உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, December 17, 2017

குவைத்தில் ஒரு வாரம் தொடர் இஸ்லாமிய நிகழ்ச்சி மவ்லவி. இஸ்மாயில் ஸலஃபி வழங்குகிறார்

குவைத்தில் ஒரு வாரம் தொடர் இஸ்லாமிய நிகழ்ச்சி மவ்லவி. இஸ்மாயில் ஸலஃபி வழங்குகிறார்

'பித்னாக்கள்;' நிறைந்த காலத்தில் மார்க்க அறிவே அடிப்படை பாதுகாப்பாகும்.

'அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகின்றானோ அவர்களுக்கு மார்க்க அறிவை விசாலமாக்குகின்றான்' (நூல்: புகாரி)

எனவே, அனைவரும் கலந்து கொண்டு மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்: அதிரை அமீன்




Monday, November 13, 2017

சொல்லத்தான் வேண்டும்.சொல்லுவேன்...

சொல்லத்தான் வேண்டும்.சொல்லுவேன்...
கல்லோ முள்ளோ அம்போ எறியுங்கள்.ஆனால் கொஞ்சம் சிந்தியுங்கள்.
சில தினங்களிற்கு முன் பெண்களுக்கான ஒரு அமர்வில் உரையாற்றக் கிடைத்தது.அமர்வின் இறுதியில் ஒவ்வொரு பெண்ணாக தயங்கித் தயங்கி,வெட்கப்பட்டுக் கொண்டு வந்து என்னிடம் கேட்டார்கள்,"சகோதரி,உடலுறவின் போது ஓதுவதற்கு துஆ இருப்பதாக சொன்னீர்களே,அதை எழுதித் தருவீர்களா?"
இதுதான் இன்றைய முஸ்லிம் சமூகத்தின் பெண்கள் நிலை.

புற்றீசல்கள் போல ஆயிரம் பெண்கள் மத்ரசாக்கள்.மகள் கெட்டுப் போய்விடுவாள் என அஞ்சி பூப்படைந்ததுமே மத்ரசாக்களில் விடப்பட்ட பெண்பிள்ளைகள்.வெறுமனே மவ்லவியாக்கள் என்றும் ஹாபிழாக்கள் என்றும் ஆலிமாக்கள் என்றும் வாங்கிய பட்டங்கள் சுருட்டி வைக்கப்பட்ட நிலையில் பத்திரமாய் இருக்கின்றன.ஆனால் கற்றவை கற்பிக்கப் பட்டவை எத்தி வைக்கப்படவில்லை என்றே சொல்லுவேன்.
மத்ரசாக்களின் நோக்கம் கொஞ்சம் அரபும்,தஜ்வீதும் கற்பிப்பதா?
அதனுடன் சேர்த்து தையலும்,கைவேலையும்,சமையலும் கற்பிப்பதா?

