ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்
ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்
ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்
SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?
Monday, October 23, 2017
Monday, October 16, 2017
அன்புச் சகோதரர் மவ்லவி. பக்கீர் முஹமது அல்தாபி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
அன்புச் சகோதரர் மவ்லவி. பக்கீர் முஹமது அல்தாபி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சமீபத்தில் தாங்கள் ததஜ தலைவர் பதவியிலிருந்து 2வது முறையாக விலகிய சூழலைத் தொடர்ந்து முகநூல் வாயிலாக கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன், படித்திருப்பீர்கள் என்றும் நம்புகிறேன். தற்போதும் தங்களுடைய கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் உலாவரும் பதிவை தொடர்ந்தே என்னுடைய இக்கடிதத்தை எழுதுகிறேன்.
முதலில் பிரச்சனையை வெளியில் போட்டுடைத்து தொடரவிருந்த மிரட்டல்களை (Blackmail) தவிடிபொடியாக்கி வெற்றிபெற்றதற்கு வாழ்த்துக்கள்.
அடுத்து, உள்ளிருந்தே போராடப்போவதாக எழுதியிருந்தீர்கள், 'இது போகாத ஊருக்கு வழிதேடும் முயற்சி' உங்களுக்கு முன் பலரைப் போல் உள்ளிருந்தே போராடி வெறுத்து சுயமாக வெளியேறியவர்களில் நானும் ஒருவன் என்பதை அறிந்திருப்பீர்கள், எங்களை கண்ணியத்துடன் வெளியேறச் செய்த அல்லாஹ்வே புகழுக்கு உரியவன்.
ஒருவேளை உங்களுக்கு நீதி வழங்குவது போல் பாசாங்கு செய்தாலும் உங்களின் தேவை ஏதும் மிச்சம் மீதம் இருப்பது முடிந்ததும் விரைவிலேயே மீண்டும் கட்டம்கட்டப்பட்டு வெளியேற்றப்படுவீர்கள் சகோதரர் பாக்கருக்கு நிகழ்ந்ததைப் போல. (அவர்கள் பாவமன்னிப்பு வழங்கிய அதே குற்றச்சாட்டின் மீதே மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது இன்னும் உங்களுக்கும் நினைவிருக்கும்)
ததஜவின் டி.ராஜேந்தர் என அறியப்படுபவரை இன்னும் அப்பாவி என நம்புவதைப் போல் உங்கள் கடிதம் அமைந்துள்ளது, 'ஒரு முஃமீன் ஒரே பொந்தில் 2 முறை கொட்டுப்பட மாட்டான்' என்பதையும் மீறி 2 முறை வலிய கொட்டுப்பட்டவர் நீங்கள், எய்தவன் இருக்க அம்புகளை நொந்து கொண்டுள்ளது அறிவார்ந்த செயலாக தெரியவில்லை.
உங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி போலவே உங்களுடைய நிர்வாக காலத்திலும் ததஜவினால் கூட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளதற்காக நீங்கள் செய்யும் தவ்பா மனஅமைதியை தரும் இன்ஷா அல்லாஹ். அதேபோல் 'தந்தை ஸ்தானத்தில்' கருதப்படுபவர்கள் வில்லனாக இருக்கக்கூடாது எனும் விதி இல்லையே.
சரி விஷயத்திற்கு வருவோம், பீஜே என்பவரை நம்பி அவரது வஹீ மறுப்பு கொள்கைகளை கடுமையாக பிரச்சாரம் செய்துள்ளீர்கள் இதனால் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்களை நரகின் அருகில் நிறுத்தி வைத்துள்ளீர்கள் இவர்களை மீட்பதும் உங்கள் கடமை. எனவே, பீஜே என்பவரிடமிருந்து பெற்ற ஹதீஸ் மறுப்புக் கொள்கைகளை அல்லாஹ்வின் மீதான அச்சத்தையும், மறுமை வெற்றியையும் முன்னிறுத்தி சமரசங்கள் ஏதுமின்றி மீண்டும் மீளாய்வு செய்திடவும், தாவாக்களத்தில் மீண்டும் உறுதியாய் செயலாற்றிடவும் அன்புடன் அழைக்கின்றேன்.
கடைசியாக ஒன்று, அபுதாபி கைத்தடி இன்னும் தனது விளையாட்டுக்களை நிறுத்திக் கொள்ளவேயில்லையா? இதையே ஒரு பிழைப்பாக தொடர்வது அருவருப்பாகத் தெரியவில்லையா?
இவண்
என்றென்றும் அன்புடன்
அதிரை அமீன்
வேண்டுகோள்: சகோதரர் அல்தாபி அவர்களுடன் சமூக வலைதள தொடர்பில் உள்ளோர் இப்பதிவை அவரது பார்வைக்கு கொண்டு சேர்க்கவும்.
