உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, March 30, 2015

துபையில் ஓதுவோம் வாருங்கள் அல்குர்ஆன் ஓத தொடர் பயிற்சி வகுப்பு


அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.

கடந்த டிசம்பர் 2014 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை MTCT-மர்க்கஸில் "ஓதுவோம் வாருங்கள்" என்ற தலைப்பில் அல்குர்ஆன் தொடர் வகுப்பு நடைபெற்று வருகின்றது.

உஸ்தாத் ஜுனைது உமரி MA Arabic அவர்கள் திருக்குர்ஆனை பொருளுணர்ந்து கொள்வதற்கும் தஜ்வீது முறைப்படி ஓதுவதற்கும் பவர் பாயின்ட் மூலம் பயிற்சி அளிக்கின்றார்கள்.

குர்ஆன் ஓதத் தெரியாதவர்களுக்கு சிறப்பு பயிற்சியும் தனி கவனமும் செலுத்தப்படுகின்றது.

குர்ஆனை கற்றுத்தருவதோடு அதனோடு வாழ்நாள் முழுவதும் தொடர்பை ஏற்படுத்த உதவுகின்றோம்.


உங்களின் அன்றாட ஐவேளைத் தொழுகை மற்றும் அல்லாஹ்வோடு உங்களின் தொடர்பு ஆகியவைகள் மேம்படவும் உங்களின் கடந்தகால வாழ்க்கை உறுதியாக மாறிடவும் உதவுகின்றோம்.
  • குர்ஆனை புரிந்து கொள்வது எளிது - நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவுபடுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா(அல்-குர்ஆன் 54:32)
  • குர்ஆனின் சிறு பகுதியேனும் யார் உள்ளத்தில் மனனம் இல்லையோ அவர் உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றது
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) ஆதாரம் : திர்மிதி

எனவே இவ்வாய்ப்பை பயன்படுத்திகொள்ளுமாறு துபை சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

குறிப்பு: கட்டணம் ஏதுமின்றி கற்றுத் தரப்படுகிறது.

For Madukkur Thouheed Charitable Trust

No comments:

Post a Comment