உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, July 9, 2016

அதிரையில் மஸ்ஜித் ஃபாத்திமா ( ரலி ) புதிய பள்ளிவாசல் திறப்பு படங்கள்


அதிராம்பட்டினம், ஜூலை-09

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம், மேலத்தெரு சானாவயல், பிஸ்மி காம்ப்ளக்ஸ் எதிர்புறம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மஸ்ஜித் ஃபாத்திமா ( ரலி ) புதிய பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று [ 09-07-2016 ] சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் இஸ்லாமிய மார்க்க பிரசாரகர் மவ்லவி அலி அக்பர் உமரீ கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். பள்ளியில் முதன் முதலாக மஹ்ரிப் தொழுகை நடத்தப்பட்டது. இதில் அனைவரும் கலந்துகொண்டனர்.

பள்ளியில் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டதால் பள்ளிவாசல் வரண்டா பகுதியில் அமர வைக்கப்பட்டனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை மஸ்ஜித் ஃபாத்திமா ( ரலி ) நிர்வாக கமிட்டியினர் செய்து இருந்தனர்.

அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த ஆஸ்திரேலியா வாழ் அதிரையர் முஹம்மது மீரா சாஹிப் அவர்கள் மகன் முஹம்மது யாசின் அவர்களால் இந்த பள்ளி வக்ப் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
 

 
 
 

No comments:

Post a Comment