உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, March 25, 2011

தொழுகை ஒரு தொல்லையா?

உரை:  மௌலவி. (இலங்கை) அப்துல் ஹமீத் (ஷரயி)
2 பாகங்கள்

http://www.srilankamoors.com/Media-centre/THOLUKAI-ORU-THOLLAIYA-CD1.html

இருவார ஜூம்ஆ நிகழ்வுகள் மற்றும் அரங்க நிகழ்ச்சி

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இந்த வார (25.03.2011) ஜூம்ஆவில், சகோதரர் (பொதக்குடி) அப்துல் ஸமது அவர்கள் கலந்து கொண்டு எதார்த்தமான நடையில், நம் வாழ்வின் நடைமுறை வாழ்க்கையில் அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையினுள் தடுமாறி ஷிர்க் கலப்பது எவ்வாறு?, அல்லாஹ்வுடைய இலக்கணம் என்ன? நம் கண் மற்றும் செவிப்புலன்களினூடாக அல்லாஹ்வை எவ்வாறு உணர வேண்டும் என்பது குறித்து நம்முடைய அன்றாட வாழ்விலிருந்து உதாரணங்களை எடுத்துக்கூறி உரை நிகழ்த்தினார்கள்.

சென்ற வார (18.03.2011) ஜூம்ஆவில், சகோதரர் (கீழக்கரை) S.M. புகாரி அவர்கள் கலந்து கொண்டு அல்லாஹ்விடம் முழுமையாக சரணடைதல் என்ற தலைப்பின் கீழ் பல்வேறு சஹாபிப் பெண்களின் வாழ்வுதனை எடுத்துக்கூறி நாம் எவ்வாறு அல்லாஹ்விற்கு முழுமையாக கட்டுப்பட வேண்டுமென உள்ளங்களை உசுப்பும் உரையாற்றினார்கள்.

தொடர்ந்து அன்று மாலை அஸர் முதல் மஃரிப் வரை ALM பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரங்க நிகழ்ச்சியில் சகோதரர் S.M. புகாரி அவர்கள் குழுமியிருந்த ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் நம்மிடையே இடைபுகுந்துள்ள பிற மத தாக்கங்கள், ரஸூல் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியது எது? வெறுத்தது எது? கப்ரு ஜியாரத்திற்கும் தர்கா வழிபாட்டிற்குமிடையேயுள்ள வித்தியாசங்கள் போன்ற ஒப்பீட்டு ஆய்வுரையுடன் நாம் பின்பற்ற வேண்டியது எது என்பதையும் கோடிட்டுவிட்டு அன்மித்துவிட்ட மரணத்தை குறித்தும் எச்சரித்துச் சென்றார்கள்.

அதிரையிலிருந்து
அப்துல் ரஹ்மான் மற்றும் சாகுல்

Thursday, March 17, 2011

இஸ்லாத்தின் பெயரால் கிருஸ்தவ விழாக்கள் - அரங்க நிகழ்ச்சி

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

'எனது உம்மத்தில் ஒரு பிரிவினர் இறைவனின் கட்டளைகள் மீது நின்று கொண்டே இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவன் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்திட இயலாது' என நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இப்னுமாஜா பக்கம் – 1, பக்கம் – 1, ஹதீஸ் எண்: 7.

இன்ஷா அல்லாஹ், 18.03.2011 வெள்ளிக்கிழமை அஸர் முதல் மஃரிப் வரை ALM பள்ளி வளாகத்தில்

சகோதரர் S.M. புகாரி அவர்கள்
இஸ்லாத்தின் பெயரால் கிருஸ்தவ விழாக்கள்
என்ற தலைப்பின் கீழ் மீலாது விளக்கப் பேரூரையாற்றவுள்ளார்கள்.

தீனை கொடுத்து தீனை கெடுத்துக் கொண்டிருக்கும் அத்வைத, பரலேவிகளின் பொய்களை தோலுரிக்கும் அரிய நிகழ்ச்சி அனைவரும் வாரீர் என அன்புடன் அழைக்கின்றது

அதிரை ஜூம்ஆ கமிட்டி

குறிப்பு : பெண்களுக்கு சிறப்பான தனியிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

காலத்தின் தேவை கருதி இறுதி நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் உங்கள் குடும்பத்தினர்கள், நண்பர்கள் என அனைவரும் கலந்து கொள்ளும் வண்ணம் இந்த செய்தியை உடன் பரப்ப வேண்டுகிறோம்.

Saturday, March 12, 2011

இந்த வார (11.03.2011) அதிரை ஜூம்ஆ நிகழ்வுகள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அல்லாஹ்வின் உதவியோடும் அதிரை மக்களின் மகத்தான ஆதரவோடும் CMP LANE பகுதியில் அமைந்துள்ள AL மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்று வரும் அதிரை ஜூம்ஆவின் பிரதான ஹாலிலும் பெண்கள் பகுதியிலும் ஏற்பட்ட இடப்பற்றாக்குறையை சமாளிக்க, கூடுதலாக 'சாமீயானா' பந்தல் போடும் நிலை ஏற்பட்டது, எல்லாப் புகழும் இறைவனுக்கே! என்ற போற்றுதலுடன் ஜூம்ஆ நிகழ்வுக்குள் வருகிறோம்.

இந்த வார ஜூம்ஆவில் முகவைலிருந்து வருகை தந்திருந்த மவ்லவி. அலாவுதீன் பாக்கவி அவர்கள் கலந்து கொண்டு, நபி (ஸல்) அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்ற தலைப்பின் கீழ், பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக உலகாதய கல்வியை தர மெனக்கெடும் பெற்றோர்கள் மார்க்கத்தையும் வணக்கவழிபாடுகளையும் ரஸூல் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த அடிப்படையில் இளமை முதலே சொல்லித் தர வேண்டிய ஒழுங்குகளை விளக்கிக் கூறினார்கள்.

ஜூம்ஆ தொழுகைகளில் பெண்கள் கலந்து கொள்வது குறித்தும், தனி ஜூம்ஆக்கள் குறித்தும் நிலவும் ஐயங்களுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விடைதரும் உரையாக இரண்டாவது அமர்வை அமைத்துக் கொண்டார்கள்.

அதிரையிலிருந்து
S. அப்துல் காதர்







தலையங்கம்: அந்நியர் புகலென்ன நீதி?

லிபிய அதிபர் மும்மார் கடாஃபி ஒரு சர்வாதிகாரி என்பதிலும், அவரது ஆட்சி பொற்கால ஆட்சியொன்றும் அல்ல என்பதிலும் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அதேநேரத்தில், உலக சர்வாதிகாரிகளில் மிகவும் மோசமான சர்வாதிகாரி என்றோ, ஏனைய ஆட்சியாளர்களைவிட அவரது தலைமையிலான ஆட்சி மோசமானதென்றோ வர்ணிக்கவும் முடியாது என்பதுதான் நிஜம்.
 
லிபிய அரசியலையும், லிபியாவின் கடந்த நூற்றாண்டு சரித்திரத்தையும் புரிந்து கொள்ளாமல் எழுதும் பல மேலைநாட்டுப் பத்திரிகைகளும், கடாஃபியை ஒரு கொடுங்கோலனாக வர்ணிப்பதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்த முயலும் தொலைக்காட்சிச் சேனல்களும், குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுபோல லிபியாவில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தைப் பயன்படுத்தி அந்த நாட்டின் எண்ணெய் வளத்துக்குக் குறிவைக்கும் ஏகாதிபத்திய சக்திகளும், பிரச்னையை வளர்க்க முயற்சிக்கின்றனவே தவிர, முறையான தீர்வுக்கு வித்திடவில்லை என்பதை யாருமே சொல்லத் தயாராக இல்லை. இதற்குக் காரணம், அதிபர் மும்மார் கடாஃபியை வீழ்த்தியாக வேண்டும் என்று மேலைநாடுகள் கடந்த 30 ஆண்டுகளாகவே திட்டமிட்டு வருவதுதான்.
 
உலக எண்ணெய் வளத்தில் 2% லிபியாவில்தான் கிடைக்கிறது. இன்னும் பல எண்ணெய்க் கிணறுகள் கண்டுபிடிக்கப்படக் கூடும் என்பதுதான் எதிர்பார்ப்பு. ஆனால், எல்லா எண்ணெய்க் கிணறுகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தாமல், நீண்ட காலத்துக்கு லிபியாவின் எண்ணெய் வளத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அதிபர் மும்மார் கடாஃபியின் பிடிவாதம், அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளுக்கு எரிச்சல் ஊட்டுவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?
 
1951-ல் இத்தாலியக் காலனியாக இருந்த லிபியா விடுதலை பெற்று சுதந்திர நாடானது. லிபியாவின் கிழக்குப் பகுதியான சைரனைக்காவின் முக்கியமான செனூசி ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த ஒன்றாவது இத்ரிஸ் என்கிற ராஜா, லிபியாவின் மன்னரானார். லிபியாவின் மேற்குப் பாதியில் கதத்ஃபா, மாக்ரஹா, வர்ஃபல்லா என்கிற மூன்று முக்கியமான ஆதிவாசி இனங்களும் கதத்ஃபா இனத்தவரான மும்மார் கடாஃபியின் தலைமையில் உள்நாட்டுக் கலகத்தில் ஈடுபட்டு, மன்னராக இருந்த முதலாம் இத்ரிசைப் பதவியிலிருந்து துரத்தி 1969-ல் ஆட்சியைக் கைப்பற்றின.
 
1969-ல் பதவியைக் கைப்பற்றியது முதலே, ஆதிவாசி இனக் குழுக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து வைத்திருக்கும் அதிபர் மும்மார் கடாஃபி மேற்கு லிபியாவின் முக்கியமான இனங்களான கதத்ஃபா, மாக்ரஹா, வர்ஃபல்லா, ஃபெஸ்ஸன், திரிபோலித்தானியா போன்றவற்றின் முழுமையான ஆதரவையும், நம்பிக்கையையும் தக்க வைத்திருப்பதால்தான் இன்றுவரை அதிபராகத் தொடர முடிகிறது. எகிப்து, டுனீசியா போன்ற நாடுகளின் அதிபர்களைப்போல அல்லாமல் மும்மார் கடாஃபி தனது பெயரில் வெளிநாட்டு வங்கிகளின் பணம் சேர்த்து வைத்திருக்கிறார் என்றோ, அளவுக்கு அதிகமான ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததாகவோ அவர்மீது குற்றச்சாட்டுகளும் கிடையாது. தன்னைச் சுற்றி பெண்களைக் காவலர்களாக வைத்திருக்கிறார் என்கிற ஒரே ஒரு குற்றச்சாட்டுதான் மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது.
 
மேற்கு லிபியாவைச் சேர்ந்த அதிபர் மும்மார் கடாஃபி புத்திசாலித்தனமாக கிழக்கு லிபியாவைச் சேர்ந்த ஆதிவாசி இனக்குழுக்களை பொருளாதார ரீதியாக வளர விடாமலும், அவர்கள் பெரிய அளவில் ஆயுதங்கள் வைத்துக் கொள்ளாமலும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது உண்மை. மேலும், தனது ராணுவத்தையே முழுமையாக நம்பாமல் பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதும் நிஜம்.
 
கிழக்கு லிபியாவைச் சேர்ந்த இனக்குழுக்கள்தான் இப்போது அதிபர் மும்மார் கடாஃபிக்கு எதிராகக் கிளம்பி இருக்கிறார்கள். ஆனால், மேற்கு லிபியாவிலுள்ள எல்லா இனக்குழுக்களும் அவருக்கு ஆதரவாக இருப்பதால்தான், எகிப்திலும் டுனீசியாவிலும் ஏற்பட்டதுபோல, லிபியாவில் உள்நாட்டுக் கலகம் இன்னும் தொடர்கிறதே தவிர, ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், லிபியாவின் உள்நாட்டுப் பிரச்னையில் தலையிட்டுப் புரட்சியாளர்களுக்கு உதவ வேண்டும் என்கிற முனைப்புடன் வல்லரசு நாடுகள் செயல்படத் துடிக்கின்றன.
 
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், புரட்சியாளர்களுக்கு ஆயுதங்களைப் பாராசூட் மூலம் விநியோகம் செய்தால் என்ன என்று யோசனை கூறுகிறார். சவூதி அரேபியா மூலம் ஆயுதங்களைத் தந்து உதவினால் என்ன என்று அமெரிக்கா யோசிக்கிறது. புரட்சியாளர்களுக்கு எதிராக விமானத் தாக்குதல் நடத்தும் லிபிய அரசும் படைகளை முடக்க, அந்த நாட்டிலுள்ள விமானநிலையங்களின் மீது குண்டு வீசித் தகர்த்தால் என்ன என்று யோசனை கூறுகிறார் அமெரிக்க செனட்டர் ஜான் கெர்ரி. இன்னொரு செனட்டரான ஜான் மெக்கெய்ன், இராக்கில் நடத்தியதுபோல நேசப்படைகள் நுழைந்து, அதிபர் மும்மார் கடாஃபியைப் பதவியிலிருந்து அகற்றிப் புதிய ஆட்சியை நிறுவினால் தவறில்லை என்கிறார்.
 
லிபியாவில் உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டிருப்பது உண்மை. அதிபர் கடாஃபியின் அரசு, ஆட்சியை எதிர்த்துப் போராடும் புரட்சியாளர்களுக்கு எதிராகத் தனது முழு ராணுவ பலத்தையும் பிரயோகித்துக் கலகத்தை அடக்க முயற்சிக்கிறது என்பதும் உண்மை. அதற்காக, எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத மேலைநாட்டு ராணுவம் இன்னொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்னையில் வலியப்போய் தலையிட்டு நியாயப் பஞ்சாயத்து நடத்த முயற்சிப்பதை எப்படி அனுமதிப்பது, அங்கீகரிப்பது?
 
