இனத்தாலோ மொழியாலோ பிரித்தாய்பவன் என்னைச் சார்ந்தவனல்ல - இது நபிமொழி !
முஸ்லீம்கள் இன்றோ நேற்றோ பாதிப்புக்குள்ளாக வில்லை, ஓரிறைக் கொள்கையை எடுத்து வைத்த அன்றைய காலத்திலிருந்தே அநியாயக் காரர்களால் பாதிப்புக்குள்ளானார்கள். அப்படியிருக்க நம் அருகில் இருக்கும் குட்டி நாடான இலங்கையில் மொழியையும் இனத்தையும் முன்னிருத்தி ஒரு இயக்கம் 25 வருடகாலமாக போராடியது ! முடிவில் அந்த இயக்கம் அழித்தொழிக்கப்பட்டு இன்று அவர்களுக்காக ஈனக் குரல் எழுப்பும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவர்களின் போராட்டம் என்னவென்றோ, அதன் நியாய அநியாயங்கள் எவ்வகை என்றோ நாம் விவாதிக்கவில்லை, அவர்களின் போராட்டம் இலங்கை அரசாங்கத்திற்கு அவர்களுக்கும் நடந்தது. இது இப்படியிருக்க தமிழ் மொழி மட்டுமே பேசும் சகோதரர்களை அதே மொழியின் பெயரால் இயக்கமும் வைத்துக் கொண்டு காட்டுமிராண்டித் தனமாக அந்த பகுதியில் வாழையடி வாழையாக வாழ்ந்து வந்தவர்கள் முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்திற்காக அழித்தெடுக்கவும் அடித்து விரட்டவும் ஆயுதம் ஏந்தியவர்களைப் பற்றியும், இலங்கை வாழ் தமிழ் பேசும் முஸ்லீம்களின் நிலைமபற்றியும் தகுந்த ஆதாரங்களுடன் சகோதரர் மவ்லவி முஹம்மது நாசர் அவர்கள் உருக்கமாக எடுத்து வைக்கும் வாதங்களையும் ஆதாராங்களையும் காணொளியாக உங்களின் பார்வைக்கும் தமிழ்கூறும் நல்லுலக நியாயவான்களின் கவனத்திற்கும் இதோ:-
No comments:
Post a Comment