உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, January 5, 2016

அதிரையில் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் பிளக்ஸ் போர்டுகள்


அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக மக்கள் அதிகம் நடமாடும் அதிரையின் முக்கிய வீதிகளில் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் முகமாக ஃபிளக்ஸ் போர்டு பிரச்சாரம் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது இன்ஷா அல்லாஹ்.

காலத்திற்கேற்ற குர்ஆன் வசனங்கள் மற்றும் நபி மொழிகளை கொண்டு மக்களுக்கு நன்மை ஏவியும், தீமை குறித்து எச்சரித்தும் பிளக்ஸ் போர்டுகள், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாற்றும் வகையில் காலேஜ் முன்புறம், பழைய போஸ்ட் ஆபிஸ் முக்கம் மற்றும் தக்வா பள்ளி அருகிலும் ஆரம்பமாக வைக்கப்பட உள்ளன.

இந்த நன்மையான காரியத்தில் பங்கு கொள்ள விரும்பும் தனி நபர்களும், ஸ்பான்ஷர் செய்ய விரும்பும் வர்த்தக பிரமுகர்களும் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.

ஒரு ஃபிளக்ஸ் 400 ரூபாய் வீதம் 3 ஃபிளக்ஸ்களுக்கு 1200 ரூபாய் மட்டுமே.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்க: கமாலுதீன் 0091 9543577794

Monday, January 4, 2016

ஷிர்க்கை ஒழிக்கப் போகும் லட்சணமும் பேருராட்சி மன்ற தலைவர் வீட்டு கல்யாணமும்

கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்பட்டானாம் என தமிழ் சகோதரர்கள் கூறுவர் அதுபோல கூட இருப்பவர்களை திருத்த முடியாதவர்கள் ஊரை கூட்டி 'ஷிர்க்'கை ஒழிக்கப் போகிறார்களாம்.

பீஜேயானிகள் என்று மக்களால் அழைக்கப்படும் அதிரை முஃதஸ்ஸிலா குழுவினருக்கும் பேரூராட்சி மன்ற தலைவருக்கும் உள்ள ஊரறிந்த உறவை தெரியாதவர்களுக்கு மட்டும் ஒருசில விஷயங்களை ஞாபகமூட்டுகிறோம்.

பீஜேயானிகளுக்கும் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினருக்கும் கடந்த வருடம் நடந்த விவாதத்தின் போது, முஃதஸ்ஸிலாக்களுக்கு ஆதரவாக மேடையேறியவர் நம்முடைய அதிரை பேரூராட்சி மன்ற தலைவர்.

அதுபோல் பேரூராட்சி மன்ற தலைவருக்கும் பேரூராட்சி செயல் அலுவலருக்கும் நடந்த பிரச்சனையின் போது பேரூராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியவர்கள் அதிரை முஃதஸ்ஸிலாக்கள்.

மேலும் பேரூராட்சி மன்ற தலைவர் தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியான 'ஆயிஷா மகளிர் அரங்கம்;' என்ற இடத்தையே பீஜேயானிகளுக்கு பிரச்சார மேடையாக ஒதுக்கிக் கொடுத்துள்ளார்.

இதுபோல் முஃதஸ்ஸிலாக்களின் 'சர்ச்சைக்குரிய மதபோதகர்' அஷ்ரப்தீன் என்பவர் பேரூராட்சி தலைவருக்கு தவ்ஹீதை எடுத்து சொல்கிறோம், விரைவில் தவ்ஹீது கொள்கையை எற்று பின்பற்றுவார் என்கிற ரீதியில் ஒரு வருடத்திற்கு முன்பே நற்சான்று வழங்கினார்.

இப்படியாக பேரூராட்சி தலைவரும் ததஜ முஃதஸ்ஸிலாக்களும் நகமும் சதையுமாக பின்னிப் பிணைந்திருந்த நிலையில், கடந்த வாரம் பேரூராட்சி மன்ற தலைவருடைய குடும்ப திருமணங்கள், குறிப்பாக அவருடைய மகனுக்கும் திருமணம் நடைபெற்றது. 

இந்தத் திருமணங்கள் எப்படி நடைபெற்றன என்பதை ஊரல்ல, உலகே அறியும் வண்ணம் ஆடம்பரம் ஒரு பக்கம் என்றால் ஒரு அரசியல் கட்சியின் மாநாடோ என வியக்கும் வண்ணமும் கல்யாணத்திற்கு கட்சி சாயம் பூசப்பட்டது. இது யாருடைய வழிமுறை என தெரியவில்லை!

இஸ்லாமிய திருமணங்கள் எப்படி நடைபெற வேண்டும் என்பதை எம்பெருமானார் (ஸல்) அவர்கள் வழிகாட்டி சென்றுள்ளார்கள் என்பதை முஸ்லீம்கள் அறிவர் அதை பீஜேயானிகளிடம் சொன்னால் இது ஹதீஸே இல்லை என மறுத்துவிடலாம். அதனால் மக்களே நீங்களே கேளுங்கள், உங்கள் ததஜ பிரிவு சொல்லும் 'நபிவழி' திருமணம் இப்படித்தான் செய்ய வேண்டும் என ஒரு 'கொளுகை' வைத்திருப்பீர்கள் அல்லவா. அதிலிருந்து சுமார் 10 சதமாவது இந்த திருமணத்தில் இருந்திருக்குமா? 

