உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, December 27, 2012

மூளைச் சாவடைந்தவர்கள்

கூகுள் தலைமுறையை நினைத்தால் பயமாக உள்ளது : ட்ரெவர் பெய்லிஸ்

 
 
கூகுள் தலைமுறையை நினைத்தால் பயமாக உள்ளது என்று பல்வேறு கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான ட்ரெவர் பெய்லிஸ் கூறியுள்ளார்.
 
இன்வென்டர் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை கண்டுபிடித்த விஞ்ஞானி ட்ரெவர் பெய்லிஸ் கூறியதாவது, பிள்ளைகளுக்கு தற்போதெல்லாம் இணையதளங்கள் வாயிலாகவும், மொபைல் போன் வாயிலாகவும் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதனால், அவர்கள் இணையத்தில் கூகுளுக்கு அடிமையாகியுள்ளனர். எதையும் மனப்பாடம் செய்யவோ, நினைவில் வைத்துக் கொள்ளவோ இயலாத மூளைச் சாவடைந்தவர்களைப் போல் உருவாகிக் கொண்டிருக்கின்றனர். எனவே, மாணவர்களுக்கு கற்பித்தலை முந்தைய காலத்தைப் போல கொண்டு வர வேண்டும் என்று பெய்லிஸ் கூறியுள்ளார்.
 
Thanks to : Dinamani
First Published : 27 December 2012 05:57 PM IST


மூளை செத்துப் போன கூகுள் தலைமுறை.. கண்டுபிடிப்பாளர் பெய்லிஸ் வருத்தம்

லண்டன்: இன்றைய குழந்தைகளை இன்டர்நெட், குறிப்பாக கூகுள் மூளை வறட்சியுடையவர்களாக மாற்றி விட்டது. இது பெரும் வருத்தமாகவும் வேதனையாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார் பிரபல இங்கிலாந்து கண்டுபிடிப்பாளர் டிரெவர் பெய்லிஸ்.

75வயதான பெய்லிஸ் பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்.அதில் முக்கியமானது வைன்ட்அப் ரேடியோ. அவர் இன்றைய குழந்தைகளின் நிலை குறித்து ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,இன்றைய குழந்தைகள் செயல்திறன் பயிற்சியும், திறமையும் அற்றவர்களாக வளர்கின்றனர். எதையும் யோசித்துச் செய்யும் மன நிலையில் அவர்கள் இல்லை.

இன்டர்நெட்டையே முழுமையாக சார்ந்திருக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக கூகுளுக்கு அடிமையாகி விட்டனர். கூகுள் மூலம்தான் எதையும் தேடும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது அவர்களது மூளை வளர்ச்சிக்கு பெரும் குந்தகமாக அமையும், மூளை வறட்சிக்கு வித்திடும்.

குழந்தைகள் எதையும் சிந்தித்து செயல்பட வேண்டும். அதற்கேற்ப அவர்களைப் பழக்க வேண்டும். மொபைல் போன், கம்ப்யூட்டர் என்று எதற்கெடுத்தாலும் அதற்கு அடிமையாகியிருக்க கூடாது.

ஆனால் இன்றுள்ள குழந்தைகள் அப்படியா இருக்கிறார்கள். அவர்களை நினைத்தாலே எதிர்காலத்தை நினைத்துப் பயமாக இருக்கிறது என்றார் பெய்லிஸ்.

Thanks to: Thatstamil
Posted by:
Updated: Friday, December 28, 2012, 12:27 [IST]
 

No comments:

Post a Comment