بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
21:1 اقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِي غَفْلَةٍ مُّعْرِضُونَ
21:1. மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது; ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள்.
நான் ஜும்ஆவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது அபூ அபஸ்(ரலி) என்னைச் சந்தித்தார்கள். அப்போது 'இறைவழியில் எவருடைய பாதங்களில் புழுதி படிகிறதோ அவரை நரகைவிட்டும் இறைவன் விலக்குகிறான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன் என்று அபாயா இப்னு ரிஃபாஆ அறிவித்தார்கள். ஆதாரம் : புஹாரி 907
928. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இரண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்துவார்கள். அவ்விரண்டுக்குமிடையே அமர்வார்கள். ஆதாரம் : புஹாரி 928
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 18.02.2011 வெள்ளிக்கிழமை முதல் CMP லைனில் அமைந்துள்ள AL மெட்ரிகுலேஷன் பள்ளி (EPS) வளாகத்தில் பிறர் மீது துதியோ தூற்றுதல்களோ இல்லாத, ஏக இறைவனை மட்டும் ஏந்தல் ரஸூல் (ஸல்) வழியில் போற்றிப் புகழும், மனிதர்களுக்கு மறுமை குறித்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும், சுவர்க்கத்தின் இன்பங்களை நுகர்ந்திட அழைக்கும் பேருரைகளுடன் பல்வேறு மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டு உரையாற்றும் ஜூம்ஆ தொழுகைகள் துவங்கவுள்ளன.
அனைவரும் வாரீர் என அன்புடன் அழைக்கிறது
ஜூம்ஆ தொழுகை ஏற்பாட்டுக்குழு
அதிரை
No comments:
Post a Comment