நமது காஷ்மீரிலும்தான் பிரச்னை இருக்கிறது. நமது ராணுவமும், எல்லைப் பாதுகாப்புப் படையும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு எதிராக அடக்குமுறையில் ஈடுபடுகிறது. இது தவறு என்று கூறி நாளை அமெரிக்காவோ, சீனாவோ தனது ராணுவத்தை அந்தத் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக அனுப்பினால், இந்திய எல்லைக்குள் நுழைந்தால் அதை நாம் அனுமதிக்க முடியுமா?
 
அதிபர் மும்மார் கடாஃபி அரசின் ராணுவத்தின் கை ஓங்கி வருவதாகவும், புரட்சியாளர்களின் எதிர்ப்புக் குறைந்து வருவதாகவும் தெரிகிறது. உள்நாட்டுக் கலகத்துக்கு மேற்கு லிபிய ஆதிவாசி இனக்குழுக்களுக்கும், கிழக்கு லிபிய இனக்குழுக்களுக்குமான பதவிப் போட்டிதான் காரணம். ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாட்டினரின் அக்கறைக்குக் காரணம் லிபியாவின் எண்ணெய் வளம். 2003-ல் இராக். 2011-ல் லிபியா. என்றுதான் தணியும் இந்த ஏகாதிபத்திய மோகம், தெரியவில்லையே!
 
நன்றி : 'தினமணி'  நாளிதழ் - 12.03.2011

Thursday, March 10, 2011

காங்கிரஸுக்கு ஒரு சீட்டை பறித்துக் கொடுத்ததற்கு முஸ்லீம் லீக் மகளிர் அணி எதி்ர்ப்பு

http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=2999&cat=32

 

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்ட 3 சீட்களில் ஒன்றை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்கும் கட்சி மேலிட முடிவை எதிர்த்து மூத்த பெண் தலைவர் குரல் கொடுத்துள்ளார்.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பெண்கள் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா முசாபர். இவர் மறைந்த அப்துல் சமதின் மகளாவார். வரும் சட்டசபை தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுக கூட்டணியில் உள்ளது. அக்கட்சிக்கு திமுக 3 சீட் ஒதுக்கியிருந்தது. ஆனால் காங்கிரஸுக்கு 63 சீட் கொடுக்க தீர்மானித்ததால் சீட் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கிய 3 சீட்களில் ஒன்றை திமுக வாங்கி காங்கிரஸுக்குக் கொடுத்துள்ளது.

இதற்கு பாத்திமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில்,

ஒரு சீட்டை திரும்ப எடு்த்துக் கொள்ள அனுமதித்ததன் மூலம் கட்சி தனது பெருமை மற்றும் தன்மானத்தை விட்டுக் கொடுத்துள்ளது.

கட்சி தலைமையின் இந்த முடிவு பாரபட்சமானது, ஒருதலையானது. இதற்கு பொறுப்பேற்று கட்சியின் தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான இ. அகமது, மாநில தலைவர் காதர் முகைதீன் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.


நாங்கள் திமுக மற்றும் காங்கிரஸ் மேலிடங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஒரு சீட்டை விட்டுக் கொடுத்துள்ள எங்கள் கட்சி மேலிடத்தின் முடிவு முஸ்லிம் சமுதாயம் மற்றும் கட்சியினர் இடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றார்

Thanks to Thatstamil 10.03.2011
---------------------------------------------------------------------------------------------
BISMILLAH IR RAHMAN IR RAHEEM.

ASSALAMU ALAIKUM DEAR IUML PARTY MEMBERS.

I PRAY THIS MAIL FINDS YOU ALL IN THE BEST OF HEALTH,
HAPPINESS,PROSPERITY AND HIGH ISLAMIC SPIRITS,INSHALLAH,
AAMEEN.

IT IS WITH UTMOST PAIN,ANGER AND AGITATION I WRITE THIS MAIL

YOU ALL ARE AWARE ABOUT THE RECENT POLITICAL
DEVELOPMENTS IN TAMILNADU.
AS PER THE DECISION MADE DURING THE GENERAL COUNCIL OF
IUML TAMILNADU HELD ON 24 / 02/ 2011 AT NAGORE THE PARTY
DECIDED TO ACCEPT NOT LESS THAN 3 SEATS FROM ALLAINCE
DMK PARTY AND TO CONTEST IN OUR INDEPENDANT SYMBOL.

AFTER THIS DURING THE TALKS WITH DMK LEADERS IUML
PARTY PRESIDENT PROF K.M.K AND GEN SEC MR.ABUBACKER
ACCEPTED 3 SEATS FROM DMK BUT AGRRED TO CONTEST IN THE
DMK SYMBOL,WHICH WAS AGAINST THE DECISION OF THE PARTY.

MOREOVER THE TALKS WITH CONGRESS DMK ALLAINCE AND THE
CONFUSION THEREAFTER,WE FIND TO OUR UTTER DISMAY AND
HUMILIATION THAT OUR LEADERSHIP HAS GIVEN AWAY 1 SEAT
FROM THE 3 SEATS ALLOTTED TO IT.


THIS UNILATERAL DECISION HAS COME AS A RUDE SHOCK AND
HAS ANGERED THE RANK AND FILE OF IUML PARTY CADRES OF
TAMILNADU.THE VEHEMENT FEELING AMONGST THE PARTY IS:
1.THE IUML LEADERSHIP OF TAMILNADU HAS LOST ALL RESPECT
   AND TRUST OF THE PARTY CADRES.
2.THE IUML LEADERSHIP HAS ACTED UNILATERALLY NOT TAKING THE
   COMMUNITY OR PARTY'S WELFARE IN CONCERN.
3.THE IUML LEADERSHIP HAS IS NO POLITICAL FORESIGHT OR COURAGE.

THE PARTY WANTS CHANGE IN LEADERSHIP.

THE PARTY WANTS TO CONTEST IN ITS OWN SYMBOL IN NOT LESS
THAN 3 SEATS.

INSHALLAH LET US ALL UNITE TO FIGHT FOR JUSTICE.

LET US UNITE TO REGAIN THE LOST GRACE AND ESTEEM OF OUR PARTY.

LET US RESTORE THE RIGHTS OF OUR UMMAH!

LET US STRIVE FOR OUR HONOURABLE EXISTANCE!

WILL KEEP YOU POSTED,

WASSALAM

YOUR SISTER IN ISLAM
FATHIMA MUZAFFER
STATE ORGANISOR
IUML WOMEN'S WING
TAMILNADU.

