உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, October 16, 2011

தனிப்பட்ட ஓரு அதிரை வாக்காளனின் மனநிலை

இதோ நம்ம ஊர் தலை எழுத்த நிர்ணயிக்க க்யூ இன்னும் கொஞ்ச நேரத்தில ஆரம்பிச்சிடும். இப்போ ரெண்டு பன்னிரண்டா பெருகி  வருகிற 21ந்தேதி வரை கனவு காண வச்சுடுச்சி.

 கட்டப் பஞ்சாயத்து, தாலி அறுக்குறது, பிடிக்காதவன போலிஸ்ட்ட போட்டுக் கொடுக்குறது பின்னால அவங்களே நல்லவேன் மாதிரி போய் வெளியே கூட்டிக்கிட்டு வர்றது, லேட்டஸ்டா குடும்ப பொம்பளைகள புடிச்சி லாக்கப்புல வக்கிறதுன்னு காலத்த ஓட்டிக்கிட்டு இருந்த ஒரு சில சங்கத்தை (எல்லா சங்கமும் அல்ல) சேர்ந்த ஓரு சில பேர், சங்கத்து வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கன்னு புதுப்படம் ஓட்டுறாங்க! நீதி சொல்ற சங்கமா இருந்தா கேக்கலாந்தான் ஆனா இருப்பவனுக்கு ஒரு மாதிரியும் இல்லாதவனுக்கு ஒரு மாதிரியும் பேசுறவங்க ஓட்டப்பத்தி பேச யோக்கியம் இருக்கா?

இந்த தேர்தல் நம்ம ஊருக்கு, நம்ம வார்டுக்கு ஏதாவது செய்வாங்க, நல்லது செய்யாட்டியும் பரவாயில்லை கொறஞ்சது கெடுதலாவது செய்யாம இருப்பானுவோன்னு ஓட்டுப் போடுறோம் ஆனா நம்மட்ட ஓட்ட வாங்குறவன் முஸ்லீம் சனத்துக்கு தான் மொதல் எதிரியா மாறுரான்வோ, ஊர நாறப் போடுறான்வோ.

ஏற்கனவே நம்ம ஊரு பேமஸ் தெரு வெறிய பத்தி சொல்ல வேணாம் ஆனா இப்ப நிக்கிற சில பேரு அத தூண்டிவுட்டு தானுங்க இந்த எலக்சன்ல போட்டியே போடுறான்வோ, தோத்தா தெருவொட மானம் போயிடுமாம்.  எலக்சன்ல நிக்கிறது நீ,  தெரு அல்ல ஜெயிக்கவோ தோவக்கவோ போறது  நீ. இந்த மான அவமானமெல்லம் உன்ன மட்டும் தான சேரும் அப்புறம் ஏன் தெருமானம்னு வெறியேத்துற, இப்பிடி சொல்லி சொல்லியே இன்னும் எத்தன வருசத்துக்கு எங்கள பிரிச்சி வைக்கப்போறீக பாவிகளா. நல்லவன் ஜெயிக்கனும் அப்பிடியே ஊரும் நல்லா இருக்கனும் நினக்கிற ஆளுங்க நாங்க. தெரு பித்து பிடிச்சி அலையிற எல்லா தெருகாரன்களும், புதுசா சங்க வெறிக்கு ஆளான எல்லாரும் திருந்தனும்.

வார்டை பொருத்தவரை நான் எந்த கச்சி, சங்கம் சொன்ன ஆளா, யாரு ஆதரிக்கிறன்னு பாக்க தயாரில்லைங்க இவன் இதுக்கு முன்னாடி என்ன செஞ்சான்னு பாத்து தாங்க நான் ஒட்டுப் போடலாம்னு இருக்கேன்.

ஊர பொருத்தவர அரசியல் கட்சியின் சார்பாக நிக்கிற யாரும் யோக்கியன் இல்லீங்க எச்சிக் கையாலா காக்கா விரட்டாதவனெல்லாம் இன்னைக்கி காச நம்பி நிக்கிறானுவோ அள்ளி எரைக்கிறனுவ, அதே மாதிரி சுயேச்சையா, சில்லற கச்சி சார்பா நிக்கிறவனெல்லாம் ஓட்ட தாங்க பிரிப்பானுவோ அதனால என் பார்வைக்கு நல்லவன தெரியற,   பஸ்ஸூ சின்னத்து காரணுக்கு தான் நான் ஓட்டுப் போட போறேன்.  இவரை நல்லவனா மட்டும் தான் நான் பாத்திருக்கேன் அவரு வல்லவான மாறனும்னு எந்த தெருவெறியும், சின்னப்புள்ள புத்தியும் இல்லாம சொல்றனுங்க. ஒருவேள ஜெயிச்ச அவரு கச்சி, இயக்க சார்பில்லாமலும் கே.கே.ஹாஜா பேச்ச கேக்காமலும் சுயபுத்தியோட நடந்துக்கிறனும் கேட்டுக்கிறேங்க.

சங்கம் சொன்ன சரியாத்தான் இருக்கும்கிறது முழு ஊருக்கும் சரியா வராது, நீங்களும் தனித்தனிய சிந்திங்க, உங்களுக்கும் நல்லவேன்னு தெரியற ஆளுக்கு ஓட்டப் போட்டுட்டு வாங்க! தயவு செஞ்சு தலைவன் பதவிக்கு நிக்கிற அரசியல் கட்சிகார ஆட்களுக்கு மட்டும் ஓட்டுப் போடாதியன்னு உங்களில் ஒருவனா சொல்லிக்கிறேன்.

எம். ஜாஹீர் ஹீசைன்
மேலத்தெரு
அதிராம்பட்டினம்

No comments:

Post a Comment