தான் முர்ஷித் அப்பாசி விசயமாக வைத்திருந்த போர்டை பக்கீர் காக்கா தெரியாது என மறுத்து, பிறகு அப்துல் ரஹ்மான் எனக்கு ஃபோன் போட்டபோது, "நீ ஏற்கனமேயே விவாவதம் சார்பாக வாக்கு கொடுத்து பின்வாங்கியவன், TNTJ சார்பாக நீ சொல்லும் எதுவும் நம்ப முடியாது எனவே சம்பந்தப்பட்டவர்களை எனக்கு Call பன்னசொல்லு" என்றேன். ( Call வரவில்லை. அது தனி விஷயம் ).
 
தற்போது இன்னும் ஒன்று சூனியமாக இதே பாணியில் ஆரம்பிக்கிறது. யார்? எங்கிருந்து? என எதுவும் தெரியாமல். அப்துல் ரஹ்மானாவது தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். வார்த்தை அமைப்பு கூட நேரிடையாக என்னிடம் பேசுவதுபோல் இருந்தது. ஆனால் என்னைப் பற்றி தளத்தில் எழுதுபவர், தான் யார் என்பதை வெளிக்காட்டாமல் பர்தாவுக்குப் பின்னே ஒளிந்து கொண்டு எழுதுகிறார். அவர் ஆணா பெண்ணா என்பதும் இரகசியமாகவே உள்ளது. வார்த்தை அமைப்பு கூட என்னிடம் நேரிடையாக பேசுவதுபோல் இல்லை. தனக்கு தானே அல்லது தன் ஜமாத்தார்களிடம் மட்டும் பேசுவதுபோல் “ அவர் அப்படி பட்டவர் ” என என்னை பற்றி புறம் பேசுவதுபோல் உள்ளது. முதுகெலும்பு இருந்தால் ” நீ இப்படி பட்டவன் ” என என்னிடம் குறிப்பிட்டு எழுதட்டும். மேலும் சவாலில் நான்கு தந்திரங்கள் வேறு. பின் வாங்குவதற்கு ஏதுவாக.
 
1. சவால் அறிவிப்பை எனக்கு அனுப்பாமல் தனக்கு தானே முடிவு செய்துகொண்டு தனக்கு தானே POST செய்து கொண்டு தன் WEB SITE ல் போட்டுக்கொண்டு தானே படித்துக்கொள்ளுமாம். எனக்கு POST பண்ணாதாம். இது ஒரு சவாலாம்.
2. அடுத்ததாக நான் சென்று TNTJ க்கு கடிதம் கொடுக்க வேண்டுமாம் தற்போது சவால் விடக்கூடிய அது கடிதம் கொடுக்காதாம். ( சவால் விட்டவன் நான் தான் என கூறி அது பின் வாங்குவதாக இருந்தாலும்கூட அதற்கும் இடமில்லாமல் நான் கடிதங்கள் முன்பே கொடுத்துள்ளேன்.)
3. அடுத்ததாக 25/07/2014 க்குள் நான் கடிதம் கொடுக்கவேண்டுமாம் இல்லையேல் பின் வாங்கிவிடுமோ? 2004 லிருந்து நான் கொடுத்த கடிததிற்கு இதுவரை பதில் தர வக்கு இல்லை இது எனக்குக் கெடு வைக்கிறது.
4. அடுத்ததாக பிஜேயோ அல்லது மற்ற தா ஈக்களோ கூட என்னிடம் விவாதம் செய்ய மாட்டார்களாம். எனக்குக் கோபமூட்டி நான், "சரியான பெட்டைகள்" என நான் அவர்களை அலட்சியப் படுத்த வேண்டும் என்பதற்காக. எத்தனை தந்திரங்கள்.
 
