அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
07.11.2013 துபையில் ஷைஹ். S. கமாலுதீன் மதனி அவர்களின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி துபை தமிழ் தஃவா குழு ஏற்பாட்டில் மிகச்சிறப்பாக நடந்தேறியது, அல்ஹம்துலில்லாஹ்.
இரவு 8.30 மணியளவில் துவங்கிய நிகழ்ச்சியில் ஷைஹ். கமாலுதீன் மதனி அவர்கள் கலந்து கொண்டு சுமார் 1 மணி நேரம் 'இஸ்லாத்தில் வணக்க வழிபாடுகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அதில் எத்தகைய வழிபாடுகள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும், எவையெல்லாம் நிராகரிக்கப்படும் குர்ஆன் ஹதீஸிலிருந்தும், இஸ்லாமிய வரலாற்று பக்கங்களிலிருந்தும் ஆதாரங்களை கூறி உரையாற்றினார்.
பின்பு அரைமணி நேரம் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இரவு சுமார் 10 மணியளவில் அனைத்தும் இனிதே நிறைவுற்றது.
பயானுக்குப்பின், தேரா துபையில் அமைந்துள்ள MTCT எனும் மதுக்கூர் தவ்ஹீத் மர்க்கஸில், MTCT சகோதரர்களுக்கு மட்டும் இரவு 10.30 மணிமுதல் 12 மணிவரை சிறப்புத் தர்பியா வகுப்பு நடைபெற்றது.
அதிரைஅமீன்










No comments:
Post a Comment