உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, November 23, 2013

நேரலையில் அகீதத்துத் தஹாவிய்யாஹ் வகுப்பு

அன்பு சகோதரர்களே!

இத்தொடர் வகுப்பு வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு  8.00 மணி முதல் 9.00 மணி வரை சாமி துகைர் ஹாலில் நடைப்பெறுகிறது. சகோதரர்கள் அனைவரும் இவ்வகுப்பில் பங்குப் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வகுப்பு கீழ்க்கண்ட இணைய முகவரியில் நேரலையில் சவூதி அரேபிய நேரம் இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பப் படுகிறது.


ராக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையம் - தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு
Rakah Islamic Cultural Center - Tamil & Sinhala language section
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ  صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. 1:5-7


கடற்கரைத் தெரு தர்கா ட்ரஸ்டிகளுக்கும் கந்தூரிக் கமிட்டியினருக்கும் ADTயின் கடிதம்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!

அஸ்ஸலாமு அலைக்கும்.

கடற்கரைத் தெரு ஜமாஅத், கடற்கரைத் தெரு தர்கா ட்ரஸ்டிகள் மற்றும் கந்தூரிக் கமிட்டியினரைச் சந்தித்து, கந்தூரியின் தீமைகளை விளக்கிக் கடிதங்கள் கொடுப்பது எனும் அதிரை தாருத் தவ்ஹீத் ஆலோசனை அமர்வுத் தீர்மானத்தின்படி, முதலாவதாக கடற்கரைத் தெரு ஜமாஅத்தார்களுக்கு 3.11.2013இல் ஒரு கடிதம் கொடுத்தோம்.

கடற்கரைத் தெரு தர்கா ட்ரஸ்ட்டின் முன்னாள் தலைவராக இருந்தவரான சகோ. அலாவுத்தீன் சென்ற ஆண்டு கபுருக்கு சந்தனம் பூசுவதற்குப் போய் உயிர் நீத்துவிட்டதால் அன்னாரின் சின்னவாப்பா சகோ. அஹ்மது ஹாஜா அவர்கள் தர்கா ட்ரஸ்டுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரது உடல்நலக் குறைவால் தர்கா சம்பந்தப்பட்ட எதிலும் தலையிடாமல் இருந்து வருகிறார்.

எனவே, தர்கா ட்ரஸ்ட்டின் செயலாளரான சகோ. அபுல் ஹஸன் அவர்களை, அவருடைய 'ஹஸன் ஹார்ட்வேர்' கடையில் கடந்த 17.11.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணியளவில் நான், தாருத் தவ்ஹீதின் அமீர் அஹ்மது காக்கா, பொருளாளர் நிஜாமுத்தீன் ஆகிய மூவரும் சென்று சந்தித்து இணைப்பில் உள்ள கடிதத்தைக் கொடுத்தோம்.

சகோ. அபுல் ஹஸன் அவர்கள் ஏறத்தாழ இருபது நிமிடங்கள் பேசினார். அதில் நமக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் அடங்கியிருந்தன. அதிர்ச்சி அளிக்கும் தகவல்களும் இடம்பெற்றன. அவற்றின் சுருக்கம்:

* "நாகூரிலும் முத்துப்பேட்டையிலும் இன்னும் பல பெரிய ஊர்களிலும் கந்தூரிகள் நடக்கின்றன. இந்தச் சின்னக் கிராமத்தில் நடைபெறும் கந்தூரியை எடுக்கக்கூடாது என்று ஏன் சொல்கின்றீர்கள்? அங்கே போய் சொல்வதுதானே?" என்ற கேள்வியை முன்வைத்தபோது நான் குறுக்கிட்டு, "எல்லா ஊர்களிலும், நாகூரிலும் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது. நாகூர் பிரச்சாரத்திற்கு நானும் போயிருக்கிறேன்" என்று சொன்னேன்.