Tuesday, October 10, 2017
துபையில் இறுதி தீர்ப்பு நாள் மாநாடு -2017 மற்றும் இஸ்லாமிய போட்டிகள்
அல்மனார் இஸ்லாமிக் சென்டர்-துபை சார்பாக இஸ்லாமிய மாநாடு இன்ஷா அல்லாஹ் வருகிற நவம்பர் 30 & டிசம்பர் 1, 2017 அன்று நடைபெற இருக்கின்றது.
அதன் ஒரு பகுதியாக குழந்தைகள் / பெரியவர்களுக்கான இஸ்லாமிய போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
தங்கள் குழந்தைகள் மற்றும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த செய்திகளை தெரியப்படுத்தி கலந்துக்கொள்ள ஆர்வப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
REGISTRATION CLOSES ON 12-10-2017.
Wednesday, August 23, 2017
Saturday, July 29, 2017
பா.ஜ.க சாதனை மலர்.. பாஜக செய்து கிழித்த சாதனைகள்!
பா.ஜ.க சாதனை மலர்.. பாஜக செய்து கிழித்த சாதனைகள்!
தமிழக சாதனைகள்:
1. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது!
2. காவிரி நீரை தமிழகத்திற்கு கிடைக்க விடாமல் செய்தது!
3. தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாமல் அவர்களை நிர்வாணமாக போரட வைத்துது!
4. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் எதிர்ப்பையும் மீறி அனுமதியளித்தது!
5. ஜல்லிகட்டு போராட்ட மாணவர்களை தேசவிரோதிகளாக சித்தரித்து தடியடி நடத்த வைத்தது!
6. மீத்தேன் திட்டத்தை அமல்படுத்த நான்கு டெல்டா மாவட்டங்களுக்கு அனுமதி வழங்கியது!
7. காவிரி போராட்டதின் போது கர்நாடகாவில் தமிழர்களை தாக்கியது!
8. கீழாடி அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் நாகரிகம் தெரியாமல் இருக்க கீழாடி பணிகளை முடக்கி மண் அள்ளி மூடியது!
9. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க கோவையில் கலவரத்தை ஏற்படுத்தியது!
10. தமிழக மீனவர் படுகொலையை நியாயபடுத்தியது!
11. தொடர்ந்து தமிழக நலனிற்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றுவது!
12. நீயுட்ரினோ ஆய்வு மையம் மற்றும் கெயில் குழாய் பதிப்பது!
13. எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு நிராகரித்தது!
14. மாநில ஆட்சியில் தலையிட்டு ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துவது!
15. கட்டாய ஹிந்தி சமஸ்கிருத திணிப்பு!
16. நீட் தேர்வை மாணவர்களுக்கு கட்டாயமாக்கி தமிழக மணவர்களின் மருத்துவ படிப்பு கனவில் மண் அள்ளி போட்டது.
17. OPSயும் EPSயும் பாஜகவின் அடிமையாக ஆக்கியது!
18. தமிழக மீனவர் படுகொலைகளுக்கு நீதி கிடைக்க செய்யாமல் இருப்பது!
2. காவிரி நீரை தமிழகத்திற்கு கிடைக்க விடாமல் செய்தது!
3. தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாமல் அவர்களை நிர்வாணமாக போரட வைத்துது!
4. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் எதிர்ப்பையும் மீறி அனுமதியளித்தது!
5. ஜல்லிகட்டு போராட்ட மாணவர்களை தேசவிரோதிகளாக சித்தரித்து தடியடி நடத்த வைத்தது!
6. மீத்தேன் திட்டத்தை அமல்படுத்த நான்கு டெல்டா மாவட்டங்களுக்கு அனுமதி வழங்கியது!
7. காவிரி போராட்டதின் போது கர்நாடகாவில் தமிழர்களை தாக்கியது!
8. கீழாடி அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் நாகரிகம் தெரியாமல் இருக்க கீழாடி பணிகளை முடக்கி மண் அள்ளி மூடியது!
9. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க கோவையில் கலவரத்தை ஏற்படுத்தியது!
10. தமிழக மீனவர் படுகொலையை நியாயபடுத்தியது!
11. தொடர்ந்து தமிழக நலனிற்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றுவது!
12. நீயுட்ரினோ ஆய்வு மையம் மற்றும் கெயில் குழாய் பதிப்பது!
13. எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு நிராகரித்தது!
14. மாநில ஆட்சியில் தலையிட்டு ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துவது!
15. கட்டாய ஹிந்தி சமஸ்கிருத திணிப்பு!
16. நீட் தேர்வை மாணவர்களுக்கு கட்டாயமாக்கி தமிழக மணவர்களின் மருத்துவ படிப்பு கனவில் மண் அள்ளி போட்டது.
