உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, January 31, 2014

செடியன் குளத்தில் ADT நடத்திய மழை தொழுகையில் பெரும்திரளானோர் பங்கேற்பு !

செடியன் குளத்தில் ADT நடத்திய மழை தொழுகையில் பெரும்திரளானோர் பங்கேற்பு !

அதிரைக்கு மழை வேண்டி வறண்டு காணப்படும் நமதூர் செடியன் குளத்தில் இன்று காலை 9 மணியளவில் அதிரை தாருத் தவ்ஹீத் [ ADT ] சார்பில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

அடிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சிறுவர்கள், பெண்கள் உட்பட பெரும்பாலானோர் திரளாக வருகை தந்து கலந்துகொண்டனர்.

முன்னதாக மார்க்க பிராச்சாரகர் அப்துல் ஹமீது அவர்களால் மழை தொழுகை குறித்து விளக்கத்தில் 'சட்டையை திருப்பி அணிந்து தொழுகும் படியும், மழை வேண்டி இறைவனிடம்  இரு கைகளின் புறங்கைகளை உயர்த்தி பிரார்த்தியுங்கள்' என குறிப்பிட்டு பேசினார்.

ஒழு செய்வதற்காக ட்ரம்களில் தண்ணீர் நிரப்பி வைத்து இருந்தனர். ஆங்காங்கே தண்ணீர் பாக்கெட்களும் விநியோகம் செய்யப்பட்டன. தொழுவதற்காக வந்திருந்த பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தொழுகை முடிந்தவுடன் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. சுமார் 20 நிமிடத்திற்கும் மேலாக நீடித்த இந்த பிரார்த்தனையில் தொழுகையில் கலந்துகொண்ட அனைவரும் இறைவனிடம் மனம் உருகி தனித்தனியே பிரார்த்தனை செய்தார்கள்.







 
Thanks to: Adirai News 
http://theadirainews.blogspot.com/2014/02/adt.html
 
 குறிப்பு:
அன்பான அதிரை சொந்தங்களே! இணைய, வலைதள நிர்வாகிகளே!

ADT அழைப்பை ஏற்று தொழுகையில் கலந்து கொண்டதுடன் ஊரின் நலனுக்காக மார்க்க அடிப்படையில் ஒன்று சேர்ந்து பிரார்த்தித்த ஈர நெஞ்சங்களே! செய்தி வெளியிட்டு கடமையாற்றிய இணைய சகோதரர்களே! உங்களின் மானமார்ந்த பிரார்த்தனையை ஏற்று எல்லாம் வல்ல அல்லாஹ் நமதூரின் மீதும் இன்னும் தேவையுடைய அனைத்து பிரதேசங்களின் மீதும் மழையை வருஷிப்பானா! உங்கள் ஒவ்வொருவர் மீது தன் பேரருளையும் இரக்கத்தையும் பொழிவானாக! என இருகரமேந்தி இறைஞ்சுகிறோம்.
 

No comments:

Post a Comment