அதிரையில் இன்று மாலை மவ்லவி அப்பாஸ் அலி அவர்கள் கலந்து கொண்டு மார்க்க விளக்கவுரை நிகழ்த்தும் சிறப்பு அமர்வு சிஎம்பி லேன் பகுதியில் அமைந்துள்ள ALM பள்ளிக்கூட வளாகத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதில் சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சியையும் அதனைத் தொடர்ந்து தலைப்பை ஒட்டி நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சியை வழங்கவுள்ளார்கள்.
அதிரையில் அப்பாஸ் அலி!
இன்ஷா அல்லாஹ் இன்று சிறப்பு இஸ்லாமிய மார்க்க அமர்வு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி.
இன்று மாலை (13.01.2018 சனிக்கிழமை) அஸர் தொழுகையை தொடர்ந்து ALM ஸ்கூல் மஸ்ஜிதில் (CMP Lane) நடைபெறும்.
பாண்டிச்சேரியில் மாற்றுமதத்தவரை திருப்திப்படுத்த வஹியை பலி கொடுத்த பிஜேயின் செயல் எதன் அடிப்படையில் ஆனது?
அவரின் செயலை நியாயப்படுத்த அவரை தக்லீது செய்யும் கரீம், இபுறாஹிம் போன்றவர்கள் கொடுக்கும் வியாக்கியானம் சரியா?
தத்லீஸ் என்றால் என்ன?
அதன் நிலைபாடு என்ன?
இந்த ஹதீஸ் ஆபாசமானதா?
நபியின் செயல் ஜாபிர் ரலிக்கு எப்படி தெரியும் என்ற கேள்வி சரியா? அதனால் ஹதீஸ் நிராகரிக்கப்படலாமா?
போன்ற ததஜவினர் அறிவுப்பூர்வம் (?) என வைக்கும் வாதத்திற்கான பதிலை பெறவும், தன் மூளையை ததஜ தலைமை அலுவலகத்தில் அடகு வைத்து விட்டு வட்டியை மட்டும் பயன்படுத்தோவரை தவிர, தன் சுயசிந்தனையோடு போராடிக்கொண்டிருக்கும் ஏனைய ததஜவினரும் தமிழ் கூறும் நல்லுள்ளங்களும் தெளிவு பெற அல்லாஹ் கிருபை செய்ய வேண்டும்.
வாய்ப்புள்ள அனைவரும் கலந்து கொண்டு சமீபத்தில் பாண்டிச்சேரியில் மறுக்கப்பட்ட ஹதீஸ் குறித்து குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தெளிவு பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அதிரை தாருத் தவ்ஹீத்
No comments:
Post a Comment