உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, December 1, 2012

பிலால் நகர் இஸ்லாமியப் பயிற்சி மையத்தில் 30.11.2012-ல் நடைபெற்ற நிகழ்ச்சிக் குறிப்புகள் - Photo updated



அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் அருளால், நேற்று மாலை 4:30-5:30 இஸ்லாமியப் பயிற்சி மையத்தில் நடைபெற்ற சிறப்புச் சொற்பொழிவு மிகவும் நேர்த்தியாக இருந்தது. 200 பேருக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர், அல்ஹம்து லில்லாஹ்!

"நம் பிள்ளைகளுக்கு ஏராளமாகப் பணம் செலவழித்து ஊட்டப்படும் கல்விகள், ஈமானுடைய அடிப்படை இல்லாமல் போகுமாயின் அவ்வகைக் கல்விகள், நம் சமுதாயத்தில் நடைபெறும் ஒழுக்கக் கேடுகளையும் தீமைகளையும் களைய உதவாது" எனும் கருத்தில் சிறப்புரை அமைந்திருந்தது. நம் இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தை ஈமான் உறுதியோடு கட்டமைப்பதால் மட்டுமே நம் சமுதாயத்தில் நிலவுகின்ற சீரழிவுகளைத் தடுக்க முடியும் என்பதாக அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியின் முதல்வர் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

 



நிகழ்ச்சியின் இறுதியில், இஸ்லாமியப் பயிற்சி மையத்தில் பயில்வதற்காக 77 பெயர்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கை நாம் எதிர்பாராததாகும். மேலும், அடுத்த வாரம் மத்ரஸா தொடங்கலாம் என நினைத்திருந்த நமக்கு, "நாளைக்கே மத்ரஸா தொடங்கவேண்டும்" என்று வந்திருந்த பெற்றோர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டு, முதல்வரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப் பின்னரும் பயான் ஏற்பாடு செய்யவேண்டும் என்ற வருகையாளர்களின் வேண்டுகோள் ஏற்கப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை (07.12.2012) 'வட்டியின் விபரீதம்' என்றும் தலைப்பில் பயான் என்று அறிவிப்புச் செய்யப்பட்டது.





வெள்ளிக்கிழமை தவிர்த்து, எல்லா நாளிலும் பயிற்சி நேரம் அதிகாலை 6 மணிக்கு ஒரு ஷிஃப்ட்; மாலை 5 மணிக்கு மறு ஷிஃப்ட் என்று அவர்களுக்குள் ஆலோசித்து முடிவு செய்து கொண்டனர்.

இன்று காலையில் 114 மாணவியர் வந்திருந்தனர் &  மாலையில் 102 வந்திருந்தனர்.
 
Thanks to: ADT- ITC

No comments:

Post a Comment