உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, August 23, 2015

சுத்தம் பேண சிங்கப்பூர் போகனுமா?

சென்னையை சிங்கப்பூராக்குவோம்! அதிரையை சிங்கப்பூராக்குவோம்!! இவை தேர்தல் காலங்களில் வெளிப்படும் அரசியல் முழக்கங்கள் ஆனால் இப்படி சொல்பவர் எவருமே 'லீ குவான் யூ'க்கள் அல்ல என்பதால் என்னவோ அவை இன்று வரை வெற்று வாக்குறுதிகளாகவே நின்றுவிட்டன.

ஆனாலும் அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, சராசரி பொதுஜனமாக இருந்தாலும் சரி அவர்களுடைய உள்ளங்களில் ஏதோ ஒரு மூலையில் நமதூரும் 'சுத்தமான சிங்கப்பூர்' ஆகிவிடாத என்ற ஏக்கம் இல்லாமல் இருக்காது.

பல்லாயிரம் மைல் தூரத்தில் உள்ள சிங்கப்பூரை போல் ஆக ஆசைப்படும் நாம் ஏன் நமதூரிலிருந்து மிகச்சில கடல்மைல் தூரமேயுள்ள இலங்கையாக முதலில் மாற ஆசைப்படக்கூடாது?! நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் கற்றுக் கொள்வதில் தப்பேயில்லை.

குக்கிராமம் முதல் தலைநகர் வரை மிக நேர்த்தியாக திட்டமிடப்பட்ட இருபுறமும் மூடப்பட்ட, பாதுகாப்பான சாக்கடை வடிகால்கள், சாலை சுத்தம் என அழகுற மிளிர்கிறது. இத்தனைக்கும் இலங்கை உள்நாட்டு போரால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு.

ஆட்சியாளர்கள் மட்டுமல்ல மக்களும் மனம் மாற வேண்டும் என்பதை உணர்த்தும், இலங்கையின் சில பகுதிகளில் எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்காக!

மாற்றத்தை நம்மிலிருந்து, நமது சுற்றுப்புற தூய்மையிலிருந்து துவக்குவோம்!! வாக்குறுதி அரசியல்வாதிகளும் செயல்படும் நிலையை உருவாக்குவோம்!!!

அதிரை அமீன்
















படங்கள்:
J. ஜமால் முஹமது

No comments:

Post a Comment