ஆகவே, இதன் மூலம் அதிரை ததஜ விற்கு தெரிவிப்பது என்னவென்றால்,
பரிசு போர்டு வைத்துவிட்டு தங்களை நான் தொடர்பு கொண்டபோது எங்களுக்குத் தெரியாது என தாங்கள் ஒதுங்கிக்கொண்டது போன்றும், அப்துல் ரஹ்மான் என்னிடம் தாங்கள் விவாதம் செய்ய தயாராக இருப்பதுபோல் காட்டுக் கத்து கத்தியவர், சுதி குறைந்து உங்களிடம் விவாதம் செய்ய ததஜா தயார் இல்லை என அடக்கமாக ஒதுங்கினார். இந்த முன் மாதிரிகளை கருத்தில் கொண்டதால், www.adiraitntj.com என்ற தளத்தில் http://www.adiraitntj.com/2014/07/blog-post_21.html என்ற பகுதியில் தாருத் தவ்ஹீத் அமைப்பை சார்ந்த மீடியா மேஜிக்கர் நிஜாமுதீன் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு விவாத சவடால் விட்டாரா? - மீடியா மேஜிக்கரின் இருட்டறை சவாலை ஏற்கிறோம்! என்ற தலைப்பில் வந்த ஆக்கத்திற்கும் உங்களுக்கும் சம்பந்தம் உண்டா? ஆம் எனில் இதற்கு தாங்கள் பொறுப்பேற்றுக்கொண்டு தங்களது லட்டர் பேடில் மேற்கூறியவற்றை copy paste செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
 
மேலும் அது விவாத பொருளாக சுட்டிக்காட்டப்பட்ட
 
1. சினிமா இஸ்லாத்தின் எத்தனையாவது கடமை? (நிஜாம் அவர்களுக்கு இது இரண்டாம் கடமை என்று கேள்விப்பட்டுள்ளோம்).
2. வரதட்சணை திருமணத்தில் விருந்து திண்பது கடமையா? விரும்பத்தக்கதா?
போன்ற தலைப்புகளோடு
3. வரதட்சணை ததஜவுக்கு எப்போதிலிருந்து ஹலால் ஆனது என்பதும்
4. சினிமா ததஜ நிர்வாகிகளுக்கு மட்டும் எப்போதிலிருந்து ஹலால் ஆனது என்பது பற்றியும்
5.மது ததஜவுக்கு எப்போதிலிருந்து அனுமதிக்கப்பட்டது என்பது பற்றியும்
6.விபச்சாரம் மற்றும் வேலி தாண்டுதல் ( இதில் ஏகப்பட்ட நபர்கள் போட்டி வேறு )
7. வட்டி
8.பண மோஷடி, கட்ட பஞ்சாயத்து
9. வரதட்சணை திருமணத்தில் கலந்து கொண்டு சாப்பிடும் உணவுதான் கூடாது. வீட்டிற்கு உணவு வந்துவிட்டால் சாப்படலாம் என்ற ஃபத்வா சம்பந்தமாகவும்
10. வரதட்சணை மற்றும் அல்லிகுத்து பைனகுமா மூலம் நடைபெறும் திருமணத்திற்கு பதிவு புத்தகம் தூக்கும் ஜமாத்தில் ததஜ நிர்வாகிகள் மட்டும் நிர்வாகிகளாக இருக்கலாம் என்ற விதி எப்போதிலிருந்து?
11. டூர் சென்ற இடத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்து தண்டனை பெறலாம் என்ற விதி எப்பொதிலிருந்து?
( உங்கள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட இந்த கடமைகளின் வரிசையை நீங்கள் முன் - பின் போட்டு சரி செய்து கொள்ளலாம். ஆட்சேபனை இல்லை )
போன்ற தலைப்புகளிலும் இஸ்லாம் மார்க்கம் சம்பந்தப்பட்ட விவாதமாக, இதுவரை நான் அனுப்பியுள்ள கடித்ததிலிருந்து ஒரு கடிதத்திற்கு ஒன்று என்ற வீதத்திலாவது வாதிட விரும்புகிறேன் நீங்கள் தகுதியுடையவராக இருந்தால்.
 
மேலும் கீழ் உள்ள நபர்கள் பற்றியும்
1. பக்கீர் மொய்தீன்
2. அப்துல் ரஹ்மான்
3. சிக்கந்தர்
4. அன்வர் அலி
5. ராஜிக் அகமது
6. ஹைதர் அலி
7. கிளை உறுப்பினர்களில் பலர்
8. ததஜ உறுப்பினர்களாக வெளிநாடுகளில் இருப்பவர்களாக பலர்.
 
மற்றும் மேல் மட்ட நிர்வாகிகளின் ரகசியங்களில்
1. பிஜே
2. முகம்மது த/பெ பிஜே
3. நபீலா த/பெ பிஜே
4. சம்சுல் லுஹா
5. அப்துல் ரஹ்மான் பிர்தவ்ஸி
6. அஸ்ரஃப்தீன் பிர்தவ்ஸி
7. பக்கீர் முகம்மது அல்தாஃபி
போன்ற நபர்கள் பற்றியும் விவாதிக்க வேண்டும்.
 
தங்களுடைய முன் தயாரிப்புக்காக ஒரு சில

1. மதுக்கூருக்கு திருமண விருந்தாளியாக சென்றபோது மது விருந்தில் கலந்து கொண்டது மட்டும் அல்லாமல் “ அல்லாஹ் இணை வைத்தலை தவிர ஏனைய பாவங்களை மன்னிப்பவன் எனவே மது அருந்துவது மன்னிக்க முடியாத குற்றம் அல்ல, எனவே நீயும் மது அருந்து” என கூட வந்த விருந்தாளியை நிர்பந்திப்பது – அறியாமை காலத்தில் அல்ல இருவரும் தவ்ஹீதில் இருக்கும்போதே - சகோ பக்கீர் மொய்தீன் மலாக்கா நிர்வாகி சகோ ஜாகிர் உசேனிடம்.

2. திருமணம் முடிந்து வருடங்கள் பல சென்று பெண் வீட்டாரிடம் தகராறு செய்து வரதட்சணையாக வீடு கட்டி கேட்கும் - TNTJ அப்துல் ரஹ்மான். வீடு கட்டப்பட்டுக்கொண்டுள்ளது. தற்போது வசிப்பது மாமியார் வீட்டில்.

3. தியேட்டர் சென்று சினிமா பார்ப்போர் எண்ணற்றோர். பட்டென நினைவுக்கு வருவது – பிஜே.
19/04/2013 அன்று நடந்த வரதட்சனை திருமணம் அஷ்ரஃப்தீன் தலைமையில் நடைபெற்றது. உங்களது பதிவேட்டில் பதியப்பட்டது. நீங்கள் சென்று விருந்து உண்டு இறைச்சி முள்ளை மட்டும் போட்டுவிட்டு வந்து விட்டீர்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள குற்றங்கள் - சாரி - கடமைகள் என் பார்வையில் மிகச்சிறிய உதாரணங்கள். மற்றவை விவாதத்தின் போது. எனவே எப்போது? என்றும் பொதுவான ஒரு இடமும் முடிவு செய்து அறிய தரவும்.
எனக்கு விடுத்துள்ள இரண்டு சவால்களுக்கும் தற்போதே பதில் வேண்டும் என கருதினால்
 
1. சினிமா இஸ்லாத்தின் எத்தனையாவது கடமை? (நிஜாம் அவர்களுக்கு இது இரண்டாம் கடமை என்று கேள்விப்பட்டுள்ளோம்).
இஸ்லாத்தில் சினிமா ஹராம். கண்களால் செய்யும் விபச்சாரம். எனவே அது கடமை இல்லை. எனக்கு அது இரண்டாம் கடமை என சொல்லுவோர் நிரூபிக்க வேண்டும்.

நீங்கள் குறிப்பிடுவதுபோல் அனைத்து தவ்ஹீது ஜமாத் கூட்டமைப்பு காலத்தில் அதாவது 2000-2002 ல் மட்டும் அல்ல அதன் பிறகும் நான் சினிமா பார்த்துள்ளேன். அது தவறுதான். விபச்சாரம் எப்படி இஸ்லாத்தில் கூடாதோ அதைபோல் இதுவும் கூடாது. ஆய்வுக்காகவும் சமுதாயத்துக்காகவும் விபச்சாரம் செய்தேன் என்றோ, மதுவில் கலந்துள்ள மூலப்பொருளின் ஹலால் தன்மை பற்றி அறிய மது அருந்தினேன் என்றோ சமாளித்து விவாதிக்க மாட்டேன். விவாதத்தில் பெயர் பெற்ற தங்களின் பதிலை பார்ப்போம்.
 
2. வரதட்சணை திருமணத்தில் விருந்து திண்பது கடமையா? விரும்பத்தக்கதா?

எனது பார்வையில் வரதட்சணையே கூடாது. வரதட்சணை திருமணத்தில் விருந்து உண்பது கடமையல்ல. விரும்பத்தக்கதும் அல்ல. வெறுக்கத்தக்கது.
ஒரு வேளை அதுபோன்ற திருமணத்தில் நான் கலந்து கொண்டுள்ளேன் என்றால், நீங்கள் சுட்டி காட்டலாம்.
 
நம்பிக்கை கொண்டோரே அல்லாஹ்க்கு அஞ்சுங்கள் உண்மையை தெளிவாக நேரடியாக கூறிவிடுங்கள் ( அல் குர் ஆன் 33:70 )
 
எதிர் பார்ப்புடன்.
(Media Magic) Nizamudeen

Tuesday, July 22, 2014

முஸஃபாவில் நடைபெற்ற தஃவாவுடன் கூடிய இஃப்தார்

ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபி, முஸஃபா, ஐகாட் சிட்டி 2ல் அமைந்துள்ள போர்ஸிலான் மற்றும் ஜிப்செம்னா கம்பெனி சகோதரர்களால் இந்த வருடமும் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி 20.07.2014 ஞாயிறன்று ஏற்பாடு செய்யப்பட்டது. 



இந்நிகழ்ச்சியில் முஸலீம்களுடன் ஏராளமான தமிழ் சகோதரர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர், இந்நிகழ்வில் முக்கிய நோக்கமே பிற மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைப்பதும் ஒன்றாகும் அதனடிப்படையில் இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள மவ்லவி முஹமது நாசர் அவர்கள் கலந்து கொண்டு 'இஸ்லாம் கூறும் மனிதநேயம்' என்ற தலைப்பின் கீழ் இஸ்லாத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறினார்.





இறுதியாக, ஏற்கனவே இஸ்லாத்தை தழுவியிருந்த முஹமது என்ற சகோதரர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிற மத சகோதரர்களுக்கு தஃவா தொடர்புடைய இஸ்லாமிய புத்தகங்களை வழங்கினார்.

பயன் தரும் நினைவூட்டல்‏

ரமளானில் தவிர்க்கப்பட வேண்டியவைகள் (v)

ஜும்ஆ குத்பா பேருரை
வழங்கியவர்: அஷ்ஷைஹ் முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம்.
நாள்: 18 ஜூலை 2014 வெள்ளிக்கிழமை.
இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப்

___________________________________________________________________

இளைஞர்களும் இணைய தளமும் (v)
ரமளான் முழு இரவு நிகழ்ச்சி
வழங்கியவர்: மெளலவி, பக்ருதீன் இம்தாதி,
அழைப்பாளர் SKS கேம்ப் அல்-ஜுபைல்
இடம்:  அல்-ஜுபைல் தஃவா நிலையம்
நாள் : 17 – 07 – 2014 வியாழக்கிழ‌மை

____________________________________________________________________

மறுமையும் அந்த நான்கு கேள்விகளும் (v)

ரமளான் முழு இரவு நிகழ்ச்சி
வழங்கியவர்: அஷ்ஷைஹ் எம். என். நூஹ் மஹ்ழரி, அழைப்பாளர், IDGC தஃவா நிலையம்
இடம்:  அல்-ஜுபைல் தஃவா நிலையம்
நாள் : 17 – 07 – 2014 வியாழக்கிழ‌மை

______________________________________________________________________

வறுமை ஒழிப்பில் இஸ்லாம் (v)

ரமளான் முழு இரவு நிகழ்ச்சி
அஷ்ஷைஹ் முஜாஹித் இப்னு ரஸீன் 
அழைப்பாளர் ராக்கா தஃவா நிலையம், அல்கோபார்
இடம்:  அல்-ஜுபைல் தஃவா நிலையம்
நாள் : 17 – 07 – 2014 வியாழக்கிழ‌மை

_________________________________________________________________________
__._,_.___

Posted by: Suvana Cholai <suvanaccholai@gmail.com>

'அதிரையை பரபரபாக்கும் உண்மையான தவ்ஹீத்வாதிகள்?!' - மறுப்பும் விளக்கமும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

அதிரைநியூஸ் என்ற வலைதளத்தில் 'அதிரையை பரபரபாக்கும் உண்மையான தவ்ஹீத்வாதிகள்?!' என்ற தலைப்பில் வெளிவந்திருந்த தலையங்கத்திற்கு அனுப்பிய மறுப்பு (கமெண்ட் பகுதியில் பதியப்பட்டுள்ளது).


நுனிப்புல் மேய்ந்த ஆய்வு!

குற்றமும் குற்றவாளிகளும் முறையாக அடையாளப்படுத்தப்படாமல் ஏதோ ஏட்டிக்குப் போட்டியான அமைப்புகள் என்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஃபலஸ்தீன சகோதரர்களுக்காக குறைந்தபட்சம் நாம் இறைவனிடம் முறையிட வேண்டும் என்பதை இயக்க அடிப்படையில் தான் செய்ய வேண்டுமா? இந்த ரமலானில் ADT அங்கத்தினர்கள் சுயமாக செய்திருக்க மாட்டார்கள் என எப்படி நீங்கள் முடிவு செய்தீர்கள் மேலும் ஃபலஸ்தீன பிரச்சனையில் மட்டும் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும் என ஏன் எதிர்பார்க்கின்றீர்கள்?!

மிக சமீபத்தில் ADT மீது திணிக்கப்பட்ட விடயங்களில் மட்டுமே பதில் நிகழ்வுகள் அமைந்திருந்தன என்பதை நடுநிலையான, சிந்திக்கின்ற அதிரையர் அனைவரும் அறிந்த ஓன்றே!

ADT என்றுமே தாங்கள் தான் உண்மையான தவ்ஹீத்வாதிகள் என்று வாதிட்டதில்லை ஆனால் யாரென்று தீர்மானிக்க அல்லாஹ் போதுமானாவன்.

ஓரு தனி மனிதனின் அறிவுக்கு எட்டவில்லை என்பதற்காக தமிழக அளவில் ஒரு பெருங்கூட்டமே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்கும் வழிகேட்டுக் கொள்கையில் இறங்கியிருப்பதை தடுக்கும் கடமை உங்களுக்கு இல்லை? அட்லீஸ்ட் ADT செய்யும் போதாவது மௌனமாக ஆதரவு தரலாமே!

ADT ஒரு அமைப்பல்ல மாறாக அது குர்ஆன் ஹதீஸை மட்டும் தங்கள் வாழ்வியலாக ஏற்றவர்களின் நமதூருக்கான (அமைப்பு எனும் தோற்றத்தில் அமைந்த) சங்கமம் அன்றி வேறில்லை. ஏனெனில் இங்கே,

தக்லீது கிடையாது அதனால் எங்களுக்கே உறுப்பினர்கள் அதிகம் என்ற தம்பட்டம் கிடையாது

கட்சி நிலை கிடையாது அதனால் கொடியும் கிடையாது

தலைவனின் சொல்லுக்கு அப்பீல் கிடையாது என்ற நிலையும் இல்லை

சொல்வதும் செயல்படுத்தப்படுவதும் குர்ஆன் ஹதீஸ் மட்டுமே.

இயக்க உறுப்பினர்கள் மட்டுமே சுவர்க்கம் செல்ல முடியும் என மதமதப்பில் திரிவதும் கிடையாது.

யரோடும் நீயா? நானா? போட்டியில் இறங்குவதும் கிடையாது.

யாரிடமும் வீண் வம்புக்கும் போவதும் கிடையாது ஆனால் பல் பிடித்து பார்ப்பவர்களை விடுவதும் கிடையாது.

ADT யில் எந்த அமைப்பினர்களும் குர்ஆன் ஹதீஸை (அதிரையர்கள்) தங்கள் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டால் உறுப்பினர்கள் ஆகலாம் ஆனால் எந்த அமைப்பின் நிர்வாகிகளும் இங்கே ADT நிர்வாகத்திற்குள் வர முடியாது.

எனவே, ADT யை பத்தோடு பதினொன்றாக பார்க்க வேண்டாம் என்று கூறி இத்துடன் நிறைவு செய்கிறேன், மீண்டும் தேவையெனில் வருவேன் ஆனால் இயக்கவாதிகளின் சவடால்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க மாட்டேன். வஸ்ஸலாம்.

குறிப்பு: இது எங்கள் தரப்பு விளக்கமே மற்றவர்கள் உங்கள் விமர்சனத்து உரியவர்களா என்பதை அனைத்து நிகழ்வுகளையும் நடுநிலையுடன் உற்று நோக்கி வரும் நடுநிலை அதிரையர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும்.

