உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, September 25, 2011

விஷத்திற்கு எதிராய்...

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

மனிதர்கள் தனக்குத் தானே தேடிக்கொள்ளும் தீமைகளில் புகை மற்றும் புகையிலை பழக்கத்திற்கு பிரதான இடமுண்டு ஆனாலும் சக மனிதர்கள் மீதும், இந்த பிரபஞ்சத்தின் மீதும் அக்கறை கொள்ளும் மனிதர்களும், இறையச்சமுடைய நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

புகைக்கு எதிரான இந்த நன்மக்களின் உணர்வுகளை மதித்தும் விஷத்திற்கு (புகை) எதிராய் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் நன்றியுடன் பதிகிறோம். 

(பெரிதாக பார்க்க புகைப்படத்தின் கிளிக்குங்கள்)

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோயில் என்ற ஊரைச் சேர்ந்த சகோதரர் ஒலி முஹம்மது அவர்கள் பிறவியிலேயே பார்வையற்ற சகோதரர் ஆனாலும் அவருக்கு மனதில் ஊனமில்லை அதனால் தான் இறையச்சமுடைய அந்த சகோதரர் தான் நடத்தும் இந்த சிறிய கடையில் லாபங்களை அள்ளித்தரும் சிகரெட், பீடி, சுருட்டு, புகையிலை, வெற்றிலை என எந்த லாகிரி வஸ்துக்களுக்கு இடம் தருவதுமில்லை, விற்பதுமில்லை.
அல்லாஹ் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து தன் கடையை நடத்தி வருகிறார், அல்லாஹ்வும் அருள் செய்கிறான். இவருக்குள்ள இறை நம்பிக்கை, தன்னம்பிக்கை பார்வையுள்ள நமக்கில்லையே ஏன்?

வேண்டாம் புகை என இந்த நிமிடத்திலிருந்து நமக்கு நாமே சபதமேற்போம். புகைப் பழக்கமில்லாத சக மனிதர்களையும் பாதிக்கும் விஷத்தை விட்டொழிப்போம். அல்லாஹ் நம் எல்லோர் மீதும் அருள் செய்வானாக!

வியந்தேன் : சகோதரர் ஒலி முஹம்மது குறித்து சிறப்பு குறிப்பு ஒன்று, வாடிக்கையாளர்கள் தரும் பணத்தை தடவிப் பார்த்தே மதிப்பை உணரும் சகோதரர் யாருடைய உதவியுமின்றி சரியான சில்லரையையும் மீதம் தருகின்றார். அல்லாஹ் அவருக்கு இன்னும் பேரருள் புரியட்டும்.
 

புகையின் பகையாளி
அதிரை அமீன்

புகைப்படங்கள்
ஜமால் (அதிரை)
நூருல் அமீன் (நாச்சியார்கோயில்)

No comments:

Post a Comment