உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, November 23, 2013

கடற்கரைத் தெரு தர்கா ட்ரஸ்டிகளுக்கும் கந்தூரிக் கமிட்டியினருக்கும் ADTயின் கடிதம்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!

அஸ்ஸலாமு அலைக்கும்.

கடற்கரைத் தெரு ஜமாஅத், கடற்கரைத் தெரு தர்கா ட்ரஸ்டிகள் மற்றும் கந்தூரிக் கமிட்டியினரைச் சந்தித்து, கந்தூரியின் தீமைகளை விளக்கிக் கடிதங்கள் கொடுப்பது எனும் அதிரை தாருத் தவ்ஹீத் ஆலோசனை அமர்வுத் தீர்மானத்தின்படி, முதலாவதாக கடற்கரைத் தெரு ஜமாஅத்தார்களுக்கு 3.11.2013இல் ஒரு கடிதம் கொடுத்தோம்.

கடற்கரைத் தெரு தர்கா ட்ரஸ்ட்டின் முன்னாள் தலைவராக இருந்தவரான சகோ. அலாவுத்தீன் சென்ற ஆண்டு கபுருக்கு சந்தனம் பூசுவதற்குப் போய் உயிர் நீத்துவிட்டதால் அன்னாரின் சின்னவாப்பா சகோ. அஹ்மது ஹாஜா அவர்கள் தர்கா ட்ரஸ்டுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரது உடல்நலக் குறைவால் தர்கா சம்பந்தப்பட்ட எதிலும் தலையிடாமல் இருந்து வருகிறார்.

எனவே, தர்கா ட்ரஸ்ட்டின் செயலாளரான சகோ. அபுல் ஹஸன் அவர்களை, அவருடைய 'ஹஸன் ஹார்ட்வேர்' கடையில் கடந்த 17.11.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணியளவில் நான், தாருத் தவ்ஹீதின் அமீர் அஹ்மது காக்கா, பொருளாளர் நிஜாமுத்தீன் ஆகிய மூவரும் சென்று சந்தித்து இணைப்பில் உள்ள கடிதத்தைக் கொடுத்தோம்.

சகோ. அபுல் ஹஸன் அவர்கள் ஏறத்தாழ இருபது நிமிடங்கள் பேசினார். அதில் நமக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் அடங்கியிருந்தன. அதிர்ச்சி அளிக்கும் தகவல்களும் இடம்பெற்றன. அவற்றின் சுருக்கம்:

* "நாகூரிலும் முத்துப்பேட்டையிலும் இன்னும் பல பெரிய ஊர்களிலும் கந்தூரிகள் நடக்கின்றன. இந்தச் சின்னக் கிராமத்தில் நடைபெறும் கந்தூரியை எடுக்கக்கூடாது என்று ஏன் சொல்கின்றீர்கள்? அங்கே போய் சொல்வதுதானே?" என்ற கேள்வியை முன்வைத்தபோது நான் குறுக்கிட்டு, "எல்லா ஊர்களிலும், நாகூரிலும் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது. நாகூர் பிரச்சாரத்திற்கு நானும் போயிருக்கிறேன்" என்று சொன்னேன்.

* "எனக்கு ஒன்றும் தெரியாது; உங்களுக்கும் ஒன்றும் தெரியாது. முன்னோர்கள் 570 வருசத்துக்கு முந்தி கந்தூரி எடுத்திருக்கிறார்கள். அது, அப்படியே தொடர்ந்து வருகிறது" என்று முன்னோர்களை உயர்த்திப் பேசிவிட்டு, "தர்கா என்பது இறைவனை வணங்கும் இடம்" என்ற அதிர்ச்சியான தகவலைச் சொன்னார். "அல்லாஹ்வை தர்காவில் தொழ முடியாதே. எப்படிச் சொல்கிறீர்கள் காக்கா?" என்று நான் கேட்டதற்கு, "அப்படித்தான் நான் படித்திருக்கிறேன். எனக்குப் படித்துத் தந்தவர் அப்படித்தான் சொல்லித் தந்தார்" என்று விளக்கினார். முன்னோர்களின் வழிவந்த உஸ்தாதின் மார்க்க அறிவே இப்படி என்றால் அந்தக் காலத்து முன்னோர்கள் மார்க்கத்தை எப்படி விளங்கி இருப்பார்கள் என்று எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. அல்லாஹ்வின் (2:170) வார்த்தைகள் எத்துணை சத்தியமானவை என்று வியக்காமலும் இருக்க முடியவில்லை.

* தர்காவுக்குச் சம்பந்தமில்லாத ஒரு பெண்ணின் வீட்டில் ஐந்து பவுன் நெக்லஸ் காணாமல் போய்விட்டதாம். "இன்னார் வீட்டு தர்வாஜாவில் அது தொங்கிக் கொண்டிருக்கிறது. போய் எடுத்துக்கொள்" என்று கனவில் வந்து சொன்னாராம் ஜொகராம்மா. "கனவு கண்ட பெண், ஐந்து பவுன் நகையையும் விற்று, கபுர் கட்டினார். சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் குடும்பம். இந்தக் காலத்தில் ஐந்து பவுன் என்ன விலை? அதை விற்று அவர் கபுர் கட்டினால் உங்களுக்கென்ன?" என்ற கேள்வியை வைத்தார். உண்மைதான். அவருடைய கேள்வியில், "ஆலிம்கள் பெருத்த ஊர்; ஆறு குத்பா நடக்கும் ஊர். யாருமே வாய் திறந்து பேசாமல் இருக்கும்போது நீங்கள் மட்டும் குதிப்பது ஏன்?" எனும் உப கேள்விகள் பொதிந்திருந்தன. "கழிப்பிடத்தில் முளைக்கும் திடீர் கப்ரு என்று நோட்டீஸ் போட்டீர்களே என்ன நடந்தது? நோட்டீஸைப் படித்துவிட்டு, நீங்கள் கொடுத்த விளம்பரத்தால் நிறைய பேர் வர ஆரம்பித்துவிட்டார்கள்" என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

* கந்தூரியில் நடைபெறும் குத்துப்பாட்டு, கச்சேரிகளில் தமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவை கந்தூரி கமிட்டியாரால் செய்யப்படுபவை என்றும் தெளிவாக்கினார். "கந்தூரி கமிட்டியார் யார் காக்கா?" என்று நான் கேட்டதற்கு, "இதுவரைக்கும் யாரெனத் தெரியவில்லை. என்னிடம் வந்து பர்மிஷன் கேட்பார்கள். நான் சரி என்பேன். அவ்வளவுதான்" என்று கூறினார்.

* "ஏழைச் சிறுவர்களுக்கு கத்னா செய்து வைக்க முன்வாருங்கள். ஏழைக் குமருகளுக்குக் கல்யாணம் செய்து வையுங்கள். அதை விட்டுவிட்டு கந்தூரியை நிறுத்து என்றால் நின்றுவிடுமா?" என்று ஆலோசனை வழங்கினார்.

* பேச்சு வாக்கில், "நாங்கள் ஹாஷிமிகள்" என்பதாக எனக்குப் புதுத் தகவல் ஒன்றையும் தெரிவித்தார். அந்த நேரத்தில் ஹாஷிமிகளான அபூஜஹ்லும் அபூதாலிபும் என் நினைவில் வந்தனர். இந்த ஹாஷிமி விபரத்தை 'ஸில்ஸிலா'வைப் படித்துப் பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும், இன்ஷா அல்லாஹ். ஏனென்றால், ஹாஷிமிகளுக்கு தானமோ தர்மமோ கொடுப்பது முஸ்லிம்கள் மீது ஹராமாக்கப்பட்டது. வாங்குவதும் ஹாஷிமிகளுக்கு ஹராமாக்கப்பட்டதாகும்.

மக்ரிபுக்கு நேரமாகிவிட்டதால் விடைபெற்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டவேண்டும்.

தொடர்புடைய சுட்டிகள் : -
மடமையிலிருந்து விடுதலை பெறுவோம்
கழிப்பிடத்தில் முளைக்கும் திடீர் கப்ரு

ஜமீல் M.ஸாலிஹ் - SEC-ADT




 
Thanks to : adirainirubar

No comments:

Post a Comment