உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, December 28, 2014

'நல்லாசிரியர்' விருது பெற்ற முதுகலை ஆசிரியர் 'மீரா' என்கிற அதிரை சாகுல் ஹமீது !


அதிரையை சேர்ந்தவர் F. சாகுல் ஹமீது. அனைவராலும் 'மீரா' என அன்புடன் அழைக்கப்படுபவர். இவர் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ள முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சிறுவயது முதல் மார்க்க பற்றுதலை பேணி நடக்கும் இவர் கல்வி பணியில் எந்நேரமும் மூழ்கி இருப்பவர்.

இந்நிலையில் கேஎஸ்ஆர் குரூப் ஆஃப் இன்ஸ்ட்டியூஷன் சார்பில் தமிழகமெங்கும் பணிபுரியும் சாதனை நிகழ்த்திய தலைசிறந்த ஆசிரியர்களுக்கு 'நல்லாசிரியர்' விருது வழங்குவதற்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பரிசிலீனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். இறுதியில் விருதுக்காக 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் நமதூர் மேலத்தெருவை சேர்ந்தவரும், மர்ஹூம் ஷரீஃப் அப்பா அவர்களின் பேரனுமான சாகுல் ஹமீது அவர்களும் ஒருவர். அதிக மதிப்பெண்கள்  - அதிக தேர்ச்சி - சிறந்த கல்விப்பணி - மாணவர்கள் நலனில் அதிக அக்கறை உள்ளிட்ட தகுதியின் அடிப்படையில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். (ஷரீஃப் அப்பா அவர்கள் குறித்து நமது தளத்தில் இந்த மாதம் வெளிவந்த குறும் நினைவூட்டலை படிக்க):
http://adiraiaimuae.blogspot.ae/2014/12/blog-post_71.html


இவருக்கு திருச்செங்கோட்டில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய தேசிய அறிவியல் அகாடமி தலைவர் ( INSA ) டாக்டர் ராகவேந்திரா கடாகர் அவர்களிடமிருந்து பெற்றார். நல்லாசிரியர் விருது பெற்ற சாகுல் ஹமீது அவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள் , குடும்பத்தினர், ஊர் பிரமுகர்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்தினர்.

No comments:

Post a Comment