உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, August 23, 2015

உலகை மாற்றிய குர்ஆன் - எதிர்ப்பும், சூடான பதிலும்

புகழ்பெற்ற பிரேசில் நாட்டு எழுத்தாளரும், "The Alchemist" என்ற பிரசித்தி பெற்ற நூலின் ஆசிரியருமான 'பவ்லோ கோயல்ஹோ' என்பவர் கடந்த 08.08.2015 அன்று தனது முகநூல் பக்கத்தில், உலகை மாற்றிய நூற்கள் என்ற பொருளின் கீழ் புனித திருக்குர்ஆனின் புகைப்படத்தை பதிவேற்றியிருந்தார்.


இந்த பதிவிற்கு கடந்த 20.08.2015 வரை சுமார் 40 ஆயிரம் 'லைக்குகளும்' சுமார் 5 ஆயிரம் 'ஷேர்களும்' கிடைத்துக் கொண்டிருந்த பொழுது,

இஸ்லாத்தை பற்றியும் அல்குர்ஆனை பற்றியும் தவறான கருத்துக்களை உள்வாங்கியிருந்த ஒருவரிடமிருந்து மட்டும் 'ஆமாம், இந்த புத்தகம் வன்முறை மற்றும் கொலைகளை கற்பிக்கும் நூல்' என்ற அபாண்ட சாடலும் வந்தது. (அவர் குர்ஆனை குற்றம் காணும் நோக்கிலாவது வாசித்திருந்தால் அவ்வாறு சொல்லியிருக்க மாட்டார் என்பது வேறு விஷயம்)


இனி தான் விஷயமே உள்ளது, லைக்குகளாலும் ஷேர்களாலும் 'பவ்லோ கோயல்ஹோ' மெய்மறந்து கனவுலகில் சஞ்சரித்துவிடாமல், அல்குர்ஆன் குறித்து தவறான எண்ணம் கொண்டிருந்தவருக்கு கீழ்க்காணும் மிக அருமையான பதிலை தந்துள்ளார்.


'உங்களுடைய கருத்து உண்மையில்லை' நான் ஒரு கிருஸ்தவனாக இருந்து கொண்டு சொல்கிறேன், 

பல நூற்றாண்டுகள் 'சிலுவை போர்கள்' என்ற பெயரில் கிருஸ்தவத்தை வாளின் முனையில் வலுக்கட்டாயமாக பரப்பியது யார்?

பெண்களை சூனியக்காரிகளாக கருதி கொலை செய்து வந்தது யார்?

இயற்பியல் விஞ்ஞானி கலீலியோ கலிலீ போன்றோருக்கு தண்டனைகள் வழங்கியதன் மூலம் அறிவியல் புரட்சியை தடுக்க முனைந்தது யார்?

இதற்கு காரணம் மதங்கள் அல்ல மாறாக அதை பின்பற்றுவோர் தங்களுக்கு சாதகமாக வளைக்க முற்படுவதால் ஏற்படும் விளைவுகளே என சூடாக பதிலளித்துள்ளார்.

அல்லாஹ் அவர்கள் இருவரையும் இஸ்லாத்தை விளங்கி பின்பற்றக்கூடிய மக்களாக ஆக்கியருளவானாக!

தமிழில்
அதிரை அமீன்

மூலம்
அல் அரபியா

No comments:

Post a Comment