உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, July 20, 2014

துபை சர்வதேச குர்ஆன் விருது விழாவில் நடைபெற்ற தமிழ் பயான்


 அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்




கடந்த வெள்ளியன்று (18.07.2014) பின்னேரம் இரவு சுமார் 10.30 மணிமுதல் 12.30 வரை அல் கிஸஸ் ஜமியத் அல் இஸ்லாஹ் அரங்கில், துபை அரசின் 'இன்டெர்நேஷனல் ஹோலி குர்ஆன் அவார்ட்' கமிட்டியினரால் புனிதமிகு ரமலான் மாதங்களில் நடத்தப்பெறும் குர்அன் ஓதும் போட்டியை ஒட்டி பல்வேறு சர்வதேச மொழிகளிலும் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் சேர்த்து நடத்தப்படுகின்றன, அதில் ஒன்றாக நமது தமிழ் மொழியிலும் கடந்த வருடம் முதல் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.





இந்த வருட நிகழ்ச்சியை ஒட்டி தமிழ் பிரிவின் சார்பாக சென்னையிலிருந்து 'முஃப்தி. உமர் ஷரீஃப் காஸிமி' அவர்கள் சிறப்பு அழைப்பாளாராக பங்கேற்று 'திருக்குர்ஆன் - மனித குலத்திற்கோர் வழிகாட்டி' என்ற தலைப்பின் கீழ் குர்ஆன் எவ்வாறெல்லாம் மனித குலத்திற்கு வழிகாட்டியாக திகழ்கிறது என்பதை குர்ஆன் வசனங்கள் மூலமும் நபி (ஸல்) அவர்களின் வாழ்விலிருந்து நடைமுறைகளை எடுத்துக்கூறியும் விளக்கினார்.





முதன்மையான அரங்கு விரைவாக நிறைந்த நிலையில் எஞ்சியோர்களுக்கு வெண்திரை மூலம் நிகழ்ச்சியை நேரிடையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் பிரதான உரைக்குப் பின் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
 
அதிரைஅமீன்

No comments:

Post a Comment