 அதிரை அமீன்

Monday, July 21, 2014

ஆத்திரத்தில் அறிவிழந்த அதிரை டீயென்டீஜே


மவ்லவி முர்ஷித் அப்பாஸி அவர்களை தனியாகத் தான் சந்திப்போம் என அதிரை டீயென்டீஜே வழிய, பெருந்தன்மையாக அதிரை தாருத் தவ்ஹீதும் வழிவிட பேச்சுவார்த்தையை சந்தைக்கடாக்கிய காட்சிகளை காண..

அதிரை டீஎன்டீஜே யுடன் பேச்சுவார்த்தை



மவ்லவி ஹைதர் அலிக்கும் மவ்லவி முர்ஷித் அப்பாஸிக்கும் வித்தியாசம் தெரியாத அதிரை டீயென்டீஜே

மேலத்தெருவில் தினமும் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் தான் அல் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் பள்ளியில் உரையாற்றி வருகிறார். ஒருவேளை "அவரைத்தான் இவருன்னு" நினைத்து விட்டனரோ, காலக் கொடுமையடா!

மவ்லவி முர்ஷித் அப்பாஸி அவர்கள் அதிரையின் ஊர் மத்தியில் நடுத்தெருவில் தொடர்ந்து 20 நாட்கள் இரவு வேளையில் உரையாற்றிக் கொண்டிருந்த நிலையில், மேலும் அதே தினங்களில் காலை வேளையில் அதிரை டீயென்டீஜேயினரின் தக்லீத் மடத்திற்கு அருகிலுள்ள பிலால் நகர் ITC மர்கஸில் பெண்களுக்கான தொடர் பயான் நிகழ்த்திக் கொண்டிருந்த நிலையில், மேலும் பயான் இல்லாத மற்ற நேரங்களில் தக்வா பள்ளிக்கு அருகிலிருக்கும் ஓர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் அவர்கள் முர்ஷித் அப்பாஸி அவர்களை தேடியது 'ஒரு பழமொழி சொல்வார்களே! இடையன் ஆட்டை தோளில் போட்டுக் கொண்டு மந்தையில் தேடினான்' என்பது போல் மேலத்தெரு பாக்கியாதுஸ் ஸாலிஹாத் பள்ளிக்கு முன் போய் தேடி நகைப்பிற்குரிய செயலை அரங்கேற்றி மக்கள் மத்தியில் கேவலப்பட்டனர்.

பருக்குச் சோற்றில் சூனியத்தை மறைக்கும் அதிரை TNTJ கிளை

ஸூரத்துந் நாஸ்(மனிதர்கள்)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
 
114:1    قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
 
114:2   مَلِكِ النَّاسِ
(அவனே) மனிதர்களின் அரசன்;
 
114:3   إِلَٰهِ النَّاسِ
(அவனே) மனிதர்களின் நாயன்.
 
114:4   مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
 
114:5   الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
 
114:6   مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.
 
ரமளான் மாதத்தின் தொடக்கத்திலிருந்தே அதிரையில் மார்க்கப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் சகோதரர் முர்ஷித் அப்பாஸி அவர்களை சில மாதங்களாக ஒடி ஒழிந்திருப்பதாக தகவல் பலகையை நிரப்பி இருக்கின்ற அதிரை TNTJ-யின் ஈனச் செயல் முகம் சுழிக்க வைக்கிறது. இருட்டில் தொலைந்ததை வெளிச்சமாக இருப்பதால் வேறு ஒரு இடத்தில் தேடும் அதிரை TNTJ-யின் அதி மேதாவித்தனம்? இவர்கள் சிந்திக்கத் திறானியற்றவர்கள் என்பதையே பரைசாற்றுகிறது. அவ்வாறே தங்களுடைய தொண்டர்களும் எதையும் சிந்திக்காமல் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளாக இருப்பதால் தான் இப்படி முழுப் பூசனிக்காயை ஒரு பருக்குச் சோற்றில் மறைக்கும் சூனியத்தைச் செய்திருக்க வேண்டும்.