தெருவிலுள்ள நான்கு பிள்ளைகளுக்கு ஓத சொல்லிக் கொடுத்து விட்டால்,இருபது பிள்ளைகளுக்கு மக்தப் நடத்தி முடித்து விட்டால் அவர்கள் சத்தியப்பிரமாணமாய் சொன்ன தஃவாவின் பணி நிறைவுற்றதாய் அர்த்தமா?
ஒரு வகையில் அந்த மவ்லவியாக்களை சாடுவதில் அர்த்தமே இல்லை.ஏனெனில் அவர்களது பானையில் போடப்பட்ட பண்டம் அவ்வளவுதான்.பிரசங்கம் செய்ய அவர்கள் பயிற்றுவிக்கப் படவில்லையே.அவர்களிடமும் விஷய ஞானமும் இல்லை.அதை தேடும் ஆர்வமும் அவர்களிடம் இல்லை.வினைத்திறனான தாஇயாக்கள் மன்னித்து விடுங்கள்.அல்லாதவர்கள் மாறிவிடுங்கள்.
சில காலங்களின் முன் இலங்கையின் பிரபல மத்ரசாவில் பட்டம் பெற்ற ஒரு பெண்ணிடம்,மாரியதுல் கிப்திய்யா மூலம் நபிகளாருக்கு இப்றாஹீம் என்ற மகன் பிறந்திருக்கிறதென்றால், அடிமை என்பதன் பூரண விளக்கத்தை" கேட்டிருந்தேன்.நான் சொன்ன பதினொரு மனைவியருள் ஒருவரை விலக்கிவிட்டு மாரியதுல் கிப்தியாவை மனைவியாக நிரூபிக்க முயன்றாரே தவிற விளக்கம் தரவேயில்லை.
இதே போல இன்னொரு மவ்லவியா,"நபிகளார் எத்தனை முறை ஹிஜ்ரத் செய்தார்கள்?" என என்னிடம் சந்தேகம் கேட்கிறார்.
இவை சில எடுத்துக் காட்டுகள் தான்.இன்னும் நிறைய சம்பவங்கள் இருக்கின்றன.
இவர்களிடம் போய் இன்னும் ஆழமாய் எப்படி இஸ்லாத்தை தெரிவது...?
இலங்கையில் ஆண்கள் மத்ரசாக்கள் போல பெண்கள் மத்ரசாக்களில் (ஓரிரு ஆண்கள் மத்ரசாக்கள் தவிற ஆண்கள் மத்ரசாக்களும் ஒன்றும் சாதித்ததில்லை) தரமாய்,ஆழமாய் போதிக்கப்படுவதே இல்லை.
பல்கலைக்கழக தரத்திலுள்ளது,பல்கலைக்கழக நுழைவு வீதம் இத்தனை என விளம்பரம் செய்கிறார்களே தவிற தாஇயாக்களை வெளியாக்கும் விகிதம் பெரும்பாலும் பூச்சியம் தான்.
எங்கள் மத்ரசாக்கள் தரமானவை.நாங்களும் தாஇயாக்கள் என்று சத்தம் போட முன் சகோதரிகளே, ஒரேயொரு முறை சகோதரி அஸ்மா ஹுதா,சகோதரி தைமிய்யா சுபைரின் வட்ஸப் குழுமங்களையும்,யூடியூப் சனல்களையும் உருது,ஹிந்தி மொழிமூல குழுமங்களையும் எட்டிப் பாருங்கள்.அத்தனை ஆழமாய் அழகாய் தெளிவாய் எத்தி வைக்கிறார்கள் என்று.உங்களின் தரமும் சாதனைகளும் தலைகுனியலாம்.
தமிழகத்திலும் அத்தனை தரமாய் மவ்லவியாக்கள் இருக்கிறார்களோ தெரியவில்லை.இல்லையென்றே தோன்றுகிறது,இருந்திருந்தால் அல் இஸ்லாஹ்,அஸ்ஸுன்னா போன்ற வட்ஸ் அப் ஆலிமாக்களுக்கான குழுமங்களின் பாடங்களை ஏன் மவ்லவி மார் கற்பிக்கப் போகிறார்கள்?
தேடிப் படிக்கும் ஆர்வமுள்ள சில பெண்கள் தவிற நிறைய பெண்களுக்கு ஐந்து வேளை தொழுவதும்,ரமழானில் நோன்பு நோற்று குர்ஆன் ஓதுவதும்,ஹபாயா பர்தாவும் தாண்டி இஸ்லாம் தெரியாது.
பெண்ணென்றால் பித்னா,நரகத்தில் உங்களைத்தான் நபிகளார் கண்டார்கள் என மவ்லவிமார் நம்பிக்கையிழக்கச் செய்தார்களே தவிற பெண்களுக்கென்று தனியான மார்க்க விளக்க வகுப்புகள் நடைபெறுவதில்லை.
ஒவ்வொரு ரமழானிலும் தராவிஹ் தொழ வந்தவர்களுக்கு தஃலீமை வாசித்துக் காட்டியதற்கு பதில் ஹைழுடைய,நிபாஸுடைய சட்டங்களை சொல்லித் தந்திருக்கலாம்.
ஜனாஸாவுடைய சட்டங்களை சொல்லித் தந்திருக்கலாம்.குளிப்பாட்டுகிறோம் என்ற பெயரில் நோவினை செய்து கொண்டிருக்கிறார்கள்.
யூத சதித்திட்டம்,உலக வரலாறு என ஆராய்ச்சி செய்து அறிக்கைகளை துப்பியவர்கள் அகீதாவை அணுவணுவாய் போதித்திருக்கலாம்.
பெண்கள் பாடசாலைக்கு,பல்கலைக் கழகத்திற்கு போவது ஹராம் என பத்வா வழங்கியவர்கள் பிக்ஹையாவது சொல்லித் தந்திருக்கலாம்.
ஆண்கள் எங்களை மிகைத்து விட்டார்கள்,பெண்களுக்கு போதிப்பதற்காய் தனியான ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்ட பெண்களுக்கு தனியான ஒரு நாளில் போதித்த தூதரின் வழிமுறை ஏன் காணாமல் போனது ?
ஆண்களை வாரமொரு முறை குத்பாக்களில் சந்தித்தவர்கள் பெண்களுக்காக இரு பெருநாள் தினங்கள் போதும் என ஏன் வரையறுத்துக் கொண்டார்கள்.?
ஒரு சமூகத்தினர் தானாக தன்னை மாற்றிக் கொள்ளாதவரை அவர்களை யாராலும் மாற்ற முடியாது.
அன்றைய அன்சாரிப் பெண்கள் தாமாகத்தான் கல்வியை தேடிப் போனார்கள்.தமக்கென ஒரு நாளை ஒதுக்கித் தாருங்கள் என்றும் கேட்டார்கள்.
ஆனால் இன்றைய எமது பெண்கள் மார்க்கத்தை படிப்பதற்கென்றால் கொஞ்சம் பின்வாங்கியே நிற்கிறார்கள்.
எங்கோ தையலுக்கும் ,சமையலுக்கும்,facial ற்கும் நேரகாலமின்றி,வயது பேதமின்றி,வெட்கம் கூச்சமின்றி,பெருமிதமாய் வகுப்புகளுக்கு செல்பவர்களுக்கு மார்க்க விளக்க வகுப்புகளென்றால் "இந்த வயதில் படிப்பதா?"என்ற வெட்கம் வந்து விடுகிறது,பாவம்.
மணிக்கணக்காய் செலவிட்டு டைல்ஸை துடைப்பவருக்கும்,புதிய ரெசிப்பி ஒன்றால் குடும்பத்தை மகிழ்விப்பவளுக்கும் பத்து நிமிடம் ஒதுக்கி மார்க்கத்தை படிக்கவும் முடியவில்லைதான், பாவம்.
வட்ஸ் அப்,டெலிக்ராம்,பேஸ்புக் போன்ற ஊடகங்களில் cookery,shopping,கவிதை குழுமங்களில் அவர்கள் காட்டும் ஆர்வம் மார்க்க விளக்க குழுமங்களில் இல்லை.
சகோதரிகளே,
கற்க அனுமதிக்கவில்லை,வகுப்புகள் நடைபெறவில்லை,அடுப்படியில் அடைத்து வைத்து விட்டார்கள் என புலம்பியது போதும்.

You tube ல் சமையல் ரெசிப்பி தேடிய அதே விரல்களால் islamkalvi.comqurankalvi.com,al quran open college என்றும் கொஞ்சமாய் தட்டிப் பாருங்கள்.நிறையவே தொடர் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.அகீதா,பிக்ஹ்,தப்ஸீர்,தஜ்வீத்,ஹதீஸ்,ஸீரா என அத்தனையும் கற்றுக் கொள்ளலாம்.இன் ஷா அல்லாஹ்.(உபயோகமான links இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்)
மவ்லவியாக்கள்,ஆலிமாக்கள் உங்களுக்கு தெரிந்த பத்து பேரை வைத்து வட்ஸப் குழுமங்களை ஆரம்பியுங்கள்.என்றோ மத்ரசாவில் படித்த கொப்பியை பார்த்தாவது வாசியுங்கள்.காலப் போக்கில் தேர்ச்சியடைந்து விடலாம்.இன் ஷா அல்லாஹ்.
நேரத்தில் கொஞ்சம் அர்ப்பணிப்பும் வேலையில் கொஞ்சம் திட்டமிடலும் தேவைப்படலாம்.
நினைவில் கொள்ளுங்கள் திரிகையில் கோதுமையை கையால் அரைத்து,குடிக்கும் தண்ணீருக்காகவும் இயற்கை தேவைகளுக்காகவும் எங்கோ பல மைல் நடந்து போன அந்த பெண்கள் தான் படிப்பதற்காகவும் நேரம் ஒதுக்கிக் கொண்டார்கள்.
ரப்பின் வழியில் ,வெற்றியின் பால் அழைப்பதற்கு மத்ரசாவில் ஓதி எடுத்த பட்டங்களோ,சான்றிதழ்களோ தேவையில்லை.
"லாஇலாஹ இல்லல்லாஹ் " என்று மொழிந்த அந்த ஷஹாதா மட்டும் தான் அன்றைய ஸஹாபாக்களின் ஒரே தகுதியாக இருந்தது.

கலீமா சொன்ன ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் தஃவா என்பது கடமையே.அதுவே காலத்தின் கட்டாயமும்.அதற்கு பெண்கள் நாங்களும் விதிவிலக்கில்லை.
islamkalvi.com for online islamic library
ISLAMKALVI.COM

Monday, October 16, 2017

அன்புச் சகோதரர் மவ்லவி. பக்கீர் முஹமது அல்தாபி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அன்புச் சகோதரர் மவ்லவி. பக்கீர் முஹமது அல்தாபி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சமீபத்தில் தாங்கள் ததஜ தலைவர் பதவியிலிருந்து 2வது முறையாக விலகிய சூழலைத் தொடர்ந்து முகநூல் வாயிலாக கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன், படித்திருப்பீர்கள் என்றும் நம்புகிறேன். தற்போதும் தங்களுடைய கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் உலாவரும் பதிவை தொடர்ந்தே என்னுடைய இக்கடிதத்தை எழுதுகிறேன்.

முதலில் பிரச்சனையை வெளியில் போட்டுடைத்து தொடரவிருந்த மிரட்டல்களை (Blackmail) தவிடிபொடியாக்கி வெற்றிபெற்றதற்கு வாழ்த்துக்கள்.

அடுத்து, உள்ளிருந்தே போராடப்போவதாக எழுதியிருந்தீர்கள், 'இது போகாத ஊருக்கு வழிதேடும் முயற்சி' உங்களுக்கு முன் பலரைப் போல் உள்ளிருந்தே போராடி வெறுத்து சுயமாக வெளியேறியவர்களில் நானும் ஒருவன் என்பதை அறிந்திருப்பீர்கள், எங்களை கண்ணியத்துடன் வெளியேறச் செய்த அல்லாஹ்வே புகழுக்கு உரியவன்.

ஒருவேளை உங்களுக்கு நீதி வழங்குவது போல் பாசாங்கு செய்தாலும் உங்களின் தேவை ஏதும் மிச்சம் மீதம் இருப்பது முடிந்ததும் விரைவிலேயே மீண்டும் கட்டம்கட்டப்பட்டு வெளியேற்றப்படுவீர்கள் சகோதரர் பாக்கருக்கு நிகழ்ந்ததைப் போல. (அவர்கள் பாவமன்னிப்பு வழங்கிய அதே குற்றச்சாட்டின் மீதே மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது இன்னும் உங்களுக்கும் நினைவிருக்கும்)

ததஜவின் டி.ராஜேந்தர் என அறியப்படுபவரை இன்னும் அப்பாவி என நம்புவதைப் போல் உங்கள் கடிதம் அமைந்துள்ளது, 'ஒரு முஃமீன் ஒரே பொந்தில் 2 முறை கொட்டுப்பட மாட்டான்' என்பதையும் மீறி 2 முறை வலிய கொட்டுப்பட்டவர் நீங்கள், எய்தவன் இருக்க அம்புகளை நொந்து கொண்டுள்ளது அறிவார்ந்த செயலாக தெரியவில்லை.

உங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி போலவே உங்களுடைய நிர்வாக காலத்திலும் ததஜவினால் கூட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளதற்காக நீங்கள் செய்யும் தவ்பா மனஅமைதியை தரும் இன்ஷா அல்லாஹ். அதேபோல் 'தந்தை ஸ்தானத்தில்' கருதப்படுபவர்கள் வில்லனாக இருக்கக்கூடாது எனும் விதி இல்லையே.

சரி விஷயத்திற்கு வருவோம், பீஜே என்பவரை நம்பி அவரது வஹீ மறுப்பு கொள்கைகளை கடுமையாக பிரச்சாரம் செய்துள்ளீர்கள் இதனால் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்களை நரகின் அருகில் நிறுத்தி வைத்துள்ளீர்கள் இவர்களை மீட்பதும் உங்கள் கடமை. எனவே, பீஜே என்பவரிடமிருந்து பெற்ற ஹதீஸ் மறுப்புக் கொள்கைகளை அல்லாஹ்வின் மீதான அச்சத்தையும், மறுமை வெற்றியையும் முன்னிறுத்தி சமரசங்கள் ஏதுமின்றி மீண்டும் மீளாய்வு செய்திடவும், தாவாக்களத்தில் மீண்டும் உறுதியாய் செயலாற்றிடவும் அன்புடன் அழைக்கின்றேன்.

கடைசியாக ஒன்று, அபுதாபி கைத்தடி இன்னும் தனது விளையாட்டுக்களை நிறுத்திக் கொள்ளவேயில்லையா? இதையே ஒரு பிழைப்பாக தொடர்வது அருவருப்பாகத் தெரியவில்லையா?

இவண்
என்றென்றும் அன்புடன்
அதிரை அமீன்


வேண்டுகோள்: சகோதரர் அல்தாபி அவர்களுடன் சமூக வலைதள தொடர்பில் உள்ளோர் இப்பதிவை அவரது பார்வைக்கு கொண்டு சேர்க்கவும்.

Tuesday, October 10, 2017

துபையில் இறுதி தீர்ப்பு நாள் மாநாடு -2017 மற்றும் இஸ்லாமிய போட்டிகள்

அல்மனார் இஸ்லாமிக் சென்டர்-துபை சார்பாக இஸ்லாமிய மாநாடு இன்ஷா அல்லாஹ் வருகிற நவம்பர் 30 & டிசம்பர் 1, 2017 அன்று நடைபெற இருக்கின்றது.

அதன் ஒரு பகுதியாக குழந்தைகள் / பெரியவர்களுக்கான இஸ்லாமிய போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

தங்கள் குழந்தைகள் மற்றும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த செய்திகளை தெரியப்படுத்தி கலந்துக்கொள்ள ஆர்வப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

REGISTRATION CLOSES ON  12-10-2017.




Saturday, July 29, 2017

பா.ஜ.க சாதனை மலர்.. பாஜக செய்து கிழித்த சாதனைகள்!

பா.ஜ.க சாதனை மலர்.. பாஜக செய்து கிழித்த சாதனைகள்!


தமிழக சாதனைகள்:
1. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது!
2. காவிரி நீரை தமிழகத்திற்கு கிடைக்க விடாமல் செய்தது!
3. தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாமல் அவர்களை நிர்வாணமாக போரட வைத்துது!
4. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் எதிர்ப்பையும் மீறி அனுமதியளித்தது!
5. ஜல்லிகட்டு போராட்ட மாணவர்களை தேசவிரோதிகளாக சித்தரித்து தடியடி நடத்த வைத்தது!
6. மீத்தேன் திட்டத்தை அமல்படுத்த நான்கு டெல்டா மாவட்டங்களுக்கு அனுமதி வழங்கியது!
7. காவிரி போராட்டதின் போது கர்நாடகாவில் தமிழர்களை தாக்கியது!
8. கீழாடி அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் நாகரிகம் தெரியாமல் இருக்க கீழாடி பணிகளை முடக்கி மண் அள்ளி மூடியது!
9. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க கோவையில் கலவரத்தை ஏற்படுத்தியது!
10. தமிழக மீனவர் படுகொலையை நியாயபடுத்தியது!
11. தொடர்ந்து தமிழக நலனிற்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றுவது!
12. நீயுட்ரினோ ஆய்வு மையம் மற்றும் கெயில் குழாய் பதிப்பது!
13. எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு நிராகரித்தது!
14. மாநில ஆட்சியில் தலையிட்டு ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துவது!
15. கட்டாய ஹிந்தி சமஸ்கிருத திணிப்பு!
16. நீட் தேர்வை மாணவர்களுக்கு கட்டாயமாக்கி தமிழக மணவர்களின் மருத்துவ படிப்பு கனவில் மண் அள்ளி போட்டது.
17. OPSயும் EPSயும் பாஜகவின் அடிமையாக ஆக்கியது!
18. தமிழக மீனவர் படுகொலைகளுக்கு நீதி கிடைக்க செய்யாமல் இருப்பது!
அகில இந்திய சாதனைகள்:
1. உலக மாஹா வியாபம் ஊழல் அது சம்பத்தப்பட்ட கொலைகள்!
2. மாட்டுகாக தலித்துகள் முஸ்லிம்களை வேட்டையாடுவது!
3. மோடி ஓராண்டு ஆட்சியில் மட்டும் 600 மதக்கலவரங்களை வெற்றிகரமாக நடத்தியது!
4. ஆதார் அட்டையை கட்டாயமாக்கி ஆதார் ரகசியங்களை கசியவிட்டது!
5. உண்ண உணவில்லாத ஏழைகள் வாழும் நாட்டில் செத்தவனுக்கு(சிவாஜி) சிலை என்ற பெயரில் 2000 கோடி மக்கள் வரிப்பணத்தை நாசமாக்குவது!
6. கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் இந்திய மக்களை திண்டாடவிட்டு 100 க்கும் மேற்பட்ட மக்களை வங்கி வாசலில் கொன்றது!
7. கேஸ் சிலிண்டர் விலையை 3 மடங்காக உயர்த்தி நடுத்தர மக்களின் வாழ்வை நாசமாக்கியது!
8. இந்தியா காணாத பொருளாதர வீழ்ச்சி!
9. EVM மெஷினில் பித்தலாட்டம் செய்து உபியில் வெற்றி பெற்றது!
10. மக்கள் வரிப்பணத்தில் உலகம் சுற்றி உருப்படியான எந்த திட்டமும் கொண்டுவராமல் போனது!
11. விபச்சார அழகிகளுக்காக ராணுவ ரகசியங்களை கசியவிட்ட வருண்காந்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பார்த்து கொண்டது!
12. கங்கையை சுத்தபடுத்துகிறேன் என 3000 கோடியை ஸ்வாகா செய்தது!
13. மாட்டு தீவிரவாதிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்து அப்பாவி மக்களை வேட்டையாடுவது!
14. மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவது மிரட்டுவது!
15. ரூபாய் நோட்டுக்களை செல்லாதாக்கி, பண முடைப்பை உருவாக்கி தொழில்களை நாசமாக்கி, மக்களை நடுத்தெருவில் நிறுத்தியது.
16. GST என்ற பெயரில் உலகிலேயே அதிகபட்ச வரிகளை விதித்து மக்களை கசக்கி பிழிவது.
17. உலகமெல்லாம் சுற்றியும் இந்தியாவின் அண்டைநாடுகளுடன் பகையை உருவாக்கியது.
18. முன்னெப்போதும் இல்லாதவாறு காஷ்மீரில் தீவிரவாத செயல்கள் அதிகரிப்பு.
19. பலகீனமாக பிரதமரால் சீனாவின் அத்துமீறல்களை கண்டும் காணாமல் இருப்பது.
20. அதானி & அம்பானி கார்பரேட் கும்பலின் அரசாக செயல்படுவது.
Thanks to: பா.ஜ.க புரட்சி படை
https://www.facebook.com/RSSPIGS/?hc_ref=ARShuM7tWGfwVAwpFW5sgefT4BdgF7GNZfFVKtY7Ufg5a8UF-tkgZiRCbCkeX9mcg8E&fref=nf

Sunday, July 16, 2017

அபுதாபி அவ்காப் சார்பாக கோடைகால இலவச குர்ஆன் மற்றும் மனன வகுப்புக்கள்


அபுதாபி இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கான பொதுச்சபை (AWQAF) கோடைக்கால விடுமுறை நாட்களை பயனள்ள வகையில் மாணவர்கள் கழிக்கும் நோக்குடன் 6 வயது முதல் 18 வயது வரையுள்ள மாணவர்களுக்கும், 18 வயதுக்கு மேலுள்ள பெரியவர்களுக்கும் தனித்தனியே குர்ஆன் கற்பித்தல் மற்றும் குர்ஆன் மனன வகுப்புக்களை அபுதாபியிலுள்ள சுமார் 198 மஸ்ஜிதுகள் மற்றும் குர்ஆன் மனன மையங்களில் கடந்த ஜூலை 2 ஆம் தேதி முதல் நடத்தி வருகிறது.

மாணவர்கள் குர்ஆன் கற்பித்தல் மற்றும் மனன வகுப்புக்களுக்கு வந்து போக இலவச போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் ஜூலை 27 வரை நடைபெறவுள்ள இவ்வகுப்புகளில் ஆர்வமுள்ளவர்கள் தற்போதும் இணைந்து கொள்ளலாம். இந்த வகுப்புக்கள் தினமும் மாலை 4 மணிக்கு துவங்கி மாலை 7 மணிவரை நடைபெற்று வருகிறது.

அபுதாபி அவ்காப் சார்பாகவும் அதன் மேற்பார்வையிலும் நடத்தப்படும் இக்குர்ஆன் கற்பித்தல் மற்றும் மனன வகுப்புக்களுடன் இஸ்லாமிய அடிப்படைகளை போதிக்கும் தீனியாத் பாடங்களும், தப்ஸீர் வகுப்புக்களும் இடம் பெறும்.

இந்த கோடைக்கால குர்ஆன் கற்பித்தல் மற்றும் மனன வகுப்புக்களில் இணைய விரும்புவோர் நேரடியாகவே அந்தந்த மஸ்ஜிதுகள் மற்றும் குர்ஆன் மனன மையங்களில் சென்று இணைந்து கொள்ளலாம். 

In response to the great interest by parents in benefiting from their children's summer school holidays by increasing their skills in reciting, memorising and Tafseer (interpreting) of the holy Quran, Awqaf continues to accept registration in the summer memorisation sessions. New students can directly join the sessions in more than 198 mosques (354 sessions) and a number of Quran memorisation centres. The sessions will be conducted from 4pm to 7pm starting from Sunday, July through Thursday, July 27, 2017.
To help learners to get to the sessions, Awqaf provides transportation to and from their locations.
Target audience of the initiative:
  • Male and female school students aged between 6 to 18 years
  • Male and female adults above 18 years of age

குர்ஆனிய வகுப்புக்கள் நடைபெறும் மஸ்ஜிதுகள் குறித்து அறிய இந்த சுட்டிக்குள் சென்று பார்க்கவும்.

For more information about the locations of mosques, centres and sessions, please visit Awqaf's website www.awqaf.gov.ae or any of the Quranic centres.
தகவல்: அதிரை அமீன்

Tuesday, July 4, 2017

மவ்லவி பக்கீர் முஹமது அல்தாபி அவர்களுக்கு அன்பான அழைப்பு

மவ்லவி பக்கீர் முஹமது அல்தாபி அவர்களுக்கு அன்பான அழைப்பு

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

மிக அண்மையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் ஃபர்ஸான் மவ்லவி அவர்கள் SLTJ அமைப்பு மற்றும் தலைமை பொறுப்பிலிருந்தும் அதன் கொள்கைகளிலிருந்தும் முற்றிலும் விலகிவிட்ட நிலையில் அதன் தாய் அமைப்பான ததஜவின் தலைமை பொறுப்பிலிருந்து தாங்கள் விலகியிருக்கின்ற செய்திகள் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளன. அதன் காரணம் என்னவாக இருந்தாலும் உங்களை அந்த பொறுப்பிலிருந்தும் விலகச் செய்த அல்லாஹ்வே மிகவும் புகழுக்குரியவன், அல்ஹம்துலில்லாஹ்.

மவ்லவி பக்கீர் முஹமது அல்தாபி அவர்களே! உங்களை பொருத்தவரை சத்தியம் இதுதான் என்று தெரிந்தால் அதை முழுமனதோடு ஏற்றுக்கொள்ளக்கூடியவர் என்பதை அமைப்பிற்குள் ஒன்றாகயிருந்த காலங்களில் பழகி உங்களது பண்பை அறிந்திருந்த நாங்கள் அறிவோம். சுன்னத் ஜமாஅத் மதரஸா என்று அறியப்படக்கூடிய ஒரு மதரஸாவில் பயின்று பட்டம் பெற்றும் அதன் வழியிலேயே அறியாமையினால் வருமானத்திற்கான வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்த உங்களுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான வாழ்வே சரி என உணர்ந்தவுடன் வந்து கொண்டிருந்த வருமானங்களை எல்லாம் துச்சமென உதறிவிட்டு ஏகத்துவக் கொள்கைளை ஏற்றுப் பின்பற்றியவர் நீங்கள்.

எங்களைப் போல் நீங்கள் ததஜ என்ற அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர் அல்ல, அதேபோல் ததஜவின் ஆரம்பகட்ட மவ்லவிமார்களில் ஒருவருமல்ல மேலும் ததஜ தொடர்புடைய அல்லது அதன் ஆதரவு பெற்ற கல்வி நிலையங்களில் பயின்றவரும் அல்ல என்றாலும் ததஜ என்ற அமைப்பில் இணைந்த குறுகிய காலத்திலேயே அல்லாஹ் உங்களுக்கு ததஜ உறுப்பினர்கள் மத்தியில் ஆதரவையும் கண்ணியத்தையும் பெருகச் செய்தான். அதன் விளைவாக அந்த சர்ச்சைக்குரிய நிழல் தலைவரின் கடும் லாபியையும் மீறி தாங்கள் முதன்முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், இந்த லாபி தோல்வியை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர் தங்களுக்கு பல்வேறு மனஉளச்சல்களை ஏற்படுத்தி மாநிலத் தலைவர் பதவியை தூக்கியெறிந்து விட்டு கண்ணீர் மல்க ஓடச்செய்தார் என்பதும் இன்னும் தங்களுக்கு பசுமையாக நினைவிலிருக்கலாம்

(இந்த தலைமை நிர்வாக தேர்தல் நடைபெறும் போது நாங்களும் அந்த அமைப்பில் துபை மண்டல நிர்வாகப் பொறுப்புக்களில் இருந்ததையும், அதன் தேர்தல் அதிகாரிகளில் ஒருவராக பணியாற்றி அதன் கசப்பான அனுபவங்களை சுமந்து வந்து அன்றைய துபை நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொண்ட சகோதரர் இன்னும் அதன் சாட்சியாக வாழ்ந்து கொண்டுள்ளார் என்பதையும் இங்கு கூடுதலாக பதிவு செய்ய விரும்புகின்றேன்.)

தற்போதும் இரண்டாவது முறையாக ததஜ உறுப்பினர்களால் மனமுவந்து மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் அனைத்து நிர்வாகப் பொறுப்புகளுமே எப்போதும் டம்மி பொறுப்புக்கள் தான் என்பதும் அதன் உண்மையான அதிகாரம் ஓரிடத்தில் குவிந்திருப்பதும் ஊரறிந்த ரகசியம் என்பதை நேரடி அனுபவமுள்ள தாங்கள் அறிவீர்கள். அந்த ஜனாதிபதி பொறுப்பையும் தற்போது இரண்டாவது முறையாக துறந்துள்ளீர்கள், நாளை மறுமையில்ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே அவரவர் பொறுப்புக்கள் குறித்து விசாரிக்கப்படுவீர்கள்” என்ற ஹதீஸை உள்வாங்கிய அச்சத்தின் காரணமாகவும் தாங்கள் இம்முடிவை எடுத்திருப்பீர்கள் என தங்கள் மீது இன்னும் நன்நம்பிக்கை கொள்கின்றோம். (ஆதாரம்: ஸஹீஹ் அல் புஹாரி எண்கள்: 2558, 2751, 5188, 5200, 7138)

இன்றைய நிலையில், நீங்களாகவே தான் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளீர்கள் என்று ததஜ தலைமை நிர்வாகத்தால் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தங்கள் மீது இதுவரை எத்தகைய பொருளாதார, பெண் குற்றங்களோ இதுவரை சுமத்தப்படவில்லை என்பதும் ததஜவின் உறுப்பினர்களும் இதுவரை உங்கள் மீது நல்லெண்ணமே கொண்டுள்ளார்கள் என்பதற்கும் அல்லாஹ்விற்கு முதலில் நன்றி செலுத்தி விடுங்கள்

அடுத்து இதுவரை நீங்கள் இயல்பாக நம்பியோ அல்லது ஏதொவொரு நிர்பந்தத்திற்கு உட்பட்டோ பின்பற்றிய, பிரச்சாரம் செய்த தனிமனித வஹி மறுப்புக் கொள்கையை குர்ஆன் ஹதீஸின் துணை கொண்டு உரசிப் பாருங்கள். குர்ஆன் ஹதீஸே சரியன்று உங்கள் மனது ஏற்றுக்கொண்டால் இதுநாள் வரை நிலைத்திருந்த ஸஹீஹான ஹதீஸ்கள் நிராகரிப்பு எனும் வஹி மறுப்புக் கொள்கையை காலில் தூக்கிப்போட்டு மிதியுங்கள். அல்லாஹ்விற்காகவும், உங்களின் மறுமை வெற்றிக்காகவும் மீண்டும் தூய குர்ஆன் ஹதீஸ் பிரச்சாரத்தை வீரியமாக மேற்கொள்ள வாருங்கள். இதற்காக புதிய அமைப்பை எல்லாம் நீங்கள் கட்டியெழுப்ப வேண்டியதில்லை.

தங்களின் மீது வெளியே தெரியாத களங்கம் ஏதும் சுமத்தப்பட்டிருந்தால் அல்லது தெரிந்தோ தெரியாமலோ மனிதர் என்ற அடிப்படையில் நிஜமாகவே தவறியிருந்தால் அல்லது சதிகளில் சிக்க வைக்கப்பட்டு தாங்கள் மிரட்டப்பட்டிருந்தால் என  இவை எதற்காகவும் அச்சப்படத் தேவையில்லை. உங்கள் பக்கம் ஏதும் குறையிருப்பீன் அவற்றை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு விட்டு அதற்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்து விட்டும், உங்களால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் யாருமிருந்தால் அவர்களிடம் மனம் வருந்தி மன்னிப்பு கோரிவிட்டு மீண்டும் தஃவா களத்தில் பங்காற்ற அன்புடன் அழைக்கின்றேன், இதற்கான முன்னுதாரணமாக திட்டமிட்டு சிக்கவைக்கப்பட்டு அல்லாஹ்வின் அருளால் மீண்ட அந்த இலங்கை மல்லவி மற்றும் சில தமிழக மவ்லவிகளின் துணிவான, மஃஷரை மட்டுமே கருத்திற்கொண்டு ஈமானுடனும், இறையச்சத்துடனும் எடுத்த முடிவுகள் உங்களுக்கும் உத்வேகமாக  அமையும் எனவும் நம்புகிறேன்.

மறுமை வெற்றிக்குத் தேவை அல்லாஹ்வும் அவனது ரசூலுமா? அல்லது ஒரு தனிமனிதர் உருவாக்கியுள்ள வழிகேடா என்பதை தீர்க்கமாக முடிவு செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு. இந்த அன்பான அழைப்பிற்கு பதிலாக எதிர்பார்ப்பது அல்லாஹ்விற்காக தாங்கள் எடுக்கப்போகும் அழகிய முடிவையே தவிர மறுப்புரையை அல்ல. உங்கள் மீது கொண்டுள்ள நல்லெண்ணத்தால், வழிகேட்டை கைவிட்டு மறுமைக்குத் தேவையான நேர்வழியை பின்பற்றி பிறருக்கும் போதிக்க வருமாறு அழைப்பது எங்கள் கடமை. அதை ஏற்பதும் நிராகரிப்பது உங்கள் உரிமை. உங்களுடைய முடிவு எத்தகையதாகயிருப்பினும் அவற்றால் எங்களுக்கு எத்தகைய லாபமோ, நஷ்டமோ ஏற்படப்போவதில்லை.

குறிப்பு
மவ்லவி பக்கீர் முஹமது அல்தாபி அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ள எனக்கு எத்தகைய வாய்ப்புகளும் இல்லாதநிலையில் இந்த பதிவை பொதுவில் பதிவிடுகின்றேன். அவரை தொடர்பு கொள்ள இயன்றோர் தயவுசெய்து எத்திவைத்துவிடவும். இப்பதிவு தொடர்பாக அல்தாபி அவர்கள் தவிர்த்து மற்றவர்களுடைய பதிலுக்கோ, கமெண்ட்டுகளுக்கோ, ஆதரவிற்கோ, எதிர்ப்பிற்கோ என்னிடமிருந்து பதில் தரப்படாது என்பதை அறிந்து கொள்ளவும்.

என்றென்றும் அன்புடன்

அதிரை அமீன்