* "எனக்கு ஒன்றும் தெரியாது; உங்களுக்கும் ஒன்றும் தெரியாது. முன்னோர்கள் 570 வருசத்துக்கு முந்தி கந்தூரி எடுத்திருக்கிறார்கள். அது, அப்படியே தொடர்ந்து வருகிறது" என்று முன்னோர்களை உயர்த்திப் பேசிவிட்டு, "தர்கா என்பது இறைவனை வணங்கும் இடம்" என்ற அதிர்ச்சியான தகவலைச் சொன்னார். "அல்லாஹ்வை தர்காவில் தொழ முடியாதே. எப்படிச் சொல்கிறீர்கள் காக்கா?" என்று நான் கேட்டதற்கு, "அப்படித்தான் நான் படித்திருக்கிறேன். எனக்குப் படித்துத் தந்தவர் அப்படித்தான் சொல்லித் தந்தார்" என்று விளக்கினார். முன்னோர்களின் வழிவந்த உஸ்தாதின் மார்க்க அறிவே இப்படி என்றால் அந்தக் காலத்து முன்னோர்கள் மார்க்கத்தை எப்படி விளங்கி இருப்பார்கள் என்று எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. அல்லாஹ்வின் (2:170) வார்த்தைகள் எத்துணை சத்தியமானவை என்று வியக்காமலும் இருக்க முடியவில்லை.

* தர்காவுக்குச் சம்பந்தமில்லாத ஒரு பெண்ணின் வீட்டில் ஐந்து பவுன் நெக்லஸ் காணாமல் போய்விட்டதாம். "இன்னார் வீட்டு தர்வாஜாவில் அது தொங்கிக் கொண்டிருக்கிறது. போய் எடுத்துக்கொள்" என்று கனவில் வந்து சொன்னாராம் ஜொகராம்மா. "கனவு கண்ட பெண், ஐந்து பவுன் நகையையும் விற்று, கபுர் கட்டினார். சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் குடும்பம். இந்தக் காலத்தில் ஐந்து பவுன் என்ன விலை? அதை விற்று அவர் கபுர் கட்டினால் உங்களுக்கென்ன?" என்ற கேள்வியை வைத்தார். உண்மைதான். அவருடைய கேள்வியில், "ஆலிம்கள் பெருத்த ஊர்; ஆறு குத்பா நடக்கும் ஊர். யாருமே வாய் திறந்து பேசாமல் இருக்கும்போது நீங்கள் மட்டும் குதிப்பது ஏன்?" எனும் உப கேள்விகள் பொதிந்திருந்தன. "கழிப்பிடத்தில் முளைக்கும் திடீர் கப்ரு என்று நோட்டீஸ் போட்டீர்களே என்ன நடந்தது? நோட்டீஸைப் படித்துவிட்டு, நீங்கள் கொடுத்த விளம்பரத்தால் நிறைய பேர் வர ஆரம்பித்துவிட்டார்கள்" என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

* கந்தூரியில் நடைபெறும் குத்துப்பாட்டு, கச்சேரிகளில் தமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவை கந்தூரி கமிட்டியாரால் செய்யப்படுபவை என்றும் தெளிவாக்கினார். "கந்தூரி கமிட்டியார் யார் காக்கா?" என்று நான் கேட்டதற்கு, "இதுவரைக்கும் யாரெனத் தெரியவில்லை. என்னிடம் வந்து பர்மிஷன் கேட்பார்கள். நான் சரி என்பேன். அவ்வளவுதான்" என்று கூறினார்.

* "ஏழைச் சிறுவர்களுக்கு கத்னா செய்து வைக்க முன்வாருங்கள். ஏழைக் குமருகளுக்குக் கல்யாணம் செய்து வையுங்கள். அதை விட்டுவிட்டு கந்தூரியை நிறுத்து என்றால் நின்றுவிடுமா?" என்று ஆலோசனை வழங்கினார்.

* பேச்சு வாக்கில், "நாங்கள் ஹாஷிமிகள்" என்பதாக எனக்குப் புதுத் தகவல் ஒன்றையும் தெரிவித்தார். அந்த நேரத்தில் ஹாஷிமிகளான அபூஜஹ்லும் அபூதாலிபும் என் நினைவில் வந்தனர். இந்த ஹாஷிமி விபரத்தை 'ஸில்ஸிலா'வைப் படித்துப் பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும், இன்ஷா அல்லாஹ். ஏனென்றால், ஹாஷிமிகளுக்கு தானமோ தர்மமோ கொடுப்பது முஸ்லிம்கள் மீது ஹராமாக்கப்பட்டது. வாங்குவதும் ஹாஷிமிகளுக்கு ஹராமாக்கப்பட்டதாகும்.

