உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, January 4, 2012

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!

அன்பிற்குரிய அதிரைவாசிகளே!  அஸ்ஸலாமு அலைக்கும்.

இப்பொது மடல் உங்களை வாழ்வின் வளத்துடனும் உடல் நலத்துடனும் சந்திக்கட்டுமாக!  'நன்மையைப் பிறருக்கு எடுத்துக் கூறி, தீமையை விட்டுத் தடுக்கும் ஒரு கூட்டம் உங்களில் இருக்கட்டும். அவர்களே வெற்றியாளர்கள்' என்று அருமறை அல்குர்ஆன் கூறுகின்றது.  இதன் அடியில்  செயல்பட விரும்புவோர் முதலாவதாகச் செய்ய வேண்டிய பணி, நமது உயிரினும் மேலான வாழ்க்கை நெறியான இஸ்லாம் மார்க்கத்தை அதன் தேட்டமுடையோருக்கும் தேவையுடையோருக்கும் எடுத்துரைக்கும் 'தஅவா'ப் பணியாகும். 

இந்தப் பணியின் இன்றியமையாமையை உணர்ந்த நமதூர்ச் சகோதரர்களுள் சிலர் அண்மைக் காலமாக இது பற்றிச் சிந்தித்து, அதற்கான முயற்சிகளில் களமிறங்கியுள்ளனர் என்ற சிறப்பான தகவலை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  இதன் முதல் கட்ட முயற்சியாக, ஏற்கனவே நமதூரில் எந்த இயக்கச் சார்புமின்றிப் பல்லாண்டுகளாக 'தஅவா'ப் பணி செய்துவரும் அமைப்பான 'தாருத் தவ்ஹீத்' எனும் அமைப்பை ஒரு பரந்த நிர்வாகமாகத் தரம் உயர்த்தி, 'அதிரை தாருத் தவ்ஹீத் ட்ரஸ்ட்' எனும் பெயரில் தொடங்கி, அதற்கான செயல் திட்ட வரைவுகளை உருவாக்கி, அதன் கீழ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம் ஒன்றை நிறுவ முனைப்புடன் செயலில் இறங்கியுள்ளனர்.

இதற்கான இடம் மட்டும் வாங்கிக் கொடுத்தால், கட்டிடம் கட்டித் தரக் கொடையாளர்கள் சிலர் ஆயத்தமாக உள்ளனர்.  தற்காலச் சூழலில், இடம் மட்டுமே ஒரு பெருந்தொகையை விழுங்கும் அளவுக்கு உள்ளதை அனைவரும் அறிவர்.  இதனை ச் சாதிப்பது எப்படி?  தொடக்க முயற்சியாக, சகோதரர்கள் சிலர் கடனாகத் தந்து, அந்த இடத்தைக் கையகப் படுத்தும் முயற்சிக்கு உறுதுணையாக நிற்கின்றனர்.  அல்ஹம்து லில்லாஹ்!  இப்போது அவர்கள் அளித்த கடன் தொகைகளைத் திருப்பிச் செலுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம்.

இதற்காகத் தற்காலிகத் திட்டமொன்றை வகுத்துள்ளோம்.  அதன்படி, ஒவ்வொருவரும் ஒரு வருடக் கடன் அடிப்படையில், ஒரு ஐந்தாயிரம் ரூபாயைத் தந்து உதவினால், இன்ஷா அல்லாஹ், அதனை ஓராண்டில் திருப்பித் தந்துவிடலாம்.  இது அடிமட்ட உதவிதான்.  இந்தத் தொகை வருகிற ஜனவரிக்குள் கிடைத்துவிட்டால், நாம் நிலத்தைக் கையகப் படுத்தும் முயற்சியில் முழுமையாக இறங்கலாம்.  அடுத்த ஜனவரியில் உங்கள் உதவித் தொகையான ஐந்தாயிரம் ரூபாய் உங்களுக்கு வந்து சேரும், இன்ஷா அல்லாஹ்.

நமதூர் சகோதரர்கள் இல்லாத இடமில்லை எனும் அளவுக்கு உலகம் முழுவதும் வியாபித்துள்ளனர்.  மாஷா அல்லாஹ்!  அதனால்தான், இந்த முயற்சியை முன் வைத்து, 'நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்' என்று தலைப்பிட்டுச் சிறு தொகையைக் கடனாகத் தந்துதவும்படிக் கேட்கிறோம். 
மேற்கொண்டு தகவல் அல்லது ஐயத் தெளிவு பெற விழைவோர், பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும். 

adiraiahmad@gmail.com

  மிக்க அன்புடன்,
புத்தமைப்புச் செய்யப்பட்ட

'அதிரை தாருத் தவ்ஹீத் ட்ரஸ்ட்'
நிர்வாகக் குழு

No comments:

Post a Comment