உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, August 29, 2012

31.08.2012 துபையில் (ADT) அதிரை தாருத் தவ்ஹீத் ஆலோசணை கூட்டம்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 31.08.2012 மஃரிப் தொழுகைக்குப்பின் துபை, தேரா, நைஃப் ரோட்டில் அமைந்துள்ள தவ்ஹீத் இல்லத்தில் அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) ஆலோசணை கூட்டம் நடைபெறவுள்ளது. அனைத்து அதிரை தவ்ஹீத் சகோதரர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.

பொருள்:

1. கடற்கரை தெருவில் நடைபெற்று வரும் பெண்கள் மதரஸா மேம்பாடு.

2. பிலால் நகர் பிரச்சார மைய கட்டுமானம்.

என இன்னும் பல...
 
தவ்ஹீத் இல்லம்

டேரா, நைஃப் ரோடு, அல் புத்தைம் பள்ளி (AL FUTTAIM MASJID) எதிர்புறம் அமைந்துள்ள டல்ஃப் (DULF) ஹோட்டல் பின்புறமுள்ள அல் ஜர்வானி பில்டிங், அறை எண்:109, இடைத்தளம். (MEZZANINE FLOOR)

Contact: Mr. Abdul Kader   055 2829759   Mr. Jamaludeen   055 2177618

இமாம் ஷாஃபி பள்ளியின் ஆரம்ப நிறுவனர்களில் ஒருவரான கா.மு. குழந்தை சேக்காதி அவர்கள் வஃபாத்தானர்கள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

நமதூர் இமாம் ஷாஃபி பள்ளியின் ஆரம்ப நிறுவனர்களில் ஒருவரான கா.மு. குழந்தை சேக்காதி அவர்கள் இன்று பகல் 12.15 மணியளவில் திருச்சி கிரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் வஃபாத்தானர்கள். அன்னாரின் ஜனாஸா ஜூம்ஆ பள்ளி மையவாடியில் இன்று இரவு 9 மணியளவில் இஷா தொழுகைக்குப்பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ 
"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

அன்னாரை பற்றிய சில நினைவுகள்:

சிலர் பாரம்பரியத்தால் சிறப்பிடம் பெறுவதுண்டு ஆனால், பாரம்பரியமிக்க ம.மீ.செ. குடும்பக்கிளையில் தோன்றியிருந்தாலும் தன்னுடைய கல்விப்பணி, அமைதியான ஆளுமைகுணம், அல்லாஹ்வின் பள்ளிகளுக்காக உழைத்தல் என தனிச்சிறப்பியல்புகளால் மக்கள் மனதில் மேலும் நிறைந்திருந்தார்கள். குறிப்பாக...

1. இமாம் ஷாஃபி எனும் இன்றைய ஆலமரம் தழைக்க வித்திட்ட நிறுவனர்களில் ஒருவர்.

2. பட்டுக்கோட்டையில் முதன்முதலாக டுட்டோரியல் கல்வியகத்தை ஆரம்பித்து நடத்தியவர்.

3. மேலத்தெருவில் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளி அமைய காரணியாக இருந்தவர்களில் ஒருவர், மேலும் அப்பள்ளி உருவாக அமீரகத்தில் தலைமையேற்று பொருளாதராத்தை திரட்டி வழங்கியவர்.

4. சமீபத்தில் சிறிது காலம் அப்பள்ளியின் நிர்வாகிகளில் ஒருவராக பங்காற்றியவர்.

5. மேலத்தெரு ஜூம்ஆ பள்ளி கட்டுமானத்தின் போதும் அதற்காக தன் நேரத்தை ஒதுக்கி நன்கொடைகள் பெற்றுத் தந்தவர்.

6. அன்னாருடைய சகோதரரும் மேலத்தெரு ஜூம்ஆ பள்ளியின் நிர்வாகியாக இருந்துள்ளார்கள்.

7. இதற்கெல்லாம் மேல் தன்னுடைய அமைதி சுபாவத்தால் அனைவரின் உள்ளங்களை வென்றவர் என இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

குழந்தை சேக்காதி அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல நாடுவோர் அபுதாபியில் வசிக்கும் அன்னாருடைய மூத்த மருமகன் பஷீர் அஹமது அவர்களை 055-143963 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

யா அல்லாஹ் சகோதரர் குழந்தை சேக்காதி மறுமையில் வெற்றி பெற, மஃஷரில் உன்னால் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில் சுவர்க்கதிற்குரிய நல்லடியார்களில் ஒருவராக எழுப்புவாயாக! யா அல்லாஹ் நரகிலிருந்தும் பாதுகாப்பளிப்பாயாக. யா அல்லாஹ் ரஸூல் (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் எனும் பாக்கியத்தை அன்னாரின் மீது அருள்வாயாக.

தகவல்

குழந்தை சேக்காதி அவர்களால் அதிரை கிட்டங்கி தெருவில் ஆரம்பிக்கப்பட்ட இமாம் ஷாஃபி பள்ளியின் ஆரம்ப வருட மாணவனாக பயின்ற, பயன்பெற்ற நன்றியுடன்....

அதிரைஅமீன்

Tuesday, August 28, 2012

ஆப்கானிஸ்தானில் குர்ஆனை எரித்த 6 அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு தண்டனை

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை எரித்த 6 அமெரிக்க ராணுவ வீரர்களை துறை ரீதியாக தண்டிக்க அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள பக்ரம் விமானப்படை தளத்தின் குப்பைத் தொட்டியில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் எரிந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செயலைக் கண்டித்து ஆப்கானிஸ்தான் மக்கள் போராட்டம் நடத்தினர். இது மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது. இதையடுத்து அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மன்னிப்பு கேட்டார்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து பிரிகேடியர் ஜெனரல் பிரையன் ஜி. வாட்சன் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,

ஆப்கானிஸ்தானில் சுமார் 100 குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்களை அமெரிக்க ராணுவ வீரர்கள் எரித்துள்ளனர். அங்குள்ள அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தான் ராணுவத்தினரின் அறிவுரையைக் கேட்கவில்லை. சிறை நூலகத்தில் உள்ள நூல்களை வைத்து கைதிகள் தங்களுக்கு கருத்துகளை பரிமாறிக் கொள்கின்றனர் என்று பல முறை உளவுத்துறை தெரிவித்துள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பக்ரம் விமானப்படை தளத்திற்கு அருகில் உள்ள சிறை நூலகத்தில் உள்ள குர்ஆன் மற்றும் மத நூல்கள் தீவிரவாதத்தை தூண்டப் பயன்படுத்தப்படுகிறது என்று கருதி தான் அதை ராணுவ வீரர்கள் எரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்களை எரித்த 6 ராணுவ வீரர்களை தண்டிக்குமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
 
Thanks to: Thatstamil
Published: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 28, 2012, 14:18 [IST]

Thursday, August 16, 2012

'தமிழர்களை கொன்றவர் பிரபாகரன்'..- என்.கே.கே.பி. ராஜா பேச்சு.. உடன்பாடில்லை என்கிறது திமுக

