உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, August 9, 2014

பர்துபையில் நேற்று (08.08.14) ஏமாந்த கதை

எத்தனையோ வித பிராடுகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள், சந்தித்திருப்பீர்கள் அப்படியான ஒரு நூதன ஏமாற்றுப் பேர்வழிகள் குறித்து எச்சரிப்பதே நோக்கம்.

நேற்று காலை பர்துபை பஸ் நிலையம் அருகிலுள்ள கிளினிக்கில் கண்ணுக்கு மருத்துவம் பார்க்கச் சென்ற எனது நண்பர் கூட்டுக்களவானிகளிடம் தலைமுடிக்கு மருந்து வாங்கி ஏமாந்த விதம் பற்றி... சொல்கிறேன் கேளுங்கள்!

தலை முடியுதிர் காலத்தில் இருக்கின்றவர்கள் அல்லது சொட்டையாய் போனவர்கள் அல்லது இளம் நரைக்கு உள்ளானவர்கள் மீண்டும் எப்படியாவது பழைய கரு கரு முடி வளர்ந்து விடாதா என ஏங்குவது இயல்பு அதற்காக அவர்கள் மார்க்கெட்டில் உலா வரும் எண்ணற்ற போலி மருந்துகளை எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்கி ஏமாறுவதும் வெளியே சொல்ல முடியா வெட்கம்.

இளஞ்சொட்டையும் இளம் நரையுமாக வந்து கொண்டிருந்த என் நண்பரை பேச்சுக் கொடுத்து மடக்கிய ஒரு நீண்ட தாடியுடன் தொப்பி, ஜூப்பா அணிந்த ஆசாமி நரையை பற்றி யதார்த்தமாக விசாரிப்பது போல் விசாரித்துள்ளார் பின்பு அவருடைய முடி நிறைந்த கருமையான தலையை காட்டி நானும் உன்னைப் போல் தான் இருந்தேன் 'நாட்டு மருந்து வாங்கி தேய்த்தேன் 15 நாட்களில் இப்படி ஆகிவிட்டது' அள்ளி விட்டுள்ளார். தோற்றத்தையும் அறிவுரையையும் பார்த்து நம்பித் தொலைத்த நண்பர் அந்த மருந்து எங்கே கிடைக்கும் என யதார்த்தமாக கேட்க..

இது தான் குரோசரியில் வாங்கிய ஆயில்கள்

ஜுப்பா ஆசாமி ரொம்ப நேர்மையா... நம்ம ஆளா கையோட கூட்டிக்கொண்டு போய் ஒரு குரோசரி கடையில் 10ம் 10ம் இருபது திர்ஹத்திற்கு ரெண்டு எண்ணெய் பாட்டிலை வாங்கி கொடுத்திருக்காரு... இருங்க, இருங்க இன்னும் கதை முடியல...

அதற்கப்புறம் அந்த ஜூப்பா 'வாயில நொழயாத' ரெண்டு மூணு இந்திப்பேர சொல்லி இந்த மூலிகை பொடிகளை வாங்கி இந்த எண்ணெயில கலந்து தேச்சுகிட்டு வாங்கன்னு அப்புராணியா மூஞ்சவச்சுக்கிட்டு பீலா விட அசந்து போன நம்ம நண்பரு 'ஜீ அந்த மருந்து கிடைக்கிற கடைய கொஞ்சம் காட்டி விடுங்களேன்னு' கேட்க, அடுத்தவங்களுக்கு உதவி செய்யிறதுக்கே பிறப்பெடுத்த அந்த ஜூப்பா ஒரு நாட்டு மருந்து கடைய காட்டிவிட்டுட்டு 'எஸ்' ஆயிருச்சு.

 டுபாக்கூர் மருந்து கலக்கிய எண்ணெய் பாட்டில்கள்

நாட்டு மருந்து கடைக்காரனும் ஏதோ ரெண்டு மூணு பொடிகளை மூக்குல திணிக்கிற அளவுக்கு வாங்கிட்டுப் போன 2 எண்ணெய் பாட்டிலில் கொட்டி கலந்து விட்டுட்டு எடு முன்னூறு திர்ஹத்தை என்று சொல்ல துபையில் அடிக்கிற வெயில்ல கூட அப்படி ஒரு மயக்கம் வராத குறையா தல சுத்திப் போயி தெண்டத்த அழுதுட்டு வந்தவரு, தெய்ரா பகுதியில இருக்கிற இன்னொரு நாட்டு மருந்து கடையில போயி அந்த ஜூப்பா சொன்ன மருந்த பத்தி விசாரிச்சா, அப்படி மருந்தே இல்லையாம்.

நீங்களாவது பரவாயில்லை 300 தான் தினமும் ஐநூறு ஆயிரம்னு இந்த கூட்டு களவானி கும்பல்களிடம் பலபேர் பணத்த இழக்குறாங்க என்கிற தகவலையும் சேர்த்து சொன்னாருங்க,

ஏமாந்த நம்ம நண்பரு அந்த ஜூப்பா ஆசாமிய கண்டிப்பா போலீஸ்ல புடிச்சி கொடுக்கணும்னு தீவிரமா இருக்காருங்க!

படிப்பினை:
பர்துபை பக்கம் குறிப்பா பஸ் ஸ்டேண்ட் பக்கம் போறவங்க கொஞ்சம் சூதனமா நடந்துக்குங்க! 

(இல்லாட்டி நம்மள மாதிரி முடி இருக்கும் போது சீவுனோம் இப்ப இல்லை, மசுறு போச்சின்னு அப்படியே விட்ருங்க, சந்தோஷம் தலையில இல்லைங்க மனசுலங்க!)

கூடுதல் எச்சரிக்கை:
இதே பர்துபை பஸ் ஸ்டேண்ட் பக்கம் ஏகப்பட்ட பாகிஸ்தானிகள் புதுப்புது பிராண்ட் மொபைல்களை இருநூறுக்கும் முன்னூறுக்கும் கூவி கூவி விற்பார்கள் வாங்க வேண்டாம் எல்லாம் டுபாக்கூருங்க!

No comments:

Post a Comment