உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, September 22, 2015

அதிரையில் பெருநாள் திடல் தொழுகை - ஈத் கமிட்டி அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...



அதிரையில் கடந்த பல்லாண்டு காலமாக குர்ஆன், ஹதீஸ் வழிகாட்டலின் அடிப்படையில் பெருநாள் தொழுகைகளை திடல்களில் ஏற்பாடு செய்து நடத்தி வரும் 'ஈத் கமிட்டி' எதிர்வரும் ஹஜ் பெருநாள் தொழுகையையும் மைதானத்தில் நடாத்திட பல்வேறு முன்னேற்பாடுகள் செய்து வருவதுடன், தொழுகை நேரம் சம்பந்தமான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 24.09.2015 வியாழன் அன்று காலை மிகத்துல்லியமாக 7.30 மணியளவில், குத்பா பள்ளி அருகே கீழத்தெரு பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான மைதானத்தில் 'தியாகத் திருநாள் திடல் தொழுகை' நடைபெறும். (கடந்த நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்ற அதே மைதானம்)

மிக முக்கிய அறிவிப்பு:
அறிவித்துள்ளபடி மிக மிகத் துல்லியமாக காலை 7.30 மணிக்கு தொழுகை துவங்கிவிடும் என்பதால் 7 மணிக்கெல்லாம் மைதானத்திற்கு வந்துவிடுமாறும், யாருக்காகவும் எதற்காகவும் தொழுகை தாமதப்படுத்தப்படாது என்பதால் குறித்த நேரத்திற்குள் வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
 
அழைப்பின் மகிழ்வில்...
ஈத் கமிட்டி
அதிரை


No comments:

Post a Comment