 Comment On Prabhakaran Dmk Distanc

சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவை விட அதிகத் தமிழர்களைக் கொன்றவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்று பேசிய முன்னாள் திமுக அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவின் பேச்சில் திமுகவுக்கு உடன்பாடில்லை என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
மேலும் இது பற்றி அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் திமுக அறிவித்துள்ளது.
ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டு நோக்கத்தை விளக்க திமுகவின் பொதுக்கூட்டம் கடந்த வியாழக்கிழமை ஈரோட்டில் நடந்தது. அதில் ராஜா பேசியதாக ஜூனியர் விகடன் இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
உலக அளவில் டெசோ மாநாடு இன்று பேசப்படுகிறது. இதை நடத்த கலைஞருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சிலர் கேட்கிறார்கள். கலைஞரின் அனுபவ வயதுகூட அவர்களுக்கு இருக்காது. ஈழத் தமிழருக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர் கலைஞர். பாலசிங்கம், சந்திரஹாசன் போன்றவர்களை நாடு கடத்தியபோது அதனைத் தடுத்தவர் கலைஞர். ஆனால், ராஜீவ் காந்தியைக் கொடூரமாகக் கொன்றார்கள் விடுதலைப் புலிகள். இளம் தலைவர் ராஜீவ் காந்தியை நாம் இழந்தோம். பல குழுக்களாக இருந்த போராளி அமைப்புகளை ஒன்றாக இருக்கச் சொன்னார் கலைஞர். ஆனால், பிரபாகரன் அதைக் கேட்கவில்லை. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது ஆட்சியை மட்டும் நாம் இழக்கவில்லை. எத்தனையோ தி.மு.கவினர் வீடு எரிக்கப்பட்டது. ஈழத்துக்காகப் போராடிய மற்ற அமைப்புகளின் தலைவர்களை பிரபாகரன் கொன்றார். ஈழத்தை, தான் மட்டும் ஆள வேண்டும் என்ற சுயநலம் பிரபாகரனுக்கு.
தமிழகத்துக்குச் சிகிச்சைக்காக வந்த பார்வதியம்மாளைத் திருப்பி அனுப்பினோம் என்கின்றனர். அவர் வருவதை கலைஞரிடம் ஒரு வார்த்தை முன்கூட்டியே கூறி இருந்தால், அவரே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருப்பார். மாநில அரசு ஒரு வரைமுறைக்கு உட்பட்டுத்தான் செயல்பட முடியும். விடுதலைப் புலிகளை அழைத்து வந்து நாங்கள் போர்ப் பயிற்சி கொடுத்தோம். ஒரு அ.தி.மு.ககாரன் செய்ததாகச் சொல்ல முடியுமா? பழ.நெடுமாறன் எதற்கெடுத்தாலும் ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டு ஈழத்துக்குப் போவேன் என்று கூறுவார். ஆனால் போக மாட்டார். தைரியம் இருந்தால் ஈழத்துக்குப் போய் பிரபாகரனோடு சேர்ந்து போராட வேண்டியதுதானே? வைகோ, திருட்டு தோணி ஏறிப் போனார். ராஜபக்ஷேவைவிட அதிகத் தமிழர்களைக் கொன்றவர் பிரபாகரன். ராஜபக்ஷே, பிரபாகரனைக் கொன்றது கரெக்ட்'' என்றார்.
இவ்வாறு ஜூனியர் விகடன் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
திமுகவுக்கு உடன்பாடில்லை...:
இந் நிலையில் இன்று திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டக் கழகச் செயலாளர் என்.கே.கே.பி.ராஜாவும் - தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் வி.பி.ராஜனும், ஈரோடு நகரத்தில் நடைபெற்ற கழகப் பொதுக்கூட்டத்தில், இலங்கைப் பிரச்சனை தொடர்பாகப் பேசியதாக, ஜூனியர் விகடனில் வெளியான கருத்துக்களுக்கு தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு உடன்பாடு இல்லை. இது பற்றி அவர்கள் இருவரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Thanks to : Thatstamil 16.08.2012

Monday, August 13, 2012

கண்ணியமிக்க நாள்

நிச்சயமாக நாம் அதை லைலத்துல் கத்ரில் இறக்கினோம். மேலும் லைலத்துல் கத்ர் என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க நாள் ஆயிரம் மாதங்களைவிட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் தம் இறைவனின் கட்டளையின்படி சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி, அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.‘ (அல்குர்ஆன் 97:1-5)Post image for கண்ணியமிக்க நாள்
இந்த லைலத்துல் கத்ர் நாள் எப்போது? அதில் நம்முடைய வணக்க வழிபாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும்? என்பதை அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் காட்டிய வழியில் ஆய்வு செய்வோம்.

Saturday, August 11, 2012

பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்


ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புகாரி-முஸ்லீம்)
மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன்,ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விட, தாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.
மனித இனத்தை படைக்கப்போகிறேன் என்று இறைவன் வானவர்களிடம் கூறியதும், உன்னைப் போற்றி துதிக்க நாங்கள் இருக்கும் போது இரத்ததை ஓட்டி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மனித இனத்தையா படைக்கப் போகிறாய் ? என்ற வார்த்தைகளை வேதனையுடன் வெளிப்படுத்தினார்கள் வானவர்கள். திருக்குர்ஆன் 2:30
நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று அவர்களிடம் இறைவன் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களை படைத்து அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். அதில் சிலவற்றின் பெயர்களை மட்டும் வானவர்களை அழைத்து இறைவன் கேட்டான். வானவர்களால் அதன் பெயர்களை கூற முடியவில்லை.