அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
நமது பதிவை தொடர்ந்து சகோதரர் ஜமீல் காக்கா அவர்களும் பாதித்துள்ளதாக பதிந்த கருத்துரையையொட்டி நேரடியாக அவர்களுடைய மனையை பார்வையிட்டபோது அதிர்ந்தோம். அவர்களுடைய மனையின் இருபுறத்திலும் ஏற்கனவே குடிகள் இருக்க, காக்கா அவர்களுடைய மனையின் நட்டநடுவில் அடிபாகம் மிகவும் பழுதடைந்த உயரழுத்த மின்சாரக் கம்பம்.
காற்றடித்தாலே விழும் நிலையில் உள்ள கம்பம் சாய்ந்தால் அருகில் குடியிருப்போருக்கு பாதிப்பு நிச்சயம், அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.
வைக்கோல் போரில் படுத்திருக்கும் நாய் தானும் உண்ணாது, உண்ண வரும் ஆடுமாடுகளையும் அண்டவிடாது என்பார்களே அதுபோல் மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் யாரும் அந்த மனையில் குடியேறவும் முடியாது, யாரிடமும் விற்கவும் முடியாது ஏனென்றால் நாயாய் மனையின் நடுவில் உயரழுத்த மின்சாரக் கம்பம், மேலும் அடுத்த மனையிலுள்ள ஒரு மின்சாரக் கம்பம் ஏற்கனவே ஒரு பகுதி சாய்ந்துவிட்டது. மனிதர்களுக்கு பயனில்லாமல் முட்புதர் மண்டிப்போயுள்ள அந்த மனை தற்போது கீர்ப்பிள்ளைகளின் கோடை வாசஸ்தலம்.
பொறுத்தோர் பொங்கி எழுமுன் மின்சார வாரியம் பொறுப்புடன் நடந்து கொள்ளுமா?
புகைப்படங்கள்
வருடக்கணக்கில் உறங்கும் அதிரை மின் வாரியத்தை கண்டித்து கடந்த வாரம் பிலால் நகர் மக்களின் குமுறல்களை பதிந்திருந்தோம். நியாயத்தை உணர்ந்த பல்வேறு சகோதரர்கள் வழிமொழிந்தும், சகோதர வலைதளங்கள் மீள்பதிவும் செய்திருந்தனர். அதேபோல் மின் வாரியத்தில் மனிதநேயமிக்க அதிகாரிகள் யாரேனும் இருக்கலாம்... இருந்தால் தீர்வு கிடைக்கலாம் இன்ஷா அல்லாஹ்.
நமது பதிவை தொடர்ந்து சகோதரர் ஜமீல் காக்கா அவர்களும் பாதித்துள்ளதாக பதிந்த கருத்துரையையொட்டி நேரடியாக அவர்களுடைய மனையை பார்வையிட்டபோது அதிர்ந்தோம். அவர்களுடைய மனையின் இருபுறத்திலும் ஏற்கனவே குடிகள் இருக்க, காக்கா அவர்களுடைய மனையின் நட்டநடுவில் அடிபாகம் மிகவும் பழுதடைந்த உயரழுத்த மின்சாரக் கம்பம்.
காற்றடித்தாலே விழும் நிலையில் உள்ள கம்பம் சாய்ந்தால் அருகில் குடியிருப்போருக்கு பாதிப்பு நிச்சயம், அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.
பொறுத்தோர் பொங்கி எழுமுன் மின்சார வாரியம் பொறுப்புடன் நடந்து கொள்ளுமா?
செய்தி
அபு சுமையா
புகைப்படங்கள்
ஆஷிக் அகமது
No comments:
Post a Comment