Thanks to: adiraipost.blogspot.com

Tuesday, March 8, 2011

அரசியல் அவலம்: ஓர் தொகுப்பு

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

கேவலத்தின் முகவரி மு.லீக்

அட, மானங்கெட்டவர்களா! இப்படித்தான் நம் சமுதாய கட்சியினர்களை அழைக்கத் தோன்றுகிறது. நேற்று நடந்து முடிந்த (08.03.2011) அரசியல் நாடகங்கள் மானமுள்ள தமிழக முஸ்லீம்களை வெறுப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. மமக என்றொரு கட்சி மூன்றுக்கு மேல் வேண்டாம் என்று ஒரு சாத்தானிடம், தெரிந்தே சரணடைய, பாரம்பரியமிக்க? மு.லீக் இன்னும் கெடுவேன் என்ன பந்தயம் என தமிழக முஸ்லீம் சமுதாயத்தையே இன்று முட்டாளாக்கி விட்டது.

2ஜி புகழ் திமுகவின் மிரட்டல் நாடகங்கள் எதுவுமே பாபரி மஸ்ஜித் துரோகிகளான காங்கிரஸிடம் பலிக்காமல் போக, கேட்ட 63 தொகுதிகளை தர வேண்டிய கட்டாயத்தில் முஸ்லீம் லீக்கின் பெயரில் ஒதுக்கிய மூன்றுறுறுறுறுறுறு தொகுதியிலிருந்து ஒன்றை பறித்து காங்கிரஸிடம் தந்துள்ளார் சிறுபான்மை மக்களின் காவலரான? கருணாநிதி, இவரோடு (குவிந்திருக்கின்ற) ஒட்டியிருக்கின்ற நிதியின் எள்முனை அளவு கூட நீதியில்லாதவர் என்பதை இன்னொரு முறை நிரூபித்துள்ளார்.

நேற்றுப் பிறந்த, கோவை மாவட்டத்தை தாண்டாத ஜாதி கட்சியான கொ.மு.க விற்கு ஒதுக்கிய 7ல் ஒன்றைப் திரும்பப் பெறவோ, வி.சி.க்கு ஒதுக்கிய 10ல் ஒன்றை திரும்பப்பெறவோ திராணியில்லாத கருணாநிதி தன் தைரியத்தை (தமிழக இஸ்லாமிய இயக்கங்களால்) நாதியற்ற சமூகமாக்கப்பட்டு விட்ட இஸ்லாமியர்களிடத்தில் காட்டியுள்ளார், சொந்த சின்னத்தில் நிற்கத்துணியாமல் இரவல் சூரியன் சின்னத்தில் நிற்கும் போதே இந்த நிலைமையென்றால்... நினைக்கவே குமட்டிக் கொண்டு வருகிறது.

இந்த அவமானங்கள் எல்லாம் ஆளுக்கொரு பக்கம் திரும்பி நிற்கின்ற சமுதாய இயக்கங்களால் விளைந்தவினை என அடித்துச் சொல்லுமளவிற்கு கட்சி, இயக்கச் சண்டைகள். சமுதாயம் நலம் நாடி ஓரணியாய் வாருங்கள் என்று எத்தனை கூப்பாடுகள், வந்தீர்களா? உங்கள் அனைவரையும் சரமாரியாக வசைபாட என் மனம் நாடுகிறது இருந்தாலும் அடக்கிக் கொண்டு, இன்னும் கெட்டுவிடவில்லை வாருங்கள் ஒன்று சேருவோம், நம்முடைய சகோதர சண்டையை இன்னொரு நாளில் வைத்துக் கொள்வோம் இப்போதைக்கு ஒன்றுசேர்ந்து தேர்தலை சந்திப்போம், திமுக உட்பட அனைத்து கட்சிகளையும் அடுத்த தேர்தலில் நம் சமுதாயத்தின் முன் மண்டியிட வைப்போம், இன்ஷா அல்லாஹ் நம்மால் முடியும், காதில் விழுகிறதா என் சகோதரர்களே!

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள். திருக்குர்ஆன் 12:8

முஸ்லீம்கள் பாடம் படிக்க நேற்று (08.03.2011) நடந்த இன்னொரு முக்கிய நிகழ்வு, ஏகப்பட்ட சங்கங்களாக செயல்பட்ட அத்தனை நாடார்களும் ஒன்று சேர்ந்து அவர்களின் ஜாதிக்காக ஒரு கட்சியே தொடங்கிவிட்டார்கள், இந்தத் தேர்தலில் போதிய தொகுதிகளை யாரும் ஒதுக்காவிட்டால் தனித்து போட்டியிட்டு தங்களின் பலத்தை காட்டப்போவதாகவும் அறிவித்தும் விட்டார்கள், எல்லாம் நேற்று வரை நாம் யாருமே அறியாத கொ.மு.க.விடம் படித்த பாடம்.

தானும் கெட்டு சமுதாயத்தின் மானத்தையும் ஏலம் போட்ட முஸ்லீம் லீக்கே உடனே திமுக கூட்டணியை விட்டு வெளியேறு, ம.ம.கவே அதிமுகவை விட்டு வெளியேறு, சோ.டெ.பா.இ கட்சியினர்களே நீங்களும் வாருங்கள் ஒன்றாக கைகோர்த்து தேர்தல் களத்தை சந்தியுங்கள், இன்றைய தோல்வி நாளைய வெற்றி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஓட்டையும் வாங்கிக் கொண்டு சீட்டையும் பறித்துக் கொண்ட (அதாவது உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யும்) திமுக, பாபரி மஸ்ஜித் விவகார அயோக்கியர்களான காங்கிரஸ், நரவேட்டை காட்டுமிராண்டி கும்பலான பாஜக, கரசேவை காவி நடிகையின் அதிமுக ஆகிய அனைவரையும் சமதூரத்தில் நிறுத்துவோம், இந்த தேர்தலில் இவர்களில் யாருக்கும் முஸ்லீம்களின் ஓட்டில்லை என்ற நிலையை ஏற்படுத்துவோம்.

இஸ்லாமியர்களின் இயக்கங்களே! நமது சமுதாயத்தின் பெயரைச் சொல்லி கட்சி நடத்துவோர் ஒன்றிணைந்து வந்தால் தயவுசெய்து நீங்களும் சமுதாயத்தின் நலன்நாடி இந்த ஒருமுறை மட்டுமாவது உங்களுடைய முந்தைய தீர்மானங்களை வாபஸ் வாங்குங்கள், பிற அமைப்புக்களுடனும் மக்களுடனும் கரம் கோர்க்க முன் வாரீர். தாத்தா ஜெயித்தாலும், செல்வி? ஜெயித்தாலும் முஸ்லீம்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை மாறாக இருப்பதை தான் பிடுங்குவார்களே தவிர வேறு எதையும் பிடுங்க மாட்டார்கள் என்பது யாருக்கும் தெரியததல்ல. ஒத்துவராத கட்சிகளையும் இயக்கங்களையும் ஒதுக்குவோம்.

