உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, November 29, 2013

06.12.2013 துபையில் மவ்லவி. இஸ்மாயில் ஸலஃபி நிகழ்ச்சிகள் - காலையில் தர்பியா, மாலையில் மார்க்க சொற்பொழிவு


&

தர்பியா நிகழ்ச்சி

நாள்    :    
06.12.2013, வெள்ளிக்கிழமை
 
நேரம்    :    
காலை 8.30 மணிக்கு
 
இடம்    :    
அல் மனார் சென்டர் (தெய்ரா கிளை)
        பிரைமரி நர்சரி எதிரில்
துபை ஹாஸ்பிட்டல் பின்புறம்
அல் பரஹா
தெய்ரா, துபை

 
நல்லொழுக்கப் பயிற்சி வழங்குபவர்
 
இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள
 
மவ்லவி. இஸ்மாயில் ஸலஃபி அவர்கள்

Monday, November 25, 2013

உள்ளங்களை உலுக்கிய மனங்களின் சாட்சி

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

கண்கவரும் பொருட்காட்சி, கண்காட்சி என எத்தனையோ கண்டுகளித்திருப்போம் ஆனால் இதற்கு மாற்றாக உள்ளங்களால் உணர்ந்து பார்ப்பதற்காக கடந்த நவம்பர் 2013, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் துபை ஜமியத்துல் இஸ்லாஹ் அரங்கில் 'இஸ்லாத்தை ஏற்க 100க்கு மேற்பட்ட காரணங்கள்' என்ற பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்துக்காட்சி, குறிப்பாக துபை மாநகரில் இஸ்லாத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் தழுவிய சகோதர, சகோதரிகளின் உள்ளத்து உணர்வுகள் காட்சியாய் ஏற்பாடு செய்யப்பட்டு காண்போரின் மனசாட்சியை உலுக்கும் நிறைவான நிகழ்வாய் அமைந்திருந்தது, அல்ஹம்துலில்லாஹ்.
 
துபை மாநகரில் உயர்பதவிகள், தொழிலாளர்கள் என பல மட்டங்களிலும் பணிபுரிந்த, பணியாற்றுகின்ற நூற்றுக்கணக்கான சகோதர, சகோதரிகள் தங்களின் வாழ்வியலாக இஸ்லாம் எனும் பொக்கிஷம் கிடைத்த தருணங்களை, காரணங்களை, விவரித்த விடயங்களை இரத்தினச்சுருக்கமாக தொகுத்து, எளிய ஆங்கிலத்தில், கருத்துக்களையே காட்சிகளாக்கி அழகுற பேனர் வடிவில் வரிசைபடுத்தியிருந்தனர்.
 
இரு தினங்களும் நிறைந்த அரங்கமாக, ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்களும், தஃவா பணியாளர்களும், மொழி, நாடு, நிறம், பேதமின்றி சர்வதேச மக்களும் திரளாக கலந்து பயன்பெற்றுச் சென்றனர்.
 
அரங்கில் பம்பரமாக சுழன்ற இறை மார்க்கத் தொண்டர்களில் அனேகர் பெண்களே! அதிலும் இஸ்லாத்தை ஏற்ற புதிய சொந்தங்களே வழிகாட்டி, வந்தோருக்கு விளக்கி உவந்தனர். அரபி, ஆங்கிலம், தகலோக் என சர்வதேச மொழிகள் பலவற்றுடன் ஹிந்தி, மலையாளத்துடன் நம் தமிழிலும் விளக்கமளித்தனர்.

துபை அவ்காஃப் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்விலும் 3 பேர் இஸ்லாத்தை தங்களின் வாழிவியல் நெறியாக ஏற்றனர், அல்லாஹூ அக்பர்.
 
பேரதிர்ச்சி தரும் உண்மை
 
பொதுவாக, இன்றைய முஸ்லீம்களின் நடவடிக்கைகளை பார்க்கும் ஒருவன் ஒருபோதும் இஸ்லாத்திற்கு வரமாட்டான் என்ற அவச்சொல் நிலவுவதை யாவரும் அறிவோம் என்றாலும் இங்கே பலரும் இஸ்லாத்தை தழுவுவதற்கு சில முஸ்லீம்களின் தூய இஸ்லாமிய செயற்பாடுகளே காரணமாக அமைந்ததென சான்று பகர்ந்துள்ளனர் நமைமிகைத்த நம்மின் புதிய சகோதர, சகோதரிகள். அப்படியாயின் நம்முடைய வாழ்க்கை???
 
அதிரைஅமீன்
 
 

























 












 

அமீரகத்தை குளிரூட்டி சென்ற மழை

மழையை நேசிக்கும் மண்ணிலிருந்து வந்த நமக்கு வருடத்திற்கு ஒருமுறை வானம்; அது வருஷித்தால் நிச்சயம் மகிழ்ச்சிகரமான செய்தி தான். 

ஒரு வருடம் கழித்து மீண்டும் கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாலையில் பலத்த காற்றுடன் அமீரகத்தில் மழை பெய்தது சிறப்புச் செய்தியாக ஊடகங்களில் மகிழ்ச்சி பொங்க வெளியிடப்பட்டன, தொடர்ந்து மேகமூட்டத்துடனும் அவ்வப்போது தூறலுடனும் காணப்பட்ட வானம் நேற்று காலை 9 மணியளவில் அபுதாபி, முஸஃபா, ஐகாட் சிட்டி 2 பகுதியில் மீண்டும் மழையாய் கொட்டியது. 

அமீரக மழையில், 

1. மழைக்குப்பின், துளிர்த்து சிலிர்த்து நிற்கும் கண்களுக்கு குளிர்ச்சியான பசுமை இல்லை. 

2. சிறிய தூறலிலும் மனதை மயக்கும் மண்வாசனை இல்லை. 

3. மழையால் மருத்துவருக்கும் லாபமில்லை.

4. பெய்யும் மழையை டிவியில் காண்பித்து 'விவசாயிகள் மகிழ்ச்சி' என்ற ஒற்றை வரியை திரும்பத் திரும்ப சொல்ல யாருமில்லை. 

5. சென்டிமீட்டர் கணக்கில் மழையை அளவிட தேவையில்லை. 

6. மழையால் ரோடுகள் காணாமல் போனதாக செய்திகள் இல்லை. 

7. மழை வெள்ளம் வாரக்கணக்கில் தேங்கி நிற்கும் அவலம் இல்லை. 

8. நாமறிந்து இந்த மழையை நம்பித்தான் இந்த பாலைமண் என்று எதுவுமே இல்லை, 

என்றாலும் அமீரகத்தில் பெய்யும் மழையால் நம் சிற்றறிவுக்கு இன்னும் எட்டாத நன்மைகளை ஏக இறைவன் மறைத்தே வைத்துள்ளான். 

மழைக்கு முன் புழுதிக்காற்றால் துவண்டிருந்த அமீரகத்தில் திடீர் மழைக்குப்பின் சென்ற வார புழுதிப்படலம் அடங்கி துவங்கியது குளிர். 

இந்த குளிரோட அருமை அமீரக வெயிலில் வெந்தவர்களுக்கு தான் தெரியும் என்றாலும் பைக் ஓட்டுனர்களுக்கு இரண்டுமே ஒன்று தான். 

அமீரகம் என்றவுடன் மாட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும் கற்பனை செய்து வைத்திருப்பவர்களுக்கு இப்படங்கள் சமர்ப்பணம் ஆகுக! 











அதிரையின் மைந்தன்

Saturday, November 23, 2013

Sydney - Auburn Community Centerல் திருக்குர்ஆன் விரிவுரை வகுப்பு - பெண்களுக்கு தனியிட வசதி உண்டு‏

بسم الله الرَّحمن الرَّحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் .இன்ஷா அல்லாஹ்  சனிக்கிழமைகளில் மாலை 5:30 மணிக்கு தொடர் திருக் குரான் விளக்க உரை வகுப்பு நடைப் பெறுகின்றது -
பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 
Time: Every Saturday 5:30 pm to 7:30 pm
Venue: Auburn Community Center

இத் திருக்குரான் விளக்க உரையை சகோதரர் இம்தியாஸ் மௌலவி அவர்கள் மிகத் தெளிவாக ஆதரப்பூர்வமான ஹதிதுகளின் அடிப்படையில் அறிவுப்பூர்வமான விளக்கங்களுடன் சொற்பொழிவை நிகழ்த்தி வருகின்றார்கள்.

இவ்வறிய சந்தர்பத்தில் அனைவரும் இச்சொற்பொழிவில் கலந்துகொண்டு பயன்பெறவும் மேலும் மற்ற உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இத் தகவல்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்

தங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் சொல்ல தோனுமாயின் மேலும் இச் சொற்பொழிவு சம்மந்தமாக அறிவுரைகள் அல்லது கேள்விகள் கேட்க எண்ணம் ஏற்பட்டால் மௌலவி அவர்களிடம் நேரடியாக ஒதுக்கப் பட்ட நேரத்திலும் மேலும் தனிப்பட்ட முறையில் அணுகுவதாக இருந்தால் கீழே உள்ள மின்அஞ்சல்(email ) மூலமும் தொடர்பு கொள்ளலாம்.





Husband's and Wife's Rights and Responsibilities - Part 1
01:34:55
Added on 17-11-2013
இஸ்லாம் கூரும்
கணவன் மனைவியின்
கடமைகள் பொறுப்புகள்

 has shared a video with you on YouTube
இஸ்லாம் கூரும்
கணவன் மனைவியின்
கடமைகள் பொறுப்புகள்

கணவன் மனைவிக்கு செய்யவேண்டிய கடமைகள்
1. (கணவன் / கணவன்வீட்டார்) மனைவிக்கு செய்யக் கூடிய அநியாயங்கள்
2. கணவனின் அனுமதி இல்லாமல் மனைவி பணம் எடுக்கலாமா, ஏன்?
3. மனைவியின் மாதபோக்கின் நாட்களில் நடந்து கொள்ள வேண்டியவை
4.கணவனும் மனைவியும் ஒன்றாக குளிக்கலாமா?
5.மனைவியின் / கணவனின் பெற்றோர்களை கவனிக்க வேண்டியவை
6.மனைவியின் விசயத்தில் சட்டத்தை கையில் எடுக்கலாமா?

மனைவி கணவனுக்கு செய்யவேண்டிய பொறுப்புகள்
1. கணவனின் பேச்சை கேட்கவேண்டிய இஸ்லாமிய பண்பாடுகள்
2. கணவன் மனைவியோடு சேர தேவைப்படும்பொது எந்த நேரமாக இருந்தாலும் ஒத்துழைக்கலாம?
3. கணவன் இல்லாத நேரத்தில் மகரம் இல்லாத ஆண்களை வீட்டில் அனுமதிப்பதையும் துணை இல்லாமல் வெளியில் செல்வதும் கூடாது
4. பெண்கள் அதிகமாக சதக்கா செய்தல் போன்ற நல்லறங்கள்


Husband's and Wife's Rights and Responsibilities - Part 1

by Team Tams Sydney
அல்லாஹ்வின் நாட்டப்படி உங்கள் அனைவரின் மேலான ஆதரவுடன்
Team
email- tafseer@tamsonline.org.au