அல்லாஹ்வினுடைய மாபெரும் அருளால் துபை மாநகரின் பல்வேறு பகுதிகளில், அதிலும் 2 நிகழ்வுகள் துபை அவ்காஃபின் ஆதரவுடன் நடைபெற்றதை அறிவீர்கள்.
இந்த நிகழ்வுகளின் தூய வெற்றி தஃவாவுக்கான பல்வேறு வாயில்களை திறந்து விட்டுள்ளன, அல்ஹம்துலில்லாஹ்.
முதலாவதாக, இனி தவ்ஹீத் சகோதரர்கள் இயக்கங்களுக்குள் ஏகத்துவத்தை அடகு வைக்கப்போவதில்லை மாறாக சத்திய மார்க்கம் யாரிடமிருந்து வந்தாலும் வரவேற்போம் என வேற்றுமை களைந்து அலைஅலையாய் சங்கமித்து, இனியும் வருவோம் என செயலில் நிரூபித்தனர்.
இரண்டாவதாக, சகோதரர் கோவை அய்யூப் அவர்களுக்கு அவ்காஃப் தஃவாவிற்கான சான்றிதழ் வழங்கியது, இன்ஷா அல்லாஹ் இனி தடையின்றி அமீரகத்தில் மார்க்கத்தை அதன் தூய வடிவில் எத்தி வைக்க முடியும்.
மூன்றாவதாக, துபையில் 2 மஸ்ஜிதுகளில் அவ்காஃப் அனுமதியுடன் தமிழ் இஸ்லாமிய தஃவாவிற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
நான்காவதாக, துபை அவ்காஃப் அனுமதியுடன் மர்கஸ் ஒன்று அல் முத்தீனா பகுதியில் விரைவில் இயங்கவுள்ளது.
ஐந்தாவதாக, இஹ்லாஸூடன் இம்மையில் கூடி மறுமைக்காக உழைத்தால், குறுகிய காலத்தில் இத்தனை வாய்ப்புகளை வழங்கியுள்ள எல்லாம் வல்ல ரஹ்மான் இன்னும் நாம் எதிர்பாராத நன்மைகளை இன்ஷா அல்லாஹ் அருளுவான்!
கடைசியாக 17.02.2012 வெள்ளியன்று துபை அவ்காஃப் வளாக அரங்கில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள்!
அஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteதூய எண்ணத்தின் அடிப்படையில் செய்யப்படும் எந்த நற்செயலையும் அல்லாஹ் வீணாக்கிவிடுவதில்லை என்பதை இன்னொரு முறை நேரில் கண்டோம்.
அல்ஹம்து லில்லாஹ்!
தொடரட்டும் நிஜ தஃவா!