17. OPSயும் EPSயும் பாஜகவின் அடிமையாக ஆக்கியது!
18. தமிழக மீனவர் படுகொலைகளுக்கு நீதி கிடைக்க செய்யாமல் இருப்பது!
அகில இந்திய சாதனைகள்:
1. உலக மாஹா வியாபம் ஊழல் அது சம்பத்தப்பட்ட கொலைகள்!
2. மாட்டுகாக தலித்துகள் முஸ்லிம்களை வேட்டையாடுவது!
3. மோடி ஓராண்டு ஆட்சியில் மட்டும் 600 மதக்கலவரங்களை வெற்றிகரமாக நடத்தியது!
4. ஆதார் அட்டையை கட்டாயமாக்கி ஆதார் ரகசியங்களை கசியவிட்டது!
5. உண்ண உணவில்லாத ஏழைகள் வாழும் நாட்டில் செத்தவனுக்கு(சிவாஜி) சிலை என்ற பெயரில் 2000 கோடி மக்கள் வரிப்பணத்தை நாசமாக்குவது!
6. கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் இந்திய மக்களை திண்டாடவிட்டு 100 க்கும் மேற்பட்ட மக்களை வங்கி வாசலில் கொன்றது!
7. கேஸ் சிலிண்டர் விலையை 3 மடங்காக உயர்த்தி நடுத்தர மக்களின் வாழ்வை நாசமாக்கியது!
8. இந்தியா காணாத பொருளாதர வீழ்ச்சி!
9. EVM மெஷினில் பித்தலாட்டம் செய்து உபியில் வெற்றி பெற்றது!
10. மக்கள் வரிப்பணத்தில் உலகம் சுற்றி உருப்படியான எந்த திட்டமும் கொண்டுவராமல் போனது!
11. விபச்சார அழகிகளுக்காக ராணுவ ரகசியங்களை கசியவிட்ட வருண்காந்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பார்த்து கொண்டது!
12. கங்கையை சுத்தபடுத்துகிறேன் என 3000 கோடியை ஸ்வாகா செய்தது!
13. மாட்டு தீவிரவாதிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்து அப்பாவி மக்களை வேட்டையாடுவது!
14. மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவது மிரட்டுவது!
15. ரூபாய் நோட்டுக்களை செல்லாதாக்கி, பண முடைப்பை உருவாக்கி தொழில்களை நாசமாக்கி, மக்களை நடுத்தெருவில் நிறுத்தியது.
16. GST என்ற பெயரில் உலகிலேயே அதிகபட்ச வரிகளை விதித்து மக்களை கசக்கி பிழிவது.
17. உலகமெல்லாம் சுற்றியும் இந்தியாவின் அண்டைநாடுகளுடன் பகையை உருவாக்கியது.
18. முன்னெப்போதும் இல்லாதவாறு காஷ்மீரில் தீவிரவாத செயல்கள் அதிகரிப்பு.
19. பலகீனமாக பிரதமரால் சீனாவின் அத்துமீறல்களை கண்டும் காணாமல் இருப்பது.
20. அதானி & அம்பானி கார்பரேட் கும்பலின் அரசாக செயல்படுவது.
2. மாட்டுகாக தலித்துகள் முஸ்லிம்களை வேட்டையாடுவது!
3. மோடி ஓராண்டு ஆட்சியில் மட்டும் 600 மதக்கலவரங்களை வெற்றிகரமாக நடத்தியது!
4. ஆதார் அட்டையை கட்டாயமாக்கி ஆதார் ரகசியங்களை கசியவிட்டது!
5. உண்ண உணவில்லாத ஏழைகள் வாழும் நாட்டில் செத்தவனுக்கு(சிவாஜி) சிலை என்ற பெயரில் 2000 கோடி மக்கள் வரிப்பணத்தை நாசமாக்குவது!
6. கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் இந்திய மக்களை திண்டாடவிட்டு 100 க்கும் மேற்பட்ட மக்களை வங்கி வாசலில் கொன்றது!
7. கேஸ் சிலிண்டர் விலையை 3 மடங்காக உயர்த்தி நடுத்தர மக்களின் வாழ்வை நாசமாக்கியது!
8. இந்தியா காணாத பொருளாதர வீழ்ச்சி!
9. EVM மெஷினில் பித்தலாட்டம் செய்து உபியில் வெற்றி பெற்றது!
10. மக்கள் வரிப்பணத்தில் உலகம் சுற்றி உருப்படியான எந்த திட்டமும் கொண்டுவராமல் போனது!
11. விபச்சார அழகிகளுக்காக ராணுவ ரகசியங்களை கசியவிட்ட வருண்காந்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பார்த்து கொண்டது!
12. கங்கையை சுத்தபடுத்துகிறேன் என 3000 கோடியை ஸ்வாகா செய்தது!