மக்ரிபுக்கு நேரமாகிவிட்டதால் விடைபெற்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டவேண்டும்.

தொடர்புடைய சுட்டிகள் : -
மடமையிலிருந்து விடுதலை பெறுவோம்
கழிப்பிடத்தில் முளைக்கும் திடீர் கப்ரு

ஜமீல் M.ஸாலிஹ் - SEC-ADT




 
Thanks to : adirainirubar

Sunday, November 10, 2013

முத்துப்பேட்டை லகூன் எனும் சதுப்பு நிலக்காடுகளுக்குள் ஓர் உலா

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அமீரகத்துல கிடைக்கின்ற சொற்ப லீவுல, வேலைப்பளுவால் மண்டை காய்ந்து ஊருக்குப் போகின்ற நமக்கு ஆறுதல் நம்ம குடும்பம் குட்டிகள் தான், அதுவும் அவர்களுடன் சேர்ந்து ஒரு சுற்றுலாவோ, பிக்னிக்கோ போய் வந்தால் அது இன்னும் மன இறுக்கங்களை குறைக்கும் ஒரு அருமருந்துங்க.
 
 

சுனாமியை அழிவின் சின்னமாக நாம் அறிவோம் ஆனால் அதே சுனாமியால் அழகையும் ஏற்படுத்த முடியும் என்பதன் சின்னஞ்சிறு சாட்சியே நமதூரை ஒட்டியுள்ள கீழத்தோட்டம் கடற்கரை மணற்பரப்பு.

அழிவையும், அழகையும் ஏற்படுத்த வல்ல சுனாமியையே மண்டியிடச் செய்யும் சதுப்புநில காடுகள் அதிரை வரை படர்ந்திருப்பது எல்லாம் வல்ல ரஹ்மான் நம் மீது கொண்டுள்ள கருணையே அன்றி வேறில்லை.

சதுப்புநில அலையாத்திக் காடுகளையும் கடலையும் ஒட்டி சூழ்ந்துள்ள நண்ணீர் பகுதியே லகூன் என அறியப்படுகின்றது.
 

 


முத்துப்பேட்டை லகூன் என்ற பெயரை சிறுவயது முதல் அறிந்திருந்தாலும் போக வாய்க்கவில்லை ஆனால் இந்த வருட ஹஜ்ஜூப் பெருநாளைக்கு கிடைத்த ஒரு வார கேப்புல ஊருக்கு போன நமக்கு தலைக்கு மேல சொந்த வேலைகளும், நிலத்திருடர்களின் தொந்தரவுகளும் ஏராளம் இருந்தாலும் நண்பன் அப்துல் ரஹ்மான் கை கொடுக்க, குடும்பத்துடன் முத்துப்பேட்டை லகூனுக்கு சென்று வந்தோம்.

 


