உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, April 21, 2016

துபையில் 24.04.2016 அன்று கோவை அய்யூப் அவர்களின் மார்க்க விளக்க சொற்பொழிவு


அன்பார்ந்த யுஏஇ வாழ் சகோதரர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.....

மதுக்கூர் தவ்ஹீத் தர்மஅறக்கட்டளையின் ( MTCT) துபை மண்டலம் சார்பாக மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி ஒவ்வோர் மாதமும் சிறப்பாக நடைபெற்று வருவது தாங்கள் அறிந்ததே.

அதே போல் இன்ஷாஅல்லாஹ் இந்த மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 24th Apr' 2016 அன்று

தாயகத்திலிருந்து வருகை தரும் கோவை அயூப் அவர்கள் "நல்லோர்களின் பிரார்த்தனைக்கு ஆளாகுவோம்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.

சத்திய இஸ்லாத்தை சரியாக அறிந்து கொள்வோம்.மனித சமூகத்திற்கு படைத்த இறைவனால் வகுக்கப்பட்ட வாழ்க்கை நெறியான இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து அதன்படி செயற்பட அன்புடன் அழைக்கும்

For Madukkur Thowheed Charitable Trust



Wednesday, April 20, 2016

மதுக்கூரில் 25.04.2016 திங்கள் அன்று உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி


மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை சார்பாக இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 25 ஏப்ரல்' 2016 திங்கள் கிழமை அன்று மஸ்ஜித் இஃலாஸ் பள்ளி வளாகத்தில் கல்வி குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

மாணவர்கள் +2 வில் எந்த வகையான கோர்ஸ்களை தேர்தெடுப்பது அதன் தொடர்ச்சியாக என்ன படிக்கலாம் எங்கே படிக்கலாம் உயர் கல்வி வழிக்காட்டு மற்றும் ஆலோசனை என்பது தொடர்பாக மிக அவசரமான கண்ணோட்டம் செலுத்த வேண்டிய நிலை எழுந்துள்ளது.

மேலும் அடிப்படை ஸ்போகன் இங்கிலீஸ் இரண்டு மணி நேர வகுப்பாகவும் ஏற்படுத்த இருக்கின்றோம்.

மனிதவள மேலாண்மை பயிற்சியாளர் அபுதாலிப் அவர்களை கொண்டு மேற்கூறிய நிகழ்ச்சியை நடத்த உள்ளோம்.

10, +1 & +2 வகுப்பு மாணவர்களே பெற்றோர்களே உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.


For Madukkur Thowheed Charitable Trust

Wednesday, April 13, 2016

அதிரையில் புதிய பள்ளிவாசல் இயங்கத் துவங்கியது

அதிரையில் இன்று (14.04.2016) சுபுஹ் தொழுகை முதல் தனிநபர் ஒருவரால் கட்டப்பட்ட புதிய பள்ளிவாசல் (முஸல்லா எனும் தொழுகை கூடம்) புதிய குடியிருப்புக்கள் நிறைந்த சானா வயல் பகுதியில் இயங்கத் துவங்கியது. 

இந்தப்பள்ளி குர்ஆன் சுன்னா அடிப்படையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் எந்த ஒரு இயக்கத்தினரையும் சார்ந்ததல்ல, மேலும் இப்பள்ளி தொடர்ந்து இப்பள்ளியை கட்டிய தனிநபர் குடும்பத்தின் நிர்வாகத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் என தெரிவதை தொடர்ந்து இம்முடிவை இப்பகுதி மக்கள் முழுமனதோடு வரவேற்கின்றனர். எந்த இயக்கத்திற்கும் இப்பள்ளியை தாரைவார்க்கக்கூடாது என்கிற முடிவில் இப்பள்ளியை கட்டியவர் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும் எனவும் விரும்புகின்றனர்.





Photo credit: TIYA WhatsApp Group

துபையில் நாளை (15.04.2016) மாபெரும் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)