13. மாட்டு தீவிரவாதிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்து அப்பாவி மக்களை வேட்டையாடுவது!
14. மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவது மிரட்டுவது!
15. ரூபாய் நோட்டுக்களை செல்லாதாக்கி, பண முடைப்பை உருவாக்கி தொழில்களை நாசமாக்கி, மக்களை நடுத்தெருவில் நிறுத்தியது.
16. GST என்ற பெயரில் உலகிலேயே அதிகபட்ச வரிகளை விதித்து மக்களை கசக்கி பிழிவது.
17. உலகமெல்லாம் சுற்றியும் இந்தியாவின் அண்டைநாடுகளுடன் பகையை உருவாக்கியது.
18. முன்னெப்போதும் இல்லாதவாறு காஷ்மீரில் தீவிரவாத செயல்கள் அதிகரிப்பு.
19. பலகீனமாக பிரதமரால் சீனாவின் அத்துமீறல்களை கண்டும் காணாமல் இருப்பது.
20. அதானி & அம்பானி கார்பரேட் கும்பலின் அரசாக செயல்படுவது.
Thanks to: பா.ஜ.க புரட்சி படை
https://www.facebook.com/RSSPIGS/?hc_ref=ARShuM7tWGfwVAwpFW5sgefT4BdgF7GNZfFVKtY7Ufg5a8UF-tkgZiRCbCkeX9mcg8E&fref=nf
Thursday, July 27, 2017
Sunday, July 16, 2017
அபுதாபி அவ்காப் சார்பாக கோடைகால இலவச குர்ஆன் மற்றும் மனன வகுப்புக்கள்
அபுதாபி இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கான பொதுச்சபை (AWQAF) கோடைக்கால விடுமுறை நாட்களை பயனள்ள வகையில் மாணவர்கள் கழிக்கும் நோக்குடன் 6 வயது முதல் 18 வயது வரையுள்ள மாணவர்களுக்கும், 18 வயதுக்கு மேலுள்ள பெரியவர்களுக்கும் தனித்தனியே குர்ஆன் கற்பித்தல் மற்றும் குர்ஆன் மனன வகுப்புக்களை அபுதாபியிலுள்ள சுமார் 198 மஸ்ஜிதுகள் மற்றும் குர்ஆன் மனன மையங்களில் கடந்த ஜூலை 2 ஆம் தேதி முதல் நடத்தி வருகிறது.
மாணவர்கள் குர்ஆன் கற்பித்தல் மற்றும் மனன வகுப்புக்களுக்கு வந்து போக இலவச போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் ஜூலை 27 வரை நடைபெறவுள்ள இவ்வகுப்புகளில் ஆர்வமுள்ளவர்கள் தற்போதும் இணைந்து கொள்ளலாம். இந்த வகுப்புக்கள் தினமும் மாலை 4 மணிக்கு துவங்கி மாலை 7 மணிவரை நடைபெற்று வருகிறது.
அபுதாபி அவ்காப் சார்பாகவும் அதன் மேற்பார்வையிலும் நடத்தப்படும் இக்குர்ஆன் கற்பித்தல் மற்றும் மனன வகுப்புக்களுடன் இஸ்லாமிய அடிப்படைகளை போதிக்கும் தீனியாத் பாடங்களும், தப்ஸீர் வகுப்புக்களும் இடம் பெறும்.
இந்த கோடைக்கால குர்ஆன் கற்பித்தல் மற்றும் மனன வகுப்புக்களில் இணைய விரும்புவோர் நேரடியாகவே அந்தந்த மஸ்ஜிதுகள் மற்றும் குர்ஆன் மனன மையங்களில் சென்று இணைந்து கொள்ளலாம்.
In response to the great interest by parents in benefiting from their children's summer school holidays by increasing their skills in reciting, memorising and Tafseer (interpreting) of the holy Quran, Awqaf continues to accept registration in the summer memorisation sessions. New students can directly join the sessions in more than 198 mosques (354 sessions) and a number of Quran memorisation centres. The sessions will be conducted from 4pm to 7pm starting from Sunday, July 2 through Thursday, July 27, 2017.
To help learners to get to the sessions, Awqaf provides transportation to and from their locations.
Target audience of the initiative:
- Male and female school students aged between 6 to 18 years
- Male and female adults above 18 years of age
குர்ஆனிய வகுப்புக்கள் நடைபெறும் மஸ்ஜிதுகள் குறித்து அறிய இந்த சுட்டிக்குள் சென்று பார்க்கவும்.
For more information about the locations of mosques, centres and sessions, please visit Awqaf's website www.awqaf.gov.ae or any of the Quranic centres.
தகவல்: அதிரை அமீன்
Subscribe to:
Posts (Atom)







