உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, December 24, 2012

அதிரையில் காரணம் அறிவிக்கப்படாத மரண அறிவிப்பு


நமதூர் கடற்கரை தெருவைச் சேர்ந்த சகோதரர் அலாவூதீன் (வயது சுமார் 45) நேற்று இரவு (23.12.2012) சுமார் 10 மணியளவில் வஃபாத்தானர்கள், இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று (24.12.2012) மாலை அஸருக்குப் பின் கடற்கரை தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் பொறுமையையும், மன அமைதியையும் தந்தருள்வானாக!

இனி அறிவிக்க மறந்த காரணத்தை சற்று அலசுவோம், முத்தாய்ப்பாக ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் 'மடமை'.

மாற்றுமத கலாச்சாரமான தேர் திருவிழாவின் பிம்பமாக திகழும், இஸ்லாம் காட்டித்தராத கந்தூரி எனும் திருவிழாவை, இஸ்லாத்தின் தூய வடிவம் தெளிந்த நீரோடையாய் பாமரரும் பகுத்தறியும் வண்ணம் திகழும் இந்த 21ம் நூற்றாண்டிலும் சிலர் கட்டி இழுத்துக் கொண்டுள்ளனர். அதன் வழக்கப்படி நேற்றைய இரவு ஹத்தத்து இரவு என கொண்டாடப்பட்டுள்ளது.

ஹத்தத்து இரவுகளில் சிறப்பு நேர்ச்சைகள் செய்து கொண்டு 'மண்டகப்படி' எனும் இன்னொரு தெளிவான இணைவைத்தலை (ஷிர்க்) இன்னும் மிகச்சிலர் செய்து வருகின்றனர். இந்த ஷிர்க்கை செய்திட மறைந்த சகோதரர் அலாவூதீனுக்கு யாரோ தவறாக வழிகாட்டியுள்ளனர், நேற்றைய இரவு மண்டகப்படி எடுத்துக் கொண்டு, பல நூற்றாண்டுகளுக்கு முன் மறைந்து மண்ணோடு மண்ணாய் மக்கிப்போன இன்னொரு மனிதனின் மண்ணறைக்கு (தர்கா கபுர்) சந்தனம் பூசச்சென்றவர் மூச்சு திணறலால் ஜனாஸாவாக வெளியே தூக்கி வரப்பட்டுள்ளார்.

ஏற்கனவே லோ-ஷூகர் (Low Sugar) போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த சகோதரர் அலாவூதீன் அவர்களை சந்தனம், பத்தி மற்றும் சாம்பிராணி புகை மண்டலமாக இருந்த அறைக்குள் அழைத்துச் சென்று கதவை மூடியுள்ளனர். உடனிருந்தவர்களுக்கும் மார்க்க அறிவும் இல்லை ஒரு நோயாளியை புகை மண்டலத்திற்குள் அடைக்கின்றோமே என்ற மருத்துவ அறிவும் (உலக அறிவு) இல்லை.

இவர்களின் மூட நம்பிக்கைகளின் பலன் ஒரு தலைவனை அவனது குடும்பம் இழந்து தவிப்பது தான். இவர்களின் மடத்தனம் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்காவிட்டால் இதற்காக உடனிருந்தவர்கள் மேல் கொலை குற்றம் சாட்ட முடியும் அல்லது குறைந்தபட்சம் சம்பவத்திற்கான சாட்சிகளாக்க முடியும் என்பதை உணர்ந்தாவது இதுபோன்ற பாதக, மடச்செயல்களில் இனிமேல் ஈடுபடாமல் இருப்பது அவர்களின் இம்மை, மறுமை வாழ்வுக்கு பயனுள்ளதாக அமையலாம்.

இஸ்லாம் என்பது அல்குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள் மட்டும். இஸ்லாத்திற்கும் தர்கா கலாச்சாரத்திற்கும் கிஞ்சிற்றும் சம்பந்தமில்லை. மூடத்தனங்களை ஒழித்த இஸ்லாத்தின் பெயராலேயே மூட பழக்க வழக்கங்களை அரங்கேற்றினால் நரகம் நிச்சயம். இன்னொரு உயிர் இதுபோன்ற மடத்தனங்களை ஆராதிப்பதனால் போகக்கூடாது என பொதுவாக அனைவரையும் வேண்டி முடிக்கின்றோம்.

ஓப்பற்ற ஓரிறையின் அடிமை
அதிரை

No comments:

Post a Comment