அதிரையில் பிரச்சாரம் மேற்கொன்டிருக்கும் நபரை அதிரை TNTJ கிளை ஓடி ஒழிந்துகொன்டார் என்றும் அழைத்து வருபவர்களுக்கு தக்க பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிப்பு செய்திருப்பதும், பொறுப்பேற்று இடப்பட்ட தொலைப்பேசி எண்ணிற்குரிய நபர் அது தொடர்பாக தனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லியிருப்பதும், TNTJ-யின் நம்பகத் தன்மையையும், இவர்களுடைய ஏனைய அறிவிப்புகளும் விவாத அறைகூவல்களும் எவ்வளவு போலியானது என்பதையும், மேலும் இது போன்ற சவடால்கள் அனைத்தும் ரசிகர்களைத் தக்க வைக்கும் சூனியம் என்பதையும் சிந்திக்கத் தெரிந்த எவரும் எளிதில் உணர்ந்துகொள்ள முடியும்.





SMO
ஈமெயில் வாயிலாக

Sunday, July 20, 2014

இருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்!.



அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்!.
 
ஆக்கம்: அப்துல்லாஹ் மன்பஈ
 
 
நான் சரியான இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறேனோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

மார்க்க சம்பந்தமான அறிவு எனக்கு இருக்கிறதோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

என் மனைவி மக்கள், குடும்பத்தினருக்கு நான் இஸ்லாத்தைப் பற்றி கூறி நல்வழிப் படுத்துகிறேனோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

எனது இல்லத்தில் இஸ்லாத்திற்கு மாறான செயல்கள் நடப்பதைக் கண்டும் காணாமல் இருந்து விடுகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

மறுமை நாளைக்காக நான் எதை சேர்த்து வைத்திருக்கிறேன் என்று எண்ணிப் பார்க்க இந்த அவசர கால உலகத்தில் எங்கே முடிகிறது இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
 
ஐந்து வேளைத் தொழுவது கடமை என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வேலைப் பளுவினால் என்னால் தொழமுடியவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

ரமலானில் நோன்பு வைப்பது கட்டாயம் என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். இருப்பினும் பசி தாகம் சமாளிக்க.. நோன்பு வைக்க என்னால் முடியவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

என் தொழிலில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. எனினும் கணக்குப் பார்த்து ஜகாத் கொடுத்திட மனம் இடம் தரவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

என் வாழ்நாள் முழுவதும் ஓடி ஓடி உழைத்து ஓரளவு என் குடும்பத்திற்காக உழைத்து சேர்த்து ஓய்ந்து விட்டேன். இப்போது ஹஜ் செல்லும் அளவுக்கு என் உடலில் தெம்பு இல்லை இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

வீட்டில் அபிவிருத்தி வேண்டி மவ்லீது ராத்தீபுகளை புது புது மெட்டுகளில் ஓதி இறையருள் பெற முயற்சிக்கிறேன். இதெல்லாம் தவறு என்று உள்மனம் கூறுகிறது, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி கோருகிறோம்! என்று தொழுகையில் ஓதிவிட்டு அவ்லியாக்கள், பெரியார்களிடம் உதவி தேடுவது என் இரத்தத்தில் ஊறிப்போய்விட்டது, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் நாட்டம் நிறைவேற சலவாத்துன்னாறியா 4444 தடவை ஓதி துஆ கேட்கிறேன். இது குர்ஆன்-ஹதீஸில் இல்லை என்றாலும் என் மன ஆறுதலுக்காக, அபிவிருத்திக்காக இதை ஓதுவதற்கு ஏற்பாடு செய்கிறேன். இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

பால்கிதாப்-பில்லி-சூனியம்-ஏவல்-தகடு-தட்டு-தாயத்து-பேய்-பிசாசு-ஆவி எல்லாம் நம்புகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

பூனை குறுக்கே செலவது, பல்லி தலையிலே விழுவது, ஆந்தை அலருவது, காகம் கரைவது, ஸஃபர் பீடை மாதம்-கெட்ட சகுனம் என எல்லாம் பார்த்து பார்த்து ஒவ்வொரு வேலையும் செய்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

பலர் பாராட்ட கத்னா-பூப்புனித நீராட்டு விழாவை விமரிசையாக நான் நடத்துகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

புதுமனை புகுவிழாவிற்கு பால் காய்ச்சி விழா நடத்துகிறேன். குழந்தைக்கு தர்காவில் சென்று முடி இறக்கி மொட்டை போடுகிறேன். அவ்லியா சன்னிதானத்தில் ஆடு, சேவல் பலி தருகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் அம்மாவின் கடைசி ஆசைக்காகத்தான் மஹர் கொடுத்து மணம் புரியாமல் வரதட்சணை வாங்கிக் கொண்டு திருமணம் செய்தேன். என் மனைவியின் ஆசைக்காகத்தான் சுன்னத்தான தாடியை சிரைத்துவிட்டேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் தந்தையின் வற்புறுத்தலால் என் மகன் திருமணத்தை மேள தாளத்துடன் யானை ஊர்வலத்துடன் மிக ஆடம்பரத்துடன் நடத்துகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

வட்டி வாங்கக்கூடாது என்று வான் மறைக்கூறினாலும் கூட என் தொழில் வளர்ச்சிக்காக குறைந்த வட்டியில் வீடுகட்ட, கடை ஆரம்பிக்க, பைக் சவாரிக்காக வட்டி வாங்க வேண்டிய நிர்பந்தம். என்ன செய்வது? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

லாட்டரி சூதாட்டம்தான். அரசு அதனை தடை செய்திருந்தாலும் என்ன? நான் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை வாங்கி மறைத்து விற்பனை செய்து வருகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

குடி குடியைக் கெடுக்கும்! மது ஹராம்தான், ஆனால் எனக்கு டாஸ்மார்க் கம்பெனியில்தான் வேலை கிடைத்தது. கைநிரைய சம்பாதிக்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

சினிமா பார்க்கக் கூடாதாம்! இந்த காலத்தில் நடக்கக்கூடிய காரியமா என்ன? பேரும் புகழும் பேரின்பமும் பெற்றுத் தரும் கனவுத் தொழிற்சாலையல்லவா அது! பாம்பு மட்டும்தான் படம் எடுக்குமா? மக்கள் பாராட்டும் விதமாக நான் கூட படம் எடுக்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

அளவு நிலுவையில் மோசடி கூடாதாம். வியாபாரத்தில் பொய் கூடாதாம். (பரக்கத்) இறையருள் கிடைக்காதாம். பொய் சொல்லாமல், மோசடி செய்யாமல் எப்படி விரைவில் பணக்காரன் ஆவதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

ஒரு சாண் நிலம் ஆக்கிரமிப்பு செய்தாலும் மறுமையில் ஒரு பூமி அளவு நிலத்தை நான் சுமக்க வேண்டுமாம். பலரின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த, அந்த நிலத்தை திரும்பக் கொடுத்து விட்டு என் பிள்ளைகளுக்கு எதைக் கொடுத்துவிட்டுப் போவதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கூடாதாம். பிறகு எதற்கு உலகத்தில் வாழ்வதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் குடும்பத்தில் என் நான்கு பிள்ளைகள், நான்கு மத்ஹப்களில் இருக்கின்றனர். நானும் என் தம்பிகளும் எல்லா அரசியல் அமைப்பிலும் அங்கம் வகிக்கிறோம், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

கடவுள், பாவம், புண்ணியம், நீதி, நியாயம், உண்மை என்கிறவற்றில் நம்பிக்கை கிடையாது. ஏதோ உலகத்திலே பிறந்துட்டோம். முளைக்கிற செடி வளர்ந்து மரமாகிற மாதிரி நாமும் வளர்ந்துட்டோம். ஏதோ வாழந்துட்டு இருக்கிறோம். ஊரோடு இணைந்து போகத்தானே வேண்டும். இஸ்லாமிய அடிச்சுவட்டில் இக்காலத்தில் வாழ்ந்தால் உலகம் நகைக்காதா? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

(
அல்ஜன்னத்) ஆசிரியர்: போதும்! போதும்!! கொஞ்சம் இடம் கொடுத்தா, பக்கம் பக்கமாக மானம்-விமானம் ஏற்றிடுவீங்க போலிருக்கே..?.

ரேசன் கார்டிலும், வாக்காளர் அட்டையிலும், பள்ளி கல்லூரி சான்றிதழ்களிலும் மட்டுமே முஸ்லிமாக வாழ்பவர்களே! சிந்தியுங்கள். நமது வாழ்வும். மரணமும் தூய இஸ்லாத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்திட வேண்டும் என்பதை உள்ளத்தில் பதித்துக் கொள்ளுங்கள்.

நன்றி: அல் ஜன்னத் (2011).

பகிர்வு: அறந்தை அப்துல் ஹக்கீம்