உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, November 30, 2014

துபையில் நடைபெற்ற மவ்லவி அப்துல் பாஸித் புஹாரி அவர்களின் பேரூரை

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

 அன்பர்களே ! பின்வரும் காணொளியை பாருங்கள் !
http://m.youtube.com/watch?v=ugQqpEEJ-ck


சென்ற 28.11.2014 வெள்ளிக்கிழமை பின்னேரம் இரவு சுமார் 7 மணியளவில் துபை அல் மனார் சென்டர் திறந்தவெளி அரங்கில் மவ்லவி அப்துல் பாஸித் புஹாரி அவர்கள் 'மண்ணறை முதல் மறுமை வரை' என்ற தலைப்பில் பேரூரையாற்றினார்கள்.


எதிர்பார்ப்பிற்கு மேல் ஆண்கள் திரண்டு வந்திருந்தனர். இடவசதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்திடும் வண்ணம் விரிப்புக்கள் விரிக்கப்பட்டு புரோஜக்டர் வழியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆண்களுக்கு நிகரான ஆர்வத்துடன் பெண்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில், அபுதாபியிலிருந்து சுய ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்ட பிற மத சகோதரர்களுக்கு அல் மனார் சென்டர் உள்ளரங்கில் பிரத்தியோக சிறப்பு தர்பியா நடத்தப்பட்டு இஸ்லாத்தை தழுவிட அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் குர்ஆன் தமிழாக்கமும் வழங்கப்பட்டது.

முஸ்லீம் சகோதரர்களை பொருத்தவரையில் அவர்களுக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்ள பல வழிகள் இருப்பதாலும் பிற மதத்தினருக்கு அத்தகைய வாய்ப்புக்கள் குறைவு என்பதாலும் எதிர்வரும் காலங்களில் பிற மத சகோரர்களுக்கென்றே சிறப்பு ஏற்பாடுகளை தமிழ் தஃவா குழுவினர் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு முன்னை விட அதிகம் அதிகரித்துள்ளது.

துபையிலிருந்து
S. அப்துல் காதர்

No comments:

Post a Comment