அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
எல்லாம் வல்ல ரஹ்மானின் துணையோடும் அதிரை மக்களின் பேராதரவோடும் அதிரை தாரூத் தவ்ஹீத் சார்பாக நடைபெற்று முடிந்த இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தினை அறிவித்திருந்தபடி சில தொழில்நுட்ப காரணங்களினால் முழுமையான நேரலையாக தர முடியவில்லை, அல்லாஹ்விற்காக பொருத்தருள்க.
அல்லாஹ் நாடியிராவிட்டால் பெண்கள், ஆண்களினும் பெரும்பான்மையாக வருகை தந்து எங்களின் இடஓதுக்கீட்டை பொய்பித்திருக்க முடியாது, எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே!
அதிரையில் முதன்முதலாய் ஜமாஅத்களின் ஒத்துழைப்புடனும், தவ்ஹீத்வாதிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பேரளவில் சமூகமளித்திருந்த இந்த தவ்ஹீத் பொதுக்கூட்டத்தில்,
மௌலவி மீரான் ஸலாஹி அவர்கள் நரக வேதனை யாருக்கு? என்ற தலைப்பில் நரகம் செல்லக்கூடிய மக்களை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் பட்டியலிட்டும் மறுமை குறித்தும் கேட்டோர் கலங்கும் வண்ணம் எச்சரித்தார்.
சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் 'இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள்' என்ற தனதுரையில் இன்றைய சமூக சீர்கேடுகளையும் அதன் காரண காரியங்களையும் அதனை களைவது குறித்து குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கியும், இந்த மார்க்கத்தை வாழையடி வாழையாய் இறுதிநாள் வரை நபி (ஸல்) அவர்களின் சமூகத்திடம் கொண்டு சேர்க்க ஸஹாபாக்கள் செய்த தியாகங்களோடு ஒப்பீட்டு எடுத்துக் கூறி குழுமிய மக்களின் சிந்தனையினை சமூககேடுகளுக்கு எதிராய் தூண்டினார்.
மேற்காணும் இஸ்லாமிய அழைப்பாளர்கள் இருவரும் இயக்கவாதிகளாக இருந்தும் தங்கள் இயக்கத்தின் புகழ் பாடாமலும், அடுத்த இயக்கத்தினரை கண்ணியக் குறைவாக பேசாமலும், தாங்கள் மட்டுமே சொர்க்கம் செல்லக்கூடியவர்கள் என தங்களுக்கு தாங்களே தீர்ப்பு வழங்காமலும், எடுத்துக்கொண்ட தலைப்பினுள் மட்டும் நின்றும் அதேவேளை தாங்கள் சொல்ல வந்த விஷயத்தை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஓர், தவ்ஹீத் பொதுக்கூட்டதை ஓர் முன்மாதிரி கூட்டமாய் அமைத்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷா அல்லாஹ், உள்ளங்களை தட்டியெழுப்பிய உரைகளின் காணோளி விரைவில் நமதூர் தளங்களில் பதிவேற்றப்படும்.
அதுவரை ஆறுதலாய் புகைப்படங்களின் ஒரு பகுதி உங்கள் பார்வைக்கு....
சகோதரர் SMN அவர்களுக்கு நன்றி
No comments:
Post a Comment