லுகூனுக்குச் செல்ல வனத்துறையிடம் முன் அனுமதி பெறவேண்டும் என கேள்விப்பட்டிருந்ததால், நண்பர் அப்துல் ரஹ்மான் தன் உறவினர் மூலம் அறிமுகமான முத்துப்பேட்டையை சேர்ந்த ஒரு சமுதாய இயக்க சகோதரரை மொபைலில் தொடர்பு கொண்டு உதவி கேட்க, அவரும் உங்களுக்கான முன்அனுமதி மற்றும் படகு எல்லாம் ரெடி என துண்டை போட்டு தாண்டாத குறையாக வாக்குறுதியளிக்க, அடுத்த நாள் காலையிலும் மீண்டும் அவரிடம் மறுஉறுதி செய்து கொண்டு பகல் 12 மணிக்கெல்லாம் ஸபாட்டுக்குப் போனா... அந்த இடத்துல ஒரு சில மீனவ சகோதரர்களை தவிர வேற யாரையும் காணோம். மீண்டும் மீண்டும் மொபைல்ல உள்ள நம்பர் தேய்கிற அளவு அடிக்க அடிக்க ரிங் மட்டும் தாங்க போனது, எடுத்துப் பேச நாதியில்லை. சரி அவருடைய இயக்க சகாக்கள் மூலம் என பல்வேறு வகையிலும் முயற்சித்த போதும் இன்று வரைக்கும் ஆளாக்காணோம். நாமாவது பரவாயில்ல, பிக்னிக் என்பதால் சமாளித்து விட்டோம் ஆனால் இவர்களை நம்பிச் சென்ற சமுதாய பிரச்சனைகள், சமுதாய சகோதரர்கள் என எத்தன பேர இப்படி டீல்ல விட்டிருப்பார்கள் என நினைக்கும் போதே கண்ண கட்டிருச்சுங்க. நாமும் தான் ஒரு காலத்துல இதே இயக்கத்துக்கு நகரத் தலைவரா இருந்தோம்னு தேவையில்லாத ஒரு நினைப்பு வேற வந்து தொலச்சது. ஒரு தகவலுக்காக சொன்னேன், சரி விடுங்க நாம பார்க்க வந்த லகூன பார்ப்போம்.
 


அங்கிருந்த மீனவ சகோதரர்களை அணுகி, போட்டுக்கு ரேட்டு பேசி, அவர்கள் மூலமே வனத்துறையிடம் முறையான அனுமதியும் பெற்று புறப்படும் போது மணி மாலை 2.30யை தாண்டிவிட்டது. இருபுறமும் அலையாத்திக்காடுகள், தண்ணீரிலும் மரங்களிலும் அரிதாக காணப்படும் பறவைகள், ஆங்காங்கே அலையாத்திகாடுளால் உருவாக்கப்பட்ட குட்டி குட்டி தீவுகள், எங்கும் நீர்ப்பரப்பும், பசுமையும் என சுமார் ஒரு மணி நேரம் மெல்லச் செல்லும் அலுக்காத படகு பயணம், டிஸ்கவரி சேனல்ல நாமே போற மாதிரி ஒரு ஃபீலிங் வரும். ஆறும் கடலும் சேருமிடம் வரை செல்லும் படகு அப்படியே  "U" டர்ன் அடித்து திரும்புகிறது.


 

வரும் வழியில், ஒரு குட்டி தீவில் இறக்கிவிடுகிறார்கள். தீவின் குறுக்காக அமைக்கப்பட்டுள்ள நீண்ட மரப்பாலம் வழியாக நான்கு புறமும் குழந்தைகள் ஒடியாட, கரையோரம் அமைக்கப்பட்டுள்ள இளைப்பாறும் குடிசைகளில் தென்றல் தாலாட்ட, கொண்டு வந்த உணவை அங்கேயே பகிர்ந்து சாப்பிட்டு, சிறிது ஓய்வெடுத்துவிட்டு அனுமதிக்கப்பட்ட நேரமான மாலை 5 மணிக்கு அங்கிருந்து கிளம்பினோம்.




 

படகு திரும்பி வரும் வழியில் மழை பெய்ய, நனைந்ததும் இளமைக்காலம் நினைவுகளிலே வந்து சென்றது. திரும்ப வரும்போது மீனவர்கள் ஆங்காங்கே வலை விரித்து வைத்திருக்க அது அருபடாமல் லாவகமாக படகுகளை ஒட்டி வருகிறார்கள்.




கடந்த 06.06.2013 அன்று தமிழக முதல்வர் அவர்கள், முத்துப்பேட்டை லகூன் பகுதியை சுற்றுலாத்தலமாக மேம்படுத்த 2 கோடியே 17 லட்சத்து 80 ஆயிரம் (G.O.Ms.No.141 மூலம் ரூ.217.80 லட்சம்) நிதி ஒதுக்கியுள்ளார்கள். அதனை கொண்டு வனத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் அடிப்படை மற்றும் அதிகமான வசதிகளை செய்து தர வேண்டும், குறிப்பாக குடிநீர், டாய்லெட் வசதிகள் மற்றும் அரசே இயக்கும் படகு போக்குவரத்து, ஒரு சிறிய தீவில் லகூனில் காணப்படும் மீன், பறவை மற்றும் விலங்கினங்களை இயற்கை சூழலில் உலவவிடும் காட்சி சாலை அல்லது தற்போதைக்கு அதன் புகைப்பட காட்சி அரங்கு, இப்போதைக்கு சிறிய கேண்டீன் மற்றும் எதிர்காலத்தில் உணவகம் என அமைத்தல் வேண்டும்.