பெயருக்கு ஆசிரியரான காதர் முகைதீன் ஒன்றை மட்டும் சரியாக செய்கிறார் அது சாமியாராக இருந்தாலும் சரி, மஞ்சள் துண்டு பகுத்தறிவாக இருந்தாலும் சரி யாருக்கும் பேதமில்லாமல் சமமாகவே மண்டியிடுகிறார், த்தூ... இதெல்லாம் ஒரு பொழப்பு. (தனி நபர் தாக்குதல் இன்றியே எழுத நினைத்தேன், இவருடைய இழிசெயலால் முடியவில்லை மன்னியுங்கள் சகோதரர்களே)

கட்சிகளே, இயக்கங்களே! தெளிவான முடிவெடுக்க இன்னும் நேரமிருக்கிறது, மனமிருக்கிறதா உங்களிடம்?

அதிரை அமீன்

-----------------------------------------------------------------------------------------------
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?
(புனித குர்ஆன் 55:60)

முஃமின்களே நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும் உங்களுக்கோ அல்லது(உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள் (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையாக சாட்சி கூறுங்கள்) (அல் குர்ஆன்:4:135)

மார்க்கத்தை விளங்காத மக்கள் செய்த துரோகத்தைக் காட்டிலும் விளங்கி புரிந்து கொண்ட அரசியல் தலைவர்களுகம்  சில மார்க்கஅறிஞர்களும் தான் அதிகளவில் துரோகம் இழைத்துள்ளனர். இது உலகம் முழுவதும் நடந்து வருகிறது  இதற்கு சமீபத்திய உதாரணம் தான் நம் நாட்டின் முஸ்லிம் அரசியல் தலைவர்கள்

நாளை மறூமையில் அல்லாஹ்விற்கு பதில் சொல்லவேண்டும் என்ற நினைவுடன் நம் செயல்கள அமைத்துக் கொள்ள அல்லாஹ் நமக்குத் தவ்பீக் செய்வானாக! ஆமீன்.

உங்களின் சகோதரன்
ஹாஜா- அதிரை

--------------------------------------------------------

ஓரு பின்னோட்டம் (Flash back):

//மேலும் திமுகவின் சிறுபான்மை பிரிவான முஸ்லிம் லீக்கிற்கு வழக்கம் போல் குடும்ப கட்டுப் பாட்டு கோட்பாட்டின் தாரக மந்திரமான இரண்டுக்கு மேல் வேண்டாம்(!) என்ற அடிப்படையில் இரண்டு தொகுதிகள் வழங்கப்படலாம். அதுவும் திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டால் ( போட்டியிட்டாலா?. பரம்பரை பழக்கத்தை மாற்ற முடியுங்களா?.) மூன்று கிடைக்கலாம். ஆக மொத்தம் இஸ்லாமிய இயக்கங்களுக்கு மொத்தமாக இந்த தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பே உள்ளது. தவிர ஒன்றோ அல்லது இரண்டோ வேறுபடலாம்.//

மேற்கண்ட செய்தியினை நம் இணையத்தினை வாசிக்கும் சகோதரர்கள் அவ்வளவு சீக்கிரமாக மறந்திருக்க மாட்டார்கள்!. இனி என்ன செய்யப் போகிறாய்?.... என்ற நம் கட்டுரையில் தொகுதி உடன்பாடு எட்டப்படுவதற்க்கு முன்பே வந்த வாசகம்தான் இது!!. ஒன்றோ அல்லது இரண்டோ வேறுபடலாம் என்று நாம் அந்தப்பாராவை முடித்திருந்தோம்!. தற்போது அது உண்மையிலேயே வேறுபட்டுவிட்டது!. ஆம்!. அரசியல் சாணக்கியர் என்று சொல்லப்படுபவரால், “கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி” என்று, பிச்சையாக போடப்பட்ட மூன்றில் ஓரு தொகுதியை முஸ்லிம்லீக்கிடமிருந்து பிடுங்கப்பட்டு, அதை காங்கிரசிடம் திமுக அள்ளிக்கொடுத்துள்ளது!. கொடுப்பதில் காட்டாத தாராளத்தை, பிடுங்குவதில் திமுக காட்டியுள்ளது!. காங்கிரஸ்,திமுக இடையே நடந்த அரசியல் உள் விளையாட்டில் பலிகடா ஆக்கப்பட்டதோ முஸ்லிம்கள்!. 

தன்மானத்தை இழந்து, சுயசின்னத்தில் கூட போட்டியிட முடியாமல், அரசியல் அரங்கில் அனாதையாக இருக்கும் முஸ்லிம்லீகிற்கு இதுவும் வேண்டும்!. இதற்கு மேலும் வேண்டும்!. இதற்கு மேல் வேறு என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்பதும் எனக்கு தெரியும்!. ஏன் கொடுத்த மூன்று தொகுதியையும் திரும்ப தர வேண்டும் என்று கேட்டால் (பிடுங்கினால்) கூட, சரணம் சரணம் கச்சாமி....! சாமிசரணம் கச்சாமி.....! என்று அதை தாராளமாக வாரி கொடுப்பதற்கு கொடைவள்ளல் காதிர்முகைதீன் தயாராக இருந்திருப்பார்!. அதையே திமுகவும் செய்திருக்கலாம்!. தாழ்த்தப்பட்டோரை விட முஸ்லிம்களின் நிலை பரிதாபமாக உள்ளது என்ற நீதிபதி சச்சார் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் அரசியல் அரங்கில் காட்சிகள் நிறைவேறிக் கொண்டிருகின்றது!. பொறுத்திருந்து பாருங்கள்!. காதர்முகைதீனிடம் இருந்து கூடிய சீக்கிரமே, சட்டமன்ற மேலவையில் இடம் தருவதாக எங்களுக்கு திமுக வாக்களித்துள்ளது என்று ஓரு டயலாக் வரும்!.

பாருங்கள் சகோதரர்களே!. முப்பத்தி ஒன்று தொகுதியைப்பெற்ற பாமக விடம் ஒன்றை பிடுங்கியதை கூட நியாயப்படுத்திவிடலாம்!. ஆனால் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய சமூகமான முஸ்லிம்களுக்கு திமுக சார்பில் தரப்பட்ட மூன்றே மூன்று தொகுதியைக்கூட விட்டுவைக்காமல், திரும்ப முஸ்லிம்லீக்கிடம் இருந்து பிடுங்கியது எந்தவிதத்தில் நியாயம்?. முஸ்லிம்கள் மேலும் மேலும் வஞ்சிக்கப்படுவது எந்தவிதத்தில் நியாயம்?. முஸ்லிம்லீக்கிடம் திரும்ப பெற்றதைப் போல், கடந்த தேர்தலில் பெற்ற ஒன்பது தொகுதியைவிட, ஓரு தொகுதியை அதிகம் பெற்ற விடுதலைசிறுத்தைகள் கட்சியிடமோ, முதன்முதலாக கூட்டணியில் சேர்ந்ததுமே, ஏழு இடங்களை பெற்ற கொங்கு முன்னேற்ற கழகத்திடம் இருந்தோ இவ்வாறு பெறமுடியுமா?. முடியவே முடியாது!. அவர்களிடம் திரும்ப பெற்றால், இந்நேரம் அவர்கள் கூட்டணியை விட்டு வெளியேறி மாற்று அணியில் சேர்ந்திருப்பார்கள். அந்த சமூகம் தங்களின் எதிர்ப்பை காட்டி திமுக விற்கு தேர்தலில் தக்கபாடம் புகட்டி இருப்பார்கள். 