தங்கள் கூடவே கூடிக்குழாவும் பேரூராட்சி மன்ற தலைவருக்கே உங்களால் மார்க்கத்தை சொல்ல முடியவில்லை என்றால் மஹரமில்லாத பெண்களை அழைத்துச் சென்று 'ஷிர்க்'கை ஒழிக்கும் லட்சணம் எப்படி இருக்கும் என மக்களே கேளுங்கள்.

Wednesday, December 30, 2015

யார் அங்கே? பார்த்துப் போங்க பள்ளத்தில் விழப்போகிறீர்!!

இது மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையோ, கடலூர் மாவட்டமோ அல்ல. 

மொஹஞ்சதாரோ, ஹரப்பாவில் அகழ்வராய்ச்சிக்காக தோண்டப்பட்ட இடங்களின் மிச்சமும் அல்ல. 

சாட்சாத் இது நம்ம ஊரு அதிரையின் அவலம் மிகுந்த சாலைகளே, நம்புங்கள்!

வாகனங்கள், விபத்துக்கள் பெருக்கம் ஒரு பக்கம், வாழ்க்கை தர உயர்வு ஒரு பக்கம் என பகட்டுகள் வளர்ச்சி கண்டாலும் இன்னும் சாலைகள் மட்டும் சோழர் காலத்தை நினைவூட்டுகின்றன.

இதில் பல சாலைகள் தண்ணீர் குழாய் பதிப்பிற்காக சமீபத்தில், மழைக்கு முன்பே தோண்டப்பட்டு அலங்கோலத்தில் விடப்பட்டவை. மற்றவை மழையில் காணாமல் போயிருக்கலாம்?

காவி நிறத்தில் தெரியும் பல சாலைகள் தார் சாலைகளாக இருந்தவை என்ற வரலாற்றை வேறு நினைவுபடுத்த வேண்டியுள்ளது!

இதில் சிஎம்பி லைனிலிருந்து மரைக்காகுளம் வழியாக மேலத்தெரு செல்லும் பாதை இது வரை சாலையாக உருமாற யாருமே முயற்சிக்கவில்லை.

சாலைகளை செப்பனிட இன்னும் எத்தனை வீட்டைத் தான் இடிப்பது என அலுத்துக் கொள்கின்றனர் முறையாக வரி செலுத்தும் பொதுமக்கள்.

அதிரையின் சாலைகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்படவிட்டால், அதிரை முழுமையையும் சமமாக நேசிக்கும் சரியான ஒருவரை குறித்து மக்கள் சிந்திக்கும் நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாது.




















Monday, December 28, 2015

மரைக்காகுளம் செய்த பாவமென்ன?

புல் மட்டம் கூட நிரம்பாத மரைக்கா குளம் படங்கள்



சமீபத்தில் அடித்துப் பெய்த மழையில் அதிரையிலுள்ள குளங்கள் அனைத்தும் கிட்டதட்ட நிறைந்து வழிந்தன. 

ஒரு சில குளங்களுக்கு மட்டும் பம்பிங் முறையில் அதிரை பேருராட்சி தலைவரின் முயற்சியால் நீர் நிரப்பப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. 

ஆனால், அதிரையில் பெண்களுக்கென்று மட்டும் பிரத்தியேகமாக உள்ள மரைக்காகுளம் மட்டும் மழையாலும் நிறையவில்லை, பம்பிங் முயற்சியும் செய்யப்படவில்லை. சமூக ஆர்வலர்களும் களமிறங்கவில்லை. எந்தக் கட்சிக்காரர்களும் கண்டுகொள்ளவில்லை. சம்பந்தப்பட்ட ஜமாத்தும் புறக்கணித்துவிட்டது. 

சிஎம்பி லைனிலிருந்து தண்ணீர் வரும் அதன் வாய்க்காலும் ஆக்கிரமிக்கப்பட்டு அதன் மேல் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருடங்கள் ஆகிவிட்டன. 

இந்நிலையில் மழையால் நிறைந்த குளத்திற்கு எல்லாம் ஆற்றுத்தண்ணீர் கொண்டுவருவதாக படங்காட்டும் 'அந்த பிரிவின் தொண்டர்களையும்' இந்த வருடம் காணவில்லை. 

இப்படி அனைவரும் கண்டுகொள்ளாதிருக்கும் மரைக்காகுளத்தை நிறைக்க வரும் நாட்களிலாவது தெருசார் அமைப்புக்களாவது முன்வர வேண்டும்.

Updated: முஸ்லீம்களை முஷ்ரீக்காக்க, ஹதீஸ்களை மறுக்க கூட்டம் போடும் முஃதஸ்ஸிலா பிரிவினருக்கான கேள்விகள்






மிக முக்கியமான கேள்வி என்பதால் சகோதரர் Abu Haajar Ahamed Firdhous Ahamed Ashraf அவர்களின் கருத்து இங்கு பதிவேற்றப்படுகின்றது.