அதிரை வரை படர்ந்துள்ள அலையாத்தி காடுகளுக்குள்ளும் பிக்னிக் சென்று வர தஞ்சை மாவட்ட நிர்வாகமும் ஏற்பாடு செய்தல் நலம்.
 
டிப்ஸ்:

அதிக அளவில் குடி தண்ணீர், தேவையான உணவு, நொறுக்குத் தீனிகள் எல்லாம் அவசியம் எடுத்துக் கொண்டு செல்லுங்கள். பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை, குப்பைகள் போடவும், புகை பிடிக்கவும் அனுமதியில்லை.

கந்தூரி, திருவிழா, பொருட்காட்சி, சுற்றுலா என அதிகம் ஊர் சுற்றாத பெண்களுக்கும் பசுமை விரும்பும் ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் லகூன் பிடிக்கும், மத்த பெண்களுக்கு என்ன இது வெறும் தண்ணியும், ஓரே காடாவும் இருக்கு என்ற சடைப்பு தான் மிஞ்சும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் தக்க ஆண் துணையின்றி செல்லவே கூடாது.

அதிரைஅமீன்

Thanks to : www.muthupetnews.com & Tiruvarur collector
 

14 & 15 Nov 2013 - In Dubai - Exhibition on more than 100 reasons for embracing ISLAM


மற்றும்

தஃவா பயிற்சி வகுப்பு

இடம்: ஜமியத் அல் இஸ்லாஹ் அரங்கம்

லூலூ ஹைப்பர் மார்க்கெட் பின்புறம்,
ஸ்டேடியம் மெட்ரோ ஸ்டேஷன் அருகில்,
அல் கிஸஸ், துபை.
நாள்:  14 மற்றும் 15 நவம்பர் 2013
நேரம்: காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை
மேலும் விபரங்களுக்கு: 050 1644501

 
 
நாள்: 14 மற்றும் 15 நவம்பர் 2013
நேரம்: மாலை 6.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரை


Friday, November 8, 2013

துபையில் வியாழன் அன்று நடந்த ஷைஹ். S. கமாலுதீன் மதனி அவர்களின் மார்க்க விளக்க நிகழ்ச்சி

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

07.11.2013 துபையில் ஷைஹ். S. கமாலுதீன் மதனி அவர்களின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி துபை தமிழ் தஃவா குழு ஏற்பாட்டில் மிகச்சிறப்பாக நடந்தேறியது, அல்ஹம்துலில்லாஹ்.

இரவு 8.30 மணியளவில் துவங்கிய நிகழ்ச்சியில் ஷைஹ். கமாலுதீன் மதனி அவர்கள் கலந்து கொண்டு சுமார் 1 மணி நேரம் 'இஸ்லாத்தில் வணக்க வழிபாடுகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அதில் எத்தகைய வழிபாடுகள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும், எவையெல்லாம் நிராகரிக்கப்படும் குர்ஆன் ஹதீஸிலிருந்தும், இஸ்லாமிய வரலாற்று பக்கங்களிலிருந்தும் ஆதாரங்களை கூறி உரையாற்றினார்.
 









 
 
பின்பு அரைமணி நேரம் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இரவு சுமார் 10 மணியளவில் அனைத்தும் இனிதே நிறைவுற்றது.
 
பயானுக்குப்பின், தேரா துபையில் அமைந்துள்ள MTCT எனும் மதுக்கூர் தவ்ஹீத் மர்க்கஸில், MTCT சகோதரர்களுக்கு மட்டும் இரவு 10.30 மணிமுதல் 12 மணிவரை சிறப்புத் தர்பியா வகுப்பு நடைபெற்றது.
அதிரைஅமீன்
 

Tuesday, November 5, 2013

செயற்கைக்கோளுக்கு ஏன் தேங்காய் பூஜை?