ஆனால் தன்மானம் இழந்த முஸ்லிம்லீக்கிடம் இருந்து மட்டுமே, இதுபோல் திரும்ப பெறமுடியும்!. “இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா" என்று திமுகவிலே கேவலமாக பேசப்படுபவரும், இதற்கு துணை போகியுள்ளவருமான காதர்முகைதீனிடம் இருந்து, முஸ்லிம்லீக் கட்சியின் தலைவர் பதவியை பிடுங்கவேண்டும். இவர் உடனே தூக்கி எறியப்பட வேண்டும்!. சட்டமன்ற இருக்கையில் இடம் பெறாமல், கருணாநிதியின் இதயத்தில் இடம் பெரும் இவரைப் போன்றவர்கள் இருக்கும்வரையும், இதுபோன்று சமுதாய நலனை குப்புறதள்ளிய சுயநலவாதிகள் இருக்கும்வரையும், முஸ்லிம்கள் ஒருக்காலும் அரசியல் அரங்கில், தங்களின் பங்களிப்பை பெறமுடியாது!. தற்போது பிறைக்கொடி அம்மனமாக திரிகின்றது!. இந்த துரோகத்திற்கு தானா முஸ்லிம்லீக் கட்சியினர் லட்சக்கணக்கில் செலவு செய்து விழா எடுத்து கருணாநிதிக்கு விருது கொடுத்தனர்?.

முஸ்லிம்லீக்கின் கடைசி அத்தியாயத்தினை காதர்முகைதீன் அவர்கள் எழுதிவிட்டார். முஸ்லிம்லீக்கை புதைகுழியில் இவர் தள்ளிவிட்டார். இனி முஸ்லிம்லீக் என்ற பெயரை உச்சரிக்கவே இவர் தகுதியற்றவர். தற்போது இவர்கள் பெற்று இருக்கும் இரண்டு தொகுதிகளில் கூட, நிச்சயம் மமக வை எதிர்த்து நிறுத்தப்படுவார்கள். அதற்கும் முஸ்லிம்லீக் துணைபோய், மேலும் இரண்டு முஸ்லிம்கள் சட்டமன்றத்திற்கு செல்வதையும் தடுத்துவிடுவார்கள். இனி அடுத்த சட்டமன்ற தேர்தலில், முஸ்லிம்லீக் என்ற கட்சியே தமிழ்நாட்டில் இருக்காது என்றே நமக்கு தோன்றுகின்றது. எந்த கோரிக்கையாவது நிறைவேற்றக்கோரி முஸ்லிம்லீக் கட்சி களத்தில் இறங்கி போராட்டம் நடத்தியதுண்டா?. எனவே முஸ்லிம்லீக் உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் அடிப்படை உறுப்பினர் பதவியை உடனே ராஜினாமா செய்துவிட்டு, மாற்று கட்சியான மமக வில் சேர்ந்துவிடுங்கள். 

குறைந்தபட்சம் அந்த கட்சியாவது தங்களின் பங்களிப்பை இனி அரசியலில் ஆற்றட்டும்!. அல்லது முஸ்லிம்களின் அரசியல் வெற்றிடத்தை ததஜ களத்தில் இறங்கி நிரப்பட்டும்!. அல்லது பாப்புலர் பிரன்டின் சோசியல் டெமாக்ரடிக் பார்டி அதை நிரப்பட்டும்!. ஏனெனில் எங்களுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் வேண்டும். எங்களின் கோரிக்கையை எடுத்துக்கூற பிரதிநிதிகள் சட்டமன்றத்தின் இருக்கையில் இடம் வேண்டும்!. எவர்களின் இதயத்திலும் எங்களுக்கு இடம் வேண்டாம்!. ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் மனிதர்களின் இதயத்திற்கு அட்டாக் வந்துவிடலாம்!.


Posted by அதிரை முஜீப் 

ALM பள்ளிக்கூட ஆண்டுவிழா

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை. மறுமை வாழ்வுதான் உண்மையான வாழ்வாகும். அவர்கள் (மனிதர்கள்) அறியக்கூடாதா? (திருக்குர்ஆன் 29:64)

இஸ்லாத்தை பேணிய ஓர் அக்மார்க் ஆண்டுவிழா என நாம் நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் வண்ணம் சீர்மிகு ஆண்டுவிழா EPS பள்ளி என்று மக்களின் நினைவில் நிற்கும் அதிரை ALM பள்ளியில் கடந்த 06.03.2011 அன்று நடந்தேறியது.

அதிரை கல்வியாளர்களான பன்னூலாசியர் அதிரை அகமது அவர்கள் தலைமையேற்க, தமிழ்மாமணி புலவர் பஷீர் அவர்கள் சிறப்புரையாற்ற சுமார் 500க்கு மேற்பட்ட பெற்றோர்கள் (பெண்கள் மட்டும்) கலந்து கொள்ள, மாணவ, மாணவிகள் தங்களின் மார்க்கம் மற்றும் கல்வி சார்ந்த அறிவுத்திறன்களை வெளிப்படுத்தினர்.

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள். திருக்குர்ஆன் 12:87

நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள்; அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்; நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்; அது உங்களுக்கு தீங்காகவும் இருக்கலாம்; நீங்கள் அறிய மாட்டீர்கள் அல்லாஹ்வே மிக அறிந்தவன்' (அல்-குர்ஆன் 2:216)

மாற்றார்களுடையது மட்டுமல்ல, முஸ்லீம் கல்வி நிறுவனங்களாக, மார்க்கத்தையும் போதிப்பதாக இனங்காட்டிக் கொண்டுள்ள பல்வேறு அதிரை கல்வி நிலையங்களில் எதுவும் விதிவிலக்கில்லை என்று சொல்லுமளவில் சினிமா மேடைகளாய் போய்விட்ட தற்கால பள்ளி ஆண்டுவிழாக்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமாய் மார்க்கத்துடன் கல்வியை கலந்து ஆண்டுவிழா நிகழ்வுகளை அமைத்திருந்த விதம் நாம் அதிரையில் தான் இருக்கின்றோமா?! என ஆச்சரியத்துடன் நம்மை நாமே ஒருமுறை கிள்ளிப்பார்த்துக் கொள்ளச்செய்தது. மாணவ, மாணவிகள் பள்ளியில் கற்ற மார்க்க அறிவை, எதிர்கால இலக்குகளை ஒருபுறம் வெளிப்படுத்த மறுபுறம் புலவர் பஷீர் அவர்கள் மார்க்கம் சார்ந்த கல்வியின் அவசியத்தை பெற்றோர்களும், ஆசிரியர்களும், கல்வி நிறுவனங்களை நடத்துவோர்களும் உணரும் வகையில் சிறப்பாக எடுத்துரைத்தார்கள்.

உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதது வரை (முழுமையான) ஈமான் கொண்டவராக மாட்டார் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல் : புஹாரி (11).

கிட்டதட்ட ஓர் தர்பியா நிகழ்வுக்கு ஈடாக நடைபெற்ற இந்த ஆண்டுவிழாவை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து துணிவுடன் ஏற்பாடு செய்த பள்ளியின் தாளாளர் அப்துல் ரஜாக் அவர்களுக்காகவும் நிகழ்ச்சியின் இறுதிவரை உடனிருந்து இதுபோன்ற ஒரு வித்தியாசமான விழாவிற்கு வரவேற்பளித்த பெற்றோர்களுக்காகவும் ஏக இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டுகிறோம்.

பலமான இறைநம்பிக்கையாளர் பலவீனமான இறை நம்பிக்கையாளரை விட சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவரும் ஆவார். இறை நம்பிக்கையாளர் அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்கு பயன்தரும் காரியங்களை அடைய ஆர்வம் கொள். முடியாது என்று எண்ணிவிடாதே. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை. இப்படிச் செய்திருந்தால் அப்படி நடந்திருக்குமே என்று கூறாதே. காரணம் 'இப்படிச் செய்திருந்தால்' என்ற வாசகம் ஷைத்தானின் செயலுக்கு வழிவகுக்கும். அல்லாஹ் விதித்தான். அவன் நாடியதை செய்கின்றான் என்று கூறு. (நபிமொழி) அறிவிப்பாளர்: அபுஹூரைரா ரலி நூல் : முஸ்லிம் (6945)

பாடம்:
ஆடல், பாடல், நாடகம், பிற மத கலாச்சாரங்களின்றி ஆண்டுவிழாவை நடத்தினாலும் ஆதரவு கிடைக்கின்தென்றால் குற்றம் பெற்றோர்கள் மீதில்லை, தேவை இறையச்சம் மட்டுமே.


'எனது உம்மத்தில் ஒரு பிரிவினர் இறைவனின் கட்டளைகள் மீது நின்று கொண்டே இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவன் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்திட இயலாது' என நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இப்னுமாஜா பக்கம் – 1 பக்கம் – 1 அத்தியாயம்: முகத்திமா – முகப்பு ஹதீஸ் எண்: 7



அதிரையிலிருந்து
S. அப்துல் காதர்

Sunday, March 6, 2011

MMS அப்துல் வஹாப் அவர்கள் மரணம்

அதிரை தேர்வுநிலை பேரூராட்சி மன்றத் தலைவர் MMS அப்துல் வஹாப் அவர்கள் நேற்றிரவு சுமார் 11.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்கள், 


இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
(إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

அன்னாரின் ஜனாஸா இன்று (06.03.2011) மாலை 4 மணியளவில் மேலத்தெரு ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

சாச்சா என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட சகோதரர் MMS அப்துல் வஹாப் அவர்கள் சில காலமாக சுகவீனமடைந்து தீவிர சகிச்சை பெற்று வந்தார்கள். அன்னாரின் மறுமை வெற்றிக்காக AIM  குழு ஏக இறைவனை வேண்டிக் கொள்கின்றது.

04.03.2011 - இந்த வார அதிரை ஜூம்ஆ நிகழ்வுகள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
அல்லாஹ்வின் பேரருளால் அதிரை AL மெட்ரிக் பள்ளியில் (EPS) கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வரும் அதிரை ஜூம்ஆவில் இந்த வாரம் மவ்லவி. நிழாமுதீன் அஷ்ரபி, முஃப்தி அவர்கள் கலந்து கொண்டு ஜூம்ஆ பிரசங்கம் நிகழ்த்தினார்கள்.

பிரசங்கத்தின் முதல் அமர்வில், நன்மையை ஏவி தீமையை தடுப்போம் என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் மையக்கருவாய் முஸ்லீம்களின் சொல்லும் செயலும் வௌ;வேறாக இருக்கக்கூடாது என்றும் நல்லவற்றை துணிந்து செய்திட வேண்டுமெனவும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையின் ஆதாரங்களுடன் ஆணித்தரமாக எடுத்துச் சொன்னார்கள்.

இரண்டாம் அமர்வில், ஜூம்ஆவின் சிறப்புக்களையும் அதன் ஒழுங்குகளையும் அனைவருக்கும் எளிதாய் புரியும் வண்ணம் விளக்கினார்கள். வழமைபோல் பொதுமக்கள் பெருமளவில் வருகை தந்திருந்தனர்.

அதிரையிலிருந்து
அப்துல் காதர்

நிச்சயமாக ஒருவரது இணைவைப்புக்கும் இறைமறுப்புக்கும் அடையாளம் என்பது
 தொழுகையைக் கைவிடுவதுதான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.
அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).
அத்தியாயம்: 1, பாடம்: 1.35, ஹதீஸ் எண்: 116
நூல் : முஸ்லீம்

"
ஆதமின் மைந்தன் (மனிதன்) சஜ்தா (சிரவணக்கத்திற்கான) வசனத்தை ஓதி சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் ஷைத்தான் அழுதவாறே, "அந்தோ எனக்கு வந்த நாசமே! ஆதமின் மைந்தன் சிரவணக்கம் செய்யும்படி கட்டளையிடப்பட்டான். அவன் சிரவணக்கம் செய்து விட்டான். அவனுக்குச் சொர்க்கம் கிடைக்கப்போகிறது. ஆனால் (ஆதி மனிதர் ஆதமுக்குச்) சிரம் பணியும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. நானோ மறுத்து விட்டேன். எனவே, எனக்கு நரகம் தான்" என்று கூறியபடி விலகிச் செல்கிறான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).
குறிப்பு :இதே ஹதீஸ் அல் அஃமஷ் (ரலி) அவர்களது வழி அறிவிப்பில், "நான் மாறு செய்தேன். எனவே, எனக்கு நரகம்தான்" என்று இடம் பெற்றுள்ளது.  
அத்தியாயம்: 1, பாடம்: 1.35, ஹதீஸ் எண்: 115

Thursday, March 3, 2011

தேர்வுகளும் தேர்தலும்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

பெற்றோர்கள், கல்வியாளர்கள், எந்த இரத்தபந்தமும் இல்லாவிட்டாலும் மாணவ சமுதாயம் முன்னேறவேண்டும் என பல்வேறு ஊக்கங்களை வழங்கி வரும் சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் என பலதரப்பட்ட மக்கள் மீதும் தனது பிற்போக்கான முடிவை திணித்துள்ளது தேர்தல் கமிஷன்.

தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்புக்களுக்கான தேர்வு தேதிகள் 02.03.2011 துவங்கி 11.04.2011 முடிவுறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தேர்வுகளும் நடைபெற்று வரும் நிலையில், தேர்வுகளை கருத்திற்கொள்ளாமல் தமிழக தேர்தல் தேதி எதிர்வரும் 2011 ஏப்ரல் 13 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம் இதே தேர்வு காலகட்டத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் சூதாட்டங்கள் (போட்டிகள்) நம் மாணவர்களில் அதிகமானோரை படிப்பிலிருந்து அப்புறப்படுத்தியுள்ள நிலையில் தேர்தல் தொந்தரவுகள் எஞ்சிய, ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளை கட்டாயம் படிக்கவிடாது.

கிட்டதட்ட அனைத்து அரசியல் கட்சிகளுமே ஏதோவொரு காரணத்திற்காக தேர்தல் நாள் குறித்து தேர்தல் கமிஷனிடம் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையிலும் மே மாத மத்தியில் முடிவடைகின்ற தமிழக சட்டமன்றத்திற்காக, போதிய அவகாசமிருந்தும் ஒரு மாதம் முன்பாகவே தேர்தலை வைத்து தொல்லைதருவதேனோ? இதில் தேதியை மாற்ற மாட்டோம் என அலுச்சாட்டியம் வேறு.

நாம் ஒரு பக்கம் மாணவர்களுக்காக கல்வி விழிப்புணர்வு பணிகளை முடிக்கி மாணவ சமுதாயம் முன்னேறாதா? என ஏங்கும் வேளையில்; பொறுப்பற்ற முறையில் தேர்தல் கமிஷன் முடிவெடுப்பது சரியல்ல. அங்கீகாரம் பெற்ற கொள்ளையர்களாக மக்கள் கருதும் 234 பேரை தேர்வு செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் படிப்போடு, எதிர்காலத்தோடு விளையாடுவது எந்த வகையில் நியாயம்? படிக்காத எவனும் தேர்தல் கமிஷனராய் கூட வரமுடியாது என்று அறிந்து வைத்துள்ள நீங்கள் எங்கள் மாணவர்களை ஒழுங்காக பரீட்சைக்கு படிக்க விடுங்கள்.

என்னதான் அதிருப்தி இருந்தாலும் தேர்தல் நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்துவிட்டால் அரசியல் கட்சிகள் ஒட்டுக்காக அனைத்து ஜகஜ்ஜால முறைகளையும் கையிலெடுப்பர்களே தவிர மாணவர்களின் எதிர்காலம் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டர்கள் அது அவர்களுக்கு அனாவசியமும் கூட, எனவே நாம் தான் நம்மளவில் மாணவர்களின் நலனுக்காக சில கட்டுப்பாடுகளை செயற்படுத்திட முன்வர வேண்டும். பொதுவான வேண்டுகோளாக இருந்தாலும் குறைந்தபட்சம் நமதூரில் மட்டுமாவது நடைமுறைப்படுத்திட சில யோசனைகள்...

1. மத்திய மற்றும் மாநில தேர்தல் கமிஷன்களுக்கு நிலைமையை விளக்கி, தேர்தலை தேர்வுக்குப்பின் நடத்தக்கோரி மனுக்களை, தந்திகளை, ஈமெயில்களை உடனே அனுப்புவது.

2. நமது கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்கானால் நமக்கு நாமே கீழ்க்காணும் சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்வது.

3. அனைத்துவகை ஒலிபெருக்கி பிரச்சாரத்திற்கும் ஊருக்குள் அனுமதியில்லை.

4. பரஸ்பர விட்டுக்கொடுத்தல்களின் அடிப்படையில், நமது உணர்வுகளுக்கு அரசியல் கட்சிகள் மதிப்பளித்தால் நாமும் விட்டுக் கொடுத்து இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்காக கடைசி 2 நாட்கள் மட்டும் ஊருக்குள் ஒலிபெருக்கியை அனுமதிக்கலாம்.

5. தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களை பேருந்து நிலையத்தில் மட்டுமே நடத்த அனுமதிப்பது.

6. ஊர்வலங்கள், பேரணிகளை தேர்வு நடைபெறும் நாட்களின் மாலை வேளையில் மட்டும் அனுமதிப்பது மாறாக தேர்வு நடைபெறாத நாட்களில் அதாவது அடுத்த தேர்வுக்கு தயாராகும் நாட்களில் அனுமதிக்கக்கூடாது.

7. நமது முடிவுகளை காவல்துறை மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முறைப்படி தெரிவித்து அவர்களின் ஆதரவையும் கேட்பது.

8. மாணவ சமுதாயம் நலம் நாடி நாம் விடுக்கும் கோரிக்கைகளை நிராகரிக்கும் கட்சிகளை நாமும் நிராகரிப்பது, மக்களையும் நிராகரிக்கத் தூண்டுவது.

9. அனைத்து கட்சிகளும் அப்படித்தான் என்றால் நமக்கு இந்த தேர்தலே வேண்டாம் என முழுமையாக புறக்கணிப்போம் ஏனென்றால் எந்த அரசியல் கட்சிக்கு நாம் ஒட்டுப்போட்டாலும் நமக்காக ஒன்றும் செய்யப்போவதில்லை மாறாக அது நம் ஜனநாயகக் கடமைகளில் ஒன்றே என்பதை மட்டும் நினைவில் கொள்வோம்.

10. எச்சரிக்கின்றோம்! தேர்தல் கமிஷன்களே! உங்களின் முடிவுகளால் தேர்வில் தோற்கும் மாணவன் கடைசியில் அரசியலுக்கே வரக்கூடும், இறுதியில் அவன் முன் கூழைகும்பிடு போடும் இழிவும் வரலாம்.

11. பூனைக்கு மணி கட்டும் இந்நிகழ்வை யார் நடத்திக் காட்டுவது? உங்களுக்கு எங்கள் ஆலோசணைகள் சரியெனபடுகிறதா அல்லது இன்னும் சிறந்த ஆலோசனைகள் உங்களிடம் உள்ளதா? தேர்தல்களில் போட்டியிடாத அமைப்பினர்களே! ஒன்று கூட்டுங்கள் ஊரை, வருபவர்களை வைத்து முடிவெடுப்போம், வென்று காட்டுவோம். அதிரை அனைவருக்கும் ஓர் முன்னுதாராணமாக திகழட்டும்.

12. 2011 தேர்வுகால அட்டவணை






அக்கறையுடன்
அதிரையின் மைந்தன்

உங்களுடைய மனுக்கள், குரல்கள் எட்ட வேண்டிய முகவரிகள்

மத்திய தேர்தல் கமிஷனின் முகவரி, ஈமெயில் முகவரி, தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்கள்
Nirvachan Sadan,
Ashoka Road, New Delhi -110001
Tel: 011-23717391  Fax: 011-23713412
தமிழக தேர்தல் கமிஷனின் முகவரி, ஈமெயில் முகவரி, தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்கள்

Elections Department, Secretariat,
Fort St
George, Chennai - 600 009.
Ph: 044-25670390    Fax:044-25670989 
          E-Mail: ceo@tn.gov.in