நல்ல கேள்விகள். முக்கியமான கேள்வி ஒன்று விடுபட்டுள்ளது

‘முரண்பாடு என்பதன் வரைவிலக்கணம் என்ன? என்னென்ன அம்சங்கள் இருந்தால் முரண்பாடு என்று சொல்லப்படும்? பட்டியல் தரவும்’

இந்த இந்த அம்சங்கள் இருந்தால் முரண்பாடு என்று ததஜவினரால் ஒரு பட்டியலை தர இயலாது. அவ்வாறு அவர்கள் ஒரு பட்டியலை தந்துவிட்டால் 

1) எந்த ஹதீஸ் முரண்பாடு என அனைவரும் ஆய்வு செய்து கொள்வர். இந்த ஏகபோக உரிமை ததஜவினருக்கு மட்டும் இப்போது உள்ளது போல் இருக்காது. இன்னும் சொல்வதானால், இது தான் நிபந்தனை என ஒரு சாஃப்ட்வேரிடம் பட்டியலை கொடுத்துவிட்டால், அது முரண்படும் ஹதீஸ் பட்டியலை நொடிப்பொழுதில் கொடுத்துவிடும்; ஆயுசு பூரா மன்னடியில் உட்கார்ந்து மண்டையை பிச்சிக்க தேவையில்லை.

2) முரண்பாட்டின் வரைவிலக்கணம் இது தான் என ஒரு பட்டியல் இவர்கள் தந்தால், இவர்கள் இது நாள் வரை காப்பாற்றி வரும் பல ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டி வரும். அல்லது நிராகரித்து வரும் பல ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ள வேண்டி வரும்.

Thursday, December 24, 2015

அதிரையில் 'ஒரு நாள் தஃவா பயிற்சி முகாம்' 26.12.2015 – சனிக்கிழமை

இன்சா அல்லாஹ் நாளை 26.12.2015 சனிக்கிழமை அன்று காலை முதல் மாலை வரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒருங்கிணைந்த 'ஒரு நாள் தஃவா பயிற்சி முகாம்' 'ரிச்வே கார்ன்' வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரபல தஃவா அழைப்பாளர்கள் சகோதரர் உமர் பாருக் மற்றும் மவ்லவி. அப்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி ஆகியோர் கலந்து கொண்டு ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பயிற்சியளிப்பதுன் தஃவா களத்தில் அழைப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விளக்கமளிக்கவுள்ளனர்.

தஃவா பணியில் ஆர்வமுடைய அனைத்து சகோதர சகோதரிகளும் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பயனடைய அன்புன் அழைக்கப்படுகிறார்கள்.

குறிப்பு: 
1. ரிச்வே கார்ன் அதிரை TO பட்டுக்கோட்டை சாலையில் மின்சார வாரிய {EB} அலுவலகத்திற்கு எதிரே அமைந்துள்ளது.
2. தஃவா முகாம் 26.12.2015 சனியன்று காலை சுமார் 9.30 மணியளவில் ஆரம்பமாகி மாலை 5 மணியளவில் நிறைவுறும்.
3. முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
4. முகாமில் கலந்து கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி இவசதிகள் செய்யப்பட்டுள்ளன.
5. அதிரையில் வாரந்தோறும் நடைபெறும் தெருமுனை தஃவாவிலும் ஆர்வமுள்ள சகோதர, சகோதரிகள் கலந்து கொள்ளலாம்.

நிகழ்ச்சி ஏற்பாடு
அதிரை இஸ்லாமிய வழிகாட்டி மையம்
ADIRAI ISLAMIC GUIDANCE CENTRE - AIGC

மேலும் விபரங்களுக்கு: நிஜாம் 9597841980 கமால் 9543577794 ஹாஜா 9003127748

Wednesday, December 23, 2015

அதிரையில் நாளை [25.12.2015 - வெள்ளி அன்று] மவ்லவி அப்பாஸ் அலி MISc. நிகழ்ச்சிகள்


இன்சா அல்லாஹ் நாளை 25.12.2015 வெள்ளிக்கிழமை அதிரை ALM பள்ளியில் நடைபெறவுள்ள ஜூம்ஆவில் குத்பா பேருரை நிகழ்த்தவுள்ளார்கள்.

மேலும், வாரந்தோறும் வழமையாக பிலால் நகர் தர்பியா மையத்தில் அஸர் தொழகைக்குப்பின் சுமார் 5 மணியளவில்) நடைபெறும் பெண்களுக்கான பயானில் கலந்து கொண்டு உரையாற்றுவதுன் நிகழ்ச்சியின் இறுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விளக்கமளிக்கவுள்ளார்கள்.

குறிப்பு: ஆண்களுக்கு தனியி வசதி செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் வருக என அன்புன் அழைப்பது
அதிரை தாருத் தவ்ஹீத்