 

 
ஊர்ப் பக்கத்தில் பொருள்களைத் தொலைத்தவர்கள் குறிசொல்பவர்களைத் தேடிச் செல்வார்கள். பொருள்களைத் தொலைத்ததைத் தவிர, குறிசொல்பவனிடமும் பணத்தைத் தொலைத்துவிட்டு, கையைப் பிசைந்து நிற்கும் நூற்றுக் கணக்கானோர் கதைகளை நாம் ஒவ்வொருவரும் கேட்டிருப்போம்.
தனிமனிதர்கள் இப்படிச் செய்தால் பரிதாபப்படலாம்; ஓர் அரசாங்கமே செய்தால் என்ன செய்வது? உத்தரப் பிரதேசத்தில் நம்முடைய தொல்லியல் துறை நடத்தும் தங்க வேட்டை அப்படித்தான் இருக்கிறது.
 
ஷோபன் சர்க்கார் என்ற சாமியார், “மன்னர் ராஜாராவ் ராம்பக்ஸ் சிங் என் கனவில் தோன்றினார். தம் கோட்டையில் 1,000 டன் தங்கத்தைப் புதைத்துவைத்துள்ளதாகக் கூறினார்” என்று மத்திய அமைச்சர் சரண் தாஸிடம் சொல்ல, நம்முடைய தொல்லியல் துறையினர் தங்கத்தைத் தேடி அங்கே பள்ளம் தோண்டிக்கொண்டிருக்கின்றனர்.
 
மூடநம்பிக்கை மட்டுமே காரணமா?
இதற்கெல்லாம் மூடநம்பிக்கைகளே காரணம் எனச் சொல்லி ஒரே வரியில் ஒதுக்கிவிட முடியாது. அறிவியலிலும் அறிவியல் தொழில்நுட்பத்திலும் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், இந்தியச் சமூகம், அறிவியல் மனப்பான்மையில் இன்னமும் பின்தங்கியிருப்பதே காரணம்.
 
நாம் அறிவியல் அறிவில் முன்னேறியிருக்கிறோம். சரி... அறிவியல் மனப்பான்மையைப் பெற்றிருக்கிறோமா? ஏனென்றால், இரண்டும் வேறு வேறு. எந்த ஒரு நிகழ்வையும் உணர்ச்சிகள் அல்லது நம்பிக்கை அடிப்படையில் அல்லாமல், நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளின் வாயிலாகப் பார்ப்பதே அறிவியல் மனப்பான்மை. பொதுவாக, நம் சமூகத்தில் அறிவியல் மனப்பான்மை குறைவு என்றே தோன்றுகிறது.
 
விண்வெளி அறிவியலில் இந்தியா வியத்தகு முன்னேற்றத்தைப் பெற்றிருக்கிறது. ‘இஸ்ரோ’ஏவும் ஒவ்வொரு செயற்கைக்கோளும் இதற்கான சான்று. ஆனால், செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு முந்தைய நாள் இஸ்ரோ தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் திருப்பதி அல்லது காளஹஸ்திக்குச் செல்வதும், ஏவப்படவுள்ள செயற்கைக்கோளின் மாதிரியை வைத்து பூஜை செய்வதும் எதனுடைய முன்னேற்றத்துக்குச் சான்று? ‘இஸ்ரோ’அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் கோயில் செல்வதும் வழிபடுவதும் அவர்கள் உரிமை. ஆனால், செயற்கைக்கோள் மாதிரிக்குத் தேங்காய் உடைத்து பூஜை செய்வதை உரிமை என்று சொல்ல முடியாது அல்லவா? கோடிக் கணக்கான மக்களுக்கு இத்தகைய செய்திகள் சென்றடையும்போது, சமூகத்தில் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
 
சட்டம் சொல்வதென்ன?
நாட்டின் குடிமக்களின் அடிப்படைக் கடமைகள்குறித்து வலியுறுத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51-வது பிரிவு, “மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கப் பாடுபடுவதும் பிரதான கடமை” எனக் கூறுகிறது. ஆனால், அது பாடத்திட்டங்களில்கூட இன்னும் தொடங்கவில்லை. குறைந்தபட்சம், அதுகுறித்து நாம் இன்னும் யோசிக்கக்கூடத் தொடங்கவில்லை. அதன் விளைவைத்தான் சாமியார்களின் கனவை நம்பித் தங்கம் தேடுவோரிடம் பார்க்கிறோம்!
 
