உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, December 15, 2013

JAQH மாநிலத் துணைத் தலைவர் சகோதரர் கோவை அய்யூப் அவர்களின் துபை, அபுதாபி நிகழ்ச்சிகள்

12.12.2013 வியாழக்கிழமை பின்னேரம் இரவு 9.15 மணிமுதல் 10.45 மணிவரை துபை, தெய்ரா பகுதியில் அமைந்துள்ள மதுக்கூர் தவ்ஹீத் மர்கஸில் 'தவ்பா' என்ற தலைப்பின் கீழ் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.


13.12.2013 வெள்ளியன்று காலை 9.30 மணிமுதல் 11.30 மணிவரை அமீரகம் வாழ் அதிரையர்களுக்காக சிறப்பு தர்பியா பயிலரங்கம் துபை, தெய்ரா, நைஃப் ரோட்டில் அமைந்துள்ள 'தவ்ஹீத் இல்லத்தில்' ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், அமீரகத்திற்கு குறுகிய கால வருகை புரிந்துள்ள JAQH மாநிலத் துணைத் தலைவரும் இஸ்லாமிய அழைப்பாளருமாகிய சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் 'அன்றாட வாழ்வில் ஆயிரமாயிரம் நன்மைகள்' என்ற பொருளில் ஈடிணையற்ற அருளாளன் அல்லாஹூத்தஆலா அடியார்களாகிய நம்மீது கருணை கொண்டு வாரி வழங்கும் நன்மைகளை பட்டியலிட்டு ஏடுகளிலும் உள்ளத்திலும் பதிவேற்றிக் கொள்ளச் செய்தார்கள்.

http://www.youtube.com/watch?v=JM6i-YeTsDU 



ஒழுச் செய்வதில் தொடங்கி பாங்கு சொல்லும் வரையிலான நமது ஒவ்வொரு சிறு அசைவுக்கும் கிடைக்கும் அளப்பெரிய நன்மைகளை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் மிகத் தெளிவாக விளக்கி ஆரம்ப வகுப்பை நிறைவு செய்தார்கள்.

இதன் தொடர்ச்சி, இன்ஷா அல்லாஹ் சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் மீண்டும் அமீரகம் வரும் போது தொடரும். இத்தர்பியாவின் பயனை நீங்களும் பெற்றிட நம்முடைய வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள காணோளியை பாருங்கள், அடுத்தவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்.


13.12.2013 வெள்ளியன்று இஷா தொழுகைக்குப் பின் முஸஃபா ஐகாட் சிட்டி 1ல் அமைந்துள்ள ஓர் தனியார் கார்கோ கம்பெனி பின்புறம் அமைந்துள்ள பள்ளிவாசலில் இரவு 8 மணிமுதல் 9.30 மணிவரை 'உள்ளத்தை வெல்வோம்' என்ற தலைப்பின் கீழ் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.


இறுதியாக, 14.12.2013 சனிக்கிழமை இஷா தொழுகைக்குப் பின் முஸஃபா ஐகாட் சிட்டி 2ல் அமைந்துள்ள போர்ஸிலான் கம்பெனி பள்ளிவாசல் வளாகத்தில் பிற மத சகோதரர்களுக்கான இஸ்லாமிய தஃவா நிகழ்ச்சி இரவு 8 மணிமுதல் 9.30 மணிவரை நடைபெற்றது. இஸ்லாமிய இறைநம்பிக்கையுடன் பிற மத நம்பிக்கைகள் ஒப்பீடு செய்யப்பட்டு இறுதியாக இஸ்லாத்தினை தழுவிட பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டது. சொற்பொழிவுக்குப் பின் பிற மத சகோதரர்களின் கேள்விகளுக்கு தெளிவான விளக்கங்கள் கூறப்பட்டன.

களத்திலிருந்து
அதிரைஅமீன்

No comments:

Post a Comment