உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, March 1, 2013

அதிரை பிலால் நகரில் ADT யின் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் !

இன்று [ 15.02.2013 ] மாலை 5.30 மணியளவில் அதிரை பிலால் நகரில் முதன் முதலாக அதிரை தாருத் தவ்ஹீத் [ ADT ] சார்பாக மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் ADT யின் அங்கமான இஸ்லாமிய பயிற்சி மையம் [ ITC ] அருகே நடைபெற்றது.
 
 
 கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக சிறுவர் சிறுமிகளுக்கான மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடைபெற்றன. இதில் பெரும்பாலான சிறுவர் சிறுமிகள் கலந்துகொண்ட தங்களின் தனித்திறமையை நிரூபித்தனர்.
 



 
 
பொதுக்கூட்டத்திற்கு ADT யின் தலைவர் 'தமிழ் அறிஞர்' அதிரை அஹமத் B.A. அவர்கள் தலைமையுரையாற்றி துவக்கி வைத்தார்

'மறுமைச் சிந்தனை' என்ற தலைப்பில் முதன்மை உரை நிகழ்த்தினார் மவ்லவி அப்துல் காதிர் மன்பயீ அவர்கள்.

ADT யின் செயலாளர் ஜமீல் M. ஸாலிஹ் அவர்கள் ADT உருவான வரலாறு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து தனது உரையில் விரிவாக எடுத்துரைத்தார்.

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த JAQHன் மாநில துணைத்தலைவர் சகோ. கோவை அய்யூப் அவர்கள் 'படைத்தவனின் சட்டங்களே படைப்பினங்களுக்குத் தேவை' என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

கூட்டத்தின் இறுதியில் ADT யின் துணைத்தலைவர் சகோ. B. ஜமாலுத்தீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெரும்திரளாக கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பெண்களுக்கு என வாகன வசதிகளும், தனி இடமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதிரை காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

Thanks to: www.theadirainews.blogspot.ae & Brother Shaikana Nijam

No comments:

Post a Comment