வி. தேவதாசன் - தொடர்புக்கு: devadasan1973@gmail.com
 
நன்றி
Return to frontpage
என்றென்றும் அன்புடன்,
நூர்தீன்

Monday, November 4, 2013

இவரது பெயர் நபிலா

இந்த பெண் யார் என்று தெரிகிறதா..மலாலா என்று என்று தினமும் செய்திகளை வெளியிடும் எந்த ஒரு அமெரிக்க சார்பு ஊடகங்களாவது இவரை பற்றி செய்திகளை வெளியிட்டிருக்குமா?இவரது பெயர் நபிலா பாகிஸ்தானின் வர்ஜிச்தான் மாகாணத்தை சேர்ந்தவர்.அமெரிக்காவின் கோரமான தாக்குதலுக்கு எதிராக விவரித்தவர். . மலாலவை போலத்தான்..ஆனால் என்ன மலாலாவை தூக்கி பிடிக்கும் எந்த ஒரு மீடியாவும் இவரை பற்றிய எந்த ஒரு செய்தியையும் வெளியிடுவதே கிடையாது..காரணம் மலாலாவின் குற்றசாட்டுக்கள் அனைத்தும் அமெரிக்க எதிரியான தாலிபான்களை பற்றியது.அதில் கூட பல சர்சைகள் உள்ளன இருந்தும் அதை பற்றி எந்த ஒரு ஊடகமும் கண்டுகொள்வதில்லை...ஆனால் இவரின் குற்றசாட்டுக்கள் அமெரிக்காவின் கோரமான தாக்குதலால் கொல்லப்பட்ட அமெரிக்காவுக்கு எதிரான செய்திகள்..அக்டோபர் 2012 ஆம் ஆண்டு ஊடகங்களில் வெளிவந்த செய்தி அமெரிக்காவின் ஆளில்லா விமாங்கள் மூலம் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது .ஆனால் இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் மூன்று பேர் பெண்கள் .இதில் இவரது குடும்பத்தினரும் அடக்கம் ..வழக்கம் போல எந்த ஒரு ஊடகமும் இந்த செய்தியை வெளியிடவே இல்லை..ஊடகங்கள் என்றைக்கும் அவர்களின் எஜமானனுக்கு ஆதரவான செய்திகளை மட்டும் தான் வெளியிடும்..இது தான் இன்று நடந்து வருகிறது..உலகின் பெருமான்மை ஊடகங்களை கட்டுப்படுத்துவது அமேரிக்கா தான்..அப்படி இருக்கும் போது எப்படி இந்த ஊடகங்கள் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான செய்திகளை மக்கள் மன்றத்தில் வெளியிடும்..

இதனால் தான் அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் தலிபான்களை பென்னடிமைவாதிகள் , தீவிராவதிகள் என்ற பொய்யை மீண்டும் மீண்டும் வெளியிட்டுவருகிரார்கள்..அப்பொழுது தானே மக்களும் தலிபான்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்ற மனநிலைக்கு வருவார்கள்..அங்கு கொல்லப்பட்ட இலட்சக்கணகான பெண்கள் குழந்தைகளை பற்றி கொஞ்சம் கூட வருத்தப்பட மாட்டார்கள்..இது தான் இன்று நடந்து வரும் எதார்த்த உண்மையும் கூட..இதை பற்றியெல்லாம் நாம் என்றைக்காவது சிந்தித்து இருப்போமா? இல்லை என்பதே உண்மை..ஊடகங்கள் நம்மை சிந்திக்கவும் விடப்போவதில்லை என்பதே உண்மையும் கூட.உலகின் மிகப்பெரிய முட்டாள் யார் என்றால் ஊடகங்களில் வரும் செய்திகளை அப்படியே எந்த வித சிந்தனையும் இல்லாமலா நம்புபவன் தான்..
-இரா.சேக்தாவூது ரில்வான்.