உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, February 27, 2016

வட்டிக்கு எதிராக ADTயின் இந்த மாத விழிப்புணர்வு பேனர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக அதிரையின் பிரதான இடங்களில் பிளக்ஸ் போர்டுகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் கடந்த மாதம் முதல் செய்யப்பட்டு வருவதை அறிவீர்கள். அதன் தொடர்ச்சியாக இந்த மாத பேனர் லோன், வட்டி போன்ற தீமைகள் குறித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த மாத பிளக்ஸ்களுக்கான ஸ்பான்ஷர் செலவை அதிரை மற்றும் பட்டுக்கோட்டையை சேர்ந்த 2 நிறுவனங்கள் பகிர்ந்து கொண்டுள்ளன. வரும் மாதத்திற்கான பிளக்ஸ் செலவை ஏற்றுக்கொள்ள முன்வருவோர் தொடர்பு கொள்ளவும்.

கமாலுதீன் 9543577794




Wednesday, February 24, 2016

நாளை துபையில் (26.02.2016) வெள்ளி காலை முதல் பகல் வரை சிறப்பு இஸ்லாமிய நிகழ்ச்சி

அன்புடையீர் , அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்மனார் சென்டர்-துபை
வழங்கும்
இஸ்லாமிய பயிலரங்கம் 

சிறப்புரைமெளலவிமுபாரக் மதனி
தலைப்புமாற்றுக் கருத்துடையவர்களுடன்
 நடந்துக்கொள்ளும் முறை

நாள்: 26-02-2016 - வெள்ளிக்கிழமை காலை 08.30 AM TO 12.00 PM.

 இடம்: அல்உவைஸ் அரங்கம்அல்பராஹா மருத்துவமனை வளாகம்அல்பராஹா தேரா -துபை

 அனுமதி இலவசம் பெண்களுக்கு தனி இட வசதி 
BUS ROUTE: RTA BUS # 17

தொடர்புக்கு056-7371442 / 056-7371449


இணைக்கப்பட்டுள்ள இந்த பயனுள்ள நிகழ்ச்சியின் FLYERயை பிறருக்கும் பகிர்ந்து பயன்பெறச் செய்ய வேண்டுகிறோம். 
அல்மனார் செண்டர்,
அல்பராஹாதேராதுபைஅமீரகம் 

-- 
அன்புடன்,
தவ்ஹீத் இல்லம் தஃவா குழு,
டெய்ரா, துபை
Tel: 00971 4 2981931

Tuesday, February 16, 2016

துபையில் "நபி ( ஸல் ) அவர்களை அழ வைத்த சம்பவங்கள்' என்ற தலைப்பில் சிறப்புரை

அன்பார்ந்த யுஏஇ வாழ் சகோதரர்களுக்கு
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.....
 
மதுக்கூர் தவ்ஹீத் தர்மஅறக்கட்டளையின் ( MTCT) துபை மண்டலம் சார்பாக மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி ஒவ்வோர் மாதமும் சிறப்பாக நடைபெற்று வருவது தாங்கள் அறிந்ததே.
 
அதே போல் இன்ஷாஅல்லாஹ் இந்த மாதத்தில் வரும் வியாழன் 19th Feb' 2016 அன்று  மெளலவி ஹுசைன் சலஃபி   அவர்கள் "நபி ( ஸல் ) அவர்களை அழ வைத்த சம்பவங்கள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.

 
விபரங்கள் நோட்டீஸ் அட்டேச்மென்டாக JPEG ஃபார்மேட் இணைப்பில் உள்ளது.

சத்திய இஸ்லாத்தை சரியாக அறிந்து கொள்வோம்.மனித சமூகத்திற்கு படைத்த இறைவனால் வகுக்கப்பட்ட வாழ்க்கை நெறியான இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து அதன்படி செயற்பட அன்புடன் அழைக்கும்


For Madukkur Thowheed Charitable Trust

Tuesday, February 9, 2016

காதலர் தின ஸ்பெஷல்: இதுதான் காதல்!


