உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, September 15, 2015

மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு: ADT அறிவிப்பு

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

எதிர்வரும் 18.09.2015 அன்று மாலை மஃரிப் தொழுகையை தொடர்ந்து, அதிரை தக்வா பள்ளி அருகே மவ்லவி. அப்பாஸ் அலி அவர்கள் கலந்து கொண்டு விளக்கவுரை நிகழ்த்தயிருந்த 'சமூக தீமைகள் எதிர்ப்பு' பொதுக்கூட்டம், பதட்டம் நிறைந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறவுள்ளதை காரணம் காட்டி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்ததாலும், தொடர்ந்து புனித ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட உள்ளதாலும் அக்டோபர் மாதத்திற்கு பொதுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ், அக்டோபரில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறும் நாள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

எனினும் முன்னர் அறிவித்தபடியே, இன்ஷா அல்லாஹ் 18.09.2015 வெள்ளி அன்று ALM ஸ்கூல் பள்ளிவாசலில் நிகழும் ஜூம்ஆவில் மவ்லவி. அப்பாஸ் அலி அவர்கள் 'குத்பா பேருரை' நிகழ்த்துவார்கள்.

மேலும், 18.09.2015 வெள்ளி அன்று அஸர் தொழுகையை தொடர்ந்து, பிலால் நகர் தர்பியா சென்டரில் நடைபெறும் பெண்களுக்கான வாராந்திர அமர்வில் 'சிறப்பு சொற்பொழிவு' ஆற்றவுள்ளார்கள். 

சொற்பொழிவுக்குப்பின் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும். கேள்வி கேட்பதற்கு அனைத்து மதரஸா மாணவிகளுக்கும் முன்னுரிமை தரப்படும் என அதிரை தாருத் தவ்ஹீத் நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment