அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் வழமைபோல் முஸஃபாவில் வாராந்திர மார்க்க, குர்ஆன் விளக்க வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த தொடர் விளக்க வகுப்புக்களை 'பொறியாளர் ஜெய்லானி' அவர்கள் எளிமையான விளக்கங்களுடன் சிறப்புடன் நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு வகுப்பிலும் புதிய பல சகோதரர்களின் வருகைகள் அதிகரித்துக் கொண்டுள்ளன.
கடந்த வாரம் 08.11.2014 வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்குப்பின் துவங்கிய வகுப்பு வருகையாளர்களின் ஆர்வத்தினால் சுமார் 1 ½ மணிநேரம் வரை நீடித்து நடந்தது, அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷா அல்லாஹ் வருகின்ற காலத்திலும் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இஷா தொழுகைக்குபின் வகுப்புக்கள் துவங்கும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்
லால்குடி முஸ்தபா
No comments:
Post a Comment