Maheen Mohamed
காதலர் தின ஸ்பெஷல்
இதுதான் காதல்!
---------------
உம்மு சுலைம் என்ற பெண் மீது காதல் கொண்டு அவரை பெண் கேட்டு போனார் அபு தல்ஹா என்பவர்.
இந்த மணமகன் சாதாரணமானவரல்ல. அந்த ஊரிலுள்ள பணக்காரர்களில் ஒருவர். நன்னடத்தை உள்ளவர், அவர் வாழ்ந்த சமுதாயத்தின் நன்மதிப்பையும் பெற்றவர்.
அது போன்று உம்மு சுலைம் என்ற அந்த பெண்மணியும் அழகுடன் நன்னடத்தையும் நல்ல பண்பாடு மிக்க குடும்பத்தையும் சார்ந்தவர்.
அபு தல்ஹா நேரடியாகவே உம்மு சுலைமை சந்தித்து தனது காதலை அவரிடம் தெரிவித்தார். மணமுடிக்க விரும்புவதை கூறினார்.
நல்லவரும் செல்வந்தருமான அவரை மணமுடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் சிலர் இருக்கும் போது இவருக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் தம்மை தேடி வந்திருக்கிறது. அதை அவர் விட்டு விடுவாரா என்ன?
ஆனால்,
‘நான் இஸ்லாத்தை ஏற்ற ஒரு முஸ்லிம் பெண், நான் எப்படி சிலைகளை வணங்கிக் கொண்டிருக்கும் உங்களை திருமணம் செய்ய முடியும். அது முடியாது’ என்று அவரை திருப்பி அனுப்பி விட்டார்.
தனது காதல் நிறைவேறாமல் போனதால் கனத்த இதயத்துடன் திரும்பி சென்றார் அபு தல்ஹா.
இன்று மனம் மாறியிருக்கும். இல்லையெனில் மாற்ற வேண்டும் என எண்ணி அடுத்தநாள் மீண்டும் அவரிடம் வந்தார்.
‘நான் உங்களை திருமணம் செய்வதற்காக மணக்கொடையாக(மஹராக) நீங்கள் எதைக் கேட்டாலும் நான் தருவேன், அது எனது சொத்துக்களில் பாதியாக இருந்தாலும் சரியே’ என்றார்.
அருiயான இந்த வாய்ப்பை எவரேனும் தவற விடுவாரா?
கோடீஸ்வரியாகும் அந்த வாய்ப்பையும் ஏற்காத உம்மு சுலைம், 
‘நீங்கள் கல்லையும் மரத்தையும் வணங்குகிறீர்கள், தரையில் கிடந்து மிதிபட்ட ஒரு மரத்தை தச்சன் தான் உருவமாக வடிக்கின்றான். அதை நீங்கள் வணங்குகின்றீர்களே!
நன்மையையும் தீமையையும் அது தான் தருகின்றது என நம்பும் உங்களை என்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும், இது மடமையல்லவா!,
படைத்த இறைவனை மட்டுமே வணங்கும் நானும் நீங்களும் இணைய முடியாது’ என்று கூறி மறுத்து விட்டார்.
அவரது கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திரும்பிய அபு தல்ஹா சிந்திக்க துவங்கினார்.
மீண்டும் உம்மு சுலைமை தேடி வந்தார். மீண்டும் இவர் வருவதைக் கண்ட உம்மு சுலைம், வியப்புடன் அவரிடம்
‘என்ன?’ எனக் கேட்டார்.
‘தங்களது கேள்வி என்னை சிந்திக்க வைத்து விட்டது. நாமே உருவாக்கும் ஒரு பொருள் நம்மை எப்படி பாதுகாக்கும், இந்த சிலைகள் எனும் மரக்கட்டைகள் கீழே விழுந்தால் சுக்கு நூறாக உடைந்து போகுமே! தன்னையே பாதுகாக்க முடியாத ஒன்று நம்மை எப்படி பாதுகாக்கும். என்றென்றும் அழியாதவனும், நிலையானவனுமாகிய நம்மை படைத்த அந்த இறைவனால் மட்டுமே நம்மை பாதுகாக்க முடியும் என்பதை நான் உணர்ந்து விட்டேன். நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்’ என்றார்.
மகிழ்ச்சியால் பரவசமடைந்த உம்மு சுலைம், இதுவரை எவருக்குமே கிடைக்காத பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. உங்களது செல்வம் எனக்கு தேவையில்லை. நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதையே நான் மஹராக கொள்கிறேன்’ என்று கூறி திருமணத்திற்கு சம்மதித்தார்.
அவர்களது திருமணமும் நடந்தேறியது.
இதிலிருந்து நாம் கற்கும் படிப்பினை என்ன?
சிலை வணக்கத்தில் இருப்பனும் இறைவனை மறுப்பவனும் தன்னை மணமுடிக்க விரும்பும் போது அவனது கொள்கை எதுவாக இருந்தால் என்ன, அவன் எப்படி போனால் என்ன என்று ஒரு முஸ்லிம் பெண் இருந்துவிடக் கூடாது. எரியும் நரக நெருப்புக்கு அவனை பலியிடலாமா?
அவனிடம் இஸ்லாத்தை அறிமுகப்படுத்த வேண்டும். சத்தியத்தை உணர வைக்க வேண்டும். அது தான் உண்மையான காதலாக இருக்க முடியும்!
இறைவனை மறந்தவர்களுக்கும் மறுத்தவர்களுக்கும் மறுமையில் தண்டனை உண்டு, நாம் இவ்வுலகில் செய்த நற்காரியங்களுக்கு அங்கே பலன் கிடைக்கும், நாம் பிறருக்கு செய்த தீமைகளுக்கு அங்கே தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்த ஒரு முஸ்லிம் பெண், இஸ்லாத்தை விட்டு தான் வெளியேறிவிடாமல் அதில் உறுதியாக இருந்து பிறருக்கும் உண்மையை உணர வைக்க வேண்டும். நரகத்தின் விளிம்பிலிருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும்!
அது தான் உண்மைக்காதல்.
Thanks to source:
https://www.facebook.com/permalink.php?story_fbid=228977610769947&id=100009731281836