உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, December 23, 2015

பல்லிளிக்கும் பட்டுக்கோட்டை ரோடு

தினமும் பல்லாயிரக்கணக்காண பயணிகளும் பல நூற்றுக்கணக்காண பள்ளிக்குழந்தைகளும் பயணிக்கும் அதிரை to பட்டுக்கோட்டை ரோடு குண்டும் குழியுமாக... கிட்டத்தட்ட காணாமல் போயே பல நாட்களாகியும் மீட்டுத்தருவார் யாருமின்றி பரிதவித்துக் கொண்டுள்ளது.

சமீபத்திய மழையால் ரோடு சேதமாகிவிட்டதாக சொல்லப்பட்டாலும் மழைக்கு முன்பிருந்தே ரோடு மிக மோசமான நிலையில் தான் இருந்தது என்றும் இப்போது அது படுமோசமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் நித்தமும் இந்த ரோட்டில் குட்டிக்கரணமடித்து சென்று வரும் ஓட்டுனர்கள் புலம்புகிறார்கள்.

ஒருவேளை சென்னை அல்லது கடலூரில் பெய்தது போல் மழை பெய்திருந்தால் சாலை பள்ளங்களில் படகு சர்வீஸ் நடத்த மட்டுமே இந்த சாலை லாயக்காகியிருக்கும் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பட்டுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. NR. ரெங்கராஜன் அவர்கள் சாலையை செப்பனிட்டுத் தருமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ள செய்தி இன்றைய [23.12.2015] தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ளது.

SH 29 தஞ்சை சாலையை கிழக்கு கடற்கரை சாலை[ECR]யுடன் இணைக்கும் இந்த பிரதான சாலையை மாநில நெடுஞ்சாலைத்துறையும் மாவட்ட நிர்வாகமும் விரைந்து செப்பனிட்டுத் தருவதுடன் விரைவில் முற்றிலும் தரமான முறையில் புதிப்பித்து தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை.

சாம்பிளுக்கு சில படங்கள்..




 











No comments:

Post a Comment