உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, December 23, 2015

அதிரையில் ஓர் 'நீயா? நானா?' - சாலையில் பெருகி ஓடும் சாக்கடை


அல் அமீன் பள்ளியின் முன்புற [பழைய போஸ்ட் ஆபிஸ்] ரோடு - அதிரையின் மிக முக்கிய வீதியாகவும், பொதுமக்கள் நடமாட்டம் கூடிய சாலையாகவும், வாகனங்கள், வணிக நிறுவனங்கள், பேருந்து நிலையம், அல் அமீன் மஸ்ஜித் என நிறைந்த பகுதியாகவும், மிக முக்கியமாக நகரின் சுத்தம் சுகாதாரத்திற்கு பொறுப்பான அதிரை பேரூராட்சி அலுவலகமும் இதன் அருகே தான் அமைந்துள்ளதென்றால் நகரின் ஏனைய தெருக்களின் நிலையை எடை போட்டுக் கொள்ள 'இந்த ஒரு சோறு பதம்' போதும்.

இந்த சாலையின் இருபுறமும் பெருக்கெடுத்து ஓடும் சாக்கடைக்கு பொதுமக்களின் அலட்சியம் ஒரு காரணமென்றால் பேரூராட்சியின் பொறுப்பற்றத்தனமும் கண்டிக்கத்தக்கது மேலும் அல் அமீன் பள்ளியின் நிர்வாகி ஒருவரின் வீட்டிலிருந்தும் இந்த சாக்கடை வெள்ளம் நித்தமும் திறந்துவிடப்படுவதாக பொறுமுகின்றனர் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதி வணிகர்கள்.

சுத்தம் சுகாதாரத்திற்கு பொறுப்பான பேரூராட்சி நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுப்பதுடன், சாக்கடை நீரை தெருவில் விடும் பொதுமக்களை எச்சரித்து கட்டுப்படுத்த வேண்டும். சாக்கடைகள் முறையாக ஓடுவதற்கான வழிவகைகளை செய்து தர வேண்டும். இனியும் அலட்சியம் தொடர்வது யாருக்கும் நல்லதல்ல என சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் உணர்வது நல்லது.





No comments:

Post a Comment