உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, March 31, 2015

சொம்பு அடிவாங்கியதை ஒப்புக்கொண்ட பல்பு வியாபாரிகள்! (Updated)



அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

என்ன இன்றைக்கு பொழுது போகலையே என்றிருந்த நமக்கு, பல்புகளை ஏமாந்த மக்களின் தலையில் கட்டும் பியூஸாக போன வியாபாரிகளின் நடமாட்டம் பற்றி தகவல் கிடைத்ததை தொடர்ந்து இன்றைய பொழுது அவர்களுக்கு அர்ப்பணம்.

கவனிக்கவும்: 
புதிதாக படிப்பவர்கள் கீழ்க்காணும் லிங்கில் நமது முந்தைய ஆக்கத்தை படித்தால் இந்த பதிலடியின் அர்த்தம் விளங்கும் 



அதிரை ததஜவின் ஒப்புதல்:

ததஜவின் அதிரடி ஃபத்வா குறித்த நமது ஆக்கத்திற்கு பல்பு போட்டு வெளிச்சம் கூட்டி அதிரடியாக உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.

அந்த ஃபத்வாக்கள், கேமராவை அனைத்தப்பிறகு கொடுத்த ஃபத்வாவாம். ஆக பத்வாவை மறுக்கவில்லை. அப்பன் குதிருக்குள் இல்லை என்று பல்பு போட்டு சொல்லியுள்ளனர்.

எனவே, மீண்டும் கேட்கிறோம் நீங்கள் ஒப்புக்கொண்ட உங்களுடைய பத்வாவில் உண்மையாளர்களாக, உறுதியானவர்களாக இருந்தால் உங்களுடைய பத்வாகளை நடைமுறைப்படுத்த 'திராணி' இருக்கிறதா?

அல்லாஹ்வும் ரசூலும் சொல்லும் சூனியத்தை, அல்லாஹ்வும் ரசூலும் சொன்னது போல் நம்பியதால் பீஜே என்பவரால் முஷ்ரிக் ஆக்கப்பட்ட, (அல்லாஹ் பாதுகாப்பானாக)

1.    பெற்றோர்களின் சொத்தை திருப்பிக் கொடுக்கப் போவது எப்போது? இனி வாங்காமல் இருக்க என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?

2.    உறவுகளை முறித்துக் கொள்ளப் போவது எப்போது? இனியும் உறவு கொண்டாடாமல் இருக்க என்ன முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?

3.    ஏற்கனவே எடுத்த பெண்களை எப்போது தலாக் விடப்போகிறீர்கள்? இனிமேலும் பெண் எடுக்காமலிருக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

மேலும் உங்களுடைய மேற்காணும் பத்வாக்களை மீறுபவர்களுக்கு அமைப்புரீதியாக என்ன தண்டனை?

மேற்காணும் சுய பத்வாக்களை நடைமுறைபடுத்துவீர்களா அல்லது ததஜ அகராதிப்படி இதுவும் பிம்பிளிக்கி பிளாப்பியா?

பெண்களின் சாட்சியத்தை நாங்கள் ஏற்கிறோம், நீங்கள்?????

கேமராவில் பதியப்படவில்லை என்ற தகவல் அப்பாஸ் அலி பேசிய பிறகே அப்பெண்களால் சுட்டிக்காட்டப்பட்டது.  தொடர்ந்து அதே மேடையிலேயே அந்த வீடியோவை பதியவேண்டியதுதானே என்ற குற்றச்சாட்டை அப்பாஸ் அலி வாபஸ் பெற்றார் ஆனால் அந்த ஃபத்வாவை பற்றிய விமர்சனம் அப்படியே உள்ளது. நம் நிலையும் அதேதான்.

ஆக, வீடியோ பதிவு செய்யப்படவில்லை என்ற உண்மை கூட அந்த சகோதரிகள் தாமாக முன்வந்து சொன்ன பிறகு தான் உங்களுக்கே விளங்கும் அளவுக்கு பியூஸ் போனவர்களாக இருந்துள்ளீர்கள், பேஷ், பேஷ்.

வீடியோ பதிவு செய்தார்களா? ஒழித்தார்களா? என்பதையெல்லாம் விட அப்பெண்களின் கேள்வியும் அதற்கு ததஜ சார்பில் மவ்லவி அப்துல் நாசரால் வழங்கப்பட்ட அதிகாரபூர்வ பத்வாவும் மிக முக்கியமானது, பாரதூரமானது என்பதை சிந்திக்கும் தகுதியுள்ளோர் உணர்வர்.

நடந்தது விவாதமா? கேள்வி பதில் நிகழ்ச்சியா?

பெண்களின் கேள்விக்கு அப்துல் நாசரின் திணறலை மறைக்க அவர்கள் போட்ட அடுத்த பல்பு

'அப்துல் நாசர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவர்கள் திரும்ப திரும்ப கேள்விக்கேட்கிறார்கள்
ஒவ்வொன்றுக்கும் தாவித் தாவி போகக்கூடாது ஒன்றைவிட்டு இன்னொன்றுக்கு தாவிச் செல்லும் இதே நிலைதான் ஒவ்வொரு கேள்விக்கும் அங்கே நிலவியது.
இந்த இடத்தில் நாம் அந்த சகோதரிகளை குறை சொல்வதற்காக இதைக் குறிப்பிடவில்லை. 'அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைக் கொடுத்துவிடுகிறான்' (புஹாரி 71) என பதிகிறார்கள்.'

அப்பன் மட்டும் அல்ல சித்தப்பனும் குதிருக்குள்தான் என பதிகிறார்கள். பெண்கள் கேட்ட கிடுக்கிப்பிடி கேள்விகளை மறுக்கமுடியாமல் இவ்வளவு சப்பைக்கட்டுகளை கட்டி பல்பு விற்று பெண்கள் அடுத்து அடுத்து கேள்விகள் கேட்டனர் இவர் பதில் சொல்லாமல் அல்லாஹ் நாடுவானா? என்று கேள்வி கேட்டு அங்கேயே நின்றுகொண்டார் என்பதை வெளிச்சம் போட்டு தெளிவு படுத்தியுள்ளனர்.

இது விவாத நிகழ்ச்சியா அல்லது கேள்விக்கு பதில் சொல்லும் நிகழ்ச்சியா? நாங்கள் கேட்ட கேள்விக்கு பெண்கள் பதில் சொல்லவில்லை என காரணம் சொல்லி சமாளிக்க?

பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி என்று பீலா விட்டு விட்டு வந்திருந்த பெண்களை 'உரையாற்றுகிறேன்' பேர்வழி என 1 1/2  மணி நேரம் கொன்றுவிட்டும், பின்பு பதில் என்கிற பெயரில் ஒவ்வொரு கேள்விக்கும் சுமார் 45 நிமிடங்கள் என அறுத்து டைம்பாஸ் செய்துவிட்டும், பெண்கள் தங்களுக்குள்ள சந்தேகங்களை அவர்களுக்கு கிடைத்த கேப்பில் எழுப்பினால் தாவித்தாவி போவதாக அளுத்துக் கொள்கிறீர்கள். மவ்லவி அப்துல் நாசர் இத்துடனாவது தப்பித்தாரே என பெருமைபட்டுக் கொள்ளுங்கள்.

இறுதியாக:

38:29   كِتَابٌ أَنزَلْنَاهُ إِلَيْكَ مُبَارَكٌ لِّيَدَّبَّرُوا آيَاتِهِ وَلِيَتَذَكَّرَ أُولُو الْأَلْبَابِ
இது பெரும் பாக்கியங்கள் நிறைந்த ஒரு வேதமாகும். (நபியே!) இதனை நாம் உம்மீது இறக்கி அருளியுள்ளோம். இந்த மக்கள் இதனுடைய வசனங்களைச் சிந்திக்க வேண்டும்; அறிவுடையோர் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக!  38:29

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்தபோது 'உறவு' எழுந்து, (இறைஅரியணையின் கால்களைப் பற்றிக்கொண்டு) '(மனிதர்கள் தம்) உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்' என்று கூறி (மன்றாடி)யது.

அல்லாஹ், 'ஆம்; உன்னை (அதாவது உறவை)ப் பேணி நடந்துகொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்துகொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்துவிடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?' என்று கேட்டான். அதற்கு உறவு, 'ஆம் (திருப்தியே) என் இறைவா!' என்று கூறியது. அல்லாஹ், 'அது உனக்காக நடக்கும்' என்று சொன்னான் என்றார்கள்.

பிறகு, 'நீங்கள் விரும்பினால் 'நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா? அவர்களையே அல்லாஹ் சபித்தான். அவர்களைச் செவிடாக்கினான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கினான். அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள்மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?' (47:22-24) ஆகிய இறைவசனங்களை ஓதிக்கொள்ளுங்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. நூல்: முஸ்லீம் 4994

அதிரை ததஜ சகோதரர்களே! மேற்காணும் குர்ஆன் மற்றும் ஹதீஸின் கருத்துப்படி சிந்தித்து, வழிகெடுக்கும் தனிமனித மயக்கத்திலிருந்து விடுபட்டு அல்லாஹ்வுக்கு உகந்த பாதையை தோந்தெடுத்து வெற்றியடைந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். அதை விடுத்து பியூஸாக போனவர்களின் பல்பு வியாபாரங்கள் எத்தகைய பலனையும் தராது என கூறி நிறைவு செய்கின்றோம்.

No comments:

Post a Comment