உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, September 27, 2012

அல்குர்ஆனில் புதைந்து கிடக்கும் விஞ்ஞானம்!

உலகத்தில் வாழக்கூடிய மக்களுக்கு வழி காட்டும் நெறிமறையாக அல்குர்ஆன் அமைந்துள்ளது. 1431 ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் வின் தூதர் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட இந்த புனித குர்ஆன், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களையும், நிகழ்ந்த சம்பவங்களையும் வரலாறாக தந்ததுடன் வாழுகின்ற மக்களுக்கு இது சட்ட நூலாகவும், விண்ணியல், மண்ணியல், தாவரவியல், கருவியல், சமுத்திரவியல், விலங்கியல் என்று பல தரப்பட்ட விஞ்ஞானங்களை எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது

Post image for

அன்றைய காலகட்டத்தில் நவீன விஞ்ஞான வளர்ச்சிகளே இல்லாத காலத்தில் இறக்கி அருளப்பட்ட இந்த குர்ஆன் இன்று விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த காலத்தைப் பேசுவது பலதரப்பட்ட மக்களையும் வியப்பில் ஆழ்த்துகிறது. பல அறிஞர்களை ஆராய்ச்சி பண்ண தூண்டுகிறது.
“இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்குர்ஆன் 47:24 “ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா?’ 4:82 என்று அல்லாஹ் கேட்கிறான்.
“நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? இன்னும் மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?’ 78:6, 7
“இன்னும் இப்பூமி சாயாமலிக்கும் பொருட்டு நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம். அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான். 21:31

Saturday, September 22, 2012

அதிரையில் மாநபியின் மாண்பை எடுத்துரைக்க - அனைத்து அமைப்புகள் போராட்டம் - காணொளி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அதிரையில் இன்று (21-09-2012) தக்வா பள்ளி அருகில் துவங்கிய ஊர்வலம் பேருந்து நிலையத்தில் அனைத்து ஜமாத், மற்றும் அமைப்புகளின் கூட்டான போராட்டமாக அதிரை த.மு.மு.க. தலைமையில் நடைபெற்றது.

உலக மாந்தர்ட்கு அருட்கொடையாக அருளப்பெற்ற நம் உயிரினும் மேலான உத்தம நபி(ஸல்) அலைஹிவஸல்லம் அவர்களைப் பற்றி அவதூறு பரப்ப முயன்ற கயவர்களையும், அதற்கு உறுதுணையாக இருக்கும் அமெரிக்க அரசையும், யுடியூப் நிறுவனத்தையும் கண்டித்து, இன்று அதிரை அனைத்து கட்சி, ஜமாத், அமைப்புகள் ஒன்றினைந்து மிகப்பெரிய கண்டப்போராட்டம் நடத்தினர்.

இதில் அதிரை த.மு.மு.க. சகோ. செய்யது, பாப்புலர் ஃபிரண்ட் சகோ. முஹம்மது, இந்திய தவ்ஹீத் ஜமாத் அப்துல் ஹமீத், அதிரை பே.ம.தலைவர் சகோ S. அஸ்லம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயலாளர் சகோ தமீம் அன்சாரி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்

இறைத்தூரை இழிபடுத்த எத்தனித்த எத்தர்களை எதிர்ப்பதில் எம்மக்கள் எவ்வகையிலும் சலைத்தவர்களல்ல, அதனை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை அனைத்து சகோதரர்களும் அதிரையில் பேருந்து நிலையத்தில் ஒன்று கூடி நிருபித்தார்கள் - அல்ஹம்துலில்லாஹ் !


Thursday, September 20, 2012

அண்ணா சாலையில் இஸ்லாமியர்கள் வரலாறு காணாத போராட்டம்-ஸ்தம்பித்தது சென்னை

சென்னை: நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் வெளியாகியிருக்கும் திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் கூட்டுப் போராட்டத்தை சென்னையில் இன்று நடத்தின. இதனால் செனனை அண்ணா சாலை ஸ்தம்பித்துப் போனது. இதுவரை இப்படி
ஒரு போராட்டத்தை அண்ணா சாலை கண்டதில்லை என்பதால் சென்னையே
சில மணி நேரம் ஆடிப் போய் விட்டது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் அமெரிக்க தூதரகம் நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டன. இந்த போராட்டத்தில் அமெரிக்க தூதரகம் தாக்குதலுக்குள்ளானது. இதைத் தொடர்ந்து 2 நாட்களுக்குஅமெரிக்க தூதரகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் இன்று 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் கூட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அமெரிக்க தூதரகத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்துவதற்கு அண்ணா சாலை தர்கா அருகே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இது பலரையும் வியப்படைய வைத்தது. காரணம், அண்ணா சாலையில் இதுவரை எந்தப் போராட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டதில்லை. இதனால் போலீஸ் கமிஷனர் திரிபாதியின் முடிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
போராட்டத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் மாலை 3 மணி முதலே போக்குவரத்துக்கு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அண்ணா சாலை முழுவதும் இஸ்லாமியர்கள் கொடிகளை ஏந்தியபடி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே அமெரிக்க தேசியக் கொடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும் அண்ணா சாலை தர்கா அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று அமெரிக்காவுக்கு எதிராக கண்டனக் குரல்களைப் பதிவு செய்தனர். இதில் ஒருதரப்பினர் போலீசாரின் அரணை உடைத்துக் கொண்டு அமெரிக்க தூதரகம் நோக்கி முன்னேற முயற்சித்தனர். அவர்களையும் போலீசார் தடுத்தனர்.
இந்தப் போராட்டம் பின்னர் பெரும் வன்முறையாக மாறியது. அரசு பஸ், டூவீலர்கள் உள்ளிட்டவை தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

கடும் போக்குவரத்து நெருக்கடி

சென்னை அண்ணாசாலைதான் நகரின் மையமான போக்குவரத்துப் பகுதி. ஏற்கெனவே மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக இந்தப் பாதையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்தால் மயிலாப்பூர், ராயப்பேட்டை , அண்ணாசாலை ஆகிய தென்சென்னை பகுதிகள் ஸ்தம்பித்துப் போயிருந்தன.
இன்னொரு பக்கம் அண்ணா சாலையில் நடைபெற்ற போராட்டத்தால் மத்திய சென்னை பகுதிகளான எழும்பூர், சிந்ததாரிப் பேட்டை வழியே பேருந்துகள் திருப்பிவிடப்பட்டதால் அந்தப் பக்கமும் வாகனங்களால் நிலைகுலைந்து போனது. சென்னையில் பல மணிநேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Thanks to thatstamil.com

இன்றைய இளம்பெண்கள்

Post image for இன்றைய இளம்பெண்கள்

ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும் என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல், ஹிஜாப் முறையை சரிவர பேணாமல், அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க / தொழில் வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம், ஆபிஸ், காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், ஆபிஸ் டூர் , ஷாப்பிங் என்று போகும் இடங்களில், மஹரம் இல்லாத ஆண்களுடனும் மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள்.
 
இதன் காரணமாக சில மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் பெண்களுக்கு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள். இவ்வாறு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், பழகும் மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்றுமத இளைஞர்கள் காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.
 
இன்றைய இளம்பெண்கள் காம உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக முதல் காரணமாக இது இருக்கிறது. விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், மொபைல் போன் இண்டெர்னெட் வடிவில் வந்துவிட்டது. முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலம் நேரடியாக அழைப்பு விடுகிறார்கள். நமது பெண்கள் பலர் பழியாகிவிட்டார்கள்.

இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.

மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: “தங்கள் பார்வைளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைக் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்;

தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின்மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்;
 
மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவரின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவரின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள், அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துக் கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம்.
 
அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைந்திருப்பதை அறியப் படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம். விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவமன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யங்கள். (அல்குர்ஆன் 24:31)
adiraisalafi
thanks to readislam.net


Sunday, September 16, 2012

விமர்சனங்களை வென்றவர்

Post image for விமர்சனங்களை வென்றவர்

கி பி 571 ம் ஆண்டு ஏபரல் 20 ம் தேதி மக்காவில் அநாதையாக பிறந்த முஹம்மது (ஸல்) அவர்கள் பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்த உலகில் மனிதராகப் பிறந்த பிறக்கப் போகிற வேறு எந்த சக்தியும் எட்டிப் பிடிக்க முடியாதது.

