அல்லாஹ்வின் பேரருளால் முஸஃபா பகுதியில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் வாராந்திர மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி மீண்டும் துவங்கியது, அல்லாஹ் ஒருவனுக்கே புகழனைத்தும்..
தர்பியா உரையின் ஆடியோ பதிவை கேட்க இந்த லிங்கை சொடுக்கவும்
கடந்த வெள்ளிக்கிழமை (22.08.2014) மஃரிப் தொழுகைக்குப்பின் துவங்கிய வகுப்பில், இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள மவ்லவி முஹமது நாஸர் அவர்கள் கலந்து கொண்டு 'சிந்திப்போம்! அமல் செய்வோம்' என்ற கருத்தில் இஸ்லாத்தை புரிந்து கொண்டு பின்பற்ற, எத்திவைக்க வேண்டியதன் அவசியங்களை எளிய முறையில் விளக்கி இன்றைய தர்பியா வகுப்பை இஷா வரை நடத்தினார்.
இந்த முதல் நிகழ்ச்சியில் அப்பகுதியிலுள்ள சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இன்ஷா அல்லாஹ், இனி வாரந்தோறும் தொடர்ந்து பல்வேறு தாயிக்களை கொண்டு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திட முடிவு செய்யப்பட்டது.
உமர் பாருக்
No comments:
Post a Comment