உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, March 29, 2014

இனி ஷர்ஜாவிலிருந்து, திருச்சி - துபாய் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவையில் தற்காலிக மாற்றம்


 

துபாய் விமான நிலையத்தின் ஒடுதள விரிவாக்கப் பணி நடை பெறுவதால் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸின் துபாய் – திருச்சி -துபாய் தினசரி விமான சேவை மே 1 , 2014 முதல் ஜூலை 20, 2014 வரை சுமார் இரண்டரை மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக மே 1 , 2014 முதல் ஜூலை 20, 2014 வரை ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை சார்ஜாவிலிருந்து திருச்சிக்கு தினசரி செயல்படும் .

ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை IX 616 சார்ஜாவிலிருந்து தினசரி காலை 8:00 மணிக்கு புறப்பட்டு மதியம் 13:40 மணிக்கு திருச்சியை சென்றடையும் , விமான சேவை IX 615 மதியம் 14:45க்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு மாலை 17:35 மணிக்கு சார்ஜாவை வந்தடையும்.


இந்த தகவலை ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் தனது இணையதளம் மூலம் அறிவித்துள்ளது.


News Source: http://adiraitiyawest.blogspot.ae/2014/03/blog-post_29.html

Wednesday, March 26, 2014

Dubai International Peace Convention - 2014 - Dont Miss the Chance

Assalamu alaikum,

Dont miss this Opportunity, May Allah make all your affairs easy

To register :



Sheikh-Sudais-2
Sheikh Abdur Rahman Al Sudais of Masjid Al-Haram
Makkah – KSA
  • IMG_9371
    Sheikh Mishary Al Afasy
    Kuwait
  • image1
    Dr. Zakir Naik
    India
     
  • image
    Yusuf Estes
    USA
     
  • Mufti Ismail Menk
    Mufti Ismail Menk
    Zimbabwe
  • Nouman Ali Khan
    Nouman Ali Khan
    USA
  • tawfique_large2
    Tawfique Chowdhury
    Australia
  • Muhmmad-Salah
    Muhammad Salah
    USA
  • Abul-Barry
    Abdul Bary Yahya
    USA
  • Shaykh Waleed Basyouni
    Shaykh Waleed Basyouni
    USA
  • Sheikh Assim Al-Hakeem
    Sheikh Assim Al-Hakeem
    Saudi Arabia
  • Saed-Raghea
    Said Rageah
    Canada
     
  • MG_5328
    Ahmed Hamed
    India
     

17th April 2014

  • Evening

07.00 pm -11.00 pm
Activity/Topic Speaker
Recitation of the Glorious Qur’an Mishary Rashid Al Afasy
Welcome SpeechDr. Ahmed bin Hamad Al Shaibany
Key Note AddressSheikh Abdur Rahman Al Sudais
NasheedMishary Rashid Al Afasy
Honoring the Guests and Sponsors To Be Announced
Inauguration of the Exhibition Sheikh Abdur Rahman Al Sudais
The Religion of PeaceMufti Ismael Menk (Lecture & Q/A)
Call of all the Prophets Yusuf Estes (Lecture & Q/A)

18th April 2014

  • Morning

10.30 am – 01.30 pm
Activity/Topic Speaker
Wonders of Surah Kahaf Abdul Bary Yahya (Lecture & Q/A)
Friday Sermon & Prayer Sheikh Abdur Rahman Al Sudais

18th April 2014

  • Afternoon
02.30 pm – 06.30 pm
Activity/Topic Speaker
The Last Chance Ahmed Hamed (Lecture & Q/A)
Al Qur’an – The Message of Peace Muhammad Salah (Lecture & Q/A)
The Status of Women in Islam Waleed Basyouni (Lecture & Q/A)
Panel Q & A Abdul Bari Yahya/Waleed Basyouni/Muhammad Salah



18th April 2014

  • Evening

07.00 pm -11.00 pm
Activity/Topic Speaker
The Ideal Muslim Dr.Tawfique Chowdhury (Lecture & Q/A)
Al Quran – The Linguistic Miracle Nouman Ali Khan (Lecture & Q/A)
Ask Dr.Zakir Dr.Zakir Naik (Exclusive Open Q/A Session)

19th April 2014

  • Morning
10.30 am – 01.30 pm
Activity/Topic Speaker
The Mother and Ideal Family Muhammad Salah (Lecture & Q/A)
Do Not Spread Mischief on Earth Waleed Basyouni (Lecture & Q/A)

19th April 2014

  • Afternoon
02.30 pm – 06.30 pm
Activity/Topic Speaker
Paradise – The Final Abode of Peace Asim Al Hakim (Lecture & Q/A)
Muhammad (PBUH)-The Messenger of Peace Saed Rageah (Lecture & Q/A)
Worship Only AllahDr.Tawfique Chowdhury (Lecture & Q/A)
Peaceful Co-existence – An Islamic View Nouman Ali Khan (Lecture & Q/A)
Panel Q & A Saed Rageah/Nouman Ali Khan/Asim Al Hakim


19th April 2014

  • Evening

07.00 pm -11.00 pm
Closing Ceremony
Activity/Topic Speaker
Islam and Social Media Mufti Ismael Menk (Lecture & Q/A)
Why Islam?Yusuf Estes (Lecture & Q/A)
Ask Dr.Zakir Dr.Zakir Naik (Exclusive Open Q/A Session)

VENUE   : Dubai World Trade Centre, Convention Halls






"O my people! This life of the present is nothing but (temporary) convenience: It is the Hereafter that is the Home that will last ...Al Quran -[40:39]

May the Almighty guide us into his right path

 
* Read Quran Regular Basis with translation
* Dhikr Allah everyday morning & evening
* Pray promptly and guide others to pray also.
* Please don't waste water and food in your daily life, you should answer to Allah for wastage.
* Reach islamic messages to everyone,it's ur duty.

Tuesday, March 25, 2014

துபை வாழ் இஸ்லாமிய குழந்தைகளுக்காக (8-15வயது) வார இறுதி தொடர் தர்பியா வகுப்புகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

துபை அல்மனார் சென்டர் தமிழ் தஃவா பிரிவு நடத்தும்
வார இறுதி தொடர் தர்பியா வகுப்புகள்

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்.

துபை வாழ் இஸ்லாமிய குழந்தைகளுக்காக (8-15வயது) வார இறுதி தொடர் தர்பியா வகுப்புகள் இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து துவங்க இருக்கின்றது. 

இடம்: அல் மனார் சென்டர் - அல் பராஹா - டெய்ரா - துபை

Registration Extended up to 27-03-2014

மேலும் விரிவான விபரங்களுக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள நோட்டீஸை பார்வையிடவும்.


அன்புடன்,
தவ்ஹீத் இல்லம் தஃவா குழு,
டெய்ரா, துபை
Tel: 00971 4 2981931

Monday, March 24, 2014

அரசியல் கட்சியினர், தேர்தல் அரசியல் அமைப்பினர்களின் கவனத்திற்கு!

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அரசியல் கட்சியினர், தேர்தல் அரசியல் அமைப்பினர்களின் கவனத்திற்கு!
நடைபெறயிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தாங்களெல்லாம் பரப்புரையில் மிகவும் பரபரப்பாக இருக்கின்ற இந்த நேரத்தில் எல்லோரும் ஒட்டுமொத்தமாக மறந்த வெளிநாட்டில் (வாழும் அல்ல) வேலை பார்க்கும் இந்தியர்கள் சார்பாக சில கோரிக்கைகள்...

வெளிநாட்டு இந்தியர்கள் என்போர் இருவகைபடுவர். ஒருவர் குடும்பம் குட்டிகளோடு வெளிநாட்டிலேயே நிரந்தரமாக தங்கி, ஒரு தலைமுறைக்குப்பின் இந்திய வம்சாவழியினர் என்ற அழைக்கப்படுபவர்கள். இன்னொரு வகையினரோ சுவற்றில் அடிக்கப்பட்ட பந்தாய் எந்நேரமும் இந்தியாவுக்குள் திரும்பி வருவோர், சுருக்கமாக சொல்வதென்றால் வளைகுடாவாசியினர். மிகச்சிலரைத் தவிர வளைகுடா வாழ்க்கையை யாரும் விரும்பி ஏற்கவில்லை அதிலும் சிறுபான்மையினர் அரசியல் அதிகாரமின்மை, மேற்படிப்பறிவு மறுத்தல், படித்தாலும் அரசு வேலை மறுத்தல், வெகுசிலருக்கு விட்டில்பூச்சி மோகம் என வலிய இந்த வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டவர்கள்.

எங்களில் மிகச்சாதாரண தொழிலாளியும் உண்டு, அரிய வாய்ப்பால் அறிவையும் உழைப்பையும் வெளிநாட்டினருக்காக வழங்கிக் கொண்டிருக்கும் உயர்நிலையோரும் உண்டு, அதாவது இந்தியா பயன்படுத்த தவறிய செல்வங்கள் நாங்கள். மேலும் நாங்கள் சம்பளத்திற்கு மேல் இந்திய அரசு ஊழியர்கள் போல கிம்பளத்தை கனவிலும் காண முடியாதவர்கள். எந்த நேரமும் சவூதியின் 'நிதாகத்' போன்ற சட்டங்களால் பாதிக்கப்பட இருப்பவர்கள், இவையல்லாமல் ஈராக் குவைத்தை ஆக்கிரத்தபோது உலகம் கண்டதே ஓர் காட்சி! பாலைவெளிகளில் உயிரை பிடித்துக் கொண்டு ஒடிவந்தோமே அதைபோன்ற நிலையை இன்னொரு முறை சந்திக்க மாட்டோம் என்பதற்கு எத்தகைய உத்தரவாதமும் இல்லாதவர்கள், இவற்றிற்கெல்லாம் மேல் எத்தனை கோடியை நீங்கள் கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாத, வெளிநாட்டில் தனிமையில் தொலைந்த எங்களின் இளமை. அதேவேளை எங்களுக்கு வாழ்க்கைபட்டதற்கு தண்டனையாய் எங்கள் மனைவிமார்களோ கணவனிருந்தும் விதவைகள் போல் வாழும் ஒர் அவல வாழ்க்கை, போனில் மட்டுமே பொங்கும் அப்பன் பிள்ளை பாசம்.

இத்தனை தியாகத்திற்கு இடையே தவறாமல் நாங்கள் எங்கள் தேசத்திற்கு ஈட்டித் தரும் அந்நிய செலாவணி எனும் பெரும் பொருளாதாரம் ஆனால் கைமாறாக???

1.    தமிழக விமான நிலையங்களில் குறிப்பாக, வளர வேண்டிய மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கினால் கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு நாங்கள் திருடர்களாய் மட்டுமே தெரிகிறோம், நாய்கள் கடித்துக் குதறுவதுபோல் எங்கள் பொருட்களை சின்னாபின்னப்படுத்துகிறார்கள். வீட்டுத்தேவைக்கு கொண்டு வரும் பொருட்களுக்குத் தான் எத்தனை சோதனைகள்?, கட்டுப்பாடுகள்? இதை தடுத்து நிறுத்தப்போவது யார்?

2.    திருவனந்தபுரத்திற்கு வரும் தமிழக விமான பயணிகளை குதறும் கஸ்டம்ஸ், மலையாளிகளை மட்டும் மனிதர்களாய் மதிக்கின்றது. இந்த இன மாச்சரியங்களை களைந்து அனைவரையும் இந்தியர்களாக நடத்த உழைக்கப்போவது யார்?

3.    அபுதாபியில் இருந்து திருச்சிக்கும் சென்னைக்கு மிக லாபத்துடனும், முழுமையான பயணிகளுடனும் இயக்கப்பட்டுவந்த ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானங்கள் பல, மலேசிய விமானத்திற்கு முன்பே மர்மமாய் காணாமல் போய்விட்டன, அவைகளை இன்றுவரை மீட்டுத்தரவோ, பேசவோ ஆளில்லை. இனியாவது எங்களுக்காக மீண்டும் இயக்கிட பாடுபடுவீர்களா?

4.    துபையிலிருந்து திருச்சிக்கு இயக்கப்பட்ட ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானங்களும் தற்போது ஒவ்வொன்றாய் மாயமாக தொடங்கியுள்ளது. இவை முழுமையாய் மறைந்து தனியார் விமானங்களும் அண்டை நாட்டு விமானங்களும் அதிக பயண கட்டணத்துடன் எங்களை அச்சுறுத்துமுன் தடுத்து நிறுத்தப்போவது யார்?

5.    திருச்சியிலிருந்து சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு பட்ஜெட் கட்டண தனியார் மற்றும் அரசு விமான சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், வளைகுடா நாடுகளிலிருந்தும் திருச்சி மற்றும் மதுரை விமான நிலையங்களை இணைத்து நேரடி பட்ஜெட் மற்றும் ஏர் இந்தியா விமான சேவைகளை துவங்கலாமே, இத்திட்டத்திற்கு மணி கட்டப்போவது யாரோ?

6.    சொந்த பந்தங்களை காண வருடத்திற்கு ஒரு மாதமோ அல்லது இரு வருடத்திற்கு இரு மாதமோ விடுமுறையை பிச்சையாய் பெற்று வரும் நாங்கள் முன்பெல்லாம் அனைத்து நிறுவன விமானத்திலும் 40 கிலோ பயண பொதியை (+Cabin Baggage) கொண்டு வர அனுமதிக்கப் பெற்றிருந்தோம். அதிக பொதிக்கு ஆசைப்பட்டே உருப்படாத நிர்வாகம், குறித்த நேர புறப்பாடு உத்திரவாதமில்லாத சர்வீஸ் என தெரிந்தும் ஏர் இந்தியா (எக்ஸ்பிரஸ் அல்ல) விமானத்தில் சென்னைக்கும், இதர நகரங்களுக்கும் பயணித்தோம் இப்போது அதிலும் கை வைத்து 10 கிலோவை குறைத்து விட்டார்கள், 40 கிலோ பொதியை (+Cabin Baggage) மீண்டும் அனுமதித்தால் நாங்களும் பயன்பெறுவோம் அதன் மூலம் தொடர் நஷ்டத்தில் இயங்கிவரும் ஏர் இந்தியாவுக்கும் வருமானம் தானே? இந்த உண்மையை விமானத்துறையிடம் எங்களுக்காக யார் எடுத்துச் சொல்ல போகிறீர்கள்?

7.    வளைகுடா இந்திய தொழிலாளிக்கும் எத்தனையோ பிரச்சனைகள் தான் பணிபுரியும் கம்பெனியுடன் ஏற்படத்தான் செய்கின்றன ஆனால் அண்டை நாடான இலங்கை தூதரகத்திற்கும், தன் பிரஜைகளின் உரிமைகளுக்காக எந்நேரமும் வரிந்து கட்டும் பிலிப்பைன்ஸ் தூதரகத்திற்கும் இருக்கும் அக்கரையில் நம் தூதரகத்தின் அக்கறை எத்தனை சதவிகிதம் என சொல்ல முடியுமா? மலையாளிகளின் வெளியுறவுத் துறை இந்திய அரசின் வெளியுறவு துறையாக மாற பாடுபட போவது யார்?

8.    வளைகுடா தொழிலாளர்கள் சந்திக்கும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பிரச்சனைகளை கேட்டு, அவற்றிற்கேற்றவாறு உதவிட வளைகுடா நாடுகளின் விடுமுறை நாட்களான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்திய தூதரகம் சார்பாக சிறப்பு முகாம்களை தொடாந்து வாரம் ஒரு முறையோ அல்லது இரு வாரத்திற்கு ஒரு முறையோ நடத்தினால் எங்களுடைய பல்வேறு பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு கிட்டுமே, உள்நாட்டில் ஆண்களில்லா பல குடும்பங்கள் பல்வகை கிரிமினல்கள், ஆக்கிரமிப்பாளர்களின் தொந்தரவிலிருந்து தப்பிக்க, எங்களின் உணர்வுகளை புரிந்து உதவப்போவது யார்?

9.    வளைகுடாவிலிருந்து நாங்கள் விரட்டி அடிக்கப்பட்டால் அல்லது நாங்களாகவே முடித்துக்கொண்டு வந்தாலோ நாங்கள் இந்தியதன்மையை புரிந்து காலூன்றவே பல வருடங்கள் ஓடிவிடும், எங்களுக்கு உதவிட வட்டியில்லா கடன், மானியம், வாரியம் போன்றவற்றை நிறுவிட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிக்கலாமே? எங்களுக்கு உதவ யாருக்கு இந்த நல்ல மனம் இருக்கிறது, செயலில் காட்டுவீர்களா?

10.    இது தனியார் டிவி சேனல்களுக்கு: ஷேர், ஸ்டாக் மார்க்கெட், ஆன்லைன் வர்த்தகம், கம்மாடிட்டி, வருமானவரி, இன்ஷுரன்ஸ் என நிபுணர்களை கொண்டு எத்தனையோ ஆலோசனைகளை வழங்கும் தனியார் சேனல்களே, இரவு நேரத்தில் எங்களின் வெளிநாட்டு உரிமைகள் பற்றியும், வெளியுறவு துறை பற்றியும், தூதரகத்தின் பணிகள் பற்றியும், கஸ்டம்ஸ், இமிக்கிரேஷன் போன்றவை பற்றியும் வெளிநாட்டில் உழைக்கும் இந்தியர்கள் பற்றி அவ்வப்போது வரும் சட்டங்கள் மற்றும் திருத்தங்கள் பற்றியும் தமிழில் ஆலோசணை வழங்க முன்வரலாமே, குறைந்தபட்சம் வாரம் அல்லது மாதம் ஒருமுறையாவது வருவீர்களா?

இறுதியாக ஒன்றை கூறி நிறைவு செய்கின்றோம், நாங்கள் யாரும் தனி ஆட்கள் அல்ல மாறாக நாங்கள் சொன்னால் மதித்து கேட்கக்கூடிய, மதுவுக்கோ பணத்திற்கோ மயங்காத குடும்ப வாக்காளர்கள் என்ற ஜன சமுத்திரம் எங்கள் பின்னால் உள்ளதை புரிந்து கொண்டு வெளிநாட்டில் வேலை பார்க்கும் எங்களின் குறைகளையும் களைய முன் வருவீர்கள் என்ற நல்லெண்ணத்துடன் இப்போதைக்கு இத்துடன் நிறைவு செய்கின்றோம்.

வளைகுடாவில் பணியாற்றும் இந்தியர்கள் சார்பாக
அபுதாபியிலிருந்து
அதிரை அமீன்

Friday, March 21, 2014

Understanding Quran - Teacher Training Program for April 2014


இந்த ஆளை உங்களுக்கு தெரியுமா !?

இந்த ஆளை உங்களுக்கு தெரியுமா !?

கால காலமாக நமதூரில் இனம் தெரியாத ஆட்கள் எல்லாத் தெருக்களில் நடமாடுவதையும், தங்கி இருந்து வேலை செய்வதையும் பார்க்கலாம். நமதூர் மக்களுக்கு அவர்கள் மேல் சந்தேகம் வந்தாலும் அதை பற்றி யாரும் பெரியதாக எடுத்துக் கொள்வது கிடையாது, அப்படி என்றால் அவர்கள் யார்? உங்களுக்கு தெரியுமா? என்ற கேள்வியை உங்களிடம் கேட்டால், நீங்கள் தெரியாது என்றே சொல்வீர்கள், காரணம் அவன் எந்த ஊராக இருந்தா நமக்கென்ன என்ற தோரணையில் போய்விடுகின்றது, ஏனென்றால் நாமும் சிலவேளைகளில் வெளியூர்களில் நடமாடக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுவிடுகிறது, அதனாலாயோ! வேறு என்னவோ!!
சாதரணமாக நாம் வெளியூர் சென்றுவிட்டு ஊர் திரும்பி வரும் வரைக்கும் பஸ் டிக்கட்டை பத்திரமாக வைத்துருக்கவேண்டும், மேலும் நம்மை பற்றிய முழு விளக்கமும் தெளிவாக விளக்கும் வகையில் நமக்கு உண்டான அடையாள அட்டைகளையும் பத்திரமாக வைத்துக் கொள்ளவேண்டும்.
மேலும் சிலர் வெளியூர்களில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து நிரந்தரமாக தங்கி இருந்து தொழில் நடத்தி வருவார்கள், மாதம் ஒருமுறை வீடு வந்து போவார்கள், இவர்களும் அவர்களுக்கு உண்டான அடையாள அட்டைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ன்னும் சிலர் தங்களிடம் எந்த ஒரு அடையாள ஆவணமும் இல்லாமல் தினம் தினம் ஒவ்வொரு ஊராக போய் வியாபாரம் செய்வார்கள், இது மிகவும் தவறு.
உதாரணத்திற்கு.
ருத்தன், குடிசை/சில்லறை தொழில் விஷயமாக வெளியூர்களில் உள்ள பல ஊர்களுக்கு சென்று தெரு தெருவாகவோ அல்லது ஊரின் ஒரு மையப்பகுதியிலோ வியாபாரம் செய்வதாக இருந்தால் கீழ்க் கண்ட நிபந்தனைகளை அவன் சரிசெய்து கொண்டு போக வேண்டும்.
நிபந்ததனை ஒன்று.
வனின் சொந்த ஊர் காவல் நிலையத்தில், குடிசை/சில்லறை வியாபார விஷயங்களையும்,  போகப் போகின்ற ஊரின் பெயரைச் சொல்லி (No Objection Certificate) தடையில்லா சான்றிதழை பெற விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் அவனிடம் எந்த வித குற்றச் செயல் இல்லை என்றும் வெளியூர் போய் வியாபாரம் செய்யலாம் என்று தடையில்லா சான்றிதழை வழங்குவார்கள். இதோடு சேர்த்து அவன், அவனுடைய எல்லா அசல் அடையாள அட்டைகளை பத்திரமாக தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும். 
நிபந்தனை இரண்டு.
ந்த தடையில்லா சான்றிதழை வைத்துக்கொண்டு, அவன் எந்த ஊருக்கு போக இருக்கின்றானோ அங்கு போய் அவனுடைய வியாபாரத்தை துவங்கும்முன் அங்குள்ள காவல் நிலையத்தில் இந்த தடையில்லா சான்றிதழை காண்பித்து (Endorsement) செய்ய வேண்டும், அதாவது தடையில்லா சான்றிதழின் பின் புறம் Approval-ஆதரவு, Support-சம்மதம் என்று ரப்பர் ஸ்டாம்ப்பினால் காவல் துறை முத்திரை இட்டு கையொப்பமிட்டு தருவார்கள்.
நிபந்ததனை மூன்று.
வைகளை பத்திரமாக வைத்துக் கொண்டு வியாபாரத்தை தெரு தெருவாகவோ அல்லது ஊர் மையப்பகுதியிலோ துவங்க வேண்டும். Consumer-நுகர்வோர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும், யாரும் சந்தேகப்பட்டு விசாரித்தால் தடையில்லா சான்றிதழை காண்பிக்க வேண்டும். மேலும் ஒருநாள் தங்க நேரிட்டால் காவல் துறையினரிடம் அனுமதி கோர வேண்டும். வேலையை முடித்துக் கொண்டு ஊரு திரும்பியதும், உள்ளூர் காவல் நிலையத்தில் திரும்பி வந்த செய்தியை தெரிவிக்க வேண்டும். இதுதான் முறை ஆனால் இதை யாருமே செய்வது கிடையாது. 
நமதூரில் என்ன நடக்குது?
மதூரில் ஒரு நாளைக்கு தெருத் தெருவாக ஆயிரத்து எட்டு பழ வண்டிகள், பழைய இரும்பு சாமான்கள் வண்டிகள், ஆடைகள்/துணிகள் இவைகளை சுமந்து செல்லும் வடநாட்டு இளைஞர்கள், நாங்க அங்குருந்து வருகின்றோம்/இங்குருந்து வருகின்றோம் என்று சொல்லி பதிவு இல்லாத சில எண்டர்ப்ரைசஸ் பெயரைச் சொல்லி சிறு சேமிப்பில் கவர்ச்சிகரமாக தங்க நகைகள்/வீட்டு சாமான்கள், ஏதோ ஒரு ஆசிரமத்தின் பெயரைச் சொல்லி பணம் வசூலிப்பது, யாசகம் என்ற பெயரில் வருவது, இன்னும் அநேகர் இப்படி வந்த வண்ணம் இருக்கின்றனர், இவர்களைப்பற்றிய விபரங்களை யாராவது குறுக்கு விசாரணை செய்தது உண்டா? இந்த விஷயத்தில் நாம் மெத்தனமாக இருக்கக்கூடாது, இதில் ஆண்கள் மட்டும் இல்லை, பெண்களுக்கும் உரிமை இருக்கின்றது, பெண்களும் எல்லா விஷயத்திலும் முழு விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.  
மதூரில் வீடுகளைக் கட்டுவதற்கு வெளியூர்களிலும், வெளி மாநிலங்களிலும் கட்டிடப் பணியாளர்களை வரவழைத்து இங்கேயே தங்க அமர்த்தி வேலைகளை வாங்கி வருகின்றனர். மேலும் பலர் வாடகைக்கு ஆட்களை அமர்த்தி வருகின்றனர்.
ப்படி வெளியூர்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வேலைக்கு ஆட்களை வரவழைத்து அவர்களை நமதூரில் தங்க வைக்கும் உரிமையாளர்களும் சரி, ஒப்பந்தக் காரர்களும் சரி, நீங்கள் அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும், வேலையில் இருக்கும்போதும் வெளியில் நடமாடும்போதும் கண்ணியமாக நடந்துகொள்ள அறிவுறுத்த வேண்டும், அடுத்த வீட்டு கதவுகளை தட்டக்கூடாது என்று அவர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும், அவர்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்க வேண்டும், உங்களிடம்தான் வேலைசெய்கின்றனர் என்பதற்கு அத்தாட்ச்சியாக அவர்களுக்கு முறையாக அடையாள அட்டை வழங்க வேண்டும், அவர்களைப் பற்றிய எல்லா முழு விபரங்களும் உங்களிடம் இருக்க வேண்டும், அவைகளைப்பற்றிய விபரங்களை காவல் துறையில் கொடுத்து ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். நமதூரில் எத்தனை உரிமையாளர்கள், ஒப்பந்தக் காரர்கள் இப்படி நடந்து கொள்கின்றனர்? 
ரு இந்தியன், இந்தியாவின் எந்த ஒரு மூலையிலும் போய் வேலை செய்யலாம், தங்கலாம், அவனுக்கு முழு உரிமை உண்டு, எந்த ஒரு தடையும் இல்லை, ஆனால் பாதுகாப்பு கருதி ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று இந்திய காவல் துறை சட்டம் எச்சரிக்கின்றது.
வெளியூர்களிலும், நமதூரிலும் அவ்வப்போது நடக்கும் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்களை பார்க்கும்போது வெளியூர் கைவரிசை ஓங்கி இருப்பது நன்றாக தெரிகிறது. இது நாளுக்கு நாள் பல ஊடக வாயிலாக நாம் காணமுடிகின்றது, சந்தேகப்படும்படியாக அது யாராக இருந்தாலும் சரி, கொஞ்சம்கூட தயங்காமல் அவர்களை கூப்பிட்டு விசாரிப்பதில் தவறு ஏதும் இல்லை, முரண் உண்டாகும்படி இருந்தால் உடனே ஊர் காவல் துறைக்கு தெரியப்படுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சில வேளைகளில் வங்கி ஊழியர்கள், மின் வாரிய ஊழியர்கள், அஞ்சல்துறை ஊழியர்கள், வாக்கெடுப்பு ஊழியர்கள், அரசு சார்ந்த ஊழியர்கள், கேஸ் இணைப்பு ஊழியர்கள், இன்னும் பல நிறுவன ஊழியர்கள் நம் வீட்டுக்கு எதோ ஒரு வேலையாக வரக்கூடும், அவர்கள் அத்தனைபேரும் பார்த்தமுகமாக இருப்பார்களோ அல்லது இல்லையோ, எது எப்படி இருந்தாலும் அவர்கள் தங்களுடைய அடையாள அட்டையை காண்பித்து தங்களை யார் என்று உறுதி படுத்தின பின்னரே தாங்கள் வந்த நோக்கத்தை நம்மிடம் சொல்ல வேண்டும், இது தான் முறை.  
பொதுமக்களே நன்றாக சிந்தியுங்கள், பெரும்பாலும் இதுமாதிரி தவறுகள் நடக்க காரணமாக இருப்பவர்கள் அந்தந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்களே, எது எதுவுக்கோ நேரத்தை வீணாக செலவு செய்யும் நீங்கள் இதுக்கு கொஞ்சநேரம் செலவழித்தால் அது உங்களுக்கு மட்டும் இல்லை நம் ஊருக்கே நல்லதுதானே.
எடுத்துச் சொல்வது எங்கள் கடமை, விழிப்புணர்வுடன் இருப்பது உங்கள் கடமை.
இப்படிக்கு .
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.                           
த/பெ. மர்ஹூம். கோ.மு. முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை 13வாடி, வண்டிப்பேட்டை.

Thanks to: http://theadirainews.blogspot.ae/2014/03/blog-post_7216.html