சமயம், , சமூகம், அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், வரலாறு, அறிவியல், மொழி, தத்துவம், இலக்கணம், இலக்கியம், வாழ்வியல், உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவருக்கு தீர்க்கமான ஒரு இடம் இருக்கிறது. இன்றும் நபிமருத்துவம் என்பது மக்களின் பிணி தீர்க்கும் ஒரு முறையாக இடம்பிடித்திருக்கிறது என்பது மட்டுமல்ல மனித உடல் ஆரோக்கியத்திற்கான அவருடைய வழி காட்டுதல்கள் அனைத்து மருத்துவத்துறையிலும் மேற்கோள் காட்டப்படுபடுகின்றன. சட்டம், நீதி, நிர்வாகம் மற்றும் பதிவுத்துறைகளும் அவர் கோலோச்சுகிற துறைகளாகும். அந்தப் பாலைவனச் செல்வர் விவசாயத்தையும் விட்டு வைக்கவில்லை.
மூன்றாம் உலகம் யுத்தம் ஒன்று வருமென்றால் அதற்கு தண்ணீர் தான் காரணமாக இருக்கப் போகிறது என ஐ நா மன்றம் எச்சரித்துள்ளது. நீர் பங்கீடு மற்றும் நீர்ப்பாசனம் குறித்து முஹம்மது நபியின் வழிகாட்டுதல்கள் ஏற்றுக் கொள்ளப் படுமானால் அந்த அச்சத்திற்கு வழியே இருக்காது.
இந்த துறைகளிலெல்லாம் முஹம்மது (ஸ்ல்) அறிவுரைகள், அல்லது கருத்துக்களை கூறினார் என்று ஒற்றை வரியில் நகர்ந்து விட முடியாது. இத்துறைகள் அத்தனையும் அவர் பரிசோதனை முயற்சிகளை செய்து அதில் பெரும் வெற்றி கண்டார் என்று சொன்னால் அது கூட அவரை பற்றிய முழு அறிமுகமாகிவிடாது. தான் உருக்கொடுத்த அத்தனை சிந்தனைகளையும் வழிவழியாக பின் பற்றி நடக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கிச் சென்றார், அந்த சமூகம் இன்றளவும் மட்டுமல்ல இனி உலகம் வாழும் காலம் வரையும் அவரது சிந்தனைகளை ஆலோசனைகளை உத்தரவுகளாக தலைமேற் கொண்டு செயல்படக் காத்திருக்கிறது.

Wednesday, September 12, 2012

சித்தீக்பள்ளி கமிட்டி மற்றும் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் தன்னிலை விளக்கம்!

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்,.

அன்பான சித்தீக் பள்ளி முஹல்லா மற்றும் அதிரைவாசிகளுக்கு,

கடந்த சில நாட்களாக ஊரில் உள்ள மக்களிடமும் வெளிநாடுகளில் வசிக்கும் அதிரை மக்களிடமும் பேசப்பட்டு வருபவை, சித்தீக் பள்ளி மற்றும் சித்தீக் பள்ளி நிர்வாகத் தலைவர் மரியாதைக்குரிய ஹைதர் அலி ஆலிம் அவர்களைப் பற்றிய செய்திகளே. ஊரிலும் இணையத்திலும் இது தொடர்பாகப் பேசப்படும் செய்தி எங்களுக்கு வருத்தமளிக்கிறது. சித்தீக் பள்ளி தொடர்பான விசயங்களில் ஏனோ ஒரு சில மக்கள் வாய்க்கு வந்தபடி பேசிவருகிறார்கள். அதனால், நடந்த சம்பவங்களைப் பற்றி எங்களுடைய விளக்கத்தை மக்கள் மத்தியில் வைப்பது எங்கள் கடமை என்பதை உணர்ந்தே இம்மடலை வரைகின்றோம்.

சித்தீக் பள்ளிக்கும், சித்தீக் பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களுக்கும் இடையே நிலப் பிரச்சினை கடந்த சில மாதங்களாக இருந்து வருகிறது. இந்நிலையில், பள்ளிக்குச் சொந்தமான இடத்தைப் பொதுப் பாதையாக்க ஒரு சிலர் முயற்சியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நிகழ்ந்த சம்பவங்களினால் பள்ளிக்குரிய நிலத்தில் தெருப்பாதை வேண்டும் என்று வாதிடும் சிலர் வெளித் தெருவைச் சேர்ந்த ஒரு சகோதரருடன் சேர்ந்து, அநாகரீகமாகத் தகாத வார்த்தை பேசி, மிகவும் கேவலமாக சித்தீக்பள்ளி நிர்வாகத்தை கண்ணியக் குறைவாக நடத்தினார்கள். இது தொடர்பாக ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திலும் கடிதம் கொடுக்கப்பட்டு, சித்தீக்பள்ளிக்கு ஒத்துழைப்புத் தருமாறு வேண்டுகோளும் வைக்கப்பட்டது.

அன்று இரவே சித்தீக்பள்ளி சம்பந்தபட்ட அனைத்துத் தரப்பு மக்களும் கூடி ஆலோசனை செய்தார்கள். அதில், பள்ளிவாசல் நிலத்தில் பாதை விடவேண்டாம் என்று ஒரு மனதாக முடிவு செய்து கையொப்பமிட்டார்கள். யார் யார் எல்லாம் இதில் உடன்பட்டார்கள் என்ற விபரம் சித்தீக்பள்ளி நிர்வாக மினிட்ஸ் புத்தகத்தில் உள்ளது.

பிறகு இரண்டு நாட்கள் கழித்து, பள்ளிவாசல் வேலியை, தெருவில் உள்ள பெண்களை தூண்டிவிட்டு உடைத்து, சமூக விரோதச் செயல்களில் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சில சகோதரர்கள் ஈடுபட்டுப் பதற்றத்தை ஏற்படுத்தினார்கள். இதில், ஒரு சில சகோதரர்கள் சுவர் கட்டலாம் என்று கை எழுத்து போட்டவர்களும் சுவரை இடிக்கும் வேலையையும் செய்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இருப்பினும் அன்றைய தினமே அல்லாஹ்வின் உதவியால் சித்தீக்பள்ளிக்குச் சொந்தமான நிலத்தின் சுவர்கள் வெகுவிரைவாகக் கட்டி எழுப்பட்டன.

இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு சில நாட்கள் கழித்து சம்சுல் இஸ்லாம் சங்கத் துணைத் தலைவர் அவர்கள், சித்தீக்பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் கூட்டம் ஒன்றில் அஜெண்டா இல்லாமல் எடுத்து வைத்ததன் காரணத்தால், சித்தீக் பள்ளி நிர்வாகிகள் அனைவரும் சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளை சங்கத்தில் சென்று சந்தித்துப் பேசினோம். “எங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?” என்று வினவியதோடு அல்லாமல் அன்று வரை நடைபெற்ற அனைத்தையும் முழுமையாக சொல்லிக்காட்டப்பட்டு செய்திகளை அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். அந்த உரையாடலில் சங்கத் தலைவர் அவர்கள், வெளியூர்க்காரர் ஊர் நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பதில் தவறில்லை என்று கூறியதோடு அல்லாமல், சங்க உலமா இபுறாஹீம் ஆலிம் அவர்களிடமும் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு இபுறாஹீம் ஆலிம் அவர்கள் முஹல்லாவாசிகள் அதை விரும்பினால் தவறில்லை என்று விளக்கம் கூறினார்கள். மேலும் சித்தீக்பள்ளி இடம் மீட்கப்பட வேண்டும் என்று சங்கத் தலைவர் அவர்களும் தன்னுடைய கருத்தைத் தெரிவித்தார்கள்.

அதுவரை சங்கம் இது தொடர்பாக எந்தவித ஆட்சேபனையையும் தெரிவிக்கவில்லை. சித்தீக்பள்ளிக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது என்பதை மக்கள் தெரியவந்த சூழலில், சித்தீக்பள்ளித் தலைவராக இருக்கும் ஹைதர் அலி ஆலிம்சா அவர்களைப் பதவியிலிருந்து விலக்க ஊரில் உள்ள ஒரு சிலர் மும்முரமாக முயற்சி செய்து பல தொந்தரவுகளை ஹைதர் அலி ஆலிம்சா அவர்களுக்கும், சித்தீக் பள்ளி நிர்வாகத்துக்கும் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். சித்தீக்பள்ளிச் சொத்து விவகாரத்திற்குள்ளான பிரச்சினையில் சம்பந்தபட்ட நபரான தக்வா பள்ளி நிர்வாகி அவர்கள்(தக்வா பள்ளி நிர்வாகிகளில் ஒருவர்) சித்தீக்பள்ளி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். பேச்சுவார்த்தையில் எந்த சுமூகமும் ஏற்படாத நிலையில், அந்த நிர்வாகி ஒரு மிரட்டலும் விட்டுச் சென்றார்.

இப்படி மாதங்கள் கடந்து கொண்டே சென்றன, கடந்த ரமழானில் தக்வா பள்ளி நிர்வாக கமிட்டியின் செயலாளர் அவர்கள் சித்தீக் பள்ளி கமிட்டி தலைவர் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மேல் ஒரு பொய் வழக்கு - அதாவது ஆலிம்சா அவர்கள் இளைஞர்களை வைத்து தீவிரவாத செயலில் ஈடுபடுகிறார் என்று இல்லாதவைகளை அவர் மீது சுமத்தி நீதிமன்றத்தில் 13 குற்றசாட்டுகளை வைத்து பொய் வழக்குத் தொடுத்துள்ளார். பொய்யான குற்றச்சாட்டுக்களை வைத்து ஹைதர் அலி ஆலிம்சா அவர்களைக் காவல் நிலையத்திற்குச் செல்ல வைத்தார். பிறகு சித்தீக்பள்ளி நிர்வாகத்தின் முயற்சியால் காவல் நிலையத்தில் தக்வா பள்ளி நிர்வாகி அவர்களால் கொடுக்கபட்ட பொய் புகார் இதுவரை வாபஸ் பெறப்பட்டது. இந்த சம்பவம் ஊரில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதன் பின் ஹைதர் அலி ஆலிம் அவர்களை (29-08-2012) காலை 10:30 மணியளவில் வீட்டிற்குத் தனியாக வருமாறு சங்கத் தலைவரின் அழைப்புடன் வந்த சங்க பிரதிநிதி சகோதரர் சாலிஹ் அவர்களிடம், "தக்வா பள்ளி நிர்வாகிகளில் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பதால் வழக்கமான நிகழ்வுகளை தவிர மற்ற எந்தக் கூட்டத்திற்கும் செல்ல வேண்டாம் என்று வழக்கறிஞர் அறிவுறுத்தியிருக்கிறார், ஆகையால் வழக்கு முடிந்த பிறகு நானே நேரில் வந்து சந்திக்கிறேன்” என்று சொல்லி அனுப்பினார். ஆனால் அசர் தொழுகைக்கு பிறகு சங்க பிரதிநிதி சாலிஹ் மீண்டும் வந்து, “நீங்கள் வர இயலவில்லை என்றால், நாங்கள் வந்து சந்திக்கிறோம் என்று தலைவர் சொல்லியனுப்பினார்கள்” என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு ஹைதர் அலி ஆலிம், அவர்கள், "சங்கத் தலைவர் வந்து என்னை சந்திப்பதற்கு நான் பெரிய ஆள் இல்லை. இன்று தக்வா பள்ளி பயான் முடித்துவிட்டு போன் பேசிவிட்டு சந்திக்கலாம்" என்று சங்க பிரதிநிதியிடம் சொல்லி அனுப்பிய சில நிமிடங்களிலேயே சங்க தலைவர், பேரூராட்சித் தலைவர், சங்கத் துணைத் தலைவர், துணைச் செயலாளர் மற்றும் இரண்டு பிரதிநிதிகள் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் வீட்டிற்குச் சென்று சந்திக்க முற்பட்டார்கள்.

சித்தீக்பள்ளியில் வைத்துப் பேசலாம் என்று சொல்லி, வந்தவர்களை சித்தீக்பள்ளியில் அமருமாறு ஹைதர் அலி ஆலிம் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அதே சமயத்தில் ஹைதர் அலி ஆலிம் பள்ளிக்கு வருவதற்குள் சித்தீக்பள்ளிக்கு கமிட்டி சகோதரர்கள் 4 பேர் வந்துள்ளார்கள். அவர்களிடம் சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் அவர்கள், “இனி எத்தனை பேர் வருவீர்கள்? நீங்களா அல்லது நாங்களா என்று பார்த்துக்கொள்வோம்” என்று கூறினார்கள். அவர்கள் சித்தீக்பள்ளிக்கு வந்த 5 நிமிடத்திற்குள் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் சலாம் கூறி சித்தீக்பள்ளி உள்ளே வருகிறார்கள். உடனே சங்கத் தலைவர்கள் அவர்கள், “நீங்கள் வெளியூர்க்காரர். நாங்கள் உள்ளூர்வாசிகள். ஊரை இரண்டாகப் பிரித்துவிடாததீர்கள்” என்று சொன்னார். அருகில் இருந்த சித்தீக்பள்ளி கமிட்டி நிர்வாகி ஒருவர், சங்கத் தலைவர் அவர்களிடம், “சலாத்திற்கு பதில் கூறுங்கள் காக்கா” என்று சொல்லியும், அதை அவர் பொருட்படுத்தவில்லை. பள்ளியில் இருந்த முஹல்லா சகோதரர் ஒருவர், “நீங்களும் வெளியூர்தானே” என்று சங்கத் தலைவரைப் பார்த்துக் கூறினார். இதன் பிறகு ஏற்பட்ட சலசலப்பால், நடைபெறவிருந்த சந்திப்பு தடைபட்டது. சங்கத் தலைவர் மற்றும் அவருடன் வந்தவர்கள் அனைவரும் வெளியே சென்றுவிட்டார்கள். வெளியே செல்லும் முன், அனைவரும் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மனம் புண்படும்படியான வார்த்தைகளைப் பேசிவிட்டுச் சென்றார்கள். திரும்பத் திரும்ப ஹைதர் அலி ஆலிம் அவர்கள், “வாருங்கள் பேசலாம்” என்று கேட்டுக் கொண்டும், சந்திக்க மறுத்துவிட்டு வெளியேறினார்கள்.

30-08-2012 அன்று இரவு சித்தீக்பள்ளி முஹல்லா சகோதரர்கள் சிலரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர், துணைத் தலைவர், துணைச் செயலர், பேரூராட்சித் தலைவர் ஆகியோர் அழைத்துப் பேசினார்கள். இதில் முஹல்லா சகோதரர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு, சங்கத்தில் உள்ளவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்து, ஹைதர் அலி ஆலிம்சா அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள். “ஹைதர் அலி ஆலிம் அவர்களை சங்கத்தின் சார்பாக சந்திக்கவில்லை, விளக்கம் கேட்கவே சென்றோம். ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சொற்பொழிவில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று சங்கத் தலைவர், துணைத் தலைவர், துணைச் செயலர், பேரூராட்சித் தலைவர் ஆகியோர் ஒருமனதாக வந்தவர்கள் முன்னிலையில் ஒத்துக்கொண்டார்கள்.

ஆனால். சம்சுல் இஸ்லாம் சங்கம் ஆயிசா மகளிர் அரங்கம் மற்றும் மேலத்தெரு ஜும்மா பள்ளிக்கும் 9 முஹல்லாக்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு தொடர்பான காரணங்களைக் கூறியே அவரை வைத்து மார்க்க சொற்பொழிவாற்ற வேண்டாம் என்று கூறிப்பிட்டுள்ளார்கள். இறுதியாக, தற்காலிகமான முடிவு என்றாலும், இதை மறுபரிசிலனை செய்ய வாய்ப்பே இல்லை என்று சங்கத் துணைத் தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள். மேலே குறிப்பிட்ட அனைத்து முடிவுகளும் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய இருவரையும் கலந்தாலோசிக்காமல் எடுக்கபட்டது என்பது எங்கள் கமிட்டி நடத்திய விசாரனையில் தெரியவந்துள்ளது.

தக்வா பள்ளி நிர்வாகத்தில் இருக்கும் தனி நபர் ஒருவரால் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொய் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சொல்லி உள்ளாதாக ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் கூறினார்கள், ஆனால் இதுவரை தக்வா பள்ளி நிர்வாகியிடம் வழக்கை வாபஸ் வாங்கவில்லை. அடுத்த மாதத்திற்கு வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இந்தப் பொய் வழக்கால் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார்கள்

ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு விதிக்கபட்டுள்ள தடை பற்றி எந்தவிதக் கடிதமும் இது நாள் வரை சித்திக்பள்ளி கமிட்டிக்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திலிருந்து வரவில்லை. ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் வந்த கடிதம் மட்டும் தான் வந்துள்ளது என்பதை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறோம்.

மரியாதைகுறிய ஹைதர் அலி ஆலிம் அவர்கள் எந்த ஒரு இயக்கத்தினரையும் வைத்து எந்தவித இயக்க வேலையோ அல்லது எந்தவிதத் தீய காரியங்களோ இதுவரை செய்யவில்லை என்பதை அழுத்தமாக கூறிக்கொள்கிறோம். ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மேல் பொய் வழக்குத் தொடர்ந்துள்ள சகோதரரை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதற்கு துணை நிற்கும் அனைவரையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சித்தீக்பள்ளி கமிட்டித் தலைவர் பொறுப்பு வேண்டாம் என்று மூன்று முறை ராஜினாமா கடிதம் கொடுத்தார்கள் ஹைதர் அலி ஆலிம் அவர்கள். ஆனால் பள்ளி கமிட்டியில் உள்ள நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இந்தப் பொறுப்பில் இது நாள் வரை இருந்து வருகிறார்கள். பதவி ஆசையால் அல்ல என்பதை உறுதியாக எல்லோருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த 03-09-2012 அன்று பொதுப் பாதையை சித்தீக்பள்ளி நிர்வாகிகள் அடைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தஞ்சை கலெக்டர் அவர்களுக்கு சென்னையிலிருந்து ஒரு நபர் அவசர மனு கொடுத்து, ஆர் டி ஓ, தாசில்தார், வி ஏ ஒ ஆகியோர் சித்தீக்பள்ளிக்கு வந்து விசாரனை நடத்தி, அப்படி ஒரு சம்பவம் அன்று நடக்கவில்லை என்று விபரங்கள் சேகரித்துத் திரும்பி சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு சம்சுல் இஸ்லாம் சங்கம் தனிபட்ட முறையில் எழுதிய கடிதத்தில் சித்தீக்பள்ளிக்குத் தொழ வருவதற்கு மக்களுக்கு அச்சமாக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது! அப்படி என்ன அச்சம் ஏற்படும் சூழல் சித்தீக் பள்ளியில் நிகழ்கிறது என்பதை சம்சுல் இஸ்லாம் சங்கம் மக்களுக்குக் கட்டாயம் தெளிவுபடுத்த வேண்டும். அப்படி ஏதாவது அச்சம் ஏற்படும் சூழல் இருந்திருந்தால், இந்த ரமளானில் 40க்கும் மேற்பட்ட நபர்கள் ‘இஃதிகாப்’ எப்படி இருந்திருப்பார்கள்?

சித்தீக்பள்ளிக்கான சொத்து விவகாரத்தை வைத்து நடந்து வரும் நிகழ்வுகளுக்கு, தனி நபரான ஹைதர் அலி ஆலிம் மட்டும் தான் பொறுப்பு என்று சித்தரித்து வருகிறார்கள், ஆனால் இதில் சித்தீக்பள்ளி நிர்வாகம் தான் முழு பொறுப்பு, என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறோம். ஆகையால் மரியாதைக்குறிய ஹைதர் அலி ஆலிம்சா அவர்களை மட்டும் குறிவைத்து, நீதிமன்றத்தில் பொய் வழக்கு, பொய் பிரச்சாரம், வீண் பழியை சுமத்தி அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படுவதை சித்தீக்பள்ளி கமிட்டி எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாது. ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொய் வழக்கை உடனே வாபஸ் பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

சித்தீக் பள்ளி விவகாரத்தில் நாங்கள் எந்த நிலையிலும் ஷரியத்து முறைப்படி இணைக்கமாகவும் சுமூகமாகவும் நடந்துகொள்ளவே விரும்புகிறோம் என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறோம்.

சித்தீக்பள்ளி நிர்வாகத்தில் எந்த ஒரு முடிவாக இருந்தாலும், அனைத்தும் மசூரா அடிப்படையில் எடுக்கப்படுகிறது. எந்த ஒரு தனிநபருக்கு முடிவை தீர்மானிக்கும் அதிகாரம் இல்லை என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறோம்.

இறுதியாக வரும் 13.09.2012 அன்று பட்டுக்கோட்டை RDO அலுவலகத்தில் சித்தீக்பள்ளி நில விவகாரம் தொடர்பாக சமாதான கூட்டம் நடைபெறுகிறது. இந்த சமாதான கூட்டத்திற்கு தற்போது சித்தீக்பள்ளி நிர்வாகத்தில் உள்ள முக்கிய நபர்கள் ஒருவரை கூட அழைக்கப் படவில்லை. ஆனால் மரியாதைக்குரிய அப்துல் காதர் ஆலிம்சா அவர்களை மட்டும் சித்தீக்பள்ளி நிர்வாகி என்று குறிப்பிட்டு அழைப்பு விடுத்துள்ளார்கள். இது முழுக்க முழுக்க ஒரு தலைபட்சமான போக்கு என்பதை இங்கு எல்லோருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.

சித்தீக்பள்ளி நிர்வாக கமிட்டி தலைவர் மரியாதைக்குரிய ஹைதர் அலி ஆலிம் அவர்களின் தன்னிலை விளக்க ஒழிப்பேழையை இதே கேளுங்கள்.




மேலோ சொல்லபட்ட அனைத்திற்கும் சாட்சியாளன் அல்லாஹ் ஒருவனே.


மேலதிக தகவல்களுக்கு சித்தீக்பள்ளி நிர்வாகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.


இப்படிக்கு

சித்தீக்பள்ளி நிர்வாகம்,

புதுமனைத்தெரு, அதிராம்பட்டினம் – 614 701

Thanks to: adirainirubar.blogspot.com

Monday, September 10, 2012

சர்க்கரை வியாதிக்கு ஒட்டகப்பால்: ஆய்வு முடிவு!

சர்க்கரை வியாதியை ஒட்டகப்பால் குறைக்குமென புதியதொரு ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது. பிகானரியிலுள்ள டயபட்டிக்ஸ் அன்ட் கேர் ரிசர்ச் சென்டரில் பணியாற்றும் மருத்துவர் ராஜேந்திர அகர்வாள் நடத்திய இது தொடர்பான ஆய்வில் இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

எகிப்திலுள்ள கெய்ரோ பல்கலை கழகத்தில் 54 சர்க்கரை நோயாளிகளுக்கு நடத்திய ஆய்விலும் ஒட்டகப்பால் சர்க்கரை நோயைக் குணமாக்குகிறது என்பது உறுதியாகியுள்ளது. இன்சுலின் ஊசி மருந்து தினசரி உபயோகித்துக் கொண்டிருந்த 27 பேருக்குத் தினசரி அரை லிட்டர் ஒட்டகப்பால் கொடுத்து சோதிக்கப்பட்டது. இந்த 27 பேருக்கும் சர்க்கரை வியாதி நாளுக்கு நாள் குறைந்து வருவது உறுதியானது. ஒட்டகப்பால் குடிக்காத மற்ற 27 நோயாளிகளின் நோயில் மாற்றமில்லை.

ஒட்டகப்பாலில் இரும்பு, துத்தநாகம், தாமிரம் முதலான தனிமங்களும் வைட்டமின் C யும் அதிக அளவில் அடங்கியுள்ளதும் கெய்ரோ நேசனல் நியூட்ரீசியன் இன்ஸ்டிடியூட்டில் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இப்புதிய கண்டுபிடிப்புக்கும் அரபு நாடுகளில் வசிப்போருக்குச் சர்க்கரை நோய் அதிக அளவில் இல்லாமல் இருப்பதற்கும் தொடர்பிருக்கலாம் என்ற கருத்து வலுவாகியுள்ளது.

நன்றி: www.inneram.com

Thursday, September 6, 2012

மக்களில் பெரும்பான்மையினர் கயவர்களின் பின்னால்!

மனிதன் சபல புத்தியுடையவனாகவும், பலகீனமாகவும் படைக்கப்பட்டுள்ளான். அதே சமயம் அவனது சுய புத்தியில் அபார நம்பிக்கையுடையவனாகவும் இருக்கின்றான். தன் புத்தியில் நல்லவையாகப்படுபவை அனைத்தையும் உறுதியாக நம்பி செயல்பட ஆரம்பித்து விடுகிறான். அவனின் இந்தச் செயல்பாடுகளின் பலனை இந்த உலகில் பார்ப்ப முடிவதில்லையே! நாளை மறுமையில் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றான். 100 வயது கிழவனாக இருந்தாலும் தனது அனுபவத்தின் மூலம் இவ்வுலகில் அச்செயல்பாடுகளின் உண்மை நிலைகளை அறிந்துக் கொள்ள முடியாதே என்பதை எல்லாம் அவன் சிந்திப்பதில்லை. அதனை சிந்தித்துணரும் ஆற்றல் அவனுக்கில்லை. அதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான் .
 
நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை விரும்பலாம். ஆனால் அது உனக்கு தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். (2:216)
எனவே மார்க்க விஷயத்தில் அவனது சுய சிந்தனையைத் தூக்கி எறிந்து விட்டு அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே செயல்படுத்தினால் மட்டுமே அவனுக்கு மறுமையில் வெற்றியுண்டு.
ஆதம்(அலை) அவர்கள் மனித வர்க்கத்தினரிலே ஓரளவு மறு உலக அனுபவம் பெற்றவர்கள், சுவர்க்கத்தில் வாழ்ந்தவர்கள் ஷைத்தானின் சேட்டைகளை நேரடியாகக் கண்டு அவற்றின் விளைவுகளையும் அனுபவித்து பெரும் துன்பப்பட்டு சீரழிந்து பின் சீர் பெற்றவர்கள். அப்படிப்பட்ட ஆதம்(அலை) அவர்களைக் கூட இவ்வுலகில் வந்து தன் சுயபுத்தியைக் கொண்டு நல்லது கெட்டதைத் தீர்மானித்து வாழும்படி அல்லாஹ் அனுமதிக்கவில்லை; தனது வழிகாட்டலின்படி மட்டுமே இவ்வுலகில் வாழ வேண்டும். அப்படி வாழ்பவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும். அவர்களுக்குப் பயமோ துக்கமோ இல்லை. அதற்கு மாறாக அல்லாஹ்வின் வழிகாட்டலை விட தங்களின் சொந்த புத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்வுலகில் வாழ்பவர்கள் தோல்வியடைந்து நரகைச் சேர்வார்கள். அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள் என அல்லாஹ் தெளிவாகவே அறிவித்து விட்டான். அவ்வசனங்கள் வருமாறு:

Wednesday, September 5, 2012

சத்தியம் செய்ய தயாரா? ஹைதர் அலி ஆலிம் அழைப்பு

அல்லாஹ்வின்திருப்பெயரால்...
 
சத்தியம் செய்ய தயாரா? சம்சுல் இஸ்லாம் சங்கத்தினருக்கு மௌலவி ஹைதர்அலி ஆலிம் அழைப்பு:
 
மௌலவி ஹைதர் அலி ஆலிம் அவர்கள், தன் மீது சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் பொய்யான குற்ற்ச்சாட்டுக்களை கூறி வருவதில் மிகவும் மன வேதனை அடைந்து, நேற்று (04.09.12) இஷாவுக்குப்பின் சித்தீக் பள்ளியில் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்குட்பட்ட ஜமாத்தார்கள் முன்னிலையில்  கீழ்கண்டவாறு அறிவித்தார்கள்:
 

அதிரையில் உள்ள ஏதாவது ஒரு ஜும்'ஆ பள்ளியில் வெள்ளிக்கிழமை அஸருக்குப்பின் குத்பா மேடையில் ஒளுவுடன் ஏறி நின்று, " நான் என் வீடு தேடி வந்த சம்சுல் இஸ்லாம் சங்கத்தினரை அவமதிக்கவுமில்லை, அந்த எண்ணம் இலட்சத்தில் ஒரு பாகம் கூட என் உள்ளத்திலும் இல்லை, மேலும் நான் எந்த இயக்கத்தினருடன் சேர்ந்து கொண்டு ஊர்ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கவுமில்லை, ஊரை பிரிக்கவேண்டுமென்ற எண்ணம் சிறிதும் என் மனதில் இல்லை. நான் சொல்வதுபொய்யானால் எல்லாம் வல்ல அல்லாஹ் என்னை அழித்து விடுவானாக என்று சத்தியம் செய்யதயாராக இருக்கிறேன்.
 
அதுபோல், என் மீது குற்றம் சுமத்தும் என் வீடு தேடிவந்த சம்சுல் இஸ்லாம் சங்கத்தினரும் முன் வந்து "ஹைதர் அலி ஆலிம் எங்களை அவமதித்தார், இயக்க இளைஞர்களுடன் சேர்ந்து கொண்டு ஊரை பிரிக்க முயற்சிக்கிறார், நாங்கள் உண்மையை தான் சொல்கிறோம், மாறாக நாங்கள் சொல்வது பொய்யென்றால்  எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களை அழித்துவிடுவானாக "என்று என்னை போல் குத்பா மேடையில் ஏறி சத்தியம் செய்ய வேண்டும்.
 
Thanks to: Mk Aboobacker

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் விளக்கம்!

அஸ்ஸலாமுஅலைக்கும்.

நமதூர் அதிராம்பட்டினம், மார்க்க ரீதியிலும் இந்தியச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டும் வாழும் மக்களைக் கொண்ட ஊராக இருந்து வருகிறது. நமதூரில் நடக்கும் நிகழ்வுகளில் தேவையானபோது தலையிட்டு, மார்க்க ரீதியிலும் நம் நாட்டுச் சட்ட ரீதியிலும் தீர்வுகளை வழங்க நமது முன்னோர்களால் தோற்றுவிக்கப்பட்ட சம்சுல் இஸ்லாம் சங்கம் கடந்த 92ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.


உள்ளூர் முஸ்லிம் குடும்பங்களிடையே ஏற்படும் சிவில் விவகாரங்களில், குறிப்பாக திருமணம், விவாகரத்து, சொத்துப் பங்கீடு போன்றவற்றில் மார்க்க அறிஞர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்றுத் தீர்வுகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், நமதூருக்கு மார்க்கச் சொற்பொழிவுக்காக சித்தார்கோட்டையிலிருந்து அழைத்துவரப்பட்ட கண்ணியத்திற்குரிய ஹைதர் அலி ஆலிம் நமது உள்ளூர் நடவடிக்கைகளுக்கு ஊறு விளைக்கும்படியாக இயக்க சார்பு இளைஞர்களைத் தூண்டி விட்டதால் எழுந்துள்ள அமைதியின்மைக்குத் தீர்வு காண வேண்டியும், அவர் வசிக்கும் பகுதி ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவின் எல்லைக்குள் இருக்கும் காரணத்தாலும், கடந்த 28 ஆம் தேதி அன்று ஷம்சுல் இஸ்லாம் சங்கதிற்கு நேரில் வந்து விளக்கம் தரும்படிக் கோரப்பட்டது.

ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கும் தக்வா பள்ளி செயலாளருக்கும் இடையே வழக்கு நடந்து வருவதாலும், பொதுவில் பேசுவது வழக்கைப் பாதிக்கும் என்பதாலும், தன்னால் கலந்து கொள்ள முடியாதென்றும் தெரிவித்த நிலையில், 29அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் ஹைதர் அலி ஆலிம் அவர்களது வீட்டிலேயே சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றபோது, வீடு தேடி வந்தவர்களை முகமன் கூறிச் சந்திக்கும் இஸ்லாமியப் பண்பாடின்றி, சுமார் 10-20 நிமிடங்கள் வீட்டுக்கு வெளியே காத்திருக்க வைத்துவிட்டு, "சித்தீக் பள்ளியில் போய் இருங்கள், பேசலாம்" என்று தெரிவித்தார்.

அவ்வாறே, சங்க நிர்வாகிகளும் சித்தீக் பள்ளிக்குச் சென்றபோது, இயக்க சார்பு இளைஞர்களையும் உடன் வைத்துக்கொண்டு "இப்போது பேசலாம்" என்று சொன்னார். அதற்கு சங்க நிர்வாகிகள், “இயக்க சார்பு இளைஞர்களை வரவழைத்துக் கொண்டு சங்க நிர்வாகிகளுடன் பேச விரும்புவது சரியல்ல. வெளியூரிலிருந்து எத்தனையோ ஆலிம்கள் கற்கவும், கற்றுக் கொடுக்கவும் வந்துள்ளனர். ஆனால், உங்களைப் போன்று இயக்க சார்பு இளைஞர்களுடன் இணைந்து முஹல்லா சங்கத்தையும் அதன் நிர்வாகிகளான உள்ளூர் பிரமுகர்களையும் அவமதித்ததில்லை” என்று சொல்லி, அவருடன் பேசாமல் திரும்பி விட்டனர்.

அதிரையில் பல்வேறு அரசியல் கட்சி சார்பு இயக்கங்களும் சமுதாய இயக்கங்களும் இயங்கி வந்தாலும், உள்ளூர் அமைதிக்கு ஊறு விளைக்கும் அசாதாரண நடவடிக்கைகளின்போதும் சட்ட ரீதியான வழிமுறைகளில் தலையிட்டுத் தீர்வு காணும் அதிரை முஸ்லிம்களின் அங்கீகாரம் பெற்ற முஹல்லா சங்கங்களில் ஷம்சுல் இஸ்லாம் சங்கமும் ஒன்று. அவ்வகையில், ஜனாப் ஹைதர் அலி ஆலிம் மற்றும் தக்வா பள்ளி கமிட்டியிடையே ஏற்பட்டுள்ள வழக்கு காரணமாக ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அமைதியின்மை ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையில், இப்பகுதிக்குட்பட்ட ஆயிஷா மகளிர் மன்றத்தில் நடந்துவந்த ஜனாப். ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயானை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என முடிவெடுக்கப்பட்டது.

உள்ளூர் நடவடிக்கைகளில் பொறுப்புள்ள முஹல்லா சங்கத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட நடவடிக்கையே இது. ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்களைப் போன்ற தகுதியுடைய உள்ளூர் மார்க்க அறிஞர்களைஆலோசகர்களாகக் கொண்டுள்ள ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஊர் சார்ந்த நடவடிக்கைகளில் தனி நபர்கள் தலையிடுவது, முஹல்லாவாசிகளை அவமதிக்கும் செயலாகும். முஹல்லாவுடைய கட்டுப்பாடு மற்றும் அமைதிக்கு ஊறு விளைக்கும் எத்தகைய நடவடிக்கையையும் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தேவையெனில், மார்க்கம் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் என்பதையும் முஹல்லாவாசிகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

***********

கீழ்கண்ட விளக்கங்கள் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்களுக்கும், விளக்கம் வேண்டுபவர்களுக்கும் போதுமானதாக இருக்கும் என்றும் நம்புகிறோம்:


1) ஹைதர் அலி ஆலிம் சித்தீக் பள்ளி சொத்து விவகாரத்தில்தலையிட்டதற்காகவா அவர்மீது நடவடிக்கை?

இல்லை. மேலுள்ள விளக்கத்தில் 2,3 & 4 ஆம் பத்திகளில் சொல்லப்பட்ட காரணங்களுக்காகவும், முஹல்லா சங்க நிர்வாகிகளை அவமதித்து, உள்ளூர் இளைஞர்களைத் தூண்டியதற்காகவுமே ஆயிஷா மகளிர் மன்றத்தில் அவரது பயான் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேற்கொண்டு தவறான பிரச்சாரங்களைப் பரப்பாமலிருக்க பெரிய ஜும்ஆ பள்ளி நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

2) ஹைதர் அலி ஆலிம் அவர்களை ஊரைவிட்டு வெளியேறும்படி சங்கம் நிர்ப்பந்தித்ததா?

இல்லை. பிரச்சினை பெரிதாகாமலிருக்க பொதுவில் பயான் செய்வதற்கு மட்டுமே தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இது பொது அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும், பிரச்சினை மேலும் வலுக்காமல் இருக்கவும் எடுக்கப்பட்ட சங்கத்தின் அதிகார வரம்புக்குட்பட்ட நடவடிக்கையே அன்றி,தனி நபர் மீதான வெளியேற்றும் நடவடிக்கை அல்ல.

3) சம்சுல் இஸ்லாம் சங்கம் ஹைதர் அலி ஆலிமை அவமதித்ததா?

இல்லை. மேலே 2 & 3 ஆம் பத்திகளில் சொன்னபடி, அவரது விளக்கம் பெறும் நோக்கத்தில் கண்ணியமாக அழைக்கப்பட்டதை அவர் ஒவ்வாத காரணங்களைச் சொல்லி மறுத்ததால், பொதுவில் அவருக்கு சங்கடம் ஏற்படாமலிருக்க, அவரது இல்லத்திற்குச் சென்ற உள்ளூர் முக்கியஸ்தர்களான சங்க நிர்வாகிகளைச் சந்திக்காமல் அவர்தான் அவமதித்தார். மேலும், ஜனாப். ஹைதர் அலி ஆலிம் அவர்களை அதிரைக்கு அழைத்து வந்து, அதன் முஹல்லாவுக்குட்பட்ட சித்தீக் பள்ளி, தக்வா பள்ளி மற்றும் இமாம் ஷாஃபி பள்ளிகளில் பொறுப்பான பதவிகளைக் கொடுத்து கண்ணியப்படுத்தியதும் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்டவர்களே.

4) மார்க்க அறிஞரின் பயானைத் தடுப்பது சரியா?

சில அசாதாரண சந்தர்ப்பங்களில் மஷ்வரா அடிப்படையில் எடுக்கப்படும் அவசர நடவடிக்கையின்படி இது சரியே.

5) ஹைதர் அலி ஆலிமின் பயான்களால் நமதூர் மக்களிடம் மார்க்க விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதே?

ஓரளவு உண்மையே. எனினும், அல்லாஹ் - ரசூல் (ஸல்) அவர்களின் போதனைகளை எடுத்துச் சொல்லும் பல அறிஞர்களும் பேச்சாளர்களும் அதிரையில் உளர். அவர்களை முறையாகப் பயன்படுத்தி இருந்தாலும் அத்தகைய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இன்ஷா அல்லாஹ் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் இவ்விசயத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்தும்.


6) சித்தீக் பள்ளி சொத்து விவகாரத்திற்காக ஹைதர் அலி ஆலிமை பலி கடாவாக்குவது நியாயமா?


ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கும் எத்தகைய விரோதமும் இல்லை. சித்திக் பள்ளி சொத்து விவகாரத்தை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திடம் ஒப்படைத்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சியபடி, உலமாக்களின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முயற்சி செய்வோம்.

7) ஹைதர் அலி ஆலிம் அவர்கள்மீது வழக்குத் தொடுத்தவர் மீது சங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?


இரு தரப்பிற்கும் இடையே நீதிமன்ற வழக்கு நிலுவையிலிருக்கும்போது முஹல்லா சங்கம் சமாதான நடவடிக்கையில் மட்டுமே ஈடுபட முடியும். அவ்வகையில்தான் இரு தரப்பையும் சுமூகமாகப் பேச வைத்துப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் முதலில் ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் சங்கத்திற்கு அழைக்கப்பட்டதும், வர மறுத்தபோது நிர்வாகிகள் அவரது இல்லத்திற்குச் சென்றதும் நடந்தது. ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் நிர்வாகிகளை அவமதிக்காமல் ஒத்துழைத்திருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சியபடி நியாயமான தீர்வு எடுக்கப்பட்டிருக்கும்.


மேலும், சம்பத்தப்பட்ட நபரிடமும் பேசியுள்ளோம், கேசைத் திரும்பப் பெறும்படியும் கூறியுள்ளோம், ஆனால் இது இருட்டடிப்புச் செய்யப்பட்டு, மக்கள் மத்தியில் குழப்பம் விளைவிக்கும் எவராக இருந்தாலும் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

******************

அன்பிற்குரியவர்களே! நமதூர் அதிராம்பட்டினம் உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் பிழைப்பு தேடிவந்த பலரை ஆதரித்தும், கண்ணியப்படுத்தியுமே வந்துள்ளது. கண்ணியத்துக்குரிய ஆலிம்கள் மட்டுமின்றி, ஆசிரியர்கள் மற்றும் வணிகர்கள் என்ற பாகுபாடின்றி அனைவரையும் ஆதரித்து வருகிறோம். எனினும், அவர்கள் எல்லோரும் முஹல்லா ஜமாத்துகளுக்குக் கட்டுப்பட்டவர்களாகவே இருந்து வருகின்றனர்.

ஜனாப். ஹைதர் அலி ஆலிம் அவர்கள் சில வருடங்களாக நமதூர் உலமாக்களின் எத்தகைய ஆலோசனையையும் ஏற்காமல், தன்னிச்சையாகச் செயல்படுவதோடு, சித்தீக் பள்ளியின் சொத்து விவகாரத்தில் இன்னொரு முஹல்லா இளைஞர்களை அழைத்துவந்து அமைதியின்மையை ஏற்படுத்தியதை அனைவரும் அறிவர். அப்பகுதியில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் செயல்பட்டுவரும் நிலையில் உள்ளூர் நடவடிக்கையில் ஹைதர் அலி ஆலிம் செயல்பட்டது வரம்புமீறிய நடவடிக்கை என்பதோடு முஹல்லாவாசிகளின் உணர்வுகளைப் பொருட்படுத்தாத தன்னிச்சையான போக்கு என்பதையும் கவனத்தில் கொண்டு, சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஊர் நன்மை நாடிய நடவடிக்கைகளுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை நேரிலோ அல்லது எழுத்துப் பூர்வமாகவோ வழங்குவதே நன்மை பயக்கும்.

அவ்வகையில், பரபரப்பாகச் செய்தி வெளியிடுகிறோம் என்ற ஆர்வத்தில் வலைத்தளம் மற்றும் இணையதளங்களில் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் பதிவுகளும் தனிநபர் தளங்களும் சட்ட நடவடிக்கைக்குட்பட்டது என்பதை உணர்ந்து பொறுப்பாகச் செயல்படும்படி வேண்டுகிறோம். இவ்விசயம் தொடர்பாக மேலதிக விளக்கம் வேண்டுவோர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

இப்படிக்கு,
ஷம்சுல் இஸ்லாம் சங்கம்
நிர்வாகம் – அதிரை

மீள்பதிவு

Tuesday, September 4, 2012

அன்புக்குறிய‌ அதிரை முஸ்லிம் சகோதர, ச‌கோத‌ரிகளுக்கு‏

அஸ்ஸ‌லாமு அலைக்கும் வ‌ர‌ஹ்ம‌த்துல்லாஹி வ‌ப‌ர‌காத்துஹு....

அன்புக்குறிய‌ அதிரை முஸ்லிம் சகோதர, ச‌கோத‌ரிகளுக்கு

க‌ட‌ந்த சில‌ தின‌ங்க‌ளாக ந‌ட‌ந்து வ‌ரும் பிர‌ச்சனைக‌ளின் அடிப்படைகளையும் அத‌ன் காரண‌ங்க‌ளையும் சிந்திக்கும்போது அல்லாஹ் ஸுபுஹான‌ஹு வதாஆலா ஸூரா அன்க‌பூத் அத்தியாய‌த்தில் பின்வ‌ரும் ஆய‌த்துக‌ளில் ந‌ம்மை எச்ச‌ரிக்கும் விஷ‌ய‌ங்க‌ளையும் ஆராய்வ‌து ந‌ம்மீது அவ‌சிய‌மாக‌ இருக்கிற‌து.

அல்லாஹ் கூறுகிறான்....
أَحَسِبَ النَّاسُ أَن يُتْرَكُوا أَن يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ
29:2. “நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம் என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?

وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ ۖ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ
29:3. நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் - ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான்.

أَمْ حَسِبَ الَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ أَن يَسْبِقُونَا ۚ سَاءَ مَا يَحْكُمُونَ
29:4. அல்லது: தீமை செய்கிறார்களே அவர்கள் நம்மைவிட்டும் தாங்கள் தப்பிக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் (அவ்வாறு)தீர்மானித்துக் கொண்டது மிகவும் கெட்டது.

مَن كَانَ يَرْجُو لِقَاءَ اللَّهِ فَإِنَّ أَجَلَ اللَّهِ لَآتٍ ۚ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
29:5. எவர் அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று நம்புகிறார்களோ அவர்கள் (அதற்காக நல்ல அமல்களைச் செய்து கொள்ளட்டும்); ஏனெனில் அல்லாஹ்(அதற்காகக் குறித்துள்ள) தவணை நிச்சயமாக வருவதாக இருக்கிறது; அவன் (யாவற்றையும்)செவியேற்பவனாகவும், நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.

وَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَلَيَعْلَمَنَّ الْمُنَافِقِينَ
29:11. அன்றியும், நம்பிக்கை கொண்டவர்களை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்; நயவஞ்சகர்களையும், அவன் நிச்சயமாக நன்கறிவான்.

இன்று ந‌ட‌க்கும் பிர‌ச்ச‌னைக‌ள் அனைத்தும் ந‌ன்மைக்கும் தீமைக்கும் ந‌ட‌க்கும் போராட்ட‌மாகும். ஷைத்தானிய‌ கொடியை தூக்குவோருக்கும் அல்லாஹ்வின் கொடியைத் தூக்குவோருக்கும் ந‌ட‌க்கும் பிர‌ச்ச‌னையாகும்.வ‌ண‌க்கம் அல்லாஹ்வுக்கு ம‌ட்டுமே சொந்த‌ம்,அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் எந்த‌ இடைத்த‌ர‌க‌ர்க‌ளும் இல்லை என்று கூருவோருக்கும் , இல்லை வ‌ண‌க்க‌ம் என்ப‌து அல்லாஹ்வுட‌ன் ம‌ற்ற‌வ‌ர்க‌ளையும் வ‌ணங்குவ‌து அட‌க்க‌ம் என்றும் அத‌ற்காக எங்க‌ளை இட‌த்த‌ரக‌ர்க‌ளாக‌ ஆக்கி எங்க‌ளுக்கு கூலி த‌ர‌வேண்டும் என்று கொடி தூக்கி இருக்கும் கோஷ்டிக்கும் ந‌ட‌க்கும் போராட்ட‌மாகும்.

துர‌திஷ்ட‌வ‌ச‌மாக சில‌ ந‌ல்ல‌ முஸ்லிம் ச‌கோத‌ர‌ர்க‌ள், ச‌ங்க பொருப்பாள‌ர்க‌ள், ஊர்ம‌க்க‌ள் நன்ன‌ம்பிக்கையுட‌ன் தேர்ந்தெடுத்த‌ ப‌த‌வியில் இருக்கும் பொருப்பாள‌ர்க‌ள் ஷைத்தானின் வ‌லையில் சிக்கி ந‌ய‌வ‌ஞ்ச‌க‌ர்க‌ளின் பேச்சை ந‌ம்பி அவ‌ர்க‌ளுக்கு ஒத்தாசையாக‌ இருப்பது மிக‌வும் வ‌ருந்த‌த்த‌க்க‌து.

இத்த‌கைய‌ வ‌லையில் சிக்கிக்கொண்ட‌ ந‌ல்ல‌ ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கு நாம் சொல்வ‌தெல்லாம் "அன்புக்குறிய ச‌கோத‌ர‌ர்க‌ளே மேற்க‌ண்ட‌ அல்லாஹ்வின் ஆய‌த்துக்க‌ளை ந‌ன்கு ப‌டித்து சிந்தித்துப்பாருங்க‌ள்.நீங்க‌ள் எந்த‌ நிலையில் யாருட‌ன் இருக்கிரீர்க‌ள் என்ப‌தை உங்க‌ளுடைய‌ நெஞ்சில் கை வைத்து உங்க‌ளிட‌மே கேளுங்க‌ள்."

உங்க‌ளை அல்லாஹ் சோதிக்கிறான் என்ப‌தை நீங்க‌ள் அறிய‌வில்லையா? நீங்க‌ள் உண்மையாள‌ர்க‌ளுட‌ன் இருக்கிறீர்க‌ளா, அல்ல‌து அல்லாஹ்வுக்கு எதிரான‌ போர்செய்யத் துடிக்கும் ந‌ய‌வ‌ஞ்ச‌க‌ர்க‌ளுட‌ன் இருக்கிறீர்க‌ளா என்ப‌தை அல்லாஹ் இந்த‌ சோத‌னையின் மூல‌ம் வெளிப்ப‌டுத்த‌ப் போகிறான் என்ப‌தை நீங்க‌ள் என்னிப்பார்க்க‌வில்லையா?

உல‌மாக்க‌ள் என்ற‌ போர்வையில் த‌ங்க‌ள் குடும்ப‌ க‌வுர‌வ‌ம் காப்ப‌த‌ற்காக‌ குர் ஆனை த‌ங்க‌ளுக்கு சாத‌க‌மாக‌ வ‌லைக்க‌ முனையும் சில‌ போலிமூசாக்க‌ளுக்கு நாம் கூறுவ‌து " நீங்க‌ள் ம‌க்க‌ளை வ‌ழிகெடுக்கும் ச‌திக‌ளை இத்துட‌ன் நிறுத்தாவிட்டால் அல்லாஹ்வின் த‌ண்ட‌னைக்காக‌ காத்திருங்க‌ள்"

அனைத்து முஸ்லிம் ச‌கோத‌ர‌ர்க‌ள், ச‌கோத‌ரிக‌ள் ரஸூலுல்லாஹ்(ஸ‌ல்)அவ‌ர்க‌ள் கால‌த்தில் ந‌டந்த‌ இந்த‌ விஷ‌யத்தை சிந்திக்க‌ வேண்டுகிறோம்.

ம‌தீனாவிலிருந்து வெளியூருக்கு ரஸூலுல்லாஹ்வுட‌ன்(ஸ‌ல்) அன்ஸாரி ஸ‌ஹாபாக்களும் முஹாஜிர் ஸ‌ஹாபாக்க‌ளும் சென்றிருக்கும்போது சிறிய‌ பிர‌ச்ச‌னையின் கார‌ண‌மாக‌ ஒரு அன்ஸாரி ஸ‌ஹாபி ம‌ற்ற அன்ஸாரி ஸ‌ஹாபாக்க‌ளை த‌ன‌க்கு ஆத‌ர‌வாக‌வும் முஹாஜிர் ஸ‌ஹாபி ம‌ற்ற‌ முஹாஜிர் ஸ‌ஹாபாக்க‌ளை த‌ன‌க்கு ஆத‌ர‌வாக‌வும் அழைக்க‌ பெரும் பிர‌ச்சனை உருவாக‌ இருந்த‌ நிலையில் ரஸூலுல்லாஹ்(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் அறிந்த‌வுடன் விரைந்து அங்கு சென்று அவ‌ர்க‌ளிட‌ம் கேட்டார்க‌ள் أبدعوى الجاهلية وأنا بين ظهرانيكم இஸ்லாத்திற்கு முந்தைய‌ இருண்ட‌ அறியாமைக்கால‌த்தின் செய‌லான‌ இன‌,குடும்ப, கோத்திர‌ வாத‌த்தையா செய‌ல்படுத்த‌ முனைகிறீர்க‌ள் என்று வ‌ண்மையாக‌ க‌ண்டித்தார்க‌ள்.

இன்று இந்த‌ இர‌ட்டை வேட‌க்கார‌ர்க‌ள் கூறுவது போல் வெளியூர் ம‌னித‌ர் ந‌ம் ஊரில் பிர‌ச்சார‌ம் செய்ய‌க்கூடாது என்ப‌தை ஒரு விவாத‌த்திற்காக‌ ஏற்றுக்கொண்டால், இஸ்லாம் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ மைல்களுக்கு அப்பாலிருந்து இங்கு வ‌ந்திருக்க வாய்ப்பில்லை. இன்று அந்த‌ ஸஹாப‌ப்பெரும‌க்கள் வ‌ந்தால் இந்த‌ ந‌ய‌வ‌ஞ்ச‌க‌ர்க‌ள் தாயிப் ந‌க‌ர‌த்து ம‌க்க‌ள் ரஸூலுல்லாஹ்(ஸ‌ல்) மீது க‌ல்லெறிந்த‌து போன்று எறிவார்க‌ளா? அல்ல‌து ப‌னூ ஹ‌னீபா என்ற‌ கோத்திர‌த்தைச்சார்ந்த‌ முஸைல‌மா என்ற பொய்ய‌ன் பனூ ஹ‌னீபா கோத்திர‌, இன‌ வாத‌த்தை தூன்டி ரஸூலுல்லாஹ் மீதும் ஸ‌ஹாபாக்கள் மீதும் போர் தொடுத்து ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ஸஹாபாக்களை கொன்ற‌து போன்று கொல்வார்க‌ளா?

நம் ஊர் ம‌க்க‌ள் எத்த‌னை நாடுக‌ளில் ப‌ர‌வி வேலை செய்கிறார்க‌ள்? ஏன் இந்த‌ இர‌ட்டை வேட‌க்கார‌ர்களின் குடும்பத்தில் எத்த‌னை பேர் எத்த‌னை பேர் சிறிலங்கா மற்றும் பல்வேறு நாடுக‌ளில் இமாம்களாக இருந்துக்கொண்டு அடிப்படை வாழ்வாதாரத்தை பூர்த்திசெய்த வண்ணம் வாழ்கின்றனரா இல்லையா? சிந்திக்க வேண்டாமா? பாரம்பரியம் பெருமை பேசும் இவர்களிடம் கைகூலி பெற்றுகொண்டு சத்தியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ய சொல்கின்றனரா?

ஊர் ச‌ங்க‌ நிர்வாகிக‌ள், மற்றும் அதிகார பத‌வியில் இருப்ப‌வ‌ர்களுக்கு

உங்க‌ளுக்கு அல்லாஹ் பத‌வியைத் த‌ந்திருக்கிறான் என்ப‌த‌ற்காக‌ நீங்க‌ள் அத‌னை துஷ்பிர‌யோக‌ம் செய்ய‌ முனையாதீர்க‌ள்.உங்க‌ளை விட‌வும் மிக‌ப்பெரும் ப‌த‌வியை பிர அவ்ன், ந‌ம்ரூதுக்கு அல்லாஹ் கொடுத்தான். அவ‌ர்க‌ள் அத‌னை துஷ்பிர‌யோக‌ம் செய்த‌தின் கார‌ண‌மாக‌ ந‌ம்ரூத் செருப்பால் அடிக்க‌ப்ப‌ட்டு கொல்ல‌ப்பட்டான் என்பதை நாம் கேள்விப்பட்டு இருக்கின்றோம். நம் கண்முன்னே லிபியாவின் கடாபி உங்க‌ளை விட‌வும் இல‌ட்ச‌க்க‌ண‌க்கில் உய‌ர்ந்த‌ ப‌த‌வியை, ஆப்ரிக்காவின் மிக‌ப்பெறிய எண்ணை வ‌ள‌ம்மிக்க‌ நாட்டின் அதிகார‌த்தை 40 வ‌ருட‌ங்களாக‌ கொடுக்க‌ப்ப‌ட்டிருந்து அத‌னை துஷ்பிர‌யோக‌ம் செய்து உண்மையான உல‌மாக்க‌ளை கொடுமைப்ப‌டுத்திய‌தின் கார‌ண‌மாக‌ அல்லாஹ் க‌டாபியின் முடிவை எப்ப‌டி ஆக்கினான் என்ப‌தை நாம் க‌ண்கூடாக‌ க‌ண்டோம். செருப்பால் அடித்துக் கொல்ல‌ப்ப‌ட்டு அவ‌ன் ச‌ட‌ல‌த்தை இரைச்சிகள் பாதுகாக்க‌ப்ப‌டும் அரையில் 7 நாட்க‌ளுக்கும் மேலாக‌ வைக்க‌ப்ப‌ட்டு கேவ‌ல‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டான். இத்த‌கைய‌ நிலைக்கு உங்க‌ளை நீங்க‌லே அறியாம‌ல் ஷைத்தான் கொண்டு போகும்முன் உங்க‌ளை பாதுகாத்துக்கொள்ளுங்க‌ள்.

த‌ப்லீக் ஜ‌மாஅத் ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கு

இந்த‌ ந‌ய‌வ‌ஞ்ச‌க‌ர்க‌ள் இப்பொழுது வெற்றிய‌டைந்தால் நாளை வெளியூர்க‌ளிலிருந்து ஜமாஅத் வ‌ருவ‌தை த‌டை செய்ய முனைவார்க‌ள். இப்ப‌டித்தான் அவ‌ர்க‌ளை ஷைத்தான் அவ‌ர்க‌ளை ம‌ண் தின்னும் வரை கொண்டு செல்வான். இத‌ன் கார‌ண‌மாக‌ நீங்க‌ளும் ஜ‌மா அத்தில் வெளியூர் செல்வ‌தை த‌டை செய்ய‌லாம். வெளியூர்கார‌ர்க‌ள் இங்கு பிரச்சார‌ம் செய்ய‌க்கூடாது என்ற‌ அதே விவாத‌த்தை முன்வைப்பார்க‌ள்

மேண்மைக்குறிய‌ உண்மையான உல‌மாக்க‌ளுக்கு.

இந்த‌ க‌ப‌ட‌தாரிக‌ள் நாளை வெளியூர் இமாம்க‌ளை நாங்க‌ள் பின்ப‌ற்ற‌மாட்டோம். ஷாஃபி, ஹ‌ன‌ஃபி எல்லாம் வெளி நாடு. என‌வே உள்ளூர் "குட்டி" ஷ‌த்தான்களைத் தான் நாங்க‌ள் இமாம்க‌ளாக‌ பின்ப‌ற்றுவோம் என்று கூறுவ‌து வெகு தூர‌த்தில் இல்லை. ஏன் இன்னும் ஒருப‌டி மேலே சென்று இஸ்லாத்தை வெளி நாட்டிலிருந்து வ‌ந்த‌ ம‌த‌ம் என்று பாசிச‌ வாதிக‌ள் கூறுவ‌து போன்று கூறி, உள்ளூர் "குட்டி"ஷைத்தானிய‌ ம‌த‌ங்க‌ளை பிரச்சார‌ம் செய்ய முனைய‌லாம். க‌ம்யூனிச நாடுக‌ளில் இஸ்லாமிய‌ பெய‌ர் வைப்ப‌தை த‌டை செய்த‌து போன்று த‌டை செய்து மாட‌சாமி, குப்புசாமி என்று த‌ங்க‌ள் பெய‌ர்க‌ளை மாற்றிக்கொண்டாலும் ஆச்ச‌ரிய‌த்திற்கில்லை.

முனாபிக்குக‌ளுட‌ன் சேர்ந்து சூழ்ச்சி செய்யும் போலி(ஆலி)மூசாக்க‌ளுக்கு

நீங்க‌ள் உட‌னே அல்லாஹ்விட‌ம் த‌வ்பாச் செய்து மீளுங்க‌ள். முனாஃபிக்குக‌ளுட‌ன் சேர்ந்து என்ன‌ வ‌ழ‌க்கு தொடுக்க‌லாம் எப்படி ந‌ல்ல‌ உல‌மாக்க‌ளை ப‌லிவாங்க‌ளாம் என்று சூழ்ச்சி செய்வ‌தை உட‌ன‌டியாக‌ நிருத்துங்க‌ள்.இல்லையெனில் எங்க‌ள் இர‌ட்ச‌க‌ன் கூறுவ‌தையே உங்க‌ளுக்கு கூறுகிறோம்.

أَفَأَمِنَ الَّذِينَ مَكَرُوا السَّيِّئَاتِ أَن يَخْسِفَ اللَّهُ بِهِمُ الْأَرْضَ أَوْ يَأْتِيَهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ أَوْ يَأْخُذَهُمْ فِي تَقَلُّبِهِمْ فَمَا هُم بِمُعْجِزِينَ أَوْ يَأْخُذَهُمْ عَلَىٰ تَخَوُّفٍ…………
16:45.

தீமையான சூழ்ச்சிகளைச் செய்யும் அவர்களைப் பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்யமாட்டான் என்றோ, அல்லது அவர்கள் அறியாப்புறத்திலிருந்து அவர்களை வேதனை வந்து அடையாதென்றோ அவர்கள் அச்சந்தீர்ந்து இருக்கின்றார்களா?

16:46. அல்லது அவர்களின் போக்குவரத்தின்போதே (அல்லாஹ்) அவர்களைப் பிடிக்க மாட்டான் (என்று அச்சமற்றவர்களாக இருக்கிறார்களா? அல்லாஹ் அவ்வாறுசெய்தால் அவனை) அவர்கள் இயலாமலாக்க முடியாது.

16:47. அல்லது. அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கும் பொழுதே (அல்லாஹ்) அவர்களைப் பிடிக்கமாட்டான் (என்று அச்சமற்றவர்களாக இருக்கிறார்களா?) ...........

த‌ங்க‌ள் முன்னோர்க‌ள் செய்த‌ த‌வ‌றுக‌ளை நியாய‌ப்ப‌டுத்த‌ முனைந்து வ‌ழிகேட்டில் விழுந்த‌ ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கு

உங்க‌ள் முன்னோர்க‌ள் அறிந்தோ அறியாம‌லோ செய்த‌ த‌வ‌றுக‌ளை நியாய‌ப்ப‌டுத்த‌ முனைந்து உங்க‌ளை அறியாம‌ல் அல்லாஹ்வுக்கு எதிராக‌ போர் தொடுக்க‌ முனைந்து விட்டீர்க‌ள். இன்று இந்த‌ அதிரை ம‌க்க‌ள் முன்பு வேண்டுமானால் நீங்க‌ள் உங்க‌ள் முன்னோர்க‌ள் பள்ளி நில‌த்தை திருட‌வில்லை என்ப‌தை நிரூபிக்க‌ முனைய‌லாம். ஆனால் நாளை ம‌றுமை நாளில் அனைத்து ப‌டைப்புக‌ளுக்கும். கோடான‌ கோடி ம‌க்க‌ளுக்கும் முன்னாள் அல்லாஹ்வின் முன்பு என்ன‌ விவாத‌த்தை உங்களால் முன்வைக்க‌ முடியும்? நீங்க‌ள் இப்பொழுது செய்யும் த‌வ‌றை நிருத்தி அல்லாஹ்விட‌ம் த‌வ்பாச் செய்து த‌வ‌று செய்த‌ உங்க‌ள் முன்னோர்க‌ளுக்காக பாவ‌ம‌ன்னிப்பு தேடுங்க‌ள்,அவ‌ர்க‌ளுக்காக‌ ஸ‌தக்கா செய்யுங்க‌ள். அவ‌ர்க‌ள் ஆக்கிர‌மித்த சொத்துக்க‌ளை மீட்டு அல்லாஹ்வின் ப‌ள்ளிவாச‌ல்க‌ளில் ஒப்ப‌டையுங்க‌ள். இதுதான் நீங்க‌ள் உங்க‌ள் முன்னோர்க‌ளுக்கு செய்யும் மிக‌ப் பெரும் உப‌கார‌மாகும். அவ‌ர்க‌ளை அல்லாஹ்வின் வேத‌னையிலிருந்து காப்பாற்றும் உத‌வியாகும்.
இப்ப‌டிக்கு

அதிரையை கடந்து வெளியூர், வெளிநாடு வாழ்
அதிரை முஸ்லிம்க‌ள், ம‌ற்றும் உல‌மாக்க‌ள் குழு
 
Thanks to: moyousuf
 

Saturday, September 1, 2012

ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு எதிரான சதிகள் அம்பலம்

அன்பான சகோதரர்களே!
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு எதிராக நடைபெற்று வசம் சதிகளை தோலுரித்த செய்திக்கட்டூரை 'ஹைதர் அலீ ஆலிம்சாவை தூக்கு' என்ற தலைப்பில் வெளியானதை வாசித்திருப்பீர்கள்.
 
 
அன்று சொன்னது அர்த்தமுள்ளது என்று நிரூபிக்கும் வகையில் ஹைதர் அலி ஆலிம்சாவுக்கு எதிரான சதிச்செயல்களை அல்லாஹ்வை மறந்து ஆட்டம்போடும் சண்டாளர்கள் பகிரங்கமாக நடத்திட துவங்கியுள்ளனர்.

சதிகள் குறித்து மேலும் விபரங்கள் அறிய நமது சகோதர வலைத்தளமான அதிரை நிருபரில் வெளியாகியுள்ள செய்தியை காண இங்கே சொடுக்குங்கள்.
 
 
அதிரை நிருபரில் வெளியாகியுள்ள மேற்படி செய்தியுடன் நாங்களும் முழுமையான உடன்படுகின்றோம்.

3:54 وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ ۖ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ
3:54. (அவர்கள்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
 

இவண்
அதிரை இஸ்லாமிக் மிஷன்