உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, June 23, 2015

அதிரையில் வரவேற்கும் மக்களும்! வாலாட்டும் பீஜே வணங்கிகளும்!!


அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மூன்றாவது ஆண்டாக புனிதமிக்க ரமலான் தொடர் மார்க்க விளக்க நிகழ்ச்சி அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சிகளில் குர்ஆன் ஹதீஸை பின்பற்றி பிரச்சாரம் செய்பவர்கள் மட்டுமின்றி ஏனைய பொதுமக்களும் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.


இந்நிகழ்ச்சிகளில் பொதுவாக இலங்கையை சேர்ந்த தாயிக்கள் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றனர். இலங்கை தாயிக்களை பொறுத்தவரை பீஜே என்கிற நவீன முஃதஸ்ஸிலா வழிகேட்டு தலைவனுடைய இஸ்லாத்திற்கு எதிரான கொள்கைகளை மக்கள் மத்தியில் குர்அன் ஹதீஸ் ஒளியில் சுட்டிக்காட்டி வழிகேட்டிலிருந்து மக்களை மீட்பதில் முன்னனியில் உள்ளவர்கள் என்றாலும் அதிரையில் தங்களுக்கு கொடுக்கப்படும் தலைப்புகளுக்குள் நின்று இஸ்லாத்தின் சிறப்புகளை எடுத்துச் சொல்கின்றனர் ஆனாலும் பீஜே வணங்கிகள் இலங்கை மவ்லவிகள் என்ற பெயரை கேட்டாலே 'நிலவேம்பு கஷாயம்' குடித்த குரங்குகளாய் ஆடத்தொடங்கி விடுகின்றனர். 


நல்லமுறையில் நடந்து கொண்டிருக்கும் இந்த வருட ரமலான் இரவு தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிகளை காவல்துறை மூலம் தடுத்திட தலைகீழாக நின்று முயன்று தோற்று வருகின்றனர், அல்லாஹ் மிகப் பெரியவன். 

பீஜே என்ற வழிகேடனின் மொழிபெயர்ப்பு மட்டுமே குர்ஆன், பீஜேயின் புத்திக்கு பட்டது மட்டுமே ஹதீஸ் என நம்பி இஸ்லாத்திலிருந்து வெளியேறி கொண்டிருக்கும் பீஜேயானிகளால் இலங்கை அர்ஹம் மவ்லவி மீது காவல்துறை, உளவுத்துறைகளில் தொடுக்கப்பட்ட புகார்கள், விசாரணைகள் பயனற்று போகவே தற்போது உயர்மட்ட அளவில் சென்று வெளியில் கட்டப்பட்டுள்ள ஒலிபெருக்கியின் பக்கம் தங்களின் பார்வையை திருப்பியுள்ளனர்.

இது புனிதமிகு ரமலானுடைய காலமென்பதாலும், துஷ்டனை கண்டால் தூர விலகி செல்ல வேண்டுமென்பதாலும் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் பொறுமையுடன் காவல்துறையின் வேண்டுகோளை ஏற்று வெளியில் கட்டப்பட்ட ஒலிபெருக்கிகளை அகற்றிவிட்டு இன்றைய பயானை தொடர்ந்துள்ளனர்.

கடந்த வருடமும் இதுபோன்று பயான் தன்னுடைய பாதையில் நல்லமுறையில் சென்று கொண்டிருந்த போது தான் 50 லட்ச ரூபாய் சவால் போஸ்டர் ஒட்டியும், இணைய தளத்தில் வம்பிழுத்தும், காணவில்லை போர்டு வைத்தும் வாலாட்டியதன் விளைவாக விவாதம் வரை சென்று வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டதை இத்தனை சீக்கிரத்தில் மறந்துவிட்டார்கள் இந்த சொரணையற்ற பீஜே வணங்கிகள்.

பொறுமைக்கும் எல்லை உண்டு அது ரமலானுக்குப் பின் வெடித்தால் பீஜே வணங்கிகளே அதற்கு முழுப்பொறுப்பு!

==================================

கடந்த 4 தினங்களாக அர்ஹம் மவ்லவி அவர்கள் ஆற்றிய உரையின் யூடியூப் லிங்குகள்:

18.06.2015 முதல்நாள் அறிமுகவுரை


19.06.2015 இரண்டாம் நாள் மவுத்தின் சுவை


20.06.2015 மூன்றாம் நாள் இயற்கை மார்க்கம்


21.06.2015 நான்காம் நாள் மனிதனின் பலவீனம் 

1 comment: