உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, October 26, 2014

நாளை முதல் (27.10.2014) ததஜ வாத குழுவினருடன் விவாதிக்க தாருத் தவ்ஹீத் அல்லாஹ்வின் துணையோடு களமிறங்குகிறது

எங்கும் விவாதம் எதிலும் விவாதம் என விவாத பித்துப்பிடித்து அலையும் பிரபல ஹதீஸ் மறுப்பாளரை தலைவராக கொண்ட கும்பல் தமிழகத்தில் விவரமறிய ஒரு பெரும் விடலை கூட்டத்தையே வழிகெடுத்துக் கொண்டுள்ளதை அறிவீர்கள். 

அதிரையில் தானுண்டு தன் பணிகளுண்டு என குர்ஆன் ஹதீஸ் ஒளியில் கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் மார்க்கப்பணி ஆற்றிவரும் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினரை அடிக்கடி வம்பிழுப்பதையும் ஒரு துணை தொண்டாக மேற்படியாளர்கள் செய்து வந்தனர் என்பதும் கடந்த ரமலானில் அவர்களின் அவதூறுகளும் அர்ச்சணைகளும் எல்லை மீறி போனதை தடுத்து நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்ட அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் முதன்முதலாக வாத கும்பலுக்கே அறைகூவல் விட்டு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.

தொடர்ந்து பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னும் பொந்துக்குள் பதுங்கிக் கொண்டவர்களை அவர்களின் 'தினம் ஒரு பலாய்' புகழ் ஆசாமி மீண்டும் சந்திக்கு இழுத்துவிட்டுச் செல்ல மீண்டும் வசமாக ADT யிடம் சிக்கிக் கொண்டவர்களை ஒரு வழியாக விவாத ஒப்பந்தம் வரை இழுத்து வந்துதுதுதுது...... இதோ நாளை முதல் 4 நாட்களுக்கு (27 முதல் 30 வரை) நடைபெறவுள்ளது இன்ஷா அல்லாஹ்.

இந்த விவாதத்தின் மூலம் சத்தியம் வெளிப்பட வேண்டும், இஸ்லாத்திற்குள் இருந்து கொண்டே தொடர்ந்து ஹதீஸ்களை மறுத்துக் கொண்டும், குர்ஆன் வசனங்களை மனம் போன போக்கில் திரித்துக் கொண்டும் திரிபவர்களின் கோர முகங்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும். இன்னும் அவர்களை உண்மையாளர்கள் என இன்னும் நம்பும் பொதுவான அனுதாபிகளுக்கும், பொதுமக்களுக்கும் அவர்களின் தொண்டர்களுக்கும் தூய வடிவில் இஸ்லாம் போய் சேர்ந்திட எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரியவேண்டும்.

பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிவிட்டார்கள், முகத்திரையை கிழித்து தொங்கப்போட்டு விட்டோம் என ஒவ்வொருமுறையும் ஒப்பாரி வைக்கும் அந்த இத்துப்போன பல்லவியை எழுத முடியாத அளவிற்கு வெட்கப்படும் சூழலை இந்த முறை அல்லாஹ் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என பிரார்திக்கின்றோம்.

அரைநாளில் ஊதித்தள்ளி விடுவோம் என இருமாப்பில் அழையும் கும்பலின் கண்களில் விரலைவிட்டு ஆட்டும் பாக்கியத்தை உள்ளுர் அமைப்பான அதிரை தாருத் தவ்ஹீதிற்கு அல்லாஹ் தந்தருள வேண்டும்.

அதிரை இஸ்லாமிக் மிஷன் வலைத்தளம் ADT உட்பட எந்த இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலும் இல்லாதபோதும் அதிரை தாருத் தவ்ஹீதின் (ADT) செயல்பாடுகளிலும், CMN சலீம், துபை தமிழ் தஃவா கமிட்டி போன்ற பலரின் செயல்பாடுகளில் ஈர்ப்புடையது என்ற அடிப்படையில் இந்த விவாத நிகழ்ச்சிக்கு மிக முக்கியத்துவம் வழங்கி அது தொடர்பான பதிவுகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம். இந்த விவாத நிகழ்ச்சி இம்மை மறுமையை நம்பும், அதன்வழி செயல்படும் முஸ்லீம்களுக்கு பயனுள்ள ஒன்றாக அமைய வேண்டும் என இருகரமேந்தி இறைவனை வேண்டுகிறோம்.

இதுவரை இந்த விவாதம் தொடர்பாக நடைபெற்ற கடிதப் போக்குவரத்துக்களை படித்திட இந்த லிங்கிற்குள் வாருங்கள்... தொடர்ந்து...அந்தந்த பதிவுகளில் உள்ளே உள்ள லிங்குகளையும் பார்வையிட்டுச் செல்க....




No comments:

Post a Comment