உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, July 21, 2014

பருக்குச் சோற்றில் சூனியத்தை மறைக்கும் அதிரை TNTJ கிளை

ஸூரத்துந் நாஸ்(மனிதர்கள்)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
 
114:1    قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
 
114:2   مَلِكِ النَّاسِ
(அவனே) மனிதர்களின் அரசன்;
 
114:3   إِلَٰهِ النَّاسِ
(அவனே) மனிதர்களின் நாயன்.
 
114:4   مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
 
114:5   الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
 
114:6   مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.
 
ரமளான் மாதத்தின் தொடக்கத்திலிருந்தே அதிரையில் மார்க்கப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் சகோதரர் முர்ஷித் அப்பாஸி அவர்களை சில மாதங்களாக ஒடி ஒழிந்திருப்பதாக தகவல் பலகையை நிரப்பி இருக்கின்ற அதிரை TNTJ-யின் ஈனச் செயல் முகம் சுழிக்க வைக்கிறது. இருட்டில் தொலைந்ததை வெளிச்சமாக இருப்பதால் வேறு ஒரு இடத்தில் தேடும் அதிரை TNTJ-யின் அதி மேதாவித்தனம்? இவர்கள் சிந்திக்கத் திறானியற்றவர்கள் என்பதையே பரைசாற்றுகிறது. அவ்வாறே தங்களுடைய தொண்டர்களும் எதையும் சிந்திக்காமல் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளாக இருப்பதால் தான் இப்படி முழுப் பூசனிக்காயை ஒரு பருக்குச் சோற்றில் மறைக்கும் சூனியத்தைச் செய்திருக்க வேண்டும்.

அதிரையில் பிரச்சாரம் மேற்கொன்டிருக்கும் நபரை அதிரை TNTJ கிளை ஓடி ஒழிந்துகொன்டார் என்றும் அழைத்து வருபவர்களுக்கு தக்க பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிப்பு செய்திருப்பதும், பொறுப்பேற்று இடப்பட்ட தொலைப்பேசி எண்ணிற்குரிய நபர் அது தொடர்பாக தனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லியிருப்பதும், TNTJ-யின் நம்பகத் தன்மையையும், இவர்களுடைய ஏனைய அறிவிப்புகளும் விவாத அறைகூவல்களும் எவ்வளவு போலியானது என்பதையும், மேலும் இது போன்ற சவடால்கள் அனைத்தும் ரசிகர்களைத் தக்க வைக்கும் சூனியம் என்பதையும் சிந்திக்கத் தெரிந்த எவரும் எளிதில் உணர்ந்துகொள்ள முடியும்.





SMO
ஈமெயில் வாயிலாக

No comments:

Post a Comment