உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, January 19, 2012

மார்க்கக் கல்வி கற்க வேண்டியதன் அவசியம்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

கண்ணியமிக்க சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 ஒவ்வொரு முஃமினுக்கும் புனிதமான அல்குர்ஆனையும், சுன்னாவையும் படித்து மார்க்க அறிவைப் பெறுவது கடமையாக்கப்பட்டுள்ளது. வல்ல அல்லாஹ் அல்குர்ஆனின் பல இடங்களில் பின்வருமாறு கூறுகின்றான்:-
'ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை  தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது...' (அல்குர்ஆன் 2:185)

அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம். (அல்குர்ஆன் 44:58)
ஹா, மீம். விளக்கமான இவ்வேதத்தின்மீது சத்தியமாக. நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம். (அல்குர்ஆன் 43:1-3)

அலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும். நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம். (அல்குர்ஆன் 12:1-2)
...மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது  நாம் இறக்கி வைத்திருக்கிறோம். (அல்குர்ஆன் 16:2)

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்-திலிருந்து இறக்கியருளப்பட்டது. அரபுமொழியில் அமைந்த இக்குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது. நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது.) ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர்;. அவர்கள் செவியேற்பதும் இல்லை. (அல்குர்ஆன் 41:2-4)

தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும். அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்). அதில் (அதாவது சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். (அல்குர்ஆன் 18:1-3)

(நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர். நிச்சயமாக இது உமக்கும் உம் சமூகத்தாருக்கும் (கீர்த்தியளிக்கும்) உபதேசமாக இருக்கிறது; (இதைப் பின்பற்றியது பற்றி) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். (அல்குர்ஆன் 43:43-44)
கண்மனி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
'ஒவ்வொரு முஃமினுக்கும் மார்க்க அறிவைப்   பெறுவது கடமையாகும்' (திர்மிதி)

'இஸ்லாத்தை மறுமலர்ச்சி அடையச் செய்வதற்காக,  இஸ்லாமிய அறிவை பெற்றுக் கொண்டிருக்கும்போது யார் உயிர் நீத்தார்களோ, அவர்கள் சொர்க்கத்தில் நபிமார்களுக்கு அடுத்த நிலையில் இருப்பார்கள்' என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். (முஸ்லிம்)
மேலும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்:-
யார் ஒருவர் தன்னுடைய சகோதரனை இந்த உலக ஆசைகளின் துன்பங்களில் இருந்து நீக்குகிறாரோ, அவரை அல்லாஹ் மறுமை நாளின் துன்பங்களிலிருந்து நீக்குவான். யார் ஒருவர் இந்த உலகத்தில் ஒரு முஸ்லிமின் குற்றத்தை மறைக்-கிறாறோ, அல்லாஹ் மறுமை நாளில் அவருடைய குற்றத்தை மறைப்பான்;. தன் சகோதரனுக்கு பின்னால் இருந்து உதவி செய்யக் கூடியவனுக்கு, அல்லாஹ் அவரின் பின்னால் இருந்து உதவி செய்வான். அறிவைப் பெறுவதற்காக யார் நடந்து செல்கிறார்களோ அவருக்கு அல்லாஹ் அவருடைய பாதையை இலகுவாக்குகிறான்; சொர்க்கத்திற்கான வழியையும் காட்டுகிறான்; யாரெல்லாம் அல்லாஹ்வின் இல்லத்தில் ஒன்று கூடி குர்ஆனை ஓதி, பிறருக்கும் கற்றுக்கொடுக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வின் அருள் சூழ்ந்து கொள்ளும் மலக்குகளும் சுழ்ந்து கொள்வார்கள். அல்லாஹ் தனக்கு அருகில் உள்ளவர்களிடம் அவர்களைப்பற்றி சிலாகித்துக் கூறுவான். (திர்மிதி)

நபி நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்:-
இரவில் ஒரு மணி நேரம் மார்க்க அறிவைப் பெறுவதற்காக வெளியே செல்வது முழு இரவிலும் நின்று வணங்கி செலவழிப்பதை விட சிறந்தது. (திர்மிதி)
இஸ்லாமிய அடிப்படை அறிவைப் பெறுவது ஒவ்வொரு பருவ வயதை அடைந்த, புத்தி சுவாதீனமுள்ள முஸ்லீம்கள் அனைவருக்கும் கடமையாக்கப்பட்டுள்ளது என்று எல்லா இஸ்லாமிய அறிஞர்களும் சட்ட வல்லுனர்களும் ஒரு மனதாக குரல் கொடுக்கின்றனர். ஒரு சில மக்கள் தான், மார்க்க அறிவைப் பெருவதில் இருந்து தவிர்ந்து கொள்வதற்காக, வெட்கப்பட்டு, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை சொல்லி தங்களுடைய செயல்களை நியாயப்படுத்துகின்றனர்.

முன்பெல்லாம் பள்ளிவாசல்-மதரஸாக்ககளில் குழந்தைகளுக்கு மக்தப் வகுப்புகள் நடைபெறும். காலையில் எழுந்தவுடன் அங்கு சென்று அல்குர்ஆனை ஆரம்ப நிலை முதல் கற்று வருவர். பின்னர் பள்ளிக்கூடம் செல்வர். ஆனால் இன்றைய நிலையோ மார்க்க கல்வி என்றாலே என்னவென்றே அறியாத குழந்தைகளாகத்தான் பெரும்பாலும் வளர்கின்றனர். இதில் பெற்றோர்களும் சற்று அலட்சியப்போக்கையே கொண்டு-ள்ளனர். காரணம் உலகக்கல்வி என்ற பெயரில் குழந்தைகளின் கவனத்தை ஒரு பக்கமாக திருப்பிவிட்டதேயாகும்.

பள்ளிக்கூடத்தில் ஒருமணிநேர குர்ஆன் வகுப்பு என்று வைத்துள்ளார்கள். அதில் படித்தால் போதும்??! என்று திருப்தியுற்ற பெரும்பாலான பெற்றோர்களின் மனநிலை மற்றும் நல்ல பள்ளிக்கூடம் என்று வெகுதொலைவுக்கு பிள்ளைகளை அனுப்புவதனால் ஏற்படுகின்ற நேரச்சுமை போன்ற காரணிகளால் இன்று பெரும்பாலான பள்ளிவாசல்களில்-மதஸாக்களில் மக்தப் வகுப்புகளே நடைபெறுவதில்லை.

எனவே இந்நிலை மாறி (மாற்றி) மார்க்க அறிவைப் பெறுவதற்கு ஒவ்வொரு இஸ்லாமியனும் முயற்சிக்க வேண்டும் என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளதை உளமாற உணர்ந்து மார்க்க்கல்வியை கற்று பயன்பெற்று இருஉலகிலும் வெற்றியடைய முயற்சிப்போமாக!

(நன்றி: islamhelpline.com)
வெளியீடு: தவ்ஹீத் இல்லம் தஃவா